Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
வாகை சூட வா - திரைப்பட விமர்சனம் ( அருமை )
4 posters
Page 1 of 1
வாகை சூட வா - திரைப்பட விமர்சனம் ( அருமை )
அஞ்சறைப் பெட்டிக்குள் துளசி செடி முளைத்த மாதிரி அப்படியொரு படம். டைட்டிலிலேயே துவங்கிவிடுகிறது டைரக்டோரியல் டச்! சித்தாள் ஒருவர் தன் தலையில் தானே கல்லடுக்கிக் கொள்ளும் அந்த காட்சியை பார்க்கவே இன்னொரு முறை தியேட்டருக்கு போகலாம்.
66 களில் நடக்கிறது கதை. மகனை அரசு வேலையில் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படும் அப்பாவுக்காக 'கிராம சேவக்' என்ற அமைப்பின் மூலம் 'கண்டெடுத்தான் காடு' கிராமத்திற்கு வாத்தியாராக போகிறார் விமல். சில மாதங்கள் வகுப்பெடுத்தால் சர்டிபிகேட்டும், கொஞ்சம் சம்பளமும் கிடைக்கும். இந்த சர்டிபிகேட் வாங்கினால் அரசு வேலை நிச்சயம். இந்த பழங்கால விதியின்படி அந்த கிராமத்திற்கு செல்லும் அவர் அங்கு சந்திக்கும் பனித்துளி காதலும், படீர் திடீர் எதிர்ப்புகளும்தான் படம்.
ஏரியல் ஷாட்டிலிருந்து எண்ணி பார்த்தால் இருபது குடிசைகளும் ஒரே ஒரு செங்கல் சூளையும்தான் காட்சி பின்னணி. ஆனால் இதற்குள் எத்தனையெத்தனை வித்தைகள் காட்டுகிறார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்? வல்லவர்களுக்கு வெற்று சூனியம் கூட வெனீஸ்தான்!
கொத்தடிமைகள் போல குடும்பம் குடும்பமாக கல் அறுக்கிறார்கள் செங்கல் சூளையில். 'சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல புள்ளைங்களை அனுப்பி வைங்க. பாடம் சொல்லித் தர்றேன்' என்று கெஞ்சுகிற விமலை அலட்சியமாக நோக்குகிறது அந்த ஊர்(?) எப்படியோ போராடி அவர்களுக்கு சில கணக்குகளையும், எழுத்துக்களையும் சொல்லித் தருகிறார் அவர். கணக்கு கேட்காமலே வேலை செய்யும் இந்த அடிமைகள் வாத்தியார் வந்தபின் கணக்கு கேட்பது முதலாளி பொன்வண்ணனை உறுத்துகிறது. அவரது கண்ணசைவில் அடி பின்னி எடுக்கிறார்கள் வாத்தியாரை. அடிக்கு பயந்த வாத்தியார் ஊரை விட்டு போனாரா? இவர் மீது காதல் கொண்ட அந்த ஊர் அழகி இனியாவை ஏற்றுக் கொண்டாரா? சட்டென்று மழை நின்ற மாதிரி முடிந்து போகிறது படம். குடையை மடக்கிய பின்பும் குளிர் போகாதல்லவா? அதுதான் இந்த மொத்த படமும்...
இதுவரைக்கும் எங்கேயிருந்தாரோ இந்த இனியா. இனிமேல் தமிழ்சினிமாவின் மூச்சுக்காற்றில் இவரது பெயரும் எழுதப்பட்டிருக்கும். லேசாக இமைத்தால் கூட அதிலும் ஒரு அர்த்தத்தை போட்டு அசர வைக்கிறார் மனுஷி. வாத்தியாரின் ஓலை குடிசைக்கு வெளியே இருக்கும் மூங்கிலில் அப்படியே தலைசாய்ந்து நிற்கும் ஒய்யாரமும், தன் காதலை நாசுக்காக சொல்லி புரிய வைக்க முயலும் அழகும் கண்ணை விட்டு அகலாது. தன் காதல் அவருக்கு புரிந்துவிட்டதாக நினைத்து ஒரு நடை நடக்கிறாரே, ஹைய்யோ...! இதற்கு முன்பு ஓராயிரம் முறை கேட்டிருந்தாலும், 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலை இந்த படத்தில் கேட்கும்போது நரம்பெல்லாம் சிலிர்த்துக் கொள்கிறது.
தனது உடற்கட்டை நினைத்து பிரஸ்தாபிக்கும் விமலிடம் 'பால் வருமா சார்' என்று கேட்டு கதிகலங்கடிக்கிறாள் அந்த சிறுமி. ரேடியோவுக்குள் ஆள் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதை அக்கு வேறாக்குகிறார்கள் சிறுவர்கள். தன்னை முட்டுவதற்காகவே திரியும் கிடா ஆட்டையும், வம்படியாக வகுப்புக்கு வராமல் ஏய்க்கும் சிறுவர்களையும் சமாளிக்கும் விமல், அடைகிற அத்தனை அவஸ்தைகளும் அழகான நகைச்சுவை ப்ளே கிரவுண்ட்.
'டூ நாலெட்டு' தம்பி ராமய்யாவும் அவரது கணக்கும், சிரிப்பும், 'குருவி சத்தம் கேட்குது' என்று ஓடும் குமரவேலும், 'அவரு பைத்தியம் இல்லீங்க தம்பி' என்று கிராமத்து மனம் காட்டும் நம்பிராஜனும், ஆண்டையாக கம்பீரம் காட்டும் பொன்வண்ணனும், தென்னவனும் இன்னும் இன்னும் பெயர் தெரியாத அத்தனை சிறுவர்களும் நம் மனசில் கற்களை அடுக்கி பங்களாவே கட்டுகிறார்கள். ஒரு சில காட்சிகளில் வந்தாலும், மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிக்க வைக்கிறார் கே.பாக்யராஜ்.
நடிகர், நடிகைகளை நேர்த்தியாக தேர்ந்தெடுத்த சற்குணம், அதற்கு கொஞ்சமும் குறையாமல் தொழில் நுட்ப கலைஞர்களையும் துணைக்கழைத்துக் கொண்டிருப்பது சிறப்பு. இசையமைப்பாளர் டி.ஜிப்ரானின் 'போறானே...' 'சர சர சாரக்காத்து' பாடல்கள் இனிமை. பின்னணி இசையிலும் தனித்து நிற்கிறார். ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒவ்வொரு பிரேமிலும் கூட கதையை சொல்லியிருக்கிறார். குறிப்பாக விமல் போன பின் அந்த குடிசையையே இனியா பார்த்துக் கொண்டிருக்கும்போது அமைக்கப்பட்டிருக்கும் லைட்டிங். பீரியட் பிலிம்களில் ஆர்ட் டைரக்டரின் பங்கு மிக மிக அவசியமானது. அதை உணர்ந்து நிறைவு செய்திருக்கிறார் அவரும்.
இவர்கள்தான் இப்படி போட்டி போட்டுக் கொண்டு சபாஷ் பெறுகிறார்கள் என்றால் கிராபிக்ஸ் கலைஞர்களும் சளைக்கவில்லை. ஒரு காட்சியில் இனியாவின் முகத்தில் மினுக்கட்டாம் பூச்சியை பொட்டாக வைக்க நினைத்த சற்குணத்தின் கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். குளத்தில் மிதக்கும் நிலவை அள்ளி பக்கத்தில் எறிகிறாரே விமல், அதிலும் கூட! இப்படி படம் முழுக்க ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்காத கிராபிக்ஸ்சும் கவர்கிறது.
'கமர்ஷியலா இல்லீயே....', 'மெசேஜ் சொன்னா புரியுமா நம்ம ஜனங்களுக்கு...' இப்படியெல்லாம் பேசி வம்பளப்பவர்கள் கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிருந்தாலே போதும். இப்படம் வாகை சூடும்!
பொத்துங்க சார் ப்ளீஸ்!
66 களில் நடக்கிறது கதை. மகனை அரசு வேலையில் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படும் அப்பாவுக்காக 'கிராம சேவக்' என்ற அமைப்பின் மூலம் 'கண்டெடுத்தான் காடு' கிராமத்திற்கு வாத்தியாராக போகிறார் விமல். சில மாதங்கள் வகுப்பெடுத்தால் சர்டிபிகேட்டும், கொஞ்சம் சம்பளமும் கிடைக்கும். இந்த சர்டிபிகேட் வாங்கினால் அரசு வேலை நிச்சயம். இந்த பழங்கால விதியின்படி அந்த கிராமத்திற்கு செல்லும் அவர் அங்கு சந்திக்கும் பனித்துளி காதலும், படீர் திடீர் எதிர்ப்புகளும்தான் படம்.
ஏரியல் ஷாட்டிலிருந்து எண்ணி பார்த்தால் இருபது குடிசைகளும் ஒரே ஒரு செங்கல் சூளையும்தான் காட்சி பின்னணி. ஆனால் இதற்குள் எத்தனையெத்தனை வித்தைகள் காட்டுகிறார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்? வல்லவர்களுக்கு வெற்று சூனியம் கூட வெனீஸ்தான்!
கொத்தடிமைகள் போல குடும்பம் குடும்பமாக கல் அறுக்கிறார்கள் செங்கல் சூளையில். 'சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல புள்ளைங்களை அனுப்பி வைங்க. பாடம் சொல்லித் தர்றேன்' என்று கெஞ்சுகிற விமலை அலட்சியமாக நோக்குகிறது அந்த ஊர்(?) எப்படியோ போராடி அவர்களுக்கு சில கணக்குகளையும், எழுத்துக்களையும் சொல்லித் தருகிறார் அவர். கணக்கு கேட்காமலே வேலை செய்யும் இந்த அடிமைகள் வாத்தியார் வந்தபின் கணக்கு கேட்பது முதலாளி பொன்வண்ணனை உறுத்துகிறது. அவரது கண்ணசைவில் அடி பின்னி எடுக்கிறார்கள் வாத்தியாரை. அடிக்கு பயந்த வாத்தியார் ஊரை விட்டு போனாரா? இவர் மீது காதல் கொண்ட அந்த ஊர் அழகி இனியாவை ஏற்றுக் கொண்டாரா? சட்டென்று மழை நின்ற மாதிரி முடிந்து போகிறது படம். குடையை மடக்கிய பின்பும் குளிர் போகாதல்லவா? அதுதான் இந்த மொத்த படமும்...
இதுவரைக்கும் எங்கேயிருந்தாரோ இந்த இனியா. இனிமேல் தமிழ்சினிமாவின் மூச்சுக்காற்றில் இவரது பெயரும் எழுதப்பட்டிருக்கும். லேசாக இமைத்தால் கூட அதிலும் ஒரு அர்த்தத்தை போட்டு அசர வைக்கிறார் மனுஷி. வாத்தியாரின் ஓலை குடிசைக்கு வெளியே இருக்கும் மூங்கிலில் அப்படியே தலைசாய்ந்து நிற்கும் ஒய்யாரமும், தன் காதலை நாசுக்காக சொல்லி புரிய வைக்க முயலும் அழகும் கண்ணை விட்டு அகலாது. தன் காதல் அவருக்கு புரிந்துவிட்டதாக நினைத்து ஒரு நடை நடக்கிறாரே, ஹைய்யோ...! இதற்கு முன்பு ஓராயிரம் முறை கேட்டிருந்தாலும், 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலை இந்த படத்தில் கேட்கும்போது நரம்பெல்லாம் சிலிர்த்துக் கொள்கிறது.
தனது உடற்கட்டை நினைத்து பிரஸ்தாபிக்கும் விமலிடம் 'பால் வருமா சார்' என்று கேட்டு கதிகலங்கடிக்கிறாள் அந்த சிறுமி. ரேடியோவுக்குள் ஆள் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதை அக்கு வேறாக்குகிறார்கள் சிறுவர்கள். தன்னை முட்டுவதற்காகவே திரியும் கிடா ஆட்டையும், வம்படியாக வகுப்புக்கு வராமல் ஏய்க்கும் சிறுவர்களையும் சமாளிக்கும் விமல், அடைகிற அத்தனை அவஸ்தைகளும் அழகான நகைச்சுவை ப்ளே கிரவுண்ட்.
'டூ நாலெட்டு' தம்பி ராமய்யாவும் அவரது கணக்கும், சிரிப்பும், 'குருவி சத்தம் கேட்குது' என்று ஓடும் குமரவேலும், 'அவரு பைத்தியம் இல்லீங்க தம்பி' என்று கிராமத்து மனம் காட்டும் நம்பிராஜனும், ஆண்டையாக கம்பீரம் காட்டும் பொன்வண்ணனும், தென்னவனும் இன்னும் இன்னும் பெயர் தெரியாத அத்தனை சிறுவர்களும் நம் மனசில் கற்களை அடுக்கி பங்களாவே கட்டுகிறார்கள். ஒரு சில காட்சிகளில் வந்தாலும், மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிக்க வைக்கிறார் கே.பாக்யராஜ்.
நடிகர், நடிகைகளை நேர்த்தியாக தேர்ந்தெடுத்த சற்குணம், அதற்கு கொஞ்சமும் குறையாமல் தொழில் நுட்ப கலைஞர்களையும் துணைக்கழைத்துக் கொண்டிருப்பது சிறப்பு. இசையமைப்பாளர் டி.ஜிப்ரானின் 'போறானே...' 'சர சர சாரக்காத்து' பாடல்கள் இனிமை. பின்னணி இசையிலும் தனித்து நிற்கிறார். ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒவ்வொரு பிரேமிலும் கூட கதையை சொல்லியிருக்கிறார். குறிப்பாக விமல் போன பின் அந்த குடிசையையே இனியா பார்த்துக் கொண்டிருக்கும்போது அமைக்கப்பட்டிருக்கும் லைட்டிங். பீரியட் பிலிம்களில் ஆர்ட் டைரக்டரின் பங்கு மிக மிக அவசியமானது. அதை உணர்ந்து நிறைவு செய்திருக்கிறார் அவரும்.
இவர்கள்தான் இப்படி போட்டி போட்டுக் கொண்டு சபாஷ் பெறுகிறார்கள் என்றால் கிராபிக்ஸ் கலைஞர்களும் சளைக்கவில்லை. ஒரு காட்சியில் இனியாவின் முகத்தில் மினுக்கட்டாம் பூச்சியை பொட்டாக வைக்க நினைத்த சற்குணத்தின் கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். குளத்தில் மிதக்கும் நிலவை அள்ளி பக்கத்தில் எறிகிறாரே விமல், அதிலும் கூட! இப்படி படம் முழுக்க ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்காத கிராபிக்ஸ்சும் கவர்கிறது.
'கமர்ஷியலா இல்லீயே....', 'மெசேஜ் சொன்னா புரியுமா நம்ம ஜனங்களுக்கு...' இப்படியெல்லாம் பேசி வம்பளப்பவர்கள் கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிருந்தாலே போதும். இப்படம் வாகை சூடும்!
பொத்துங்க சார் ப்ளீஸ்!
-ஆர்.எஸ்.அந்தணன்
Re: வாகை சூட வா - திரைப்பட விமர்சனம் ( அருமை )
தலையே சொல்லிவிட்டது இன்று அவசியம் பார்கிறேன் .
பகிர்வுக்கு நன்றி .
பகிர்வுக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வாகை சூட வா - திரைப்பட விமர்சனம் ( அருமை )
எனக்கும் சேர்த்தே டிக்கட் எடுத்திடுங்கள் மாஸ்டர்kalainilaa wrote:தலையே சொல்லிவிட்டது இன்று அவசியம் பார்கிறேன் .
பகிர்வுக்கு நன்றி .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாகை சூட வா - திரைப்பட விமர்சனம் ( அருமை )
nallaa irukku thalaivaa verry cuteநண்பன் wrote:எனக்கும் சேர்த்தே டிக்கட் எடுத்திடுங்கள் மாஸ்டர்kalainilaa wrote:தலையே சொல்லிவிட்டது இன்று அவசியம் பார்கிறேன் .
பகிர்வுக்கு நன்றி .
risana- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50
Re: வாகை சூட வா - திரைப்பட விமர்சனம் ( அருமை )
நீங்களும் படத்தில் புலியாமேrisana wrote:nallaa irukku thalaivaa verry cuteநண்பன் wrote:எனக்கும் சேர்த்தே டிக்கட் எடுத்திடுங்கள் மாஸ்டர்kalainilaa wrote:தலையே சொல்லிவிட்டது இன்று அவசியம் பார்கிறேன் .
பகிர்வுக்கு நன்றி .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு வாகை சூட வா தேர்வு
» ஏலே - திரைப்பட விமர்சனம்
» குரூப் – திரைப்பட விமர்சனம்
» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
» விருபாக்ஷா -திரைப்பட விமர்சனம்
» ஏலே - திரைப்பட விமர்சனம்
» குரூப் – திரைப்பட விமர்சனம்
» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
» விருபாக்ஷா -திரைப்பட விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|