Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி? அறிந்து கொள்ளுங்கள்!
4 posters
Page 1 of 1
நீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி? அறிந்து கொள்ளுங்கள்!
கடலில் கப்பல் மிதந்து செல்வதைப் பார்த்திருப்போம். மழை பெய்து ஓடும் நீரில் காகிதக் கப்பல் செய்து தண்ணீரில் விட்டு ரசித்திருப்போம். கடலுக்குள்ளே செல்லும் நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப் போம். உள்ளே சென்று பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த நீர்மூழ்கிக் கப்பலின் பயன் என்ன? அது எப்படிச் செயல்படுகிறது?கடலில் நடைபெறும் போர்களில் ஒற்றர்களைப்போல செயல்படுபவையே நீர்மூழ்கிக் கப்பல்கள். கடலின் உள்ளே நீண்ட தூரம் வரை செல்லக்கூடியவை. புஷ்வெல் என்பவர் நீழ்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தார். சில வருடங்களுக்கு முன்னால் சிறிய அளவில் செய்யப்பட்டன. தற்போது 400 அடி நீளம் வரை உள்ளன. நீர்மூழ்கிக் கப்பலில் 2 என்ஜின்கள் உள்ளன. நீர்மட்டத்திற்கு மேலே ஒரு என்ஜின் உள்ளது.
இது கப்பல் செல்லும்போது நீராவியால் இயக்கப்படும். இன்னொன்று, கப்பல் நீரில் மூழ்கிச் செல்லும்போது மின்சாரத்தால் இயக்கப்படும். தற்போதுள்ள புதிய கப்பல்கள் 12,000 மைல் தூரம்வரை நிற்காமல் செல்லக்கூடியவை. 60 மணிநேரம் மின்சார ஆற்றலும் செயல்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. காற்று வாங்க மேடை ஒன்று இருக்கும். மேலே பீரங்கி இருக்கும். கடலின் உள்ளே செல்லும்போது பீரங்கியை உள்ளே இழுத்துக் கொள்ளும் வசதி உள்ளது.
மேடையின்மீது ஒரு சிறிய கோபுரம் அமைந்திருக்கும். கோபுர உச்சியில் பெரிஸ்கோப் (Periscope) இரட்டைக் கண்ணாடி 2 அல்லது 3 பொருத்தப்பட்டிருக்கும். ஒன்று சரியாகத் தெரியாவிட்டாலும் இன்னொன்று உதவும். இந்தக் கண்ணாடியில் நான்கு திசைகளிலும் திருப்பிப் பார்க்கும் வசதியும் உள்ளது. எனவே, நீரினுள் இருக்கும்போது கண்ணாடியின் உதவியால் மாலுமி மேலே நடைபெறும் செயல்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பெரிஸ்கோப் செயல்படவில்லையெனில் கப்பலுக்கு வழி தெரியாது. எனவே, நீர்மூழ்கிக் கப்பலின் கண்கள் என்றே இதனை அழைக்கலாம்.
கப்பலின் ஓரங்களில் வெடிகுண்டு வைக்கும் அறை இருக்கும். நீரினுள் மூழ்கும் முன்பு இதன் கதவுகளையும் அடைத்துவிடுவர். கப்பலின் அடிப்புறம் 2 பலகைகளால் ஆனது. கடலின் உள்ளேயிருந்து வேகமாக மேலே வர, கீழே இருக்கும் பலகையைத் தட்டிவிடுவர். முன்னும் பின்னும் சிறகுகள் அமைந்திருக்கும். கப்பலின் உள்ளே இடம் நெருக்கமாக இருக்கும். உணவுப் பொருள்கள், போர்க்கருவி, நீராவிக் கருவி, மின்சாரக் கருவி போன்றன அனைத்தும் வைக்கப்பட்டிருக்கும். மேலும், நீர்த்தொட்டிகளும் காற்றுக் குழாய்களுமே மூன்றில் ஒரு பங்கு இடத்தை அடைத்துவிடும்.
கப்பல் நீரினுள் மூழ்கும்முன்பு அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டு கோபுர வாசலும் மூடப்படும். பின்னர் நீர்த்தொட்டி திறக்கப்படும். கடல் நீர் தொட்டிகளுக்குள் வந்து நிறைந்ததும் கப்பலின் எடை மிகுந்து கீழே செல்லும். இதற்குச் சிறகுகளும் உறுதுணையாகச் செயல்படும். கப்பல் கடலுக்குள் மூழ்கும்போது, முன்புறம் தாழ்ந்தும் பின்புறம் உயர்ந்தும் மீன்போல நீந்திச் செல்வதுபோல் இருக்கும்.
எவ்வளவு ஆழம் செல்ல வேண்டுமோ அதற்கேற்ப தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட வேண்டும். கப்பல் மேலே வரும்போது, காற்றுக் குழாய்கள் திறக்கப்படும். காற்றானது நீர்த் தொட்டிகளுக்குள் சென்று அங்கிருக்கும் நீரை வெளியேற்றும். இதனால் கப்பலின் எடை குறைந்து மேலே நீர்மட்டத்திற்கு வரும். கப்பல் வெளியே வரும்போது மீன் வெளியில் வந்து மூச்சுவிடுவதைப் போல் தோற்றமளிக்கும்.
கப்பலின் உள்ளே எடை ஒரே அளவில் இருக்க வேண்டும். கொஞ்சம் கவனிக்கத் தவறினாலும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கப்பலின் எடை குறையும் போதெல்லாம் அந்த அளவுக்குச் சரியான நீரைத் தொட்டிகளில் நிரப்ப வேண்டும். கப்பலின் இருமுனைகளிலும் உள்ள எடை தராசுத் தட்டுகள் போல் சமமாக இருக்க வேண்டும். நீராவிக் கருவிகள் கப்பலை நீர்மட்டத்திற்கு இழுத்துச் செல்வதுடன், வேண்டும்போது காற்றுக் குழாய்களை நிரப்பவும் மின்னாற்றலைப் புதுப்பிக்கவும் உதவுகின்றன. திடீரென ஏற்படும் ஆபத்திலிருந்து தப்பிக்க காற்று உடைகள் இருக்கும். இவை மூச்சுவிட, கரைசேர உறுதுணை செய்யும். நீர்மூழ்கிக் கப்பலில் செல்பவர்களுக்கு அஞ்சா நெஞ்சமும், வீரமும் வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு தீட்டிஸ் (Thetis) என்ற நீழ்மூழ்கிக் கப்பல் நீரினுள் மூழ்கியது. அதிலிருந்த 99 பேரும் உயிரிழந்தனர்.
எந்தத் தீங்கும் ஏற்படாமல் தடுக்கும்வகையில் நீர்மூழ்கிக் கப்பல்களைச் செயல்பட வைக்க பல அரிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நீர்மூழ்கிக் கப்பல் என்றாலே அழிக்கும் தொழிலுக்கே முதன்மையாகப் பயன்படுத்தி வந்த காலம் இப்போது மாறிவிட்டது. இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் ஆழ்கடல் உயிரினங்கள், புவியியல், ஆழ்கடல் தட்பவெப்ப நிலை ஆய்வு, கடல்வழிப் போக்குவரத்துத் தகவல் தொழில்நுட்ப ஆய்வு போன்ற பல ஆய்வுகளுக்குப் பயன்படுவனவாக நீர்மூழ்கிக் கப்பல்கள் திகழ்கின்றன.
http://puthiyaulakam.com/?p=2464
இது கப்பல் செல்லும்போது நீராவியால் இயக்கப்படும். இன்னொன்று, கப்பல் நீரில் மூழ்கிச் செல்லும்போது மின்சாரத்தால் இயக்கப்படும். தற்போதுள்ள புதிய கப்பல்கள் 12,000 மைல் தூரம்வரை நிற்காமல் செல்லக்கூடியவை. 60 மணிநேரம் மின்சார ஆற்றலும் செயல்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. காற்று வாங்க மேடை ஒன்று இருக்கும். மேலே பீரங்கி இருக்கும். கடலின் உள்ளே செல்லும்போது பீரங்கியை உள்ளே இழுத்துக் கொள்ளும் வசதி உள்ளது.
மேடையின்மீது ஒரு சிறிய கோபுரம் அமைந்திருக்கும். கோபுர உச்சியில் பெரிஸ்கோப் (Periscope) இரட்டைக் கண்ணாடி 2 அல்லது 3 பொருத்தப்பட்டிருக்கும். ஒன்று சரியாகத் தெரியாவிட்டாலும் இன்னொன்று உதவும். இந்தக் கண்ணாடியில் நான்கு திசைகளிலும் திருப்பிப் பார்க்கும் வசதியும் உள்ளது. எனவே, நீரினுள் இருக்கும்போது கண்ணாடியின் உதவியால் மாலுமி மேலே நடைபெறும் செயல்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பெரிஸ்கோப் செயல்படவில்லையெனில் கப்பலுக்கு வழி தெரியாது. எனவே, நீர்மூழ்கிக் கப்பலின் கண்கள் என்றே இதனை அழைக்கலாம்.
கப்பலின் ஓரங்களில் வெடிகுண்டு வைக்கும் அறை இருக்கும். நீரினுள் மூழ்கும் முன்பு இதன் கதவுகளையும் அடைத்துவிடுவர். கப்பலின் அடிப்புறம் 2 பலகைகளால் ஆனது. கடலின் உள்ளேயிருந்து வேகமாக மேலே வர, கீழே இருக்கும் பலகையைத் தட்டிவிடுவர். முன்னும் பின்னும் சிறகுகள் அமைந்திருக்கும். கப்பலின் உள்ளே இடம் நெருக்கமாக இருக்கும். உணவுப் பொருள்கள், போர்க்கருவி, நீராவிக் கருவி, மின்சாரக் கருவி போன்றன அனைத்தும் வைக்கப்பட்டிருக்கும். மேலும், நீர்த்தொட்டிகளும் காற்றுக் குழாய்களுமே மூன்றில் ஒரு பங்கு இடத்தை அடைத்துவிடும்.
கப்பல் நீரினுள் மூழ்கும்முன்பு அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டு கோபுர வாசலும் மூடப்படும். பின்னர் நீர்த்தொட்டி திறக்கப்படும். கடல் நீர் தொட்டிகளுக்குள் வந்து நிறைந்ததும் கப்பலின் எடை மிகுந்து கீழே செல்லும். இதற்குச் சிறகுகளும் உறுதுணையாகச் செயல்படும். கப்பல் கடலுக்குள் மூழ்கும்போது, முன்புறம் தாழ்ந்தும் பின்புறம் உயர்ந்தும் மீன்போல நீந்திச் செல்வதுபோல் இருக்கும்.
எவ்வளவு ஆழம் செல்ல வேண்டுமோ அதற்கேற்ப தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட வேண்டும். கப்பல் மேலே வரும்போது, காற்றுக் குழாய்கள் திறக்கப்படும். காற்றானது நீர்த் தொட்டிகளுக்குள் சென்று அங்கிருக்கும் நீரை வெளியேற்றும். இதனால் கப்பலின் எடை குறைந்து மேலே நீர்மட்டத்திற்கு வரும். கப்பல் வெளியே வரும்போது மீன் வெளியில் வந்து மூச்சுவிடுவதைப் போல் தோற்றமளிக்கும்.
கப்பலின் உள்ளே எடை ஒரே அளவில் இருக்க வேண்டும். கொஞ்சம் கவனிக்கத் தவறினாலும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கப்பலின் எடை குறையும் போதெல்லாம் அந்த அளவுக்குச் சரியான நீரைத் தொட்டிகளில் நிரப்ப வேண்டும். கப்பலின் இருமுனைகளிலும் உள்ள எடை தராசுத் தட்டுகள் போல் சமமாக இருக்க வேண்டும். நீராவிக் கருவிகள் கப்பலை நீர்மட்டத்திற்கு இழுத்துச் செல்வதுடன், வேண்டும்போது காற்றுக் குழாய்களை நிரப்பவும் மின்னாற்றலைப் புதுப்பிக்கவும் உதவுகின்றன. திடீரென ஏற்படும் ஆபத்திலிருந்து தப்பிக்க காற்று உடைகள் இருக்கும். இவை மூச்சுவிட, கரைசேர உறுதுணை செய்யும். நீர்மூழ்கிக் கப்பலில் செல்பவர்களுக்கு அஞ்சா நெஞ்சமும், வீரமும் வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு தீட்டிஸ் (Thetis) என்ற நீழ்மூழ்கிக் கப்பல் நீரினுள் மூழ்கியது. அதிலிருந்த 99 பேரும் உயிரிழந்தனர்.
எந்தத் தீங்கும் ஏற்படாமல் தடுக்கும்வகையில் நீர்மூழ்கிக் கப்பல்களைச் செயல்பட வைக்க பல அரிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நீர்மூழ்கிக் கப்பல் என்றாலே அழிக்கும் தொழிலுக்கே முதன்மையாகப் பயன்படுத்தி வந்த காலம் இப்போது மாறிவிட்டது. இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் ஆழ்கடல் உயிரினங்கள், புவியியல், ஆழ்கடல் தட்பவெப்ப நிலை ஆய்வு, கடல்வழிப் போக்குவரத்துத் தகவல் தொழில்நுட்ப ஆய்வு போன்ற பல ஆய்வுகளுக்குப் பயன்படுவனவாக நீர்மூழ்கிக் கப்பல்கள் திகழ்கின்றன.
http://puthiyaulakam.com/?p=2464
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: நீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி? அறிந்து கொள்ளுங்கள்!
இதுல இவ்ளோ இருக்கா..
இப்போதானே இந்த மரமண்டைக்கு எல்லாமே புரியுது...
இப்போதானே இந்த மரமண்டைக்கு எல்லாமே புரியுது...
Re: நீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி? அறிந்து கொள்ளுங்கள்!
பர்ஹாத் பாறூக் wrote:இதுல இவ்ளோ இருக்கா..
இப்போதானே இந்த மரமண்டைக்கு எல்லாமே புரியுது...
அப்போ உங்க மண்டை இப்படித்தான் இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி? அறிந்து கொள்ளுங்கள்!
நண்பன் wrote:பர்ஹாத் பாறூக் wrote:இதுல இவ்ளோ இருக்கா..
இப்போதானே இந்த மரமண்டைக்கு எல்லாமே புரியுது...
அப்போ உங்க மண்டை இப்படித்தான் இருக்கும்
:”: :”: :”:
Re: நீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி? அறிந்து கொள்ளுங்கள்!
நண்பன் wrote:பர்ஹாத் பாறூக் wrote:இதுல இவ்ளோ இருக்கா..
இப்போதானே இந்த மரமண்டைக்கு எல்லாமே புரியுது...
அப்போ உங்க மண்டை இப்படித்தான் இருக்கும்
இல்ல என்னோடது பச்சப் பசேல் என இப்படி இருக்கும்
ஆனால் உங்களோடது இப்படியாம்ல இருக்குது..
Re: நீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி? அறிந்து கொள்ளுங்கள்!
இங்கு யாரு மரமண்டை நீங்கதானே
:”: :”:
:”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கப்பல் நீரில் மிதப்பது எப்படி? அறிந்து கொள்ளுங்கள்!
» அறிந்து கொள்ளுங்கள் தகவல்
» மெக்சிகோவிற்கு கோகைன்கடத்தல்: சிக்கியது நீர்மூழ்கி கப்பல்
» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
» அறிந்து கொள்ளுங்கள் :
» அறிந்து கொள்ளுங்கள் தகவல்
» மெக்சிகோவிற்கு கோகைன்கடத்தல்: சிக்கியது நீர்மூழ்கி கப்பல்
» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
» அறிந்து கொள்ளுங்கள் :
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|