Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
இந்தியா வளம் பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேச்சு
2 posters
Page 1 of 1
இந்தியா வளம் பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேச்சு
கோவை பசும்புலரி, சிறுதுளி, ராக் ஆகிய அமைப்புகளின் சார்பில் கோவையை
அடுத்த நண்டங்கரை தடுப்பணை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின்
80-வது பிறந்தநாள் விழா பசுமை பொன்னாடை விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த
நிகழ்ச்சியில் அப்துல்கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி
மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது
அவர் பிறந்தநாள் `கேக்' வெட்டினார். அதைத் தொடர்ந்து `கலாம் வனம்' என்று
பெயரிடப்பட்ட பகுதியில் அவர் தனது 80 வயதை குறிக்கும் வகையில் 80
மரக்கன்றுகளை நட்டார். அப்போது அவரிடம் கூடங்குளம் அணுமின்சார
நிலையத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் குறித்து நீங்கள் கருத்து
எதுவும் தெரிவிக்கவில்லையேப என்று கேட்கப்பட்டது.
அதற்கு அப்துல் கலாம் பதில் அளித்து கூறியதாவது:-
அணுமின்
நிலையம் அமைக்கும்போது அதன் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துதான்
அமைக்கப்படுகிறது. அணு மின்சார நிலையங்கள் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு
ஏற்படுத்தாத கிரீன் பிளான்ட் ஆகும். தற்போது கூடங்குளம் அணுமின் நிலைய
பாதுகாப்பு குறித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதன்
எதிரொலியாக இந்தியாவில் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து அணுமின்
நிலையங்களுக்கும் இன்னும் 10 நாட்களில் நான் நேரில் சென்று ஆய்வு நடத்த
உள்ளேன். அங்குள்ள விஞ்ஞானிகளுடன் அணுமின் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவேன். அதன் பின்னர் அணுமின்
நிலைய பாதுகாப்பு குறித்து எனது கருத்தை தெரிவிப்பேன்.
இவ்வாறு அப்துல்கலாம் கூறினார்.
அதன் பின்னர் அங்கு கூடியிருந்த மாணவர்கள் மற்றும் விவசாயிகளிடையே அப்துல்கலாம் பேசியதாவது:-
மாணவர்களுக்கு
உயர்ந்த லட்சியம் இருத்தல் வேண்டும். மருத்துவர், பொறியாளர், ஐ.ஏ.எஸ்.
அதிகாரி, கவிஞர், ஆசிரியர் ஆக வேண்டும் என்பது போல ஒரு லட்சியத்தை நோக்கி
பயணிக்க வேண்டும். வானில் உயர பறக்க வேண்டும். நிலாவில், செவ்வாய்
கிரகத்தில் நடக்க வேண்டும் என்பது போன்ற லட்சியங்கள் வேண்டும். உயர்ந்த
லட்சியம் அதனை அடைய தேவையான அறிவாற்றலை தேடிபெறுவது, விடா முயற்சி, கடின
உழைப்பு இவை இருந்தால் நீ எந்த சூழ்நிலையில் இருந்து வந்தாலும் சாதிக்க
முடியும். மாணவர்கள் நாட்டிற்கும் சேவையாற்ற வேண்டும்.
நாடு
வளம் பெற சுற்றுசூழல் மேம்பட 100 கோடி மரக்கன்று நட்டு வளர்ப்பது
முக்கியம். இதற்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.
பசும்புலரி இயக்கம் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் மரக்கன்று நட்டு வளர்க்கும்
முயற்சியில் இறங்கி இருப்பதற்கு பாராட்டுகிறேன். விவசாயிகளின்
விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும்
ஆவன செய்ய வேண்டும்.
அனைத்து விவசாயிகளுக்கும்
பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்க நதிகளை இணைப்பதே சிறந்த வழி. இந்தியா
வளம் பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைய
நம்மால் முடியும். உணவு தேடி யானைகள் நாட்டுக்குள் வந்தால் யானைகள்
அட்டகாசம் செய்கின்றன என்று கூறுகிறோம்.
வனங்கள்
அழிக்கப்படுவதால்தான் யானைகள் ஊருக்குள் ஊடுருவுகின்றன. எனவே காடுகள்
அழிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். மாறாக ஆளுக்கொரு மரம் நட்டு வளர்க்க
வேண்டும். இவ்வாறு அப்துல்கலாம் பேசினார். விழாவில் அப்துல் கலாமின் 80-வது
பிறந்தநாளையொட்டி இலைகளால் நெய்யப்பட்ட பச்சை பொன்னாடை அவருக்கு
அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பச்சை பட்டு இழைகளால் அவரது உருவம்
பொறிக்கப்பட்ட கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் 3 ஆயிரம்
மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பச்சை குடை பிடித்து விழாவில் பங்கேற்றனர்.
அடுத்த நண்டங்கரை தடுப்பணை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின்
80-வது பிறந்தநாள் விழா பசுமை பொன்னாடை விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த
நிகழ்ச்சியில் அப்துல்கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி
மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது
அவர் பிறந்தநாள் `கேக்' வெட்டினார். அதைத் தொடர்ந்து `கலாம் வனம்' என்று
பெயரிடப்பட்ட பகுதியில் அவர் தனது 80 வயதை குறிக்கும் வகையில் 80
மரக்கன்றுகளை நட்டார். அப்போது அவரிடம் கூடங்குளம் அணுமின்சார
நிலையத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் குறித்து நீங்கள் கருத்து
எதுவும் தெரிவிக்கவில்லையேப என்று கேட்கப்பட்டது.
அதற்கு அப்துல் கலாம் பதில் அளித்து கூறியதாவது:-
அணுமின்
நிலையம் அமைக்கும்போது அதன் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துதான்
அமைக்கப்படுகிறது. அணு மின்சார நிலையங்கள் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு
ஏற்படுத்தாத கிரீன் பிளான்ட் ஆகும். தற்போது கூடங்குளம் அணுமின் நிலைய
பாதுகாப்பு குறித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதன்
எதிரொலியாக இந்தியாவில் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து அணுமின்
நிலையங்களுக்கும் இன்னும் 10 நாட்களில் நான் நேரில் சென்று ஆய்வு நடத்த
உள்ளேன். அங்குள்ள விஞ்ஞானிகளுடன் அணுமின் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவேன். அதன் பின்னர் அணுமின்
நிலைய பாதுகாப்பு குறித்து எனது கருத்தை தெரிவிப்பேன்.
இவ்வாறு அப்துல்கலாம் கூறினார்.
அதன் பின்னர் அங்கு கூடியிருந்த மாணவர்கள் மற்றும் விவசாயிகளிடையே அப்துல்கலாம் பேசியதாவது:-
மாணவர்களுக்கு
உயர்ந்த லட்சியம் இருத்தல் வேண்டும். மருத்துவர், பொறியாளர், ஐ.ஏ.எஸ்.
அதிகாரி, கவிஞர், ஆசிரியர் ஆக வேண்டும் என்பது போல ஒரு லட்சியத்தை நோக்கி
பயணிக்க வேண்டும். வானில் உயர பறக்க வேண்டும். நிலாவில், செவ்வாய்
கிரகத்தில் நடக்க வேண்டும் என்பது போன்ற லட்சியங்கள் வேண்டும். உயர்ந்த
லட்சியம் அதனை அடைய தேவையான அறிவாற்றலை தேடிபெறுவது, விடா முயற்சி, கடின
உழைப்பு இவை இருந்தால் நீ எந்த சூழ்நிலையில் இருந்து வந்தாலும் சாதிக்க
முடியும். மாணவர்கள் நாட்டிற்கும் சேவையாற்ற வேண்டும்.
நாடு
வளம் பெற சுற்றுசூழல் மேம்பட 100 கோடி மரக்கன்று நட்டு வளர்ப்பது
முக்கியம். இதற்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.
பசும்புலரி இயக்கம் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் மரக்கன்று நட்டு வளர்க்கும்
முயற்சியில் இறங்கி இருப்பதற்கு பாராட்டுகிறேன். விவசாயிகளின்
விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும்
ஆவன செய்ய வேண்டும்.
அனைத்து விவசாயிகளுக்கும்
பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்க நதிகளை இணைப்பதே சிறந்த வழி. இந்தியா
வளம் பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைய
நம்மால் முடியும். உணவு தேடி யானைகள் நாட்டுக்குள் வந்தால் யானைகள்
அட்டகாசம் செய்கின்றன என்று கூறுகிறோம்.
வனங்கள்
அழிக்கப்படுவதால்தான் யானைகள் ஊருக்குள் ஊடுருவுகின்றன. எனவே காடுகள்
அழிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். மாறாக ஆளுக்கொரு மரம் நட்டு வளர்க்க
வேண்டும். இவ்வாறு அப்துல்கலாம் பேசினார். விழாவில் அப்துல் கலாமின் 80-வது
பிறந்தநாளையொட்டி இலைகளால் நெய்யப்பட்ட பச்சை பொன்னாடை அவருக்கு
அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பச்சை பட்டு இழைகளால் அவரது உருவம்
பொறிக்கப்பட்ட கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் 3 ஆயிரம்
மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பச்சை குடை பிடித்து விழாவில் பங்கேற்றனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியா வளம் பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேச்சு
ஏதாவது நடக்ககூடிய காரியமாக முன்னால் ஜனாதிபதி பேசக் கூடாதா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இந்தியா வளம் பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேச்சு
:#: :#:jasmin wrote:ஏதாவது நடக்ககூடிய காரியமாக முன்னால் ஜனாதிபதி பேசக் கூடாதா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஏழை மக்களுக்கு நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்; ஜனாதிபதி பிரதீபா பட்டீல் பேச்சு
» நடிகர் விவேக்கிடம் இது குறித்து ஆலோசித்தேன் : அப்துல்கலாம் பேச்சு
» ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி குண்டுத்தாக்குதலில் உடல் சிதறிப் பலி
» முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை
» இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கையில்
» நடிகர் விவேக்கிடம் இது குறித்து ஆலோசித்தேன் : அப்துல்கலாம் பேச்சு
» ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி குண்டுத்தாக்குதலில் உடல் சிதறிப் பலி
» முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை
» இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கையில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|