Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பிள்ளைக்கு மகளாய் தாய்
+3
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
செய்தாலி
7 posters
Page 1 of 1
பிள்ளைக்கு மகளாய் தாய்
ம்மா ...
திடுக்கிட்டு எழுந்தவன்
கண்ணைக் கசக்கி விழிதிறக்க
ஆறுமணியை காட்டியது கடிகாரம்
எழுந்தவன்
மெல்ல சோம்பலை முறிக்க
படுக்கையில் உதிர்ந்து விழுந்தது
அதுவரையிலான உறக்கம்
அம்மான்னு
சத்தம் போட்டது கேட்டுச்சு
கனவுல உங்க அம்மாவா
நக்கல் கேள்வியுடன் மனைவி
அம்மா
கூப்பிடுவது போல் சத்தம்
மனைவிக்கு பதிலத்தபடி
ஆயத்தமானான் காலைக் கடமைகளில்
மேஜையில்
கைபேசி அழைத்தபடி துடிக்க
கையில் எடுத்த மனைவியோ
ஹலோவுக்குப் பின் மௌனமானாள்
வாடிய
முகத்துடன் ஓடிவந்து
அவன்னோக்கி கைபேசியை நீட்டுகையில்
அவள்விழி உதிர்த்தது கண்ணீரை
அண்ணே ...
அம்மா..ம்மா தவறிருச்சி
ஊருக்கு உடனே புறப்பட்டுவா
அழுத குரலுமாய் தங்கை
அச்சேதி
இடியாய் நெஞ்சில் விழ
நாளத்தில் குருதியோட்டம் நிற்க
தளர்ந்து விழுந்தான் அவன்
வார்த்தைகள்
எங்கோ ஓடி ஒளிந்துகொள்ள
பேசா ஊமையைப்போல் மௌனமாக
அழுதது அவன் இதழ்கள்
ஊருக்கான
நாழிகைகளின் பயணத்தில்
வீடுவரை ஏங்கி அழுததில்
விழிகளில் வற்றியது கண்ணீர்
பேரூந்தில்
வந்திறங்கியவன்
தடுமாறி விழுந்தான் ஊர்வீதியில்
ஓடிவந்து எடுத்த உறவுகளோ
அவனைத் தாங்கியபடி அழுதது
நம்ம
வீட்டு வெளிச்சம் அனைச்சிருச்சு
உறவுகாத்த குலசாமியும் சான்ச்சிருச்சு
தலைமாட்டில் கதறினாள் தங்கை
அண்ணே ...
தாரை தாரையாக உதிரும்
கண்ணீருடன் ஓடிவந்த தம்பியோ
நெஞ்சோடு சேர்த்தழுதான் அவனை
உங்களுக்கெல்லாம்
பாலூட்டி வளத்தவளுக்கு
ஒருசொட்டு பாலூத்த ஆளில்லையே
பக்கத்து வீட்டுக் கிழவி
பெத்தபுள்ளங்க
உசுரோட குத்துக்கல்ல இருந்தும்
நாதியற்று உசுரவிட்டுட்டா
புலம்பியபடி அம்மாவின் தங்கை
பொழப்புக்காக
அங்க இங்கன்னு போயிட்டீங்க
கடைசி நேரத்துல பெத்தவள கவனிக்காமல்
சம்பாதிச்சு என்ன புரோஜனம்
உறவுக்காரர்களில் ஒருவர்
ப்பா..அப்பா
பாட்டி துனியைமூடி தூங்குது
எழுதிருக்க சொல்லுங்கப்பா
அவனின் இரண்டுவயது மகன்
பாட்டிக்கு
கொஞ்சம் உடம்பு சரியில்லை
பாட்டி தூங்கட்டும் என்றபடியே
மகனை வாரியெடுத்து அழுதான்
பத்துமாசம்
சுமந்து பெத்த தாயை
பாடையில சுமந்து கொண்டு
மயான பயணத்தில் அவன்
என்னப்பெத்த
தெய்வத்திற்கு கொள்ளி வைக்கவா
தலைப் புள்ளையாய் பிறந்தேன்
வாய்விட்டுக் கதறினான் அவன்
இரண்டாம் நாள்
இறுதிக் கிரிகைகள் முடிந்து
வீட்டுக்கு வந்தவன் கண்டான்
இரவல் புன்னகையிட்டு மனைவி
அவள்
காதில் எதோ முனுமுனுத்தாள்
ஆழ்ந்த துயர துக்கத்திலும்
மெல்ல மலர்ந்தது அவன்முகம்
நிச்சயமா
இது பெண்குழந்தை தான்
எங்கம்மா மறுபடியும் பிறக்கபோரா
எனக்கு மகளாய்
பிள்ளைக்கு
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய்
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி
பிள்ளைக்கு மகளாய் தாய்
Last edited by செய்தாலி on Thu 20 Oct 2011 - 10:11; edited 1 time in total
Re: பிள்ளைக்கு மகளாய் தாய்
பிள்ளைக்கு மகளாய் தாய் என்ற தலைப்பிற்கு நீங்கள் தந்த கவிதை
இவ்வளவுதான்.
ஆனால்!
இடையில் நீங்கள் கோர்த்துள்ள வரிகள் படித்து முடிக்கும் வரை என் கண்ணில் நீர் வந்த படியே இருந்தது
என்னப்பா கவிதைதானே படிக்கிறாய் ஏன் கண் கலங்கிறது என் மனது என்னைக் கேட்டாலும் வரிகளில் உள்ள ஒரு ஈர்ப்பா அல்லது தாய் மேல் நான் கொண்ட பாசமான்னு தெரியல என்னால் தாங்க முடியாமல் கண்ணீர் வந்து விட்டது
மிகவும் சிறப்பாக வரைந்துள்ளீர்கள் செய்தாலி பாராட்டுக்கள்
அவள்
காதில் எதோ முனுமுனுத்தாள்
ஆழ்ந்த துயர துக்கத்திலும்
மெல்ல மலர்ந்தது அவன்முகம்
நிச்சயமா
இது பெண்குழந்தை தான்
எங்கம்மா மறுபடியும் பிறக்கபோரா
எனக்கு மகளாய்
பிள்ளைக்கு
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய்
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி
பிள்ளைக்கு மகளாய் தாய்
இவ்வளவுதான்.
ஆனால்!
இடையில் நீங்கள் கோர்த்துள்ள வரிகள் படித்து முடிக்கும் வரை என் கண்ணில் நீர் வந்த படியே இருந்தது
என்னப்பா கவிதைதானே படிக்கிறாய் ஏன் கண் கலங்கிறது என் மனது என்னைக் கேட்டாலும் வரிகளில் உள்ள ஒரு ஈர்ப்பா அல்லது தாய் மேல் நான் கொண்ட பாசமான்னு தெரியல என்னால் தாங்க முடியாமல் கண்ணீர் வந்து விட்டது
மிகவும் சிறப்பாக வரைந்துள்ளீர்கள் செய்தாலி பாராட்டுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிள்ளைக்கு மகளாய் தாய்
உண்மைதான் நண்பனின் கூற்றுப்படி கவிதை படிக்க ஆரம்பித்த பிறகு ஆழமாக என்னை அந்த தாயின் அருகே அழைத்துச்சென்ற உணர்வை அடைந்தேன் அருமையான கவிதை இறுதியில் மறுபிறவியை ஆதரித்து மகளாய் உதிக்கிறார் என்று முடித்ததில் ஆழ்ந்து சென்ற அந்த உணர்வு விடுபட்டதாய் உணர்ந்தேன்
பாராட்டுகள் சகோ
பாராட்டுகள் சகோ
Re: பிள்ளைக்கு மகளாய் தாய்
நண்பன் wrote:பிள்ளைக்கு மகளாய் தாய் என்ற தலைப்பிற்கு நீங்கள் தந்த கவிதைஅவள்
காதில் எதோ முனுமுனுத்தாள்
ஆழ்ந்த துயர துக்கத்திலும்
மெல்ல மலர்ந்தது அவன்முகம்
நிச்சயமா
இது பெண்குழந்தை தான்
எங்கம்மா மறுபடியும் பிறக்கபோரா
எனக்கு மகளாய்
பிள்ளைக்கு
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய்
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி
பிள்ளைக்கு மகளாய் தாய்
இவ்வளவுதான்.
ஆனால்!
இடையில் நீங்கள் கோர்த்துள்ள வரிகள் படித்து முடிக்கும் வரை என் கண்ணில் நீர் வந்த படியே இருந்தது
என்னப்பா கவிதைதானே படிக்கிறாய் ஏன் கண் கலங்கிறது என் மனது என்னைக் கேட்டாலும் வரிகளில் உள்ள ஒரு ஈர்ப்பா அல்லது தாய் மேல் நான் கொண்ட பாசமான்னு தெரியல என்னால் தாங்க முடியாமல் கண்ணீர் வந்து விட்டது
மிகவும் சிறப்பாக வரைந்துள்ளீர்கள் செய்தாலி பாராட்டுக்கள்
இந்தக் கிறுக்கலை வாசிக்கையில்
உங்களக்கு இருந்த அதே மனோபாவம் தான்
இதை எழுதும்போது எனக்கு இருந்தது நண்பா
உங்கள் உணர்வுடைய கருத்துக்கு மிக்க நன்றி நண்பன்
Re: பிள்ளைக்கு மகளாய் தாய்
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான் நண்பனின் கூற்றுப்படி கவிதை படிக்க ஆரம்பித்த பிறகு ஆழமாக என்னை அந்த தாயின் அருகே அழைத்துச்சென்ற உணர்வை அடைந்தேன் அருமையான கவிதை இறுதியில் மறுபிறவியை ஆதரித்து மகளாய் உதிக்கிறார் என்று முடித்ததில் ஆழ்ந்து சென்ற அந்த உணர்வு விடுபட்டதாய் உணர்ந்தேன்
பாராட்டுகள் சகோ
மிக்க நன்றி சகோ
Re: பிள்ளைக்கு மகளாய் தாய்
அழகான கவிதை பாராட்டுக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பிள்ளைக்கு மகளாய் தாய்
கண்கள் கலங்கி மனம் கனத்துப்போனது சகோ உங்களின் வரிகள் படிக்கும் போது.
அருமையாக கொண்டு சென்று அற்புதமாக பாசத்தை காட்டியது அனைத்து வரிகளும் அசத்தல் வாழ்த்துகள் தோழரே
அருமையாக கொண்டு சென்று அற்புதமாக பாசத்தை காட்டியது அனைத்து வரிகளும் அசத்தல் வாழ்த்துகள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிள்ளைக்கு மகளாய் தாய்
ஒரு மனதை உருக்கும் கட்டுரை போன்ற ஒரு பாரிதாபமான ஒரு கவிதை என்ன சொல்வெதென்றே புரிய வில்லை அப்படி ஒரு கலக்கம் இந்த கவிதையைப்பார்த்ததும் ஆனால் எனக்கு தலைப்பு புரிய வில்லை இன்னும்.பெத்தபுள்ளங்க
உசுரோட குத்துக்கல்ல இருந்தும்
நாதியற்று உசுரவிட்டுட்டா
புலம்பியபடி அம்மாவின் தங்கை
பொழப்புக்காக
அங்க இங்கன்னு போயிட்டீங்க
கடைசி நேரத்துல பெத்தவள கவனிக்காமல்
சம்பாதிச்சு என்ன புரோஜனம்
உறவுக்காரர்களில் ஒருவர்
வாழ்த்துக்கள் சார்
Re: பிள்ளைக்கு மகளாய் தாய்
பொழப்புக்காக
அங்க இங்கன்னு போயிட்டீங்க
கடைசி நேரத்துல பெத்தவள கவனிக்காமல்
சம்பாதிச்சு என்ன புரோஜனம்
உறவுக்காரர்களில் ஒருவர்
சட்டையடி கவிதை வரிகள் .முகம் காடும் கண்ணடி இந்த வரிகள் .
மனச கொஞ்சம் ,குத்திக் காட்டியது உண்மை .
அங்க இங்கன்னு போயிட்டீங்க
கடைசி நேரத்துல பெத்தவள கவனிக்காமல்
சம்பாதிச்சு என்ன புரோஜனம்
உறவுக்காரர்களில் ஒருவர்
சட்டையடி கவிதை வரிகள் .முகம் காடும் கண்ணடி இந்த வரிகள் .
மனச கொஞ்சம் ,குத்திக் காட்டியது உண்மை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» என் தாய்...
» தாய்!......
» பிள்ளைக்கு தரும் பரிசு
» தமிழக விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு விருது
» தாய்(மை)...
» தாய்!......
» பிள்ளைக்கு தரும் பரிசு
» தமிழக விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு விருது
» தாய்(மை)...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|