சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

பிரச்சினை யாருக்குத்தான் இல்லை Khan11

பிரச்சினை யாருக்குத்தான் இல்லை

2 posters

Go down

பிரச்சினை யாருக்குத்தான் இல்லை Empty பிரச்சினை யாருக்குத்தான் இல்லை

Post by நண்பன் Sun 16 Jan 2011 - 16:08

பிரச்சினை இல்லாமல் மனிதனும் இல்லை பிரச்சினை இல்லாதவன் மனிதனே இல்லை'
என்று கூறுவார்கள். அந்தளவிற்கு எங்கும் எவ்விடத்திலும் பிரச்சினை தான்.
வெளிப் பிரச்சினைகளை பேசித்தீர்த்துக் கொள்ளலாம்.

அதுவே அளவுக்கதிகமாகும் போது பிரச்சினைக்குய நபரையோ பிரச்சினையையோ
தவிர்த்து விடலாம். ஆனால் பிரச்சினை குடும்பத்தில் ஏற்படும்போது தான்
தொடங்குகிறது தலைவலி. காதலித்துத் திருமணம் முடித்தவர் களாகட்டும்
பெற்றோர்களால் நிச்சயித்து திருமணம் முடித்தவர்களாகட்டும் பிரச்சினை
இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்வார் களேயானால் அது கின்னஸ்ஸில் பதிய
வேண்டிய சாதனை தான்.

"இல்லவே இல்லை நாங்கள் இதுநாள் வரைக்கும் எந்த சண்டையும் இல்லாமல் வாழ்ந்து
வருகின்றோம்' எனக் கூறும் சில தம்பதியினரும் உள்ளனர். நான்
மறுப்பதற்கில்லை. ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒருவருக்கொருவர்
புரிந்துணர்வுடன் வாழ்ப வர்களாக இருப்பார்கள். ஒருவர் கோபப்படும் போது
மற்றவர் அமைதியாக இருப்பதனாலேயே குடும்பச் சமனிலை பேணப்படுகிறது.
இதற்குப் புந்துணர்வு மிக முக்கியமானதாகும்.


"ஒருவன் சுதந்திரம் மற்றயவன் மூக்கு நுனிவரை' எனக் கூறுவார்கள். தனிநபரின்
சுதந்திரத்திற்கு எவ்வகையிலும் பங்கம் வரும் போது கோபம் கூட வருகின்றது.
இருபாலாருக்கும் கோபம் ஏற்பட்டாலும் ஒப்பீட்டளவில் ஆண்கள் அதிகம்
கோபப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இதுவே நமது சமூகத்தில்
குடும்பத்தில் நிகழும் போது கணவன் அதிகம் கோபப்படும் சந்தர்ப்பத்தில் மனைவி
அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கின்றாள். இவ்வி
டயத்தில் பெண்ணியத்தைப் பற்றியும் பெண் அடிமைத்தனத்தை பற்றியும்
பேசிக்கொண்டு இருப்பார்களேயானால் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நடுவீதியில்
தான் நிற்க வேண்டும். எனவே நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய வகையில் சில
நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குடும்பச் சச்சரவுகளை வீதிவரை கொண்டு வராது
வீட்டிலேயே தீர்த்துக் கொள்ளலாம்.

கணவனின் தேவையற்ற கோபத்தைத் தவிர்ப்பதற்கான சில வழிகளைக் கூறுகின்றேன்
கவனமாகக் கேளுங்கள். அந்தக் காலத்தில் கணவன் வேலைமுடிந்து வரும்போது
இன்கத்துடன் வரவேற்று உபசரியுங்கள் என்று கூறினார்கள்.

இந்தக் காலத்தில் கணவனல்லவா உபசரிக்க வேண்டியுள்ளது. எனவே பழைய புராணத்தை
இப்பொழுதும் பாடிக்கொண்டிருக்க முடியாது. கணவன் மனைவி இருவருமே வேலைக்குச்
செல்பவர்களாக தற்போது காணப்படுகின்றனர். அவ்வாறு இல்லாவிடினும் தற்போதைய
நிலைமைகளில் குடும்பத்தை கொண்டு நடாத்துவது மிகக்கடினம்.

இவ்வாறு இருவருமே தொழில் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் கூடியவரை மனைவி
கணவனுக்கு முன் வேலை முடிந்து வந்துவிடுவது நல்லது. காரணம் கணவன் வேலையால்
வரும்போது உங்களைக் காணும் பட்சத்தில் மிகுந்த மனமகிழ்ச்சி அடைவர்.

அதுவும் நீங்கள் அவர்களது மனதுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகளை கதைக்கலாம்
அதேபோல் கணவன் தனது வேலைப் பளுவைப் பற்றி உங்களுடன் கலந்துரையாடும் போது
அவர்களது சுமைகளைப்பகிர்ந்து கொள்ளாமல் நீங்கள் அதிகப்பிரசங்கித்தனமாக
நீங்களும் வேலை பார்க்கிறீர்கள் என்கின்ற தலைக்கனத்தில் "எனக்கும் வேலை
தான் நான் அதையெல்லாம் முடித்து வந்து வீட்டு வேலைகளைப் பார்க்கலயா?' என்று
கூறாதீர்கள். இது அவர்களின் சினத்தை இன்னும் அதிகப்படுத்தம்.
அதுமட்டுமல்லாது நீங்கள் சிலசமயங்களில் அவர்களைவிட அதிக சம்பளம்
உழைக்கக்கூடும். ஒரு போதும் அந்தத் திமிரில் கதைத்து விடாதீர்கள் உங்கள்
வாழ்க்கையே இருண்டு விடும்.

வேலை முடிந்து வரும் கணவனிடம் உங்கள் குறைகளை அடுக்காதீர்கள்.
உதாரணத்திற்கு நீங்கள் மதியம் சமையலில் ஈடுபடும் போது உப்பு
முடிந்திருப்பதை அவதானிப்பீர்கள்.
அதைக் கணவன் வீட்டுக்கு வந்ததும் "ஒரு கிழமையாக உப்பு முடியப்போகுதெண்டு
சொல்லிக் கொண்டிருக்கிறன். அதைக் கொஞ்சமாவது காதில் விழுத்தினால் தானே '
என்று பொரிந்து தள்ளாதீர்கள்.

உங்களுடன் படித்த அல்லது வேலை பார்க்கும் ஆண் நண்பர்களுடன் பழகும் போது
கணவருக்கு தெரியும்படியாக அவருக்குக்கூட அறிகப்படுத்திவிட்டு பழகுங்கள்.
இதைவிடுத்து உங்கள் கணவருக்கு பிற ஆடவருடன் நான் பழகுவது பிடிக்குமோ என
நீங்களாகவே நினைத்துப் பயந்து அவர்களுடன் ஒளித்துக் கதைப்பதால் எப்போதாவது
கணவருக்கு நீங்கள் பழகுவது தெரிய வந்தால் தேவையில்லாத சந்தேகங்களுக்கு
வித்திடும். எனவே வெளிப்படையாக இருங்கள். அதை உங்கள் கணவர் புரிந்து
கொள்ளாவிடில் அது அவரது பலவீனம் அல்லது உங்கள் தலைவிதி. உங்களுடன்
இருக்கும் உங்கள் தாய் தந்தையரைப்பற்றியோ விசேடமாக உங்கள் மாமா மாமியைப்
பற்றியோ தேவையில்லாமல் முறையிடாதீர்கள். கூடியவரை அவர்களை
அனுசரித்துப்போங்கள். அதிகளவான குடும்பங்களில் பிரச்சினை இவர்கள் மூலம்
தான் ஆரம்பிக்கின்றது. உங்கள் கணவனிடம் குறைகள் காணுமிடத்து குறிப்பாக அவர்
நடத்தையில் சந்தேகம் வரும்போது "அவர் அப்படிச் செய்யக்கூடியவர் தானா?'
என்று உங்களுக்குள்ளேயே சுயமதிப்பீடு செய்து முடிவெடுங்கள் ஒரு
தீர்மானத்திற்கு வரமுடியாத சந்தர்ப்பத்தில் மட்டும் அவருடன் அதுபற்றி
நேரடியாகக் கதையுங்கள். தேவை யில்லாமல் உங்கள் நண்பர்களிடமோ உறவி னர்களிடமோ
இது பற்றி கதைக்காதீர்கள்.

மிக முக்கியமான விடயம் என்னவெனில் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும்
இடையிலான தாம்பத்திய உறவுதான். அதிகமான குடும்பங்களில் அடிக்கடி கணவன்
மனைவிக் கிடையில் தேவையற்ற சச்சரவுகள் எழும்.

அதற்கு மூல காரணம் படுக்கையறையில் ஏற்பட்ட திருப்தியளிக்காமையாகத் தான்
இருக்கும். பொதுவாக ஆண்களின் செக்ஸ் ஆசைகளைப்பற்றி ஓரளவாவது எழுத்து
ஊடகங்கள் மூலம் அறிந்து வைத்திருப்பது நல்லது.

அதற்கேற்றால் போல் செயற்படுங்கள். அதிகமாக ஆண்கள் சிறு சிறு செக்ஸ்
விளையாட்டுக்களில் தான் அதிகமாக ஆர்வம் காட்டு வார்கள். நீங்கள் சமைக்கும்
போதோ அல்லது துணி துவைக்கும் போதோ அல்லது குளிக்கும் போதோ வந்து
குழந்தைப்பிள்ளைகளைப் போல் சீண்டுவார்கள். நீங்கள் அருவருக்காதீர்கள்.
அல்லது அறவே நாட்டம் இல்லாதது போல் காட்டிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வேறு
விடயங்களுக்கு மறுப்பது வேறு இவ்விடயத்தில் மறுப்பது வேறுவிதமாக அமைந்து
விடும்.
இது ஆசையாக உங்களை அணுகும் கணவரை பல மடங்கு தாக்கும். அவர்கள் மனமுடைந்து
விடுவார்கள். படுக்கையறைதான் செக்ஸுக்குரிய இடமென்ற கருதாதீர்கள். வீட்டின்
மற்றய இடங்கள் தான் அதிகளவான இன்பத்தை உண்டு பண்ணும்.

ஆக மொத்தத்தில் உங்கள் கணவரைப் புரிந்து நடவுங்கள் இல்லறம் என்றுமே நல்லறமாக அமையும்.

நன்றி: இணையம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரச்சினை யாருக்குத்தான் இல்லை Empty Re: பிரச்சினை யாருக்குத்தான் இல்லை

Post by ஹனி Sun 16 Jan 2011 - 21:04

:”@: :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

பிரச்சினை யாருக்குத்தான் இல்லை Empty Re: பிரச்சினை யாருக்குத்தான் இல்லை

Post by நண்பன் Sun 16 Jan 2011 - 22:44

உமா wrote: :”@: :”@:
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரச்சினை யாருக்குத்தான் இல்லை Empty Re: பிரச்சினை யாருக்குத்தான் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  பிரச்சினை யாருக்குத்தான் இல்லை
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
»  தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum