Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:
+2
kalainilaa
நண்பன்
6 posters
Page 1 of 1
மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:
மாணவனை கடத்தி கொடூரமாக
கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:
உடல் முழுவதும் சிகரெட்டால் சுட்டும்
கழுத்தை நெரித்தும் கொன்றது அம்பலம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கருக்கன அள்ளி ஊராட்சியை
சேர்ந்த பழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா கட்டிட மேஸ்திரி. இவரது
மகன் அய்யப்பன் ( வயது 11). இவன் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்
பள்ளியில் 6-ம் வகுப்பு படித்தான்.
வழக்கம் போல்
நேற்று முன்தினம் காலையில் பள்ளிக்கு சென்றவன் அதன் பிறகு மாலையில்
வீட்டுக்கு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில்
தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று
முன்தினம் இரவு ராஜாவுக்கு ஒரு போன் வந்தது. போனில் பேசிய ராஜாவின்
உறவினரான கட்டிட மேஸ்திரி சக்திவேல் என்பவர் மாணவன் அய்யப்பனை பள்ளியில்
இருந்து மொபட்டில் கடத்தி சென்று மறைவான இடத்தில் வைத்து உள்ளதாகவும் அவனை
விடுவிக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்றும் மிரட்டி உள்ளான்.
பணம் தராவிட்டால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளான்.
இது
குறித்து ராயக்கோட்டை போலீசில் ராஜா புகார் செய்தார். போலீசார் சக்திவேலை
பிடித்து போலீசார் விசாரித்த போதுதான் மாணவன் அய்யப்பனை அவர் கடத்தி
கொடூரமாக கொலை செய்து பிணத்தை மலையில் வீசியது தெரிய வந்தது.
முகம்,
கழுத்து, மர்ம உறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் சிகரெட்டால் சுட்டும், கழுத்தை
நெரித்தும் கொலை செய்ததை ஓப்புக் கொண்டான். பணத்துக்காக இந்த கொலையை
செய்ததாக அவன் கூறினான். போலீசார் சக்திவேலை ராயக்கோட்டையை அடுத்த
கிட்டம்பட்டி மூணுகுண்டு மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு
மாணவன் அய்யப்பன் பிணமாக கிடந்த இடத்தை காட்டினான்.
போலீசார்
மாணவனின் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப எடுத்து வந்தனர்.
அப்போது அங்கு திரண்டு வந்த பழையூர் கிராம மக்கள் போலீசாரிடம் இருந்து
மாணவனின் பிணத்தை பறித்துக் கொண்டு தர்மபுரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில்
நடுரோட்டில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5-30 மணி முதல் இரவு
7 மணி வரை இந்த மறியல் நடந்தது.
போலீசில் புகார்
கொடுத்தும், சிறுவனை மீட்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், மாணவனை
கடத்திய வாலிபர் சக்திவேலை புகார் கொடுத்த உடனே கைது செய்யாததை
கண்டித்தும் அவர்கள் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பெரிதும்
பாதித்தது.ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.
சம்பவ
இடத்திற்கு மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு செந்தில்குமார், தேன்கனிக்கோட்டை
துணை சூப்பிரண்டு சுபாஷினி மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் சாலை மறியலை
கைவிட்டு கலைந்து செல்லும் படி கிராம மக்களை வலியுறுத்தினார்கள். ஆனால்
அவர்கள் சாலை மறியலை கைவிட மறுத்ததுடன் மாணவனின் பிணத்தையும் போலீசாரிடம்
ஒப்படைக்க மறுத்து விட்டனர்.
மேலும் அந்த வழியே
வந்த தனியார் பஸ், போலீஸ் ஜீப் மற்றும் ஒரு வேன் ஆகியவற்றின் கண்ணாடியை
உடைத்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது. போலீசார் அவர்களை விரட்டி
அடித்தனர்.
மாணவனின் பிணத்தை மீட்டு
தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிராம
மக்கள் ராயக்கோட்டை கடை வீதியில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக
கடைகள் அடைத்தும் அடைக்கப்பட்டன. அங்கும் போலீசார் சென்று மறியலில்
ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். அப்போது கிராம மக்களுக்கும்
போலீசாருக்கும் இடையே மோதல் நடந்தது. இதில் 2 போலீசார் தாக்கப்பட்டனர்.
அவர்கள் லேசான காயம் அடைந்தனர்.
பின்னர்
கிருஷ்ணகிரியில் இருந்து கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு அந்த
கிராமத்தில் குவிக்கப்பட்டனர். மாணவனை கொன்ற சக்திவேலை ரகசிய இடத்தில்
வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணத்துக்காகத்தான் அவன்
மாணவனை கொன்றானா? அல்லது வேறு காரணம் உண்டா என்றும் போலீசார் தொடர்ந்து
விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொடூர கொலை சம்பவம் அந்தப்பகுதியில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:
உடல் முழுவதும் சிகரெட்டால் சுட்டும்
கழுத்தை நெரித்தும் கொன்றது அம்பலம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கருக்கன அள்ளி ஊராட்சியை
சேர்ந்த பழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா கட்டிட மேஸ்திரி. இவரது
மகன் அய்யப்பன் ( வயது 11). இவன் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்
பள்ளியில் 6-ம் வகுப்பு படித்தான்.
வழக்கம் போல்
நேற்று முன்தினம் காலையில் பள்ளிக்கு சென்றவன் அதன் பிறகு மாலையில்
வீட்டுக்கு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில்
தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று
முன்தினம் இரவு ராஜாவுக்கு ஒரு போன் வந்தது. போனில் பேசிய ராஜாவின்
உறவினரான கட்டிட மேஸ்திரி சக்திவேல் என்பவர் மாணவன் அய்யப்பனை பள்ளியில்
இருந்து மொபட்டில் கடத்தி சென்று மறைவான இடத்தில் வைத்து உள்ளதாகவும் அவனை
விடுவிக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்றும் மிரட்டி உள்ளான்.
பணம் தராவிட்டால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளான்.
இது
குறித்து ராயக்கோட்டை போலீசில் ராஜா புகார் செய்தார். போலீசார் சக்திவேலை
பிடித்து போலீசார் விசாரித்த போதுதான் மாணவன் அய்யப்பனை அவர் கடத்தி
கொடூரமாக கொலை செய்து பிணத்தை மலையில் வீசியது தெரிய வந்தது.
முகம்,
கழுத்து, மர்ம உறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் சிகரெட்டால் சுட்டும், கழுத்தை
நெரித்தும் கொலை செய்ததை ஓப்புக் கொண்டான். பணத்துக்காக இந்த கொலையை
செய்ததாக அவன் கூறினான். போலீசார் சக்திவேலை ராயக்கோட்டையை அடுத்த
கிட்டம்பட்டி மூணுகுண்டு மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு
மாணவன் அய்யப்பன் பிணமாக கிடந்த இடத்தை காட்டினான்.
போலீசார்
மாணவனின் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப எடுத்து வந்தனர்.
அப்போது அங்கு திரண்டு வந்த பழையூர் கிராம மக்கள் போலீசாரிடம் இருந்து
மாணவனின் பிணத்தை பறித்துக் கொண்டு தர்மபுரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில்
நடுரோட்டில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5-30 மணி முதல் இரவு
7 மணி வரை இந்த மறியல் நடந்தது.
போலீசில் புகார்
கொடுத்தும், சிறுவனை மீட்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், மாணவனை
கடத்திய வாலிபர் சக்திவேலை புகார் கொடுத்த உடனே கைது செய்யாததை
கண்டித்தும் அவர்கள் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பெரிதும்
பாதித்தது.ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.
சம்பவ
இடத்திற்கு மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு செந்தில்குமார், தேன்கனிக்கோட்டை
துணை சூப்பிரண்டு சுபாஷினி மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் சாலை மறியலை
கைவிட்டு கலைந்து செல்லும் படி கிராம மக்களை வலியுறுத்தினார்கள். ஆனால்
அவர்கள் சாலை மறியலை கைவிட மறுத்ததுடன் மாணவனின் பிணத்தையும் போலீசாரிடம்
ஒப்படைக்க மறுத்து விட்டனர்.
மேலும் அந்த வழியே
வந்த தனியார் பஸ், போலீஸ் ஜீப் மற்றும் ஒரு வேன் ஆகியவற்றின் கண்ணாடியை
உடைத்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது. போலீசார் அவர்களை விரட்டி
அடித்தனர்.
மாணவனின் பிணத்தை மீட்டு
தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிராம
மக்கள் ராயக்கோட்டை கடை வீதியில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக
கடைகள் அடைத்தும் அடைக்கப்பட்டன. அங்கும் போலீசார் சென்று மறியலில்
ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். அப்போது கிராம மக்களுக்கும்
போலீசாருக்கும் இடையே மோதல் நடந்தது. இதில் 2 போலீசார் தாக்கப்பட்டனர்.
அவர்கள் லேசான காயம் அடைந்தனர்.
பின்னர்
கிருஷ்ணகிரியில் இருந்து கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு அந்த
கிராமத்தில் குவிக்கப்பட்டனர். மாணவனை கொன்ற சக்திவேலை ரகசிய இடத்தில்
வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணத்துக்காகத்தான் அவன்
மாணவனை கொன்றானா? அல்லது வேறு காரணம் உண்டா என்றும் போலீசார் தொடர்ந்து
விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொடூர கொலை சம்பவம் அந்தப்பகுதியில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:
இபப்டி பட்ட மிருக்கத்துக்கு தக்க தண்டனை தரனும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:
kalainilaa wrote:இபப்டி பட்ட மிருக்கத்துக்கு தக்க தண்டனை தரனும் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:
மனித மிருகம் இது நடு தெருவில் வைத்து இவன் தலையை கொய்ய வேண்டும் அதை ஒரு பெரும் கூட்டம் பார்க்க வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:
@. @. ஊர் பார்க்க நடு தெருவில்வைத்து :#.: :#.:jasmin wrote:மனித மிருகம் இது நடு தெருவில் வைத்து இவன் தலையை கொய்ய வேண்டும் அதை ஒரு பெரும் கூட்டம் பார்க்க வேண்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:
கொன்ற கட்டிட மேஸ்திரி கைது: இப்படியானவர்களை
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» ஒரு வயது மகனை கொடூரமாக கொன்ற தாய்
» கள்ள காதலுக்காக மருமகனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாக கொன்ற மனைவி
» பணத்துக்காக பள்ளி மாணவனை தலையில் அடித்து கொன்று புதைத்த தாய், மகன் கைது
» அமெரிக்காவில் 16 வயது மாணவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வீடியோ படம் எடுத்த ஆசிரியை கைது _
» விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தி வந்த கேரளாவை சேர்ந்தவர் கைது
» கள்ள காதலுக்காக மருமகனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாக கொன்ற மனைவி
» பணத்துக்காக பள்ளி மாணவனை தலையில் அடித்து கொன்று புதைத்த தாய், மகன் கைது
» அமெரிக்காவில் 16 வயது மாணவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வீடியோ படம் எடுத்த ஆசிரியை கைது _
» விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தி வந்த கேரளாவை சேர்ந்தவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|