சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை  Khan11

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

2 posters

Go down

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை  Empty தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

Post by நேசமுடன் ஹாசிம் Fri 28 Oct 2011 - 6:52

"தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும்' என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்சமாக, புதுச்சேரியில் 19 செ.மீ., மழை கொட்டியது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, கடந்த 24ம் தேதி துவங்கியது. சில நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை விடாமல் கொட்டி வருகிறது. அதிகபட்சமாக, புதுச்சேரி விமான நிலையத்தில் 19 செ.மீ., மழை பதிவானது.

2 நாட்களுக்கு கனமழை: பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் மேலும் கூறும்போது, "மன்னார் வளைகுடாவுக்கும், ஆந்திரா கடற்கரைக்கும் இடையே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும், உள்மாவட்டங்களில் பல இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை நகரில் மழை விட்டுவிட்டு பெய்யலாம்' என்றார்.

சம்பா நடவு பணி தீவிரம்: திருச்சி மாவட்டம் முழுவதும், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், சம்பா நடவுப் பணி தீவிரமடைந்துள்ளது. திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முடிந்து, சம்பா பயிர் நடவுப் பணி துவங்கியுள்ளது. இந்த மழை, சம்பா நடவுக்கு உகந்ததாக உள்ளது என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

திருச்சியில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு வருமாறு: திருச்சி மாவட்டம் முழுவதும், 1.65 எக்டேர் விவசாய நிலம் உள்ளது. இதில், 70 ஆயிரம் எக்டேர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறுவை பருவம் முடிந்து தற்போது சம்பா பருவம் துவங்கியுள்ளது. சம்பா பயிர், 60 ஆயிரம் எக்டேர், குறுவை, 6,000 எக்டேர், நவரை, 4,000 எக்டேர் பயிரிடப்பட்டுள்ளது. மழை காரணமாக சம்பா நடவுப் பணி தீவிரமடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

உப்பு உற்பத்தி நிறுத்தம்: வேதாரண்யத்தில் தொடர் மழை காரணமாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உப்பு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த, 10 ஆயிரம் மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மழை காரணமாக, உப்பளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உப்பு விலை உயரும் என, உப்பு வியாபாரிகள் தெரிவித்தனர்.

நெல் அறுவடை பணி பாதிப்பு: தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையம் கிராமத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வயல்களில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், அறுவடை செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. அறுவடை இயந்திரங்கள், பாதி அறுவடை செய்யப்பட்ட வயல்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அறுவடை செய்யப்பட்ட 25 குவிண்டால் அளவுள்ள நெற்கதிர்கள், ரெட்டிப்பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன், கடந்த 15 நாட்களாக விற்பனை செய்ய முடியாமல் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது பெய்து வரும் மழையால் நெல் அதிக ஈரப்பதத்துடன் உள்ளது. அதனால், கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு: தேனி மாவட்டம் கட மலை - மயிலை ஒன்றிய பகுதி களிலும், வருஷநாடு மலைப்பகுதி யிலும் பெய்து வரும் தொடர் கன மழையால், வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

சுற்றுலா தலங்களில் "வெறிச்': நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த மூன்று நாட் களாக கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி, முக்கூர்த்தி, பார்சன்ஸ் வேலி உட்பட அனைத்து இடங் களிலும் உள்ள நீர்தேக்கங்கள் நிரம்பி வருகின்றன. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடுங்குளிர் நிலவுகிறது. குறைந்த பட்ச வெப்பநிலை 7.5 செல்சியசாகவும், அதிகபட்ச வெப்பநிலை 17 செல்சியசாகவும் பதிவாகி உள்ளது. ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா ஆகிய பகுதிகளில் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்து காணப் பட்டது. படகு சவாரிக்கு ஆளின்றி, ஊட்டி ஏரியில் படகுகள் எல்லாம் "போட் ஜெட்டிகளில்' நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த காலநிலை தொடரும் பட் சத்தில் உள்ளுர் மக்கள், குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவியர் கடும் அவதிப்பட வேண்டிய சூழல் உள்ளது.

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி யில் பெய்து வரும் பலத்த மழை யால், குற்றாலம் மெயின் அருவியில் செம்மண் நிறத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பயணிகள் குளிக்க அனுமதிக்கப் படவில்லை.போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலையில், வெள்ளநீர் குற்றாலநாதர் கோவில் வாசல் வழியாக கடைவீதியில் ஓடியது.

ஸ்ரீவி., பேயனாற்றில் திடீர் வெள்ளம்: ஸ்ரீவில்லிபுத்தூர் மலை பகுதியில் கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பேயனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், குளிக்கச் சென்றவர்கள் கரைக்கு வர முடியாமல் தவித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகதோப்பு பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. மலையடிவாரத்தில் பேயனாறு, மீன்வெட்டி பாறை போன்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளன. விடுமுறை காலங்களிலும், பேச்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும், ஆற்றிலும், நீர்வீழ்ச்சிகளிலும் குளிப்பது வழக்கம். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. செண்பகதோப்பு பேயனாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது. இந்நிலையில், நேற்று செண்பகதோப்புக்கு சுற்றுலா வந்தவர்கள், பேயனாற்றில் குளிக்க சென்றுள்ளனர். ஆனால், குளிக்கும் போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்டு, மறுகரையில் தள்ளப்பட்டனர். இதனால் அவர்கள் கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. பின், அருகிலிருந்தவர்கள் கயிறு கட்டி இழுத்து வந்து கரை சேர்த்தனர். இதனால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.


தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை  Empty Re: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

Post by முனாஸ் சுலைமான் Fri 28 Oct 2011 - 7:05

விடுமுறை காலங்களிலும், பேச்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும், ஆற்றிலும், நீர்வீழ்ச்சிகளிலும் குளிப்பது வழக்கம். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. செண்பகதோப்பு பேயனாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது. இந்நிலையில், நேற்று செண்பகதோப்புக்கு சுற்றுலா வந்தவர்கள், பேயனாற்றில் குளிக்க சென்றுள்ளனர். ஆனால், குளிக்கும் போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்டு, மறுகரையில் தள்ளப்பட்டனர்.

எனவே கவனம் பக்தர்களும் மக்களும் மற்றவர்களும். ##*
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum