சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மார்பக புற்று நோயை தடுக்க  Khan11

மார்பக புற்று நோயை தடுக்க

Go down

மார்பக புற்று நோயை தடுக்க  Empty மார்பக புற்று நோயை தடுக்க

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 13:31

பல நூற்றாண்டு காலமாகப் புற்று நோய் என்பது மரணம் எனக் கருதப்பட்டதுமல்லாது இந் நோயால் பீடிக்கப்பட்டவர்கள் குடும்பத்தில் காணப்படுவது இழுக்கு என்ற மனப்பாங்கு காணப்பட்டது. மேலும் இது ஒரு பரம்பரை நோய் எனவும் நினைத்தனர். அறியாமை காரணமாக இந் நோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. குணப்படுத்த முடியாத முற்றிய நிலையில்தான் அதிகமானோர் சிகிச்சை பெறுகின்றனர். ஆரம்பத்தில் இந் நோயைக் கண்டு பிடித்து சிகிச்சை அளித்தால் பூரணமாகக் குணப்படுத்த முடியும்.

தற்போது இந் நோய் பற்றிய போதிய அறிவும் விழிப்புணர்வும் இருப்பதால் பெரும்பாலானோர் ஆரம்பத்திலேயே நோயைக் கண்டு பிடித்து உரிய சிகிச்சை மேற்கொண்டு பெரும் பாதிப்புக்கு ஆளாகாமல் தப்பி விடுகின்றனர்.

நாடு, இனம், வயது வித்தியாசமின்றி எல்லோரையும் இந்நோய் தாக்குகிறது. மிருகங்கள், மீன்கள், பூச்சி புழுக்கள் முதலியவற்றைத் தாக்குவதுமல்லாது தாவரங்களைக் கூட இந்நோய் தாக்குகிறது.

உலகளாவிய ரீதியில் மிகத் தீவிரமாக அதிகரித்துக் கொண்டு வரும் இந்நோய் 2010ஆம் ஆண்டு உலக மக்கள் அனைவருக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருக்குமென உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் உலக நோயாளர்களில் பெரும்பாலானோருக்கு மரணத்தை ஏற்படுத்தும் முதல் தர நோயாக இந் நோய் பரிமாணமடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகளாவிய ரீதியில் புற்று நோய் காரணமாக ஏழு மில்லியன் பேர் இறப்பதாகவும் இத் தொகை 2020 ஆம் ஆண்டளவில் இருபது மில்லியனாக உயரும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடந்த வருடம் புற்று நோயால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பன்னிரண்டு மில்லியனாக இருந்து ஏழு மில்லியன் பேர் மரணமடைந்தனர்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 13 ஆயிரம் புதிய புற்று நோயாளர்கள் இனம் காணப்பட்டு 8 ஆயிரம் பேர் இறக்கின்றனர். எண்பது சதவீதமான புற்று நோயாளர்கள் கிராமப்புறங்களில் காணப்படுகின்றனர். இந் நோயை ஆரம்பத்தில் கண்டு பிடித்து சிகிச்சை அளித்தால் 50 சதவீதமான மரணங்களைத் தவிர்க்க முடியும்.

உடலின் உயிர்க் கலங்கள் இயற்கைக்கு மாறாக வேறுபட்ட வடிவங்களில் இயற்கைக்கு மாறான வேகத்தில் பிரிவடைந்து வித்தியாசமான உயிர் கலங்களை உண்டாக்குவதே புற்று நோயின் தோற்றமாகும். புற்று நோய் உயிர் கலங்கள் வேகமாக வளர்வதால் அவ்விடத்தில் ஒரு வெளி வளர்ச்சி அல்லது கட்டி ஏற்படலாம். இது உடலின் எந்தப் பாகத்திலும் ஏற்படலாம். இரத்தத்தில்கூட ஏற்படலாம். புற்று நோய் உயிர்கலங்களை அழிக்கும் சக்திவாய்ந்த லிம்போசயிட்ஸ் (ஃதூட்ணீடணிஞிதூtஞுண்) போர் வீரர் போன்று யுத்தம் செய்து புற்று நோய் உயிர்கலங்களை அழித்து விடுகின்றன. இந்த யுத்தத்தில் இவை தோல்வியுறும் போதுதான் புற்று நோய் ஏற்படுகிறது. புற்று நோய் உயிர் கலங்கள் இரத்தத்தில் கலந்து உடலின் வேறு பாகங்களுக்கும் பரவும். இதனால்தான் இதை ஆங்கிலத்தில் கான்சர் (இச்ணஞிஞுணூ) என்பர். இது ஒரு இலத்தீன் மொழிச் சொல்லாகும். இதன் அர்த்தம் நண்டு என்பதாகும். இந்நோய் நண்டு போல் உடம்புக்குள் மிக வேகமாகப் பரவுவதால் தான் இப் பெயரைப் பெற்றது.

பெண்களைத் தாக்கும் புற்று நோய்களில் முக்கியமானது "மார்பகப் புற்று நோயாகும். இந் நோய் ஆண்களையும் தாக்கும். ஒன்று முதல் இரண்டு சதவீதமான ஆண்கள் இந்நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மார்பக புற்று நோயை தடுக்க  Empty Re: மார்பக புற்று நோயை தடுக்க

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 13:32

இலங்கையில் 22 சதவீதமான பெண்கள் மார்பகப் புற்றுநோயால் தாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அரைவாசிப் பேருக்கு இந் நோய் தங்களைப் பீடித்துள்ளது என்று தெரியாது. ஒரு இலட்சம் பெண்களில் ஒருவர் இந் நோயால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு மூன்று நிமிடங்களிலும் ஒரு பெண் மார்பகப் புற்று நோயால் பீடிக்கப்பட்டு ஒவ்வொரு முப்பது நிமிடங்களிலும் ஒரு பெண் இந் நோய் காரணமாக மரணமடைகிறார். இது தடுக்கக்கூடிய நோயாகும். ஆரம்பத்தில் சிகிச்சை அளித்தால் பூரணமாகக் குணப்படுத்தக் கூடியது. இலங்கையில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களையே இந் நோய் அதிகமாகத் தாக்குகிறது. இந் நோயாளர்களில் மூவரில் இருவர் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்களாகும்.

அதிக கொழுப்பு அடங்கிய உணவுகளை உட்கொள்ளல், இறுக்கமான உள்ளாடை அணிதல், தாய்ப்பாலூட்டுதலை நிறுத்துதல், பால் சுரப்பான ஸ்ரோஜன் அளவிற்கு மீறிச் சுரத்தல், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கருத் தடை மாத்திரைகளை உட்கொள்ளல், மாத விடாய் நின்ற பின் செயற்கை ஸ்ரோஜன் எடுத்தல், அதிகரித்த உடற்பருமன் பரம்பரை, உடற்பயிற்சியின்மை போன்றவை காரணமமாக மார்பகப் புற்று நோய் ஏற்படுகிறது. வாரமொன்றுக்கு 2 1/2 மணித்தியாலயம் நடைப்பயிற்சி மற்றும் யோகா செய்தால் மார்பகப் புற்று நோய் 18 சதவீதத்தால் குறையும் என ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. வாரம் 10 மணித்தியாலயம் செய்தால் இந்த விகிதாசாரம் மேலும் அதிகரிக்கும்.

நீடித்த இருமல் மற்றும் குரல் மாற்றம், குடலின் செயல்பாட்டில் மாற்றம். கட்டிகள் அல்லது வலியற்ற வீக்கங்கள், மச்சம் பெரிதாகுதல், அல்லது வீங்குதல், மாதவிடாயின் போது வழமைக்கு மாறாக அதிக இரத்தப் போக்கு, மார்பக்காம்பில் வெளிப்படையான மாற்றம், குணமாகாத புண், மார்பகத்தின் அளவு அல்லது வடிவத்தில் மாற்றம், திடீரென மார்பகம் பெருத்தல், மார்பகத்தில் பள்ளங்கள் ஏற்படுதல், முலைக் காம்பு உள்நோக்கி வளைந்து நிற்றல், முலைக்காம்பிலிருந்து இரத்தம் கலந்த திரவம் வெளிவரல், முலைக்காம்பிலும் அதைச் சூழ்ந்த பகுதியிலும் சிரங்கு ஏற்படல், மார்பகத்தில் சொறி ஏற்படல் போன்றவை மார்பகப் புற்று நோயின் அறிகுறிகளாகும்.

இரண்டு வகை மார்பகக் கட்டிகள் உள்ளன. தீங்கற்ற கட்டி. இது எவ்விதத் தொந்தரவும் தராது. மற்றப் பாகங்களுக்கும் பரவாது. இக் கட்டி 40 வயதிற்குட்பட்ட பெண்களில் பத்துப் பேரில் ஒன்பது பேருக்கு ஏற்படலாம். தீங்கான கட்டி வயோதிபப் பெண்களையே அதிகம் தாக்கும். இது பல பிரச்சினைகளைக் கொடுக்கும். மற்றப் பாகங்களுக்கும் பரவும். இதற்கு அறுவைச் சிகிச்சை ஒன்றே முடிவான தீர்வாகும். இக்கட்டிகளை ஆரம்பத்தில் கண்டு பிடித்துப் புற்று கட்டிதானா எனப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்த பின் உடனடியாக அகற்றி விட்டால் மேலும் பரவுதலைத் தடுக்க முடியும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் மருந்துகள் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

அடிக்கடி மார்பகத்தை சுய பரிசோதனைக்கு உட்படுத்துதல், ஆண்டு தோறும் மார்பகப் பரிசோதனை செய்தல் போன்றனவற்றால் ஆரம்பத்திலேயே மார்பகக் கட்டிகளைக் கண்டு பிடிக்க முடியும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மார்பக புற்று நோயை தடுக்க  Empty Re: மார்பக புற்று நோயை தடுக்க

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 13:32

உரிய காலத்தில் திருமணம் செய்து கொள்ளல், காலா காலத்தில் குழந்தை பெறல், பாலூட்டுதலை நிறுத்தாமை, தோலினால் செய்த உள்ளாடைகளை அணியாமை, திருமணமாகாத பெண்கள் கொழுப்பு, கல்சியம் மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்தல், இறுக்கமாக உள்ளாடை அணியாமை, மார்பகச் சுய பரிசோதனை மேற்கொள்ளல், மார்பகப் பிரச்சினைகளை மறைக்காமல் வெளிப்படையாகக் கூறல், குடும்பத்தில் முன்னோருக்கு மார்பகப் புற்று நோய் ஏற்பட்டிருந்தால் ஆண்டு தோறும் மார்பகப் பரிசோதனை மேற்கொள்ளல், உடற்பயிற்சி மற்றும் யோகாவில் சிரமமாக ஈடுபடுதல், ஸ்ரோஜன் மாத்திரை பாவனையைத் தவிர்த்தல், கதிரியக்கம் எக்ஸ்கதிர் நடைமுறைகளைத் தவிர்த்தல், ஹோர்மோன் அடங்கிய உணவுகளைத் தவிர்த்தல், புகை மதுபாவனை விட்டு விடல், மாமிசத்தைத் தவிர்த்து அதிக அளவு மரக்கறிகள், பழங்கள் உட்கொள்ளல் போன்றவை மூலம் மார்பகப் புற்று நோய் ஏற்படாது தடுக்கலாம்.

புற்று நோய் ஏற்பட்டுள்ளது என அறிந்ததும் பயப்படக் கூடாது. நிதானமாக நோயை அணுக வேண்டும். சிறப்பு மருத்துவரை அணுகிச் சிகிச்சை பெற வேண்டும். புற்று நோய் தொற்றாத நோயாகும். குடும்பத்திலுள்ளோர் நோயாளிகளிடம் மனிதாபிமானமாக நடந்து கொள்ள வேண்டும். நோயிலிருந்து விடுதலை பெறுவேன் என்ற நம்பிக்கையை நோயாளர்கள் வளர்க்க வேண்டும்.

உணவுக்கும் புற்று நோய்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. கொழுப்பைக் குறைவாக உட்கொள்ள வேண்டும். விலங்குக் கொழுப்பைத் தவிர்க்க வேண்டும். தாவர எண்ணெய் மாஜரின் பாவனையை விட்டு விட்டு வேர்ஜின் ஒலிவ் எண்ணெயைச் சமையலுக்குப் பாவிக்க வேண்டும். பொரித்த, வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மரக்கறி வகைகள் பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். சோயாவை அதிகம் சேர்க்க வேண்டும். இவற்றில் அபரிமிதமாக அடங்கியுள்ள ஒட்சிடனெதிரிகள், விட்டமின்கள் இ,ஈ,உ, கரோடி நோயிட் செலினியம் போன்ற ஊட்டச் சத்துக்கள் புற்று நோய் ஏற்படாது தடுக்கும் வல்லமை கொண்டவையாகும். கரட், முள்ளங்கியில் உள்ளடங்கிய ஒட்சிடனெதிரிகள் புற்று நோயின் வளர்ச்சியை ஐம்பது முதல் எண்பது சதவீதம் மந்தப்படுத்தும் என சமீபத்தில நிரூபிக்கப்பட்டுள்ளது. மரக்கறிகள், பழங்களில் அபரிமிதமாக அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் ஏற்படாது. தடுப்பதுமல்லாது ஏற்பட்ட பின்பும் குணப்படுத்தும் வல்லமை கொண்டவையாகும். மரக்கறி வகைகள், பழங்களில் அபரிமிதமாக அடங்கியுள்ள ஒட்சிடனெதரிகள் புற்று நோயின் வளர்ச்சியை மந்தமாக்கி விடுவதுடன் இருபது சதவீத புற்று நோய்க் கலங்களை அழித்து விடும் வல்லமை கொண்டவை எனச் சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந் நோய்க்கு ஆங்கில வைத்திய முறை மூலம் அளிக்கப்படும் சத்திர சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, மருந்து செலுத்தும் முறை போன்றவை உடலுக்குப் பெரும் தீங்கு ஏற்படுத்தக்கூடியவையாகும். சத்திர சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைகளின் போது புற்றுக் கட்டிகளுக்குப் பக்கத்தில் உள்ள மில்லியன் கணக்கான ஆரோக்கியமான உயிர்க் கலங்கள் அழிந்து விடுகின்றன. மேலும் இவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைச் சீரழித்து விடுகின்றன. இதனால் நோயாளி நடைப் பிணம் போல் மாற்றி விடப்படுகிறான். ஆரோக்கியமான உணவுடன் கூடிய யோகா பயிற்சியே இந்நோய்க்குச் சிறந்த சிகிச்சை முறையாகும்.

கரட் சாறு, தக்காளிச் சாறு, தோடம்பழச் சாறு, வெங்காயம், வெள்ளைப் பூண்டு சில வகை மீன்கள், அப்பிள் போன்ற உணவுகள் புற்று நோய்கள் முக்கியமாக மார்பகப் புற்று நோயைத் தடுக்கும் சக்தி வாய்ந்தவை என ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முட்டைக் கோவா கோவா, கலிபுளோவர் போன்ற உணவுகளில் அபரிமிதமாக அடங்கியுள்ள சில ஒட்சிடனெதிரிகள் சிதைந்த டி.என்.ஏ. எனப்படும் மரபணுவை மிகத் துரிதமாகச் சீர்திருத்தி பற்று நோய் ஏற்படாது தடுக்கின்றன. .

ஜினிஸ்டீன் என்ற சோயாவில் அடங்கியுள்ள ஒட்சிடனெதிரியும் கப்சாசின் என்ற கறிமிளகாயில் உள்ள ஒட்சிடனெதிரியும் குளூடோனைன் என்ற ஏலக்காயில் காணப்படும் ஒட்சிடனெதிரியும் கறிவேப்பிலையில் அடங்கியுள்ள சில ஒட்சிடனெதிரிகளும் இவ்வாறு செயல்பட்டு புற்று நோய் ஏற்படாது தடுக்கும் ஆற்றல்கொண்டவைகளாகும். .

ஐசோதையோயனேட் என்ற முட்டைக் கோவா, கோவா, காலிபிளேவர் போன்ற மரக்கறிகளில் அபரிமிதமாக அடங்கியுள்ள ஒட்சிடனெதிரி உயிர்க் கலங்களின் விருத்தியைக் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது எனச் சமீபத்தில் கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. இதே உணவுகளில் அடங்கியுள்ள சல்பொராபேன் என்ற ஒட்சிடனெதிரி புற்று நோயாளர்களுக்குக் கொடுக்கப்படும் கூச்துணிடூ போன்ற மருந்துகள் போன்று செயல் பட்டு புற்று நோய் உயிர் கலன்களின் பெருக்கத்தைத் தடை செய்யும் ஆற்றல் கொண்டதாகும்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மார்பக புற்று நோயை தடுக்க  Empty Re: மார்பக புற்று நோயை தடுக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum