Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
பயந்தால் வரலாறு படைக்க முடியாது கூடங்குளத்தில் அப்துல் கலாம்
2 posters
Page 1 of 1
பயந்தால் வரலாறு படைக்க முடியாது கூடங்குளத்தில் அப்துல் கலாம்
பயந்தால் வரலாறு படைக்க முடியாது
கூடங்குளத்தில் அப்துல் கலாம்
முடியாது, ஆபத்து, பயம் என்ற நோய் நம்மில் பல பேரிடம் உள்ளது. பயந்தால் வரலாறு
படைக்க முடியாது என்ற கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை குறத்து குடியரசு முன்னாள்
தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி
ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட விரிவான அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு,
கதிர்வீச்சு கதிரியக்கத்துக்கு நோபல் பரிசுகள் பெற்று கதிரியக்கத்தால் தன்னுயிரை
இழந்து தியாகம் செய்த மேடம் கியூரியின் கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கது. கதிரியக்க
சிகிச்சை காரணமாக இன்றைக்கு எத்தனை புற்று நோயாளிகள் குணப்படுத்தப்படுகின்றார்கள்
என்பதை நினைத்துப் பாருங்கள்.
மேலும், வேளாண்மையில் விளைச்சலை அதிகரிக்க கதிரியக்கம் பயன்படுத்தப்படுகிறது.
அணுசக்தி மூலம் உலகம் முழுவதும் 4 இலட்சம் மெகாவட் மின்சாரம் உற்பத்தி
செய்யப்படுகிறது. எனவே, முடியாது, ஆபத்து, பயம் கொண்ட இயலாதவர்களின் கூட்டத்தால்
உபதேசத்தால் வரலாறு படைக்கப்படவில்லை. வெறும் கூட்டத்தால் மாற்றத்தைக் கொண்டுவர
முடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.
கிராமங்கள் வளர்ச்சி அடைய இந்தியாவைப் பொறுத்தவரை 75 கோடி மக்களுக்கும் அதிகமாக 6
இலட்சம் கிராமங்களில் வசிக்கின்றனர். 2008 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் ரூ. 5
இலட்சம் கோடியாக வளர்ந்திருக்கிறது. இதில் தொய்வில்லாமல், இடையூறு இல்லாமல்
இருந்தால் 2020 ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் ரூ. 20 இலட்சம் கோடியை எட்டும்
எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கிராமங்களில் நகர்ப்புற வசதிகள் கிடைக்க வேண்டும். அதாவது, கிராமங்கள்
நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சியை அடைய வேண்டும். இந்த வளர்ச்சியை இந்தியா பெற
மின் உற்பத்தி அவசியமாகும். இந்தியா இப்போது 1,50,000 மெகாவட் மின்சாரத்தை உற்பத்தி
செய்கிறது.
இது உலக உற்பத்தியில் 3 சதவீதம்தான். உலக பொருளாதார வல்லுநர்களின்
எதிர்பார்ப்பின்படி, 2020 ஆம் ஆண்டுக்குள் 4 இலட்சம் மெகாவட் மின்சாரத்தை நாம்
உற்பத்தி செய்தாக வேண்டும். 2030 ஆம் ஆண்டுக்குள் 9 இலட்சத்து 50 ஆயிரம் மெகாவட்
மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். இதுகூட அமெரிக்காவின் தனி மனித எரிசக்தி
இருப்பைக் காட்டிலும் 4 ல் 1 பங்கு குறைவாகத்தான் உள்ளது.
கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 60 கிராமங்களில் வேலைவாய்ப்பு சாலை வசதி,
பசுமை வீடுகள், சுத்தமான குடிநீர், விவசாயத்துக்கு பேச்சிப் பாறையிலிருந்து தண்ணீர்,
500 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்தில் மருத்துவமனை, பள்ளிகள், இணைய வசதி, பேரிடர்
பாதுகாப்பு மேலாண்மை நிலையம் என ரூ. 200 கோடியில் 10 அம்சத் திட்டத்தை வரும் 2015
ஆம் ஆண்டுக்குள் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு உருவாகியுள்ள எதிர்ப்பை மூன்று
விதமாகப் பார்க்கலாம். 1. கூடங்குளம் பகுதியில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள
உண்மையான கேள்விகள், 2. பூகோள அரசியல் வர்த்தகப் போட்டிகளின் காரணமாக விளைந்த விளைவு,
3. நாமல்ல நாடுதான் நம்¨விட முக்கியம் என அறிய முடியாதவர்களின் தாக்கம்.
எனினும், மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது நியாயமான
சந்தேகங்களைப் போக்குவது மிகவும் முக்கியம்.
இவ்வாறு அப்துல் கலாம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கூடங்குளத்தில் அப்துல் கலாம்
முடியாது, ஆபத்து, பயம் என்ற நோய் நம்மில் பல பேரிடம் உள்ளது. பயந்தால் வரலாறு
படைக்க முடியாது என்ற கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை குறத்து குடியரசு முன்னாள்
தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி
ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட விரிவான அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு,
கதிர்வீச்சு கதிரியக்கத்துக்கு நோபல் பரிசுகள் பெற்று கதிரியக்கத்தால் தன்னுயிரை
இழந்து தியாகம் செய்த மேடம் கியூரியின் கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கது. கதிரியக்க
சிகிச்சை காரணமாக இன்றைக்கு எத்தனை புற்று நோயாளிகள் குணப்படுத்தப்படுகின்றார்கள்
என்பதை நினைத்துப் பாருங்கள்.
மேலும், வேளாண்மையில் விளைச்சலை அதிகரிக்க கதிரியக்கம் பயன்படுத்தப்படுகிறது.
அணுசக்தி மூலம் உலகம் முழுவதும் 4 இலட்சம் மெகாவட் மின்சாரம் உற்பத்தி
செய்யப்படுகிறது. எனவே, முடியாது, ஆபத்து, பயம் கொண்ட இயலாதவர்களின் கூட்டத்தால்
உபதேசத்தால் வரலாறு படைக்கப்படவில்லை. வெறும் கூட்டத்தால் மாற்றத்தைக் கொண்டுவர
முடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.
கிராமங்கள் வளர்ச்சி அடைய இந்தியாவைப் பொறுத்தவரை 75 கோடி மக்களுக்கும் அதிகமாக 6
இலட்சம் கிராமங்களில் வசிக்கின்றனர். 2008 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் ரூ. 5
இலட்சம் கோடியாக வளர்ந்திருக்கிறது. இதில் தொய்வில்லாமல், இடையூறு இல்லாமல்
இருந்தால் 2020 ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் ரூ. 20 இலட்சம் கோடியை எட்டும்
எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கிராமங்களில் நகர்ப்புற வசதிகள் கிடைக்க வேண்டும். அதாவது, கிராமங்கள்
நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சியை அடைய வேண்டும். இந்த வளர்ச்சியை இந்தியா பெற
மின் உற்பத்தி அவசியமாகும். இந்தியா இப்போது 1,50,000 மெகாவட் மின்சாரத்தை உற்பத்தி
செய்கிறது.
இது உலக உற்பத்தியில் 3 சதவீதம்தான். உலக பொருளாதார வல்லுநர்களின்
எதிர்பார்ப்பின்படி, 2020 ஆம் ஆண்டுக்குள் 4 இலட்சம் மெகாவட் மின்சாரத்தை நாம்
உற்பத்தி செய்தாக வேண்டும். 2030 ஆம் ஆண்டுக்குள் 9 இலட்சத்து 50 ஆயிரம் மெகாவட்
மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். இதுகூட அமெரிக்காவின் தனி மனித எரிசக்தி
இருப்பைக் காட்டிலும் 4 ல் 1 பங்கு குறைவாகத்தான் உள்ளது.
கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 60 கிராமங்களில் வேலைவாய்ப்பு சாலை வசதி,
பசுமை வீடுகள், சுத்தமான குடிநீர், விவசாயத்துக்கு பேச்சிப் பாறையிலிருந்து தண்ணீர்,
500 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்தில் மருத்துவமனை, பள்ளிகள், இணைய வசதி, பேரிடர்
பாதுகாப்பு மேலாண்மை நிலையம் என ரூ. 200 கோடியில் 10 அம்சத் திட்டத்தை வரும் 2015
ஆம் ஆண்டுக்குள் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு உருவாகியுள்ள எதிர்ப்பை மூன்று
விதமாகப் பார்க்கலாம். 1. கூடங்குளம் பகுதியில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள
உண்மையான கேள்விகள், 2. பூகோள அரசியல் வர்த்தகப் போட்டிகளின் காரணமாக விளைந்த விளைவு,
3. நாமல்ல நாடுதான் நம்¨விட முக்கியம் என அறிய முடியாதவர்களின் தாக்கம்.
எனினும், மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது நியாயமான
சந்தேகங்களைப் போக்குவது மிகவும் முக்கியம்.
இவ்வாறு அப்துல் கலாம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
puthuvaipraba- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|