Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
ஆபத்தில் உதவிய தேனீ தோழி!
4 posters
Page 1 of 1
ஆபத்தில் உதவிய தேனீ தோழி!
ஆட்டு மந்தை ஒன்று, காட்டு எல்லையில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, கொள்ளிக் கண்ணன் புலியின் உறுமல் கேட்டது. உடனே ஆடுகள் நாலா பக்கமும் பாய்ந்தோடின. ஓர் ஆடு, குட்டிபோடும் நிலையில் இருந்தது. குழப்பத்தில் திசை தெரியாமல் காட்டுக்குள்ளே சென்றுவிட்டது. அங்கிருந்த குகை ஒன்றில் தங்கியது. அந்த இடம் பிடித்துப்போனதால், அங்கேயே வசித்தது. குகை அருகே பசுமையான புல்வெளி, சிறிது தொலைவில் அருவி நீர் என ஆனந்தமாக வாழ்ந்து வந்தது.
சிறிது காலத்தில் குட்டிகளை ஈன்றது. அவற்றின் பாதுகாப்புக்காக… உடைந்த பாறையை நகர்த்தி, குகையின் மேல் கதவுபோல் மூடியது. கொஞ்சம் இடைவெளி தெரிந்தாலும், பெரிய மிருகங்கள் நுழையாதபடி இருந்தது. அதேநேரம் ஆட்டுக் குட்டிகள் இடைவெளி வழியே வெளிப்புறத்தைப் பார்க்க முடிந்தது. தாய் ஆடு “அருமைக் குட்டிகளே! இந்தக் காட்டில் ஒரு புலி இருக்கு. அது எந்த சமயத்திலும் வரலாம். நீங்க உள்ளேயே இருக்கணும். நான் வந்து குரல் கொடுத்தால்தான் பாறையை நகர்த்தணும்” என்று எச்சரித்தது. தாய் ஆடு, தினமும் வெளியே சென்று திரும்பியபின், ‘மே… மே…’ என்று கத்தும். குட்டிகள், தாய் தவழ்ந்து உள்ளே நுழையும் அளவுக்கு பாறையை நகர்த்தும். இதை கொள்ளிக் கண்ணன் புலி பல நாட்களாகக் கவனித்து, ஒரு தந்திரம் செய்தது. அதுவும் ஆடுகளைப் போல், ‘மே… மே…” என்று கத்தி, பயிற்சி செய்தது. ஒருநாள், தாய் ஆடு புல் மேய்ந்துவிட்டு அருவியிலிருந்து கொட்டித் திரண்ட நீரை குடித்துக் கொண்டிருந்தது. அப்போது நீரில் ஒரு தேனீ தத்தளிப்பதைப் பார்த்து, ஒரு மரக்கட்டையின் பட்டையை தண்ணீரில் போட்டது. தேனீ அதன் மேல் ஏறித் தப்பியது. “இந்த உபகாரத்தை மறக்க மாட்டேன். என்றாவது என் உதவி தேவைப்பட்டால் நிறைவேற்றுவேன். நாம் அடிக்கடி சந்திப்போம்” என்றது தேனீ. அன்றிலிருந்து வெள்ளாடும் தேனீயும் நெருங்கிய தோழிகளாயின. இரண்டும் அடிக்கடி சந்தித்து உரையாடும். ஒருநாள், தாய் ஆடு குகைக்குத் திரும்பியதும், குட்டிகள் ‘அம்மே, நீ போன கொஞ்ச நேரத்தில் ‘மே, மே”ன்னு சப்தம் கேட்டுச்சு. ஏன் சீக்கிரம் திரும்பிட்டேன்னு ஆச்சரியம். நீ சொன்னபடியே பாறை ஓட்டை வழியா பார்த்தோம். கொள்ளிக் கண்ணன் புலி வெளில இருந்தது. அதுதான் அப்படி கத்தியிருக்கு. நாங்க பாறையை நகர்த்தலை. கொஞ்ச நேரம் கத்திப் பார்த்துட்டுப் போயிடுச்சு. அது மறுபடியும் வருமோனு பயமாயிருக்கும்மா” என்று நடுங்கின. இதைக் கேட்டு, தாய் ஆடும் பயந்துபோனது. இருப் பிடத்தை மாற்ற முடிவு செய்தது. மறுநாள் தன் தோழியான தேனீயைச் சந்தித்தது. ‘கொள்ளிக் கண்ணன் புலியால எங்க உசிருக்கு ஆபத்து. தப்பிக்க ஒரேவழி, வீட்டை மாத்திக்கிறதுதான். நீதான் நாலா பக்கமும் பறந்து போறவளாச்சே… எங்களுக்கு பாதுகாப்பான இடம் ஏதாவது கண்ணுல பட்டா, வந்து சொல்லு” என்றது. ‘எதுக்கு வீட்டை மாத்தணும்? போற இடத்தில் இந்த வசதி கிடைக்குமா? புலி மோப்பம் பிடிச்சு அங்கேயும் வந்துட்டா? இனி நீ மேயப் போனதும், நான் உன்னோட குட்டிகளுக்கு காவல் இருக்கேன். புலி மறுபடியும் வந்தா ஒரு கை பார்க்கிறேன்” என்று சவால்விட்டது. ஆட்டுக்குச் சிரிப்பு. ‘ஏழு அடி நீளம், மூணு அடி உசரம் உள்ள புலிக்கு எதிரில், தேனீ எம்மாத்திரம்?” என்று நினைத்தது. அதன் மனதைப் புண்படுத்த விரும்பாததால் ‘சரி” என்றது. நாள்கள் நகர்ந்தன. கொள்ளிக் கண்ணன் புலிக்கு, மீண்டும் குட்டி ஆடுகளின் நினைவு வந்தது. நாக்கில் நீர் ஊற, அந்த குகைக்கு விரைந்தது. அப்போது, தாய் ஆடு மேயப் போயிருந்தது. குகை வாசலை மூடியிருந்த பாறை அருகே சென்ற புலி, ‘மே… மே…’ என்று கத்தியது. காவலுக்காக ஒரு செடிமேல் உட்கார்ந்திருந்தது தேனீ. இம்முறை, கொள்ளிக் கண்ணன் எப்படியும் ஓர் ஆட்டுக் குட்டியையாவது சாப்பிட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. அது, பாறையைப் பிறாண்டி அசைக்கத் தொடங்கியது. குட்டிகள் பயந்துபோய் ‘மே…மே…” என்று அலறின. நிலைமை மோசமாகிவிட்டதை அறிந்த தேனீ, பறந்துபோய் ஒரு மரத்தில் தேன்கூடு கட்டியிருந்த தேனீக்களை உதவிக்கு அழைத்தது. அவ்வளவுதான்! ‘சர்… சர்”ரென்று நூற்றுக்கணக்கில் தேனீக்கள் பறந்துவந்து, புலியைக் கொட்ட ஆரம்பித்தன. இந்த தாக்குதலைப் புலியால் தாங்க முடியவில்லை. கண்ணைத் திறப்பதுகூட கஷ்டமாகிவிட்டது. ‘தப்பித்தோம், பிழைத்தோம்” என்று அந்த இடத்தைவிட்டு ஓடியே போய்விட்டது. ஆடு, குகைக்குத் திரும்பியதும் நடந்ததை அறிந்தது. தேனீக்கு நன்றி தெரிவித்தது. புலி இந்தப் பக்கம் இனிமேல் தலைகாட்டாது என்று தேனீ உறுதியளித்தது. ‘நாம் யாருக்காவது உதவினால்… அதன் பலன் நிச்சயம் கிடைக்கும்” என்பதை ஆடு புரிந்துகொண்டது.
சிறுவர் உலகம்.
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: ஆபத்தில் உதவிய தேனீ தோழி!
:”@: :!+: :!+:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஆபத்தில் உதவிய தேனீ தோழி!
@. @.முனாஸ் சுலைமான் wrote:நல்ல கதையினை தந்திரிக்கும் உறவுக்கு நன்றி :!@!:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» தேனீ
» தேனீ .........
» தேனீ மனிதன்
» சிந்திக்கும் மக்களுக்கு தேனீ ஓர் அத்தாட்சி
» தேனீ
» தேனீ .........
» தேனீ மனிதன்
» சிந்திக்கும் மக்களுக்கு தேனீ ஓர் அத்தாட்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|