Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அரபு லீக் பார்வையாளர்களை அனுமதிக்க சிரியா இணக்கம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அரபு லீக் பார்வையாளர்களை அனுமதிக்க சிரியா இணக்கம்
அரபு லீக் பார்வையாளர்களை அனுமதிக்க சிரியா இணக்கம்
தலைநகர் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
அரபு லீக் பார்வையாளர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதை கொள்கையளவில் ஏற்பதாக சிரியா அறிவித்துள்ளது.
தனது உள்நாட்டுப் பிரச்சினைகளில் வெளிநாடுகளின் தலையீட்டை விரும்பாத சிரியாவின் போக்கில் இத்தகைய மாற்றம் ஏற்படக் காரணம், சர்வதேச அளவில் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காகத்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். மேலும் இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 3500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ. நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து சர்வதேச அளவில் சிரியாவுக்கு நெருக்கடிகள் எழுந்தன. சிரியாவின் உள்நாட்டு பிரச்சினை குறித்து ஆராய அரசியல் பார்வையாளர்களை அனுப்ப அரபு லீக் முடிவு செய்தது. இது குறித்து சாதகமான முடிவை தெரிவிக்க சிரியாவுக்கு விதித்திருந்த நாள் கெடு கடந்த சனிக்கிழமை முடிவடைந்தது.
மேலும் அரசியல் பார்வையாளர்களை அனுமதிக்காவிட்டால் பொருளாதாரத் தடைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தது அரபு லீக். இதையடுத்தே பார்வையாளர்களை அனுமதிக்க சிரியா ஒப்புக் கொண்டுள்ளது.
இதற்கிடையே சிரியாவின் பிரச்சினை குறித்து அந்நாட்டின் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க இங்கிலாந்தும் தனது வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது.
பிரான்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலெயன் ஜுபேவும், சிரியா மீதான நடவடிக்கைகளைக் கடுமையாக்கும்படி ஐ. நா. பாதுகாப்புச் சபையை வலியுறுத்தியுள்ளார். ஆனால் இந் நடவடிக்கைக்கு ரஷ்யா அதிருப்தி தெரிவித்துள்ளது. அந்நாட்டுக்கு "வீட்டோ" அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்த சுயாதீன படை, தலைநகர் டமஸ்கஸில் உள்ள ஆளும் பாத் கட்சி அலுவலகம் மீது நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. டமஸ்கஸ்ஸின் மஸ்ரா பகுதியில் உள்ள இந்த கட்டிடம் மீது தொடர்ச்சியான எறிகணை மற்றும் கிரனைட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் புகை மண்டலம் வெளியானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது தொடக்க தலைநகர் மீது கிளர்ச்சிப்படை நேரடி தாக்குதல் நடத்திய முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்து எதிர்ப்பாளர்களுடன் இணைந்து செயற்படும் சுயாதீனப் படை அண்டிய நாடான துருக்கியை தலைமையகமாகக் கொண்டு தாக்குதல்களை முன்னெடுத்துவருகிறது.
இதனிடையே வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியப்போவதில்லை என சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் லண்டனில் இருந்து வெளியாகும் "சன்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு அளித்த போட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சிரியாவில் வரும் பெப்ரவரி அல்லது மார்ச்சில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு அரசியல் சட்டம் மாற்றப்படும் என உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் சிரியாவின் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார். புதிய அரசியல் சீர்திருத்தத் தின்படி நாட்டில் ஜனாதிபதி வாக்குப் பெட்டிகள் மூலம் தீர்மானிக்கப்படும் என அந்த பேட்டியில் குறிப்பிட்டார்.
தலைநகர் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
அரபு லீக் பார்வையாளர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதை கொள்கையளவில் ஏற்பதாக சிரியா அறிவித்துள்ளது.
தனது உள்நாட்டுப் பிரச்சினைகளில் வெளிநாடுகளின் தலையீட்டை விரும்பாத சிரியாவின் போக்கில் இத்தகைய மாற்றம் ஏற்படக் காரணம், சர்வதேச அளவில் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காகத்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். மேலும் இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 3500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ. நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து சர்வதேச அளவில் சிரியாவுக்கு நெருக்கடிகள் எழுந்தன. சிரியாவின் உள்நாட்டு பிரச்சினை குறித்து ஆராய அரசியல் பார்வையாளர்களை அனுப்ப அரபு லீக் முடிவு செய்தது. இது குறித்து சாதகமான முடிவை தெரிவிக்க சிரியாவுக்கு விதித்திருந்த நாள் கெடு கடந்த சனிக்கிழமை முடிவடைந்தது.
மேலும் அரசியல் பார்வையாளர்களை அனுமதிக்காவிட்டால் பொருளாதாரத் தடைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தது அரபு லீக். இதையடுத்தே பார்வையாளர்களை அனுமதிக்க சிரியா ஒப்புக் கொண்டுள்ளது.
இதற்கிடையே சிரியாவின் பிரச்சினை குறித்து அந்நாட்டின் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க இங்கிலாந்தும் தனது வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது.
பிரான்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலெயன் ஜுபேவும், சிரியா மீதான நடவடிக்கைகளைக் கடுமையாக்கும்படி ஐ. நா. பாதுகாப்புச் சபையை வலியுறுத்தியுள்ளார். ஆனால் இந் நடவடிக்கைக்கு ரஷ்யா அதிருப்தி தெரிவித்துள்ளது. அந்நாட்டுக்கு "வீட்டோ" அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்த சுயாதீன படை, தலைநகர் டமஸ்கஸில் உள்ள ஆளும் பாத் கட்சி அலுவலகம் மீது நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. டமஸ்கஸ்ஸின் மஸ்ரா பகுதியில் உள்ள இந்த கட்டிடம் மீது தொடர்ச்சியான எறிகணை மற்றும் கிரனைட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் புகை மண்டலம் வெளியானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது தொடக்க தலைநகர் மீது கிளர்ச்சிப்படை நேரடி தாக்குதல் நடத்திய முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்து எதிர்ப்பாளர்களுடன் இணைந்து செயற்படும் சுயாதீனப் படை அண்டிய நாடான துருக்கியை தலைமையகமாகக் கொண்டு தாக்குதல்களை முன்னெடுத்துவருகிறது.
இதனிடையே வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியப்போவதில்லை என சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் லண்டனில் இருந்து வெளியாகும் "சன்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு அளித்த போட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சிரியாவில் வரும் பெப்ரவரி அல்லது மார்ச்சில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு அரசியல் சட்டம் மாற்றப்படும் என உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் சிரியாவின் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார். புதிய அரசியல் சீர்திருத்தத் தின்படி நாட்டில் ஜனாதிபதி வாக்குப் பெட்டிகள் மூலம் தீர்மானிக்கப்படும் என அந்த பேட்டியில் குறிப்பிட்டார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை
» அரபு லீக் கண்காணிப்பு பணியை நீடிக்க சிரிய அரசு இணக்கம்
» சிரியா அரபு லீக் திட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும்
» தடைகளை விலக்கினால் அரபு லீக் திட்டத்தை ஏற்பதாக சிரியா அறிவிப்பு
» அனானின் அமைதி முயற்சியை 10 ஆம் திகதிக்குள் கடைபிடிக்க சிரியா இணக்கம்
» அரபு லீக் கண்காணிப்பு பணியை நீடிக்க சிரிய அரசு இணக்கம்
» சிரியா அரபு லீக் திட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும்
» தடைகளை விலக்கினால் அரபு லீக் திட்டத்தை ஏற்பதாக சிரியா அறிவிப்பு
» அனானின் அமைதி முயற்சியை 10 ஆம் திகதிக்குள் கடைபிடிக்க சிரியா இணக்கம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|