சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

பாக்கு அதன் பயன்களும். Khan11

பாக்கு அதன் பயன்களும்.

2 posters

Go down

பாக்கு அதன் பயன்களும். Empty பாக்கு அதன் பயன்களும்.

Post by ஹம்னா Fri 25 Nov 2011 - 20:07

பாக்கு மரமும் பாகங்களும்:


பாக்கு அதன் பயன்களும். 20100801134352betel_tree

ஒருகாலத்தில் வெற்றிலை போடும் வழக்கம் நிறைய இருந்தது. விருந்துகளின்போது கட்டாயமாக வெற்றிலை பாக்கு உண்டு. அப்போது வெற்றிலை போட்டுக்கொள்வது ஒரு மரியாதை.

*

அவர்களின் கொச்பிடலிட்ய்-யை நாம் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். திருமணத்துக்கு அழைக்கும்போதுகூட பணம் பாக்கு வைத்தே அழைப்பது வழக்கம். நல்லது கெட்டது எல்லாவற்றிலும் வெற்றிலை பாக்கு இருக்கும்.பல சம்பிரதாயங்களில் வெற்றிலை பாக்கு உண்டு.

*


மங்கலகரமான எட்டுப் பொருள்களில் வெற்றிலையும் ஒன்று. இப்போதெல்லாம் வெற்றிலை போடும் வழக்கம் அருகிவிட்டது. சிலர் சிலவேளைகளில் பீடா போடுவார்கள்.

*

பீடாவைப் பற்றிய பழைய மடல் அகத்தியத்தில் உண்டு. வெற்றிலையை வெறும் வெற்றிலையாகப் போடுவதில்லை.பாக்கு, சுண்ணாம்புடன் சேர்த்துத்தான் போடவேண்டும்.

*


பாக்கைப் பழங்காலத்தில் அடைக்காய் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.ஆங்கில மொழியில் பாக்கை Bஎடெல் ணுட், ஆரெcஅ ணுட் என்று சொல்கிறோம். அரெக்கா என்பது அடைக்காயின் மருவல்.

*பெட்டல் என்பது வெற்றிலையின் மருவல். ஆக, இரண்டுமே தமிழ்ச்சொற்க்கள். கடாரத்தின் மிக முக்கிய ஏற்றுமதிப்பொருள்களில் பாக்கும் ஒன்று.

*

இப்போதும்கூட ஆயிரக்கணக்கில் கடாரத்தில் பாக்கு மரங்களைக் காணலாம். பினாங்குத்தீவின் பெயரில் உள்ள பினாங் என்பது பாக்கைக் குறிக்கும் சொல்தான். அங்கு பாக்கு மரங்களும் அதிகம். பாக்கு ஏற்றுமதி மையமாகவும் இருந்தது.பினாங்கு மாநிலத்தின் சின்னமே பாக்கு மரம்தான்.


பாக்கு அதன் பயன்களும். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாக்கு அதன் பயன்களும். Empty Re: பாக்கு அதன் பயன்களும்.

Post by ஹம்னா Fri 25 Nov 2011 - 20:12

பாக்கு அதன் பயன்களும். 220px-Koeh-014


பினாங்கு மாநிலத்தின் கொடி:
ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் நானே பார்த்திருக்கிறேன். இரண்டாம் உலகயுத்தத்தின்போது குண்டுவிழுந்து தரைமட்டமாகிய வீடுகளின் இடிபாடுகளை அப்புறப்படுத்தியபின் அந்த இடங்களில் பெரும்பாலும் பழைய சிமெண்டுத்தரை அப்படியே இருக்கும்.

*

நான்கைந்துவீடுகளின் இடுபாடுகளையெல்லாம் சுத்தமாக்கிவிட்டு அந்த இடத்தில் பாக்கைப் பரப்பிக் காயவைத்து, மலைபோலக் குவித்து வைத்திருப்பார்கள். அங்கேயே சாக்குகளில் நிரப்பி கைவண்டிகளில் ஏற்றி அருகிலிருக்கும் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள்.

*

ஒருகாலத்தில் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலிருந்தவர்களிடம் பினாங்குத்தீவில் பாக்குக் காயவைக்கும்போது அங்கு வரும் காக்கைகளை விரட்டுவதற்கு ஆள்தேவைப்படுகிறது என்று சொல்லியே கூலிவேலைக்கு ஆள்பிடித்துக் கூட்டிவந்ததாகச் சொல்வார்கள்.அப்போது அப்படி கூட்டிவரப்பட்டவர்களின் கதை சோகக்கதை. அது வேறு கதை.



பாக்கு அதன் பயன்களும். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாக்கு அதன் பயன்களும். Empty Re: பாக்கு அதன் பயன்களும்.

Post by ஹம்னா Fri 25 Nov 2011 - 20:17

உரிக்காத பாக்கு:


பாக்கு மரங்களிலிருந்து முற்றிய பாக்கைப் பறித்து இறக்குவார்கள். அவற்றைப் பெரிய பெரிய தோம்புகளில் ஊறவைப்பார்கள். ஊறியபின்னர் இளநீரின் மட்டையை உரிப்பதுபோல பாக்கைச்சுற்றியிருக்கும் மட்டையை அகற்றுவார்கள். அதன்பின்னரே காயவைப்பார்கள். இவ்வாறு காயவைக்கப்பட்டது.

*

பாக்கு மரங்களிலிருந்து முற்றிய பாக்கைப் பறித்து இறக்குவார்கள். அவற்றைப் பெரிய பெரிய தோம்புகளில் ஊறவைப்பார்கள். ஊறியபின்னர்இளநீரின் மட்டையை உரிப்பதுபோல பாக்கைச்சுற்றியிருக்கும் மட்டையை அகற்றுவார்கள். அதன்பின்னரே காயவைப்பது. இவ்வாறு காயவைப்பது கொட்டைப்பாக்கை அவித்து, அதை ஆறவைத்து, அதை ஸ்லைஸ் ஸ்லைஸாக வெட்டி, அதன்பின் காய வைப்பார்கள்.

*

இதைக் 'களிப்பாக்கு' என்று குறிப்பிடுவார்கள்.இது 'மொறுகுமொறுகு'வென்று இருக்கும். இதன் சுவையும்வித்தியாசமானதுதான. கொட்டைப் பாக்கை அப்படியே கடிப்பது என்பது பலருக்கு இயலாத காரியம். ஒருசிலரால் அவ்வாறு கடிக்கமுடியும். பற்களுக்கு இடையில் வைத்து 'நறுக்'கென்று கடித்துவிடுவார்கள்.'டக்'கென்று பாக்குப் பிளக்கும்.

*

நொடிப்பொழுதை ஒரு காலத்தில் 'பாக்குக் கடிக்கும் நேரம்' என்று குறிப்பிடும் சொல்வழக்கு ஒன்று இருந்தது. இவ்வளவு சிரமப்படவேண்டாம் என்று பலர் ஒரு கருவியை வைத்திருப்பார்கள். அதனைப் 'பாக்குவெட்டி' என்று அழைப்பார்கள். இரண்டு கைப்பிடிகள். இடுக்கி போல் இருக்கும்.

ஒரு பிடியில் பதமான கத்தி இருக்கும். பாக்கைவைத்து கைப்பிடிகளை இறுக்கினால் பாக்குப் பிளந்துவிடும். பாக்குகளை மெல்லிய இழைகளாகச் சீவிவைப்பதும் உண்டு.இதைச் சீவல் பாக்கு என்பார்கள்.

*

சீவலை நெய்யில் முந்திரிப்பருப்பு, பிஸ்தாப் பருப்பு, தேங்காய்ப்பூ, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றுடன் நெய்யில் வறுத்து வைப்பதும் உண்டு. சிறிய துணுக்குகளாகப் பாக்கைவெட்டி அந்தத் துணுக்குகளையும் பிஸ்தா, குங்குமப்பூ, ஏலக்காய், ஜாதிக்காய் போன்றவற்றைச் சேர்த்து நெய்யில் வறுத்துவைப்பதும் ஒருவகை. வாசனைப் பாக்குத்தூள் என்பது இது.

*

'அசோகா' வாசனைப்பாக்கு, மதுரை சாமுண்டி வாசனைப் பாக்கு ஆகியவை மிகவும் புகழ பெற்றவையாக இருந்தன. மதுரை மேலக்கோபுரத்தெரு முழுவதுமே சாமுண்டி பாக்குத் தூளும் டெல்லிவாலா நெய் ஸ்வீட்டுகளும் நரசு'ஸ் காப்பித்தூளும் சேர்ந்துமணக்கும். அது ஒரு தனி அலாதிதான்.


மதுரையில் மல்லிகை மட்டுமே மணக்கும் என்பதில்லை. 'ரெட்' படத்தின் மூலம் அந்தக் கருத்து பரவிவிட்டது. மதுரையில் பலவகையான மணங்கள் உண்டு. கொட்டைப் பாக்கு களிப்பாக்கு ஆகியவை காளமேகப் புலவரின் பாடல் ஒன்றில் வரும்.


பாக்கு அதன் பயன்களும். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாக்கு அதன் பயன்களும். Empty Re: பாக்கு அதன் பயன்களும்.

Post by ஹம்னா Fri 25 Nov 2011 - 20:24

கீழ்க்கண்ட படத்தில் மலேசியாவின் இருபது காசு நாணயத்தைக் காணலாம்.

பாக்கு அதன் பயன்களும். 20cents
மலேசிய இருபது காசு நாணயம்.
மலாய்க்காரர்களுடைய வெற்றிலைச்செல்வம்.
பாக்குவெட்டியும் அருகில் இருக்கிறது.


அந்த நாணயத்தின் ஒருபுறத்தில் மலாய்க்காரர்கள் பயன்படுத்தும் வெற்றிலைப் பெட்டி, வெற்றிலை, சுண்ணாம்பு டப்பி, ஏலக்காய் டப்பி, வெட்டப்பட்ட பாக்குத்தூள் டப்பி ஆகியவற்றுடன் முழுப்பாக்கு ஒன்றுடன் பாக்குவெட்டியையும் வெற்றிலைப் பெட்டியின் அருகில் காணலாம். வயதானவர்கள் பயன்படுத்தும் பாக்கு உரலும்கூட அவர்களிடம் உண்டு.

*

BY- கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee

பாக்கு மென்றால் புற்றுநோய் ...

பாக்கு அதன் பயன்களும். Arecanut

ஆசியாவின் பல பகுதிகளில் பாக்கு மெல்வது என்பது ஒரு சாதாரண விஷயம். ஆனால் இவ்வாறு செய்வதால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது என்றும், அதனால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையானது, கடந்த 40 ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தாய்வான் மருத்துவமனை ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

*


தாய்வானின் சுங் ஷான் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் வாய் புற்றுநோயால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரில் 13 பேர் மரணம் அடைவது தெரியவந்துள்ளது.

*


தாய்வானின் கிராமப்புறங்களில் பாக்கு மரம் ஒரு பணப்பயிராக வளர்க்கப்படுகிறது. பெருமளவில் பாக்கு பயிர் செய்யப்பட்டதை தொடர்ந்து, தாய்வான் மக்களுக்கு பாக்கு மெல்லும் பழக்கம் அதிகளவில் ஏற்பட்டது.

*

தாய்வானில் இருக்கின்ற ஆண்களில் 14 சதவீதம் பேர் பாக்கு மெல்கின்றனர். வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு பாக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2100 பேர் வாய் புற்றுநோயால் பலியாகியுள்ளனர். தாய்வானில் ஆண்களின் மரணத்திற்கு நான்காவது முக்கிய காரணமாக வாய் புற்றுநோய் பார்க்கப்படுகிறது.

*


பாக்கு உபயோகப்படுத்துவதை தடுக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது, ஆனால் கட்டுமான பணியாளர்கள், வாகன ஒட்டுநர்கள், மீனவர்கள் போன்றவர்களிடம் பாக்கு பிரபலமாக இருக்கிறது. கேஃபைன் போன்றே பாக்கும் தங்களை விழித்திருக்க வைக்க உதவுவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

*


அரசாங்கம் தாங்கள் தொலைக்காட்சி, செய்தித்தாள், கல்விசாலைகள், தேவாலயங்கள், கிராமங்கள் போன்றவற்றில் பாக்குக்கு எதிராக செய்யும் பிரச்சாரத்தால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த பழக்கம் குறைந்திருப்பதாக கூறுகிறது.

*


ஆனால் வாய் புற்றுநோயால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை குறைய கொஞ்சம் காலம் ஆகும். ஏனென்றால் 1970, 1980 களில் பாக்கு மெல்ல ஆரம்பித்தவர்களுக்கு இப்போது புற்றுநோய் வர ஆரம்பித்துள்ளது.



பாக்கு அதன் பயன்களும். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாக்கு அதன் பயன்களும். Empty Re: பாக்கு அதன் பயன்களும்.

Post by ஹம்னா Fri 25 Nov 2011 - 20:27

வெற்றிலை பாக்கு போடுவதால் ஈறு பாதிப்பு உண்டாகுமா?


பாக்கு அதன் பயன்களும். 220px-Betel_nuts_(from_top)


கண்டிப்பாக வெற்றிலை, பாக்கு போடுவதால் ஈறு பாதிப்பு உண்டாகும். இது தவிர, புகைத்தல், மருந்துகள், வாயை சுத்தம் செய்யும் மருந்துகள், ஆஸ்பி¡¢ன், அம்மோனியா, குளோ¡¢ன், வாய்ப்புற்று நோய்க்காக அளிக்கப்படும் ரேடியக் கதிர்வீச்சு ஆகியவற்றாலும் ஈறுகள் பாதிக்கப்படும்.

*

இதை உடனடியாகக் கவனித்து சிகிச்சையளிக்காவிட்டால் ஈறுகளில் இரத்த நாளங்கள் வி¡¢வடைந்து இரத்த ஒழுக்கு ஏற்படும். நாட்பட்ட நிலையில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு ஈறு நீலம் கலந்த சிவப்பாகவும், தொட்டால் வலிக்கும் தன்மை கொண்டதாகவும் மாறும்.

BY- - Ln. Dr. M.S. சந்திரகுப்தா, BDS., FCIP., DIM PGDHRM., PGDGC.,


பாக்கு அதன் பயன்களும். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாக்கு அதன் பயன்களும். Empty Re: பாக்கு அதன் பயன்களும்.

Post by *சம்ஸ் Fri 25 Nov 2011 - 21:05

அரிய விடையங்களை பகிர்ந்தமைக்கு நன்றி. உங்களின் தேடலில் பலவிடையங்கள் படிக்க கிடைக்கிறது பகிர்விற்கு நன்றி ஹம்னா :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாக்கு அதன் பயன்களும். Empty Re: பாக்கு அதன் பயன்களும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum