Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
நாக்கு இழந்த குருவியும் பேராசை பிடித்தவளும்...
2 posters
Page 1 of 1
நாக்கு இழந்த குருவியும் பேராசை பிடித்தவளும்...
முன்னொரு காலத்தில் ஒரு வயதானவரும் அவருடைய மனைவியும் ஒரு மலையடிவாரத்தில் விறகு வெட்டிப் பிழைத்து வந்தனர். அந்த மனிதர் மிகவும் நல்லவர். நேர்மையானவர். அமைதியானவர். ஆனால் அவருடைய மனைவியோ பேராசை பிடித்தவர்.
ஒருநாள் அந்த மனிதர் மலையருகிலிருந்த காட்டுக்கு விறகு வெட்டச் சென்றார். மரத்தை வெட்டிக்கொண்டிருக்கும்போது ஒரு குருவியின் அழுகுரல் கேட்டது. என்னவென்று அந்த மனிதர் பதைபதைப்புடன் கூர்ந்து கவனித்தார்.
அங்கே உடைந்து கிடந்த மரக்கிளை அருகில் ஒரு குருவி காயம் அடைந்து கிடப்பதைக் கண்டார். அக்குருவியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கொண்டு வந்து, அதற்கு மருந்து போட்டு அதன் காயத்தை குணப்படுத்தினார்.
பின்னர் அதைத் தன்னுடனே வைத்துக் கொண்டார். அதற்குத் தான் உண்ணும் உணவில் ஒரு பகுதியைக் கொடுத்து, அதைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தார். இது அவரது மனைவிக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. தங்களுக்கான உணவை அந்தக் குருவிக்குக் கொடுப்பதை அந்தப் பெண் வெறுத்தாள். இதனால் எப்போதும் பெரியவரைத் திட்டிக் கொண்டே இருப்பாள்.
ஆனாலும் பெரியவர் குருவியைக் கவனிப்பதை நிறுத்தவில்லை. ஒருநாள் அவர் வெளியே செல்லும்போது, குருவியைக் கவனித்துக் கொள்ளும்படி தனது மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றார். அவர் சென்ற பிறகு, அந்தக் கிழவியும் தண்ணீர் எடுப்பதற்காக வெளியே சென்றுவிட்டாள். தனியே இருந்த குருவிக்குப் பசிக்க ஆரம்பித்தது. வீட்டுக்குள் ஏதாவது உணவு கிடைக்குமா என்று தேடிப் பார்த்தது.
அங்கே ஒரு தட்டில் கொஞ்சம் அரிசி இருப்பதைக் கவனித்தது. பசி மிகுதியால் அனைத்தையும் தின்று தீர்த்துவிட்டது. கிழவி வீடு திரும்பியவுடன் தான் வைத்திருந்த அரிசியைக் காணாமல் வருத்தமுற்றாள். அந்த வருத்தம் கோபமாக மாறியது. இது குருவியின் வேலைதான் என்று நினைத்தாள். குருவியைக் கூப்பிட்டு விசாரித்தாள். குருவி பசியில் அரிசியைத் தின்ற கதையைக் கூறியது.
கோபத்தில் குருவியின் சிறிய நாக்கை ஒரு கத்தியைக் கொண்டு அறுத்துவிட்டாள். நாக்கை இழந்த குருவி கதறக்கூட முடியாமல் அந்த வீட்டைவிட்டு வெளியேறியது. பெரியவர் வீடு திரும்பியதும், தனது செல்லக் குருவியைக் காணாமல் தவித்துப் போனார். கிழவியிடம் விசாரித்ததில் குருவியின் நாக்கு அறுபட்ட விவரம் தெரிய வந்தது. "ஓ குருவியே, உன்னைத் தனியே விட்டுச் சென்றதற்காக என்னை மன்னித்து விடு.
எப்படியும் உன்னைத் தேடிக் கண்டுபிடிப்பேன்' என்று கண்ணீர் மல்கக் கூறிக்கொண்டே அந்தப் பெரியவரும் வீட்டை விட்டு வெளியேறினார். குருவியைத் தேடி வெகுதூரம் சென்று மற்றொரு காட்டை அடைந்தார். அப்போது மூன்று குருவிகள் அவர் முன் தோன்றின. அவைகளிடமிருந்து தனது குருவி அவைகளின் இருப்பிடத்தில் இருப்பதைத் தெரிந்து கொண்டார். அவற்றுடன் கூடச் சென்று தனது குருவியைக் கண்டு கொண்டார். அதைத் தூக்கி வைத்துக் கொஞ்சி மகிழ்ந்தார்.
மற்ற குருவிகள் அவருக்கு மிகவும் சுவையான உணவுகளைக் கொண்டு வந்து அன்புடன் உபசரித்தன. பொழுது சாயும்வரை அவைகளுடன் மகிழ்ச்சியாக இருந்தார். மாலையில் அவைகளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தனது வீட்டை நோக்கிக் கிளம்பினார். குருவிகள் எல்லாம் சேர்ந்து இரண்டு பெட்டிகளைக் கொண்டு வந்து அவர் முன் வைத்தன. ஒன்று சிறியதாகவும் ஒன்று மிகப் பெரியதாகவும் இருந்தது. அவற்றில் ஏராளமான செல்வங்கள் இருப்பதாகவும், ஏதாவது ஒரு பெட்டியை அவர் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்றும் குருவிகள் கூறின.
தனக்குச் சிறிய பெட்டியே போதும் என்று கூறிவிட்டு அதை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். தனது மனைவியிடம் நடந்தவற்றைக் கூறிவிட்டுப் பெட்டியைத் திறந்து பார்த்தார். பெட்டிக்குள் நிறையப் பொற்காசுகளும் தங்க நகைகளும் இருந்தன. பேராசை பிடித்த அந்தக் கிழவிக்குத் தானும் அதுபோல ஒரு பெட்டியைப் பெற்று வரவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
உடனே அங்கிருந்து கிளம்பி காட்டுக்குள் வேகமாக ஓடினாள் அந்தக் கிழவி. சீக்கிரத்திலேயே குருவிகள் இருக்கும் இடத்தை அடைந்தாள். குருவிகளிடம் தனக்கும் ஒரு பெட்டி தரும்படி மிகவும் கெஞ்சிக் கேட்டாள்.
குருவிகளுக்கு வெறுப்பாக இருந்தாலும், பெரியவரின் நல்ல மனத்தை நினைத்து அந்தக் கிழவிக்கும் ஒரு பெட்டியைத் தரச் சம்மதித்தன. இப்போது கிழவியின் முன்பு இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன.
ஒன்று பெரியது; மற்றொன்று சிறியது. பெரிய பெட்டிக்குள் இன்னும் அதிகமாக நகைகளும் தங்கக் காசுகளும் இருக்கும் என்ற நினைப்பில் அந்தக் கிழவி பெரிய பெட்டியைத் தேர்வு செய்தாள். குருவிகளும் சம்மதம் தெரிவித்து அந்தப் பெரிய பெட்டியைத் தாராளமாக எடுத்துக் கொண்டு போகலாம் என்று கூறின. பெட்டியை எடுத்துக் கொண்டு வேகவேகமாக வீடு திரும்பினாள். பெரியவருக்குக்கூட காட்டாமல் தானே அந்தப் பெட்டியைத் திறக்க முயற்சித்தாள்.
தான் பெரிய பணக்காரியாக மாறப் போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியுடன் பெட்டியைத் திறந்தாள். பெட்டியைத் திறந்ததும் திடுக்கிட்டுப் போனாள். பெட்டி நிறையப் பாம்புகளும் மற்றும் பயங்கரமான வினோதமான சிறிய விலங்குகளும் பூச்சிகளும் இருந்தன. அவளுடைய பேராசைக்குக் கிடைத்த பரிசு!
ஜப்பானிய நாடோடிக் கதை
தமிழில்: அபி
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நாக்கு இழந்த குருவியும் பேராசை பிடித்தவளும்...
பேராசை பெரும் நட்டம் என்பது அந்த கிழவியின் விடையத்தில் சரியாக விட்டது.
சிந்தனைக்கு பகிர்ந்த கதை அருமை பகிர்விற்கு நன்றி
சிந்தனைக்கு பகிர்ந்த கதை அருமை பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|