Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
மாற்றுத்திறனாளிகள் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு
2 posters
Page 1 of 1
மாற்றுத்திறனாளிகள் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாழ்கின்றனர். இவர்கள் உடலளவில் பலவீனமாக இருந்தாலும் , மனதளவில் தைரியமாகவே உள்ளனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடைக்கின்றன. ஆனால் "ஊனம்' என்ற ஒரே காரணத்தை வைத்து, அவர்களை இந்த சமூகம் சம அளவில் வாய்ப்பளிக்க மறுக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் 1992ம் ஆண்டு முதல் டிச., 3ம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அரசியல், சமூக, கலாசாரம், பொருளாதாரத்தில் மற்றவர்களைப் போல, மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. "அனைவருக்காகவும் நல்ல உலகத்தை படைக்க ஒன்று சேர்வோம்: மாற்றுதிறனாளிகளையும் வளர்ச்சியில் சேர்ப்போம்' என்ற மையக்கருத்து இந்தாண்டு முன்வைக்கப்படுகிறது.
எத்தனை பேர்: உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாகவும் உள்ளனர். வளரும் நாடுகளில் உள்ள மாற்றுத்திறனாளியாக உள்ள குழந்தைகளில் 90 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்வதில்லை என "யுனெஸ்கோ' அமைப்பு தெரிவித்துள்ளது.
வசதிகள் தேவை: மேலை நாடுகளில் ஊனம் வெளியே தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு நுரையீரல், ஒரு சிறுநீரகத்துடன் வாழ்பவர்களை கூட ஊனமுற்றவர்களாகவே கருதுகின்றனர். இன்னும் சில நாடுகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் ஊனமுற்றவர்களாக கருதி அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கின்றன. ஆனால் இந்தியாவில் அவ்வாறான நிலையில்லை. வெளியில் தெரியும் படியான ஊனத்தை தான் அரசே ஏற்றுக்கொள்கிறது. அப்படியும் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. பேருந்துகள், தியேட்டர் போன்ற இடங்களில் சக்கர நாற்காலியுடன் ஏறுவதற்கு வசதி தேவை என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும், சில இடங்களை தவிர நிறைவேற்றப்படவில்லை. இங்கு ஊனமுற்றவர்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் தயங்குகின்றன.
பொருளாதாரம் மேம்பட: ஊனமுற்றவர்களின் பங்களிப்பை ஏற்காமல் நம்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிவிடலாம் என நினைப்பது கனவாகவே முடியும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சமூகத்தின் இரங்கல் பார்வையை பெற்றுக்கொண்டு ஊனமுற்றோர் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு. நாட்டின் முன்னேற்றத்தில் அவர்களின் நியாயமான பங்கேற்பை ஏற்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு சலுகை அளிக்காவிட்டாலும், ஊனமுற்றவர்கள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையையும் பறித்து விடக்கூடாது.
மாற்று திறனாளிகளுக்கு சிறப்புப் பேருந்து :
மாற்று திறனாளிகளுக்கு சிறப்புப் பேருந்து திட்டம் சென்னையில் முதற்கட்டமாக அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகளுக்கு பேருந்தில் ஏறி இறங்குவது மிகவும் சிரமமான ஒன்று இதனால் அவர்கள் தங்களுக்கு சிறப்பு பேருந்து வசதி வேண்டும் என்று பல கோரிக்கைகளை வைத்தனர். அதன் பயனாக இந்த பேருந்து செயல்படுத்தப்பட்டு உள்ளது.
ஓட்டுனரிடம் இருக்கும் 3 பொத்தான்கள் மூலம் இயக்கும் போது இந்த பேருந்தின் கதவு திறக்கப்படும். பின்னர் மாற்று திறனாளிகள் நடத்துனரின் உதவியுடன் பேருந்தின் இருக்கையில் அமர்கிறார். இந்த பேருந்துகள் சென்னையில் 7 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
18 A பேருந்து பாரிமுனை TO தாம்பரம் வரைக்கும், 17 E பேருந்து பிராட்வே TO சாலிகிராமம் வரைக்கும், 15 B பேருந்து பிராட்வே TO கோயம்பேடு வரைக்கும், 29 C பேருந்து பெரம்பூர் TO பெசன்ட் நகர் வரைக்கும், 71 பேருந்து பிராட்வே TO அம்பத்தூர் வரைக்கும், 32 A பேருந்து சுங்கசாவடி TO பட்டினம்பாக்கம் வரைக்கும், A1 கொண்ட பேருந்து சென்ட்ரல் TO திருவான்மியூர் வழித்தடத்திலும் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து கட்டணம் சாதாரண கட்டணமாகவே வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேருந்துகள் இவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் அவர்களின் எதிர்ப்பார்ப்பு என்பது வேறாக இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் 1992ம் ஆண்டு முதல் டிச., 3ம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அரசியல், சமூக, கலாசாரம், பொருளாதாரத்தில் மற்றவர்களைப் போல, மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. "அனைவருக்காகவும் நல்ல உலகத்தை படைக்க ஒன்று சேர்வோம்: மாற்றுதிறனாளிகளையும் வளர்ச்சியில் சேர்ப்போம்' என்ற மையக்கருத்து இந்தாண்டு முன்வைக்கப்படுகிறது.
எத்தனை பேர்: உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாகவும் உள்ளனர். வளரும் நாடுகளில் உள்ள மாற்றுத்திறனாளியாக உள்ள குழந்தைகளில் 90 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்வதில்லை என "யுனெஸ்கோ' அமைப்பு தெரிவித்துள்ளது.
வசதிகள் தேவை: மேலை நாடுகளில் ஊனம் வெளியே தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு நுரையீரல், ஒரு சிறுநீரகத்துடன் வாழ்பவர்களை கூட ஊனமுற்றவர்களாகவே கருதுகின்றனர். இன்னும் சில நாடுகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் ஊனமுற்றவர்களாக கருதி அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கின்றன. ஆனால் இந்தியாவில் அவ்வாறான நிலையில்லை. வெளியில் தெரியும் படியான ஊனத்தை தான் அரசே ஏற்றுக்கொள்கிறது. அப்படியும் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. பேருந்துகள், தியேட்டர் போன்ற இடங்களில் சக்கர நாற்காலியுடன் ஏறுவதற்கு வசதி தேவை என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும், சில இடங்களை தவிர நிறைவேற்றப்படவில்லை. இங்கு ஊனமுற்றவர்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் தயங்குகின்றன.
பொருளாதாரம் மேம்பட: ஊனமுற்றவர்களின் பங்களிப்பை ஏற்காமல் நம்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிவிடலாம் என நினைப்பது கனவாகவே முடியும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சமூகத்தின் இரங்கல் பார்வையை பெற்றுக்கொண்டு ஊனமுற்றோர் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு. நாட்டின் முன்னேற்றத்தில் அவர்களின் நியாயமான பங்கேற்பை ஏற்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு சலுகை அளிக்காவிட்டாலும், ஊனமுற்றவர்கள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையையும் பறித்து விடக்கூடாது.
மாற்று திறனாளிகளுக்கு சிறப்புப் பேருந்து :
மாற்று திறனாளிகளுக்கு சிறப்புப் பேருந்து திட்டம் சென்னையில் முதற்கட்டமாக அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகளுக்கு பேருந்தில் ஏறி இறங்குவது மிகவும் சிரமமான ஒன்று இதனால் அவர்கள் தங்களுக்கு சிறப்பு பேருந்து வசதி வேண்டும் என்று பல கோரிக்கைகளை வைத்தனர். அதன் பயனாக இந்த பேருந்து செயல்படுத்தப்பட்டு உள்ளது.
ஓட்டுனரிடம் இருக்கும் 3 பொத்தான்கள் மூலம் இயக்கும் போது இந்த பேருந்தின் கதவு திறக்கப்படும். பின்னர் மாற்று திறனாளிகள் நடத்துனரின் உதவியுடன் பேருந்தின் இருக்கையில் அமர்கிறார். இந்த பேருந்துகள் சென்னையில் 7 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
18 A பேருந்து பாரிமுனை TO தாம்பரம் வரைக்கும், 17 E பேருந்து பிராட்வே TO சாலிகிராமம் வரைக்கும், 15 B பேருந்து பிராட்வே TO கோயம்பேடு வரைக்கும், 29 C பேருந்து பெரம்பூர் TO பெசன்ட் நகர் வரைக்கும், 71 பேருந்து பிராட்வே TO அம்பத்தூர் வரைக்கும், 32 A பேருந்து சுங்கசாவடி TO பட்டினம்பாக்கம் வரைக்கும், A1 கொண்ட பேருந்து சென்ட்ரல் TO திருவான்மியூர் வழித்தடத்திலும் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து கட்டணம் சாதாரண கட்டணமாகவே வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேருந்துகள் இவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் அவர்களின் எதிர்ப்பார்ப்பு என்பது வேறாக இருக்கிறது.
Re: மாற்றுத்திறனாளிகள் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு
இன்று இது முக்கிய பதிவு சார் ஏன்னா இன்று சர்வதேச விசேட தேவையுடையோர்/ மாற்றுத்திறனாளிகள் தினமாகும் ##* :!@!: :!@!:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|