Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
கிணறுகளை மூட ஒரு லட்சம்
4 posters
Page 1 of 1
கிணறுகளை மூட ஒரு லட்சம்
"மெட்ரோ ரயில் திட்ட சுரங்கப்பாதை வழித் தடங்களில் உள்ள, ஆழ்குழாய் கிணறுகளை மாற்றி அமைக்க, ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும்' என்று, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில், மெட்ரோ ரயில் திட்டத்தில், 45 கி.மீ., தூரத்திற்கு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், வண்ணாரப்பேட்டை -சைதாப்பேட்டை, சென்னை சென்ட்ரல்-திருமங்கலம் இடையே இப்பாதை சுரங்கப்பாதையில் அமைகிறது. இத்திட்டத்தில், 9 மீட்டர் ஆழத்திற்கு கீழ், 6.6 மீட்டர் விட்டம் அளவுள்ள இரண்டு சுரங்கப்பாதைகள், வரும் மார்ச் மாதம் துவங்கப்பட உள்ளது.
இச்சுரங்கப்பாதை, சில இடங்களில் குடியிருப்பு பகுதி வழியாக செல்கிறது. இதனால், சுரங்கப்பணி நடவடிக்கையாக, சுரங்கப்பாதையின் மையத்திலிருந்து இருபுறமும், 16.5 மீட்டர் வரை அமைந்துள்ள, (உபயோகத்தில் உள்ள மற்றும் உபயோகத்தில் இல்லாத) ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த கிணறுகள் ஆகியவற்றை மூடுவது அவசியமாகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு, இழப்பீடு தொகை வழங்கவும், மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் (மக்கள் தொடர்பு) கிருஷ்ணமூர்த்தி விடுத்துள்ள விளக்கம் வருமாறு: மெட்ரோ ரயில் சட்டத்தின் படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆழ்துளை கிணற்றை மூடுவதற்கான அறிவிப்பு, சுரங்க வழி பாதையில் அமைந்துள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு, மாற்று ஆழ்குழாய் கிணற்றை அருகில் அமைத்தல், அல்லது இழப்பீடு தொகை, ஒரு லட்ச ரூபாய் கொடுத்தல், அவரவர் விருப்பத்திற்கேற்ப செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று ஏற்பாடு செய்த பின்பே, ஆழ்குழாய் கிணறுகள் மூடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். சுரங்கப்பாதை அமைப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்போ, நிலத்தடி நீரில் பாதிப்போ எதுவும், அப்பகுதியில் ஏற்படாது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சுரங்கப்பாதை அமைக்கும் போது மேற்கொள்ளும். இவ்வாறு, கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்ட இரண்டு மிஷின்கள் சீனாவிலிருந்து விரைவில் சென்னை பயணம் : சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சுரங்கம் தோண்ட முதல் கட்டமாக, சீனாவிலிருந்து இரண்டு சுரங்கம் தோண்டும் மிஷின்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த மிஷின்களின் செயல்பாடு குறித்த இறுதிக் கட்ட சோதனை, சீனாவில் முடிவடைந்து, வரும் 15ம் தேதி கப்பல் மூலம், சென்னைக்கு புறப்படுகின்றன. ஜனவரியில் சென்னை வந்தடைந்ததும், முதற்கட்டமாக, வண்ணாரப்பேட்டை, ஷெனாய் நகர் நிலையங்களில், சுரங்கம் தோண்டும் பணி, துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் வண்ணாரப்பேட்டை-விமான நிலையம், சென்ட்ரல்-விமான நிலையம் இடையே, மெட்ரோ ரயில் பாதை, 45 கி.மீ., தூரம் அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், வண்ணாரப்பேட்டை-சைதாப்பேட்டை, கோயம்பேடு-சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் பாதை, சுரங்கப் பாதையில் அமைகிறது. சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு, டி.பி.எம்., மெஷின்கள், சீனாவில் உள்ள தொழிற்சாலையில், சமீபத்தில் இறுதி கட்ட சோதனை முடிந்து, வரும் 15ம் தேதி, கப்பலில் ஏற்றப்பட்டு, ஜனவரி மாதம், சென்னை வந்தடைகின்றன.
சுரங்கப்பாதை சுற்றுச்சுவர் அமைப்பதற்கு, கான்கிரீட் அமைப்புகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மோல்டுகள் (டேனல் செக்மென்ட் மோல்டுகள்) கொரியா மற்றும் சீனாவில், தயாராகி வருகின்றன. இவற்றின் இறுதிக் கட்ட சோதனை, சமீபத்தில் முடிவடைந்து, விரைவில் சென்னைக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஜனவரி 15ல் துவக்கம்: இந்த மிஷின் மற்றும் மோல்டுகள், சென்னை வந்ததும், முதற்கட்டமாக, வண்ணாரப்பேட்டை மற்றும் ஷெனாய் நகரில் சுரங்கம் தோண்டும் பணி வரும் ஜனவரி 15ம் தேதிக்கு பின் துவங்கப்பட உள்ளது. இதற்காக, இந்த நிலையங்களில் சுரங்கம் தோண்ட வசதியாக, பள்ளம் தோண்டும் போது மண் சரிவு ஏற்படாமலிருக்க நவீன தொழில் நுட்பத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் பணியில், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் விரைவாக செய்யப்பட ஏதுவாக வேலைப் பணிகள், ஐந்து பகுதிகளாக நடந்து வருகிறது.
சென்னையில், மெட்ரோ ரயில் திட்டத்தில், 45 கி.மீ., தூரத்திற்கு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், வண்ணாரப்பேட்டை -சைதாப்பேட்டை, சென்னை சென்ட்ரல்-திருமங்கலம் இடையே இப்பாதை சுரங்கப்பாதையில் அமைகிறது. இத்திட்டத்தில், 9 மீட்டர் ஆழத்திற்கு கீழ், 6.6 மீட்டர் விட்டம் அளவுள்ள இரண்டு சுரங்கப்பாதைகள், வரும் மார்ச் மாதம் துவங்கப்பட உள்ளது.
இச்சுரங்கப்பாதை, சில இடங்களில் குடியிருப்பு பகுதி வழியாக செல்கிறது. இதனால், சுரங்கப்பணி நடவடிக்கையாக, சுரங்கப்பாதையின் மையத்திலிருந்து இருபுறமும், 16.5 மீட்டர் வரை அமைந்துள்ள, (உபயோகத்தில் உள்ள மற்றும் உபயோகத்தில் இல்லாத) ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த கிணறுகள் ஆகியவற்றை மூடுவது அவசியமாகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு, இழப்பீடு தொகை வழங்கவும், மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் (மக்கள் தொடர்பு) கிருஷ்ணமூர்த்தி விடுத்துள்ள விளக்கம் வருமாறு: மெட்ரோ ரயில் சட்டத்தின் படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆழ்துளை கிணற்றை மூடுவதற்கான அறிவிப்பு, சுரங்க வழி பாதையில் அமைந்துள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு, மாற்று ஆழ்குழாய் கிணற்றை அருகில் அமைத்தல், அல்லது இழப்பீடு தொகை, ஒரு லட்ச ரூபாய் கொடுத்தல், அவரவர் விருப்பத்திற்கேற்ப செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று ஏற்பாடு செய்த பின்பே, ஆழ்குழாய் கிணறுகள் மூடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். சுரங்கப்பாதை அமைப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்போ, நிலத்தடி நீரில் பாதிப்போ எதுவும், அப்பகுதியில் ஏற்படாது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சுரங்கப்பாதை அமைக்கும் போது மேற்கொள்ளும். இவ்வாறு, கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்ட இரண்டு மிஷின்கள் சீனாவிலிருந்து விரைவில் சென்னை பயணம் : சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சுரங்கம் தோண்ட முதல் கட்டமாக, சீனாவிலிருந்து இரண்டு சுரங்கம் தோண்டும் மிஷின்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த மிஷின்களின் செயல்பாடு குறித்த இறுதிக் கட்ட சோதனை, சீனாவில் முடிவடைந்து, வரும் 15ம் தேதி கப்பல் மூலம், சென்னைக்கு புறப்படுகின்றன. ஜனவரியில் சென்னை வந்தடைந்ததும், முதற்கட்டமாக, வண்ணாரப்பேட்டை, ஷெனாய் நகர் நிலையங்களில், சுரங்கம் தோண்டும் பணி, துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் வண்ணாரப்பேட்டை-விமான நிலையம், சென்ட்ரல்-விமான நிலையம் இடையே, மெட்ரோ ரயில் பாதை, 45 கி.மீ., தூரம் அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், வண்ணாரப்பேட்டை-சைதாப்பேட்டை, கோயம்பேடு-சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் பாதை, சுரங்கப் பாதையில் அமைகிறது. சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு, டி.பி.எம்., மெஷின்கள், சீனாவில் உள்ள தொழிற்சாலையில், சமீபத்தில் இறுதி கட்ட சோதனை முடிந்து, வரும் 15ம் தேதி, கப்பலில் ஏற்றப்பட்டு, ஜனவரி மாதம், சென்னை வந்தடைகின்றன.
சுரங்கப்பாதை சுற்றுச்சுவர் அமைப்பதற்கு, கான்கிரீட் அமைப்புகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மோல்டுகள் (டேனல் செக்மென்ட் மோல்டுகள்) கொரியா மற்றும் சீனாவில், தயாராகி வருகின்றன. இவற்றின் இறுதிக் கட்ட சோதனை, சமீபத்தில் முடிவடைந்து, விரைவில் சென்னைக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஜனவரி 15ல் துவக்கம்: இந்த மிஷின் மற்றும் மோல்டுகள், சென்னை வந்ததும், முதற்கட்டமாக, வண்ணாரப்பேட்டை மற்றும் ஷெனாய் நகரில் சுரங்கம் தோண்டும் பணி வரும் ஜனவரி 15ம் தேதிக்கு பின் துவங்கப்பட உள்ளது. இதற்காக, இந்த நிலையங்களில் சுரங்கம் தோண்ட வசதியாக, பள்ளம் தோண்டும் போது மண் சரிவு ஏற்படாமலிருக்க நவீன தொழில் நுட்பத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் பணியில், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் விரைவாக செய்யப்பட ஏதுவாக வேலைப் பணிகள், ஐந்து பகுதிகளாக நடந்து வருகிறது.
Re: கிணறுகளை மூட ஒரு லட்சம்
இழப்பு தொகை என்று கொடுக்காமல் மாற்று ஏற்பாடு செய்து கொடுப்பதே நல்லது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கிணறுகளை மூட ஒரு லட்சம்
மிகவும் உண்மை @. @.நேசமுடன் ஹாசிம் wrote:தொகையாகக் கொடுத்தால் நான்கு நாளையில் முடித்துவிட்டு பிதுங்கி நிற்பார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிணறுகளை மூட ஒரு லட்சம்
(*(: (*(: (*(:பானுகமால் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிணறுகளை மூட ஒரு லட்சம்
நண்பன் wrote:பானுகமால் wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கிணறுகளை மூட ஒரு லட்சம்
ஆ ஊ என்றால் ஓடுகிறீர் அல்லது ஆயுதம் தூக்குகிறீர் உங்களைப் புரிந்து கொள்ளவே முடியாதுள்ளது {)) {)) {)) :!#: :!#:பானுகமால் wrote:நண்பன் wrote:பானுகமால் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிணறுகளை மூட ஒரு லட்சம்
நண்பன் wrote:ஆ ஊ என்றால் ஓடுகிறீர் அல்லது ஆயுதம் தூக்குகிறீர் உங்களைப் புரிந்து கொள்ளவே முடியாதுள்ளதுபானுகமால் wrote:நண்பன் wrote:பானுகமால் wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» குப்பைத்தொட்டியில் கிடந்த ரூ.13 லட்சம்!
» ஃபேஸ்புக்கில் 2.3 லட்சம் வேலைவாய்ப்புக்கள்
» ஆண்டுக்கு 8 லட்சம் தற்கொலைகள்...
» வாயினால் ஒரு லட்சம் ஓவியங்கள்..
» ஜெ., வழக்கு: ரூ. ஒரு லட்சம் அபராதம்
» ஃபேஸ்புக்கில் 2.3 லட்சம் வேலைவாய்ப்புக்கள்
» ஆண்டுக்கு 8 லட்சம் தற்கொலைகள்...
» வாயினால் ஒரு லட்சம் ஓவியங்கள்..
» ஜெ., வழக்கு: ரூ. ஒரு லட்சம் அபராதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|