சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு  Khan11

சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு

2 posters

Go down

சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு  Empty சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Dec 2011 - 7:22

சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்தை, ஒருமித்த கருத்து ஏற்படும் வரை நிறுத்தி வைக்க, டெல்லியில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த பிரச்னை முடிவுக்கு வந்ததால் நாடாளுமன்றம் சுமுகமாக நடந்தது. சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்ததை அனைத்துக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன.

இதை திரும்ப பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி செய்து முடக்கின. இரு அவைகளிலும் ஒருநாள் கூட அலுவல் எதுவும் நடக்கவில்லை. இதனால், மத்திய அரசு கவலை அடைந்தது.

இந்த நிலையில், 4 நாள் விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்ற தொடர் நேற்று மீண்டும் தொடங்கியது. அதற்கு முன்பாக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அதில், நாடாளுமன்ற கட்சிகளை சேர்ந்த எல்லா தலைவர்களும் கலந்து கொண்டனர். அதில், அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவு பற்றி கூட்டத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. பின்னர், தேசிய அளவில் ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில் இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா அளித்த பேட்டியில், ‘’இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. அன்னிய முதலீட்டை அனுமதிப்பது பற்றி அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து முடிவு செய்வதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த பிரச்னையை மீண்டும் எங்களிடம் கொண்டு வந்தாலும் எதிர்ப்போம். இதில் ஒருமித்த கருத்து ஏற்படாது. இந்த திட்டத்தை அமல்படுத்தவும் முடியாது’’ என்றார்.

ஐமு கூட்டணியின் முக்கிய கட்சியான திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர் சுதிப் பாந்தோபத்யாயா கூறுகையில், ‘‘அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை அரசு வாபஸ் பெற்றுள்ளது அல்லது நிறுத்தி வைத்துள்ளது என்று எப்படி வேண்டுமானாலும் கூறலாம். எப்படி இருந்தாலும், இந்த முடிவு அமல்படுத்தப்படவில்லை’’ என்றார்.

இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 22ல் இருந்து 11 நாட்களாக செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் அமைதியாக நடந்தது. மக்களவை தொடங்கியதும் எழுந்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ‘‘சில்லரை வணிகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவு, சம்பந்தப்பட்ட எல்லா தரப்புடனும் பேசி ஒருமித்த கருத்து ஏற்படும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது’’ என்று அறிக்கை ஒன்றை வாசித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘‘இந்த முடிவை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளுடன் பேசி ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே, இனி திட்டத்தை தொடர்வது பற்றி அரசு முடிவெடுக்கும். எனவே, நாடாளுமன்றம் அமைதியாக நடக்கட்டும்’’ என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், ‘‘அன்னிய முதலீடு திட்டத்தை நிறுத்தி வைக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. இதனால், அரசுக்கு தோல்வி ஏற்பட்டதாக கருதக் கூடாது. மாறாக, ஜனநாயகம் வலுப்படுத்தப்பட்டு இருக்கிறது. பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் நன்றி’’ என்றார். இதைத் தொடர்ந்து, கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. இரு அவைகளும் நாள் முழுவதும் அமைதியாக நடந்தன.

‘அரசு பணியவில்லை’

அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ராஜிவ் சுக்லா அளித்த பேட்டியில், ‘‘அன்னிய முதலீடு பிரச்னையில் எதிர்க்கட்சிகளுக்கும், ஐமு கூட்டணி கட்சிகளுக்கும் மத்திய அரசு பணிந்து விட்டதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. பணியும் பேச்சுக்கே இடமில்லை. இது, ஜனநாயக நாடு. எந்த பிரச்னையாக இருந்தாலும் நாங்கள் விவாதிக்கவே விரும்புகிறோம். அனைத்துக் கட்சி கூட்டம் அமைதியாக நடந்தது. இனிமேல், நாடாளுமன்றம் நடக்கும்’’ என்றார்.


சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு  Empty Re: சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு

Post by jasmin Thu 8 Dec 2011 - 10:18

இதுவே தற்போதைய ஆட்சி ஒரு முதுகெழும்பு இல்லாத ஆட்சி என்பதற்கு உதாரனம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு: எதிர்ப்பை சமாளிப்பது பற்றி காங்கிரஸ் ஆலோசனை
» மத்திய அரசு ஜனநாயகத்தின் மீது நடத்தியுள்ள நேரடி தாக்குதல்'!: திஷா ரவி கைதுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் க
» ஈ. பி. எப்., வட்டி வீதம் 8.5 சதவீதமாக்க மத்திய அரசு திட்டம்?
» எல்.ஐ.சி.,யின் 25% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்
» ஓட்டல்களின் தரத்தை உயர்த்த மத்திய அரசு அதிரடி திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum