Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
நகம், கண்கள், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருக்க காரணம்...
Page 1 of 1
நகம், கண்கள், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருக்க காரணம்...
மஞ்சள் காமாலை நோய் தாக்கியவரின் கண்கள், சிறுநீர், விரல் நகம் போன்றவையும் மஞ்சள் நிறத்தில் மாறுகிறது. அதனால்தான் மஞ்சள் காமாலை நோய் என்று பெயரிடப்பட்டது.
இப்படி உடலில் மஞ்சள் தன்மை ஏற்பட என்னக் காரணம் என்பதை முதலில் பார்ப்போம்.
ரத்தத்தில் உள்ள சிவப்பணுவினுள் (Red Blood Cells) உள்ள ஹீமோகுலோபின் (Hemoglobin) என்ற பொருள் தான் பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) நுரையீரலிலிருந்து உடலின் பிற இடங்களுக்கு கொண்டு செல்கிறது.
இப்படிப்பட்ட உன்னதப் பணியை செய்யும் ரத்த சிவப்பணுக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம்தான் உண்டு. அந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பின் சிவப்பணுக்கள் இறந்து விடுகின்றன. அப்படி இறந்த சிவப்பணுவினுள் உள்ள ஹீமோகுலோபின் சில வேதியியல் மாற்றங்களால் பிலிரூபின் (Bilirubin) என்ற பொருளாகிறது. இதை எதனுடனும் இணைக்கப்படாத பிலிரூபின் (Unconjugated Bilirubin) என்று அழைக்கிறார்கள்
இந்த பிலிரூபின் என்பது உடலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவாகும். ஆனால் இணைக்கப்படாத பிலிரூபின் என்பது நீரில் கரையாத பொருள். எனவே சிறுநீரகங்களால் இந்த இணைக்கப்படாத பிலிரூபினை அதிக அளவில் வெளியேற்ற முடியாது. மிகவும் சிறிய அளவிலேயே சிறுநீரகங்கள் இதனை வெளியேற்றுகின்றன. இதற்கு நமது உடலில் ஒரு அருமையான மாற்று ஏற்பாடு உள்ளது. ஈரலில் (லிவர்) இந்த பிலிரூபினானது குலுக்குரோனிக் அமிலத்துடன் சேர்ந்து (குலுக்குரோனிக் ஆசிட்) இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது. இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினை சிறுநீரகங்கள் முழுமையாக வெளியேற்றி விடும்.
ஆகவே இரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுலோபினிலிருந்து பிலிரூபின் வருகிறது. இந்த இணைக்கப்படாத பிலிரூபின் இரத்தத்தில் இருக்கிறது. இது மஞ்சள் நிறப்பொருள். இது ஈரலில் இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது. இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினானது ஈரலிலிருந்து பித்தநீருடன் (பைல்) சேர்ந்து பித்த நாளங்கள் வழியாக (பைல் டக்ட்) இரைப்பைக்கு (டியோடினம்) வருகிறது. இதில் ஒரு பங்கு சிறுகுடலில் இருந்து இரத்ததிற்கு சென்று சிறுநீரகத்தினால் வெளியேற்றப்படுகிறது. ஒரு பங்கு மலத்துடன் வெளியேற்றப்படுகிறது.
இது தான் நமது உடலில் தினமும், ஏன் ஒவ்வொரு வினாடியும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இதில் எங்கேயும் ஒரு சிக்கல் ஏற்பட்டால், அதாவது வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஹீமோகுலோபின் உடைந்தால், ஈரலில் பிரச்சினை ஏற்பட்டு இணைக்கப்படாத பிலிரூபனை இணைக்கப்பட்ட பிலிரூபனாக மாற்ற முடியாமல் போனால், ஈரலிலிருந்து இரைப்பைக்கு பித்தம் வரும் வழியில் ஏதேனும் அடைப்பு இருக்கிறது என்றால் என சில காரணங்களால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.
பிலிரூபின் என்பது மஞ்சள் நிறத்திலானது, இது உடலில் இருந்து முறையாக வெளியேறாமல் ரத்தத்தில் அதிக அளவு கலந்திருக்கும் போது உடலின் சில உறுப்புகள் மஞ்சள் நிறத்தில் மாறுகிறது. எனவே தான் நகம், கண்கள், சிறுநீர் போன்றவை மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன.
இப்படி உடலில் மஞ்சள் தன்மை ஏற்பட என்னக் காரணம் என்பதை முதலில் பார்ப்போம்.
ரத்தத்தில் உள்ள சிவப்பணுவினுள் (Red Blood Cells) உள்ள ஹீமோகுலோபின் (Hemoglobin) என்ற பொருள் தான் பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) நுரையீரலிலிருந்து உடலின் பிற இடங்களுக்கு கொண்டு செல்கிறது.
இப்படிப்பட்ட உன்னதப் பணியை செய்யும் ரத்த சிவப்பணுக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம்தான் உண்டு. அந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பின் சிவப்பணுக்கள் இறந்து விடுகின்றன. அப்படி இறந்த சிவப்பணுவினுள் உள்ள ஹீமோகுலோபின் சில வேதியியல் மாற்றங்களால் பிலிரூபின் (Bilirubin) என்ற பொருளாகிறது. இதை எதனுடனும் இணைக்கப்படாத பிலிரூபின் (Unconjugated Bilirubin) என்று அழைக்கிறார்கள்
இந்த பிலிரூபின் என்பது உடலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவாகும். ஆனால் இணைக்கப்படாத பிலிரூபின் என்பது நீரில் கரையாத பொருள். எனவே சிறுநீரகங்களால் இந்த இணைக்கப்படாத பிலிரூபினை அதிக அளவில் வெளியேற்ற முடியாது. மிகவும் சிறிய அளவிலேயே சிறுநீரகங்கள் இதனை வெளியேற்றுகின்றன. இதற்கு நமது உடலில் ஒரு அருமையான மாற்று ஏற்பாடு உள்ளது. ஈரலில் (லிவர்) இந்த பிலிரூபினானது குலுக்குரோனிக் அமிலத்துடன் சேர்ந்து (குலுக்குரோனிக் ஆசிட்) இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது. இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினை சிறுநீரகங்கள் முழுமையாக வெளியேற்றி விடும்.
ஆகவே இரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுலோபினிலிருந்து பிலிரூபின் வருகிறது. இந்த இணைக்கப்படாத பிலிரூபின் இரத்தத்தில் இருக்கிறது. இது மஞ்சள் நிறப்பொருள். இது ஈரலில் இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது. இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினானது ஈரலிலிருந்து பித்தநீருடன் (பைல்) சேர்ந்து பித்த நாளங்கள் வழியாக (பைல் டக்ட்) இரைப்பைக்கு (டியோடினம்) வருகிறது. இதில் ஒரு பங்கு சிறுகுடலில் இருந்து இரத்ததிற்கு சென்று சிறுநீரகத்தினால் வெளியேற்றப்படுகிறது. ஒரு பங்கு மலத்துடன் வெளியேற்றப்படுகிறது.
இது தான் நமது உடலில் தினமும், ஏன் ஒவ்வொரு வினாடியும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இதில் எங்கேயும் ஒரு சிக்கல் ஏற்பட்டால், அதாவது வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஹீமோகுலோபின் உடைந்தால், ஈரலில் பிரச்சினை ஏற்பட்டு இணைக்கப்படாத பிலிரூபனை இணைக்கப்பட்ட பிலிரூபனாக மாற்ற முடியாமல் போனால், ஈரலிலிருந்து இரைப்பைக்கு பித்தம் வரும் வழியில் ஏதேனும் அடைப்பு இருக்கிறது என்றால் என சில காரணங்களால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.
பிலிரூபின் என்பது மஞ்சள் நிறத்திலானது, இது உடலில் இருந்து முறையாக வெளியேறாமல் ரத்தத்தில் அதிக அளவு கலந்திருக்கும் போது உடலின் சில உறுப்புகள் மஞ்சள் நிறத்தில் மாறுகிறது. எனவே தான் நகம், கண்கள், சிறுநீர் போன்றவை மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன.
Similar topics
» பெண்களின் சிரிப்பிற்கு காரணம் என்ன
» மாறு கண் ஏற்படக் காரணம்
» நகங்கள் மீது தேவை கவனம்.காரணத்தை அறிவது நல்லது.
» சிறு நீரகக் கல்
» சிறு நகைசுவை
» மாறு கண் ஏற்படக் காரணம்
» நகங்கள் மீது தேவை கவனம்.காரணத்தை அறிவது நல்லது.
» சிறு நீரகக் கல்
» சிறு நகைசுவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|