சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

கேரள அரசுக்கெதிரான போராட்டத்தில் தமிழக மக்கள் அணி திரள்வதால் எல்லையோரம் பதற்றம் Khan11

கேரள அரசுக்கெதிரான போராட்டத்தில் தமிழக மக்கள் அணி திரள்வதால் எல்லையோரம் பதற்றம்

Go down

கேரள அரசுக்கெதிரான போராட்டத்தில் தமிழக மக்கள் அணி திரள்வதால் எல்லையோரம் பதற்றம் Empty கேரள அரசுக்கெதிரான போராட்டத்தில் தமிழக மக்கள் அணி திரள்வதால் எல்லையோரம் பதற்றம்

Post by *சம்ஸ் Tue 13 Dec 2011 - 6:18


முல்லைப் பெரியாறு விவகாரத்தினால் இரு மாநிலங்களிடையே 13 வழிகளும் தடைப்படும் ஆபத்து
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து தமிழக கேரள எல்லையான குமுளியை நோக்கி 2வது நாளாக நேற்று முன்தினம் 1 இலட்சம் பேர் பேரணியாக சென்றனர். அவர்கள் கேரளாவுக்கு செல்லும் 13 வழிச்சாலைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முல்லைப் பெரியாறு அணை விவ காரத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் முயற்சியை கேரள அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ள சூழ்நிலையில், கேரள மாநிலம் குமுளியில் தமிழர்கள் தாக்கப் பட்டதையடுத்து இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்தது.

இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 5ந் திகதி முதல் தமிழகத்தில் தேனி மாவட்ட எல்லைப் பகுதியான கம்பம், கூடலூர் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

கம்பம் நகர் மற்றும் கூடலூர் நகர்ப்பகுதிகளில் கடை அடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டம் முழுவதும் வக்கீல்கள் சங்கம், வர்த்தகர்கள் சங்கம், ஆட்டோ, கார், வேன், ஓட்டுனர்கள் சங்கம் உட் பட பல்வேறு அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதம், மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர், கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி பகுதி மக்கள் 25 ஆயிரம் பேர் நேற்று முன்தினம் கேரள மாநிலம் குமுளி எல்லையை நோக்கி பேரணியாக சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் 2வது நாளாக கம்பம், கூடலூர் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், விவசாயிகள் கேரள எல்லையான குமுளியை நோக்கி பேரணி நடத்தினர்.

இதற்காக ஆங்கூர் பாளையம், காமய கவுண்டன்பட்டி, சுருளிப் பட்டி, அணைப்பட்டி, நாராயணதேவன்பட்டி, குச்சனூர், கூளையனூர் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு, கூடலூர் பகுதி திராட்சை தோட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், பொது மக்கள் அந்தந்த பகுதிகளில் திரண்டனர். ஆயிரக்கணக் கான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் அவர்கள் குமுளியை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த பிரமாண்ட பேரணி காரணமாக குமுளி சாலை மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்தது.

அவர்களை தடுத்து நிறுத்தும் விதமாக அதிகாலையிலேயே கூடலூர் பெட்ரோல் பங்க் அருகே பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டு தேனி மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு பிரவீண் குமார் அபினபு தலைமையில் ஏராளமான பொலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர்.

பேரணியாக சென்றவர்களை பொலிஸார் கூடலூர் பெட்ரோல் பங்க் அருகே தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் கட்டுக் கடங்காத அளவிற்கு மக்கள் வெள்ளம் திரண்டதால் அவர்களை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் பொலிஸாரை மீறி முன்னேறி சென்று கொண்டே இருந்தனர். கூடலூர் ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகே தடுப்பு பகுதியில் பொலிஸார் அவர்களை தடுத்தனர்.

காலை 10 மணியளவில் ஆலமரம் பகுதிக்கு வந்த பொதுமக்களை வழிமறித்து அவர்கள் மத்தியில் தேனி மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு பிரவீண்குமார் பேசினார். அவர் கூறும்போது, 'உங்க ளுக்காக நாங்கள் இருக்கிறோம். காவல் துறை துணையாக இருக்கிறது. நீங்கள் அமைதியாக திரும்பி செல்லவேண்டும்' என்றார். ஆனால் ஆவேசமாக வந்த மக்கள் குமுளி வரை சென்று போராட்டம் நடத்தவேண்டும். கேரள மாநிலத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் மூடவேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.

இந்த நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் கே. எஸ். பழனிச்சாமி அங்கு விரைந்து வந்தார். அவர் கிராம மக்கள் மத்தியில் பேசும்போது, 'உங்கள் உணர்வுகளை அரசுக்கு தெரிவித்து இருக்கிறோம். கேரள மாநிலத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் மூட அரசு நடவடிக்கை எடுக்கும். ஏற்கனவே நேற்று நீங்கள் வந்து ஆர்ப்பாட்டம் செய்து விட்டீர்கள்.

இன்று (நேற்று) நீங்கள் தடையை மீறி வருவது சட்டம் ஒழுங்கை பாதிக்கும். நேற்றைய விட இன்று பெண்கள் அதிகமாக வந்து உள்Zர்கள். இது உங்களின் தார்மீக உரிமையை காட்டுகிறது.

உங்கள் போராட்டம் வன்முறையாக மாறிவிடக்கூடாது. எனவே அமைதியாக திரும்பி செல்லுங்கள் என்றார். ஆனால் அதை கிராம மக்கள் ஏற்க மறுத்து குமுளி வரை செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினார்கள். இதைத் தொடர்ந்து அவர்களை லோயர்கேம்ப் வரை மட்டும் செல்ல கலெக்டர் அனுமதி அளித்தார்.

அதன்பிறகு கிராம மக்கள் கேரள அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி குமுளிளை நோக்கி பேரணியாக சென்றனர். பகல் 12 மணிக்கு லோயர்கேம்ப் பகுதியை அவர்கள் அடைந்தனர். அங்கு ஏற்கனவே தடுப்பு அமைக்கப்பட்டு பொலிஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்ததால் கிராம மக்களால் அதற்கு மேல் செல்ல முடியவில்லை.

அங்கு கூடிய அவர்கள் கேரள மாநிலம் செல்லும் 13 சாலைகளையும் மூட வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய அரசு பாதுபாப்பு வழங்கவேண்டும். அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கவேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிறிது நேரம் கழித்து கிராம மக்கள் குமுளி வரை சென்று போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டர் மற்றும் பொலிஸ் சூப்பிரண்டுவிடம் வற்புறுத்தினர். இதைத் தொடர்ந்து அவர்களை குமுளி எல்லை வரை செல்ல பொலிஸார் அனுமதித்தனர். உடனே மக்கள் மோட்டார் சைக்கிள்கள் டிராக்டர்களிலும் மற்றும் நடந்தும் குமுளி நோக்கி சென்றனர்.

அவர்கள் மதியம் 2. 45 மணியளவில் குமுளி எல்லைக்கு சென்று சேர்ந்தனர். அங்கு அவர்கள் கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர்கள், மினி லாறிகள் மற்றும் நடந்து சுமார் 1 இலட்சம் பேர் திரண்டு வந்ததாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசுக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து அறிக்கை வேண்டும்- ரணில் உத்தரவு
» அரசுக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து அறிக்கை வேண்டும்- ரணில் உத்தரவு
» கிண்ணியாவில் நிலத்திலிருந்து புகை வெளியேற்றம்: எரிமலையின் சாயல்! மக்கள் பதற்றம்
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தலைமறைவு- லீஸ் வலைவீச்சு
» தொம்பே பொலிஸ் நிலையம் மீது பொது மக்கள் தாக்குதல்! : பெரும் பதற்றம் நீடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum