Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
ரஜினியை பேசித்தான் விளம்பரம் தேட வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை
2 posters
Page 1 of 1
ரஜினியை பேசித்தான் விளம்பரம் தேட வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை
ரஜினி பிறந்த நாள் விழாவில் அவரது குடும்பத்தினரைப் பற்றி தான் தவறாக ஏதுவும் பேசவில்லை என்று நடிகர் கருணாஸ் விளக்கம் அளித்தார்.
ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரசிகர்கள் கொண்டாடிய போது, நடிகர் கருணாஸ் பங்கேற்றுப் பேசினார். அவரது பேச்சுக்கு ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்பு தெரிவித்தனர்.
ரசிகர்கள் பெரும் செலவழித்து எடுத்துள்ள இந்த விழாவுக்கு ரஜினி வராவிட்டாலும், அவரது வீட்டிலிருந்து யாராவது வந்திருக்கலாம். இது வருத்தத்தைத் தருகிறது, கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார்.
ரசிகர்களின் உணர்வை அப்படியே கருணாஸ் பிரதிபலித்துவிட்டார் என்று நிர்வாகிகள் முதல் ரசிகர்கள் வரை தெரிவித்தனர்.
இந்த நிலையில் விழா நடத்திய சென்னை தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு எதிரணியில் உள்ள சிலரே, ஒரு பத்திரிகையில் கருணாஸைத் திட்டி பேட்டி கொடுத்தனர். ரஜினி குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளதாக பொய்யான தகவலை அந்த செய்தியில் தெரிவித்திருந்தனர்.
இதனால் ரஜினி ரசிகர் மன்றங்களுக்குள் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, பத்திரிகையில் வந்த தவறான செய்தியால் வருத்தமடைந்த கருணாஸ், அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். அதனால்தான் அவர் பிறந்த நாள் விழாவுக்கு ரசிகர்கள் அழைத்ததும் போனேன். அவ்விழாவில் ரஜினி குடும்பத்தினரை நான் தவறாக பேசியதாக செய்திகள் வெளியாகி இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. விழாவில் பத்தாயிரம் ரசிகர்கள் பங்கேற்றனர்.
ரஜினியையோ அவர் குடும்பத்தினரையோ நான் தவறாக பேசி இருந்தால் அவர்கள் சும்மா விட்டு இருப்பார்களா? தமிழகம் முழுவதிலுமிருந்து எழுச்சியோடு ரசிகர்கள் வந்து இருந்தார்கள். ரஜினி உடல்நலம் குன்றி இருந்தபோது அவர்கள் கோவில் கோவிலாக மண் சோறு சாப்பிட்டும் மொட்டை அடித்தும் அலகு குத்தியும் பிரார்த்தனை செய்தததை ஒரு ரஜினி ரசிகனாக நானும் அறிவேன்.
ரஜினி மீது அவர்கள் வைத்துள்ள அன்பைப் பற்றித்தான் நான் பேசினேன். அந்த அன்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்த விழாவில் ரஜினி குடும்பத்தில் இருந்து யாரேனும் பங்கேற்று இருந்தால், ரசிகர்கள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள்? அதைத்தான் நான் சொன்னேன். ரசிகர்கள் என் பேச்சை கைதட்டி வரவேற்றனர். விழா முடிந்ததும் கார் வரை வந்து வழி அனுப்பி வைத்தார்கள்.
அதன் பிறகு சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ரஜினி ரசிகர்கள் என்னை தொடர்பு கொண்டு அவர்கள் நடத்தும் விழாக்களில் பங்கேற்க வருமாறு அழைத்தனர். நான் தவறாக பேசி இருந்தால் கூப்பிட்டிருப்பார்களா?
என் பேச்சில் உள்நோக்கம் கற்பித்து சிலர் தவறாக சித்தரிக்கின்றனர். விளம்பரத்துக்காக பேசியதாக சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த செய்தியே இட்டுக்கட்டப்பட்டது என்பதை நான் மட்டுமல்ல, பத்திரிகை நண்பர்களும் அறிவார்கள்.
நான் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். எனக்கு இதுபோல் பேசித்தான் விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்றைக்கும் விளம்பரம் இல்லாமல் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறேன். குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கிறேன்.
ரஜினியை வாழ்த்தி பேசினேனே தவிர தவறாக எதுவும் பேசவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன்," என்றார்.
ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரசிகர்கள் கொண்டாடிய போது, நடிகர் கருணாஸ் பங்கேற்றுப் பேசினார். அவரது பேச்சுக்கு ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்பு தெரிவித்தனர்.
ரசிகர்கள் பெரும் செலவழித்து எடுத்துள்ள இந்த விழாவுக்கு ரஜினி வராவிட்டாலும், அவரது வீட்டிலிருந்து யாராவது வந்திருக்கலாம். இது வருத்தத்தைத் தருகிறது, கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார்.
ரசிகர்களின் உணர்வை அப்படியே கருணாஸ் பிரதிபலித்துவிட்டார் என்று நிர்வாகிகள் முதல் ரசிகர்கள் வரை தெரிவித்தனர்.
இந்த நிலையில் விழா நடத்திய சென்னை தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு எதிரணியில் உள்ள சிலரே, ஒரு பத்திரிகையில் கருணாஸைத் திட்டி பேட்டி கொடுத்தனர். ரஜினி குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளதாக பொய்யான தகவலை அந்த செய்தியில் தெரிவித்திருந்தனர்.
இதனால் ரஜினி ரசிகர் மன்றங்களுக்குள் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, பத்திரிகையில் வந்த தவறான செய்தியால் வருத்தமடைந்த கருணாஸ், அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். அதனால்தான் அவர் பிறந்த நாள் விழாவுக்கு ரசிகர்கள் அழைத்ததும் போனேன். அவ்விழாவில் ரஜினி குடும்பத்தினரை நான் தவறாக பேசியதாக செய்திகள் வெளியாகி இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. விழாவில் பத்தாயிரம் ரசிகர்கள் பங்கேற்றனர்.
ரஜினியையோ அவர் குடும்பத்தினரையோ நான் தவறாக பேசி இருந்தால் அவர்கள் சும்மா விட்டு இருப்பார்களா? தமிழகம் முழுவதிலுமிருந்து எழுச்சியோடு ரசிகர்கள் வந்து இருந்தார்கள். ரஜினி உடல்நலம் குன்றி இருந்தபோது அவர்கள் கோவில் கோவிலாக மண் சோறு சாப்பிட்டும் மொட்டை அடித்தும் அலகு குத்தியும் பிரார்த்தனை செய்தததை ஒரு ரஜினி ரசிகனாக நானும் அறிவேன்.
ரஜினி மீது அவர்கள் வைத்துள்ள அன்பைப் பற்றித்தான் நான் பேசினேன். அந்த அன்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்த விழாவில் ரஜினி குடும்பத்தில் இருந்து யாரேனும் பங்கேற்று இருந்தால், ரசிகர்கள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள்? அதைத்தான் நான் சொன்னேன். ரசிகர்கள் என் பேச்சை கைதட்டி வரவேற்றனர். விழா முடிந்ததும் கார் வரை வந்து வழி அனுப்பி வைத்தார்கள்.
அதன் பிறகு சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ரஜினி ரசிகர்கள் என்னை தொடர்பு கொண்டு அவர்கள் நடத்தும் விழாக்களில் பங்கேற்க வருமாறு அழைத்தனர். நான் தவறாக பேசி இருந்தால் கூப்பிட்டிருப்பார்களா?
என் பேச்சில் உள்நோக்கம் கற்பித்து சிலர் தவறாக சித்தரிக்கின்றனர். விளம்பரத்துக்காக பேசியதாக சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த செய்தியே இட்டுக்கட்டப்பட்டது என்பதை நான் மட்டுமல்ல, பத்திரிகை நண்பர்களும் அறிவார்கள்.
நான் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். எனக்கு இதுபோல் பேசித்தான் விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்றைக்கும் விளம்பரம் இல்லாமல் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறேன். குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கிறேன்.
ரஜினியை வாழ்த்தி பேசினேனே தவிர தவறாக எதுவும் பேசவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன்," என்றார்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு
» எனக்கு தண்ணில கண்டம் இல்லை..!
» எனக்கு கதாநாயகி இல்லை: சசிகுமார்
» கண்ணீர் எனக்கு தேவை இல்லை !
» நீ வேண்டும் எனக்கு..!
» எனக்கு தண்ணில கண்டம் இல்லை..!
» எனக்கு கதாநாயகி இல்லை: சசிகுமார்
» கண்ணீர் எனக்கு தேவை இல்லை !
» நீ வேண்டும் எனக்கு..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|