Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
சதாம் ஹுஸைன் கிராமம் ஈராக் கிராமம் என்றே அழைக்கப்படும்: பசீர் சேகுதாவூத்
2 posters
Page 1 of 1
சதாம் ஹுஸைன் கிராமம் ஈராக் கிராமம் என்றே அழைக்கப்படும்: பசீர் சேகுதாவூத்
"ஏறாவூரில் ஈராக் மக்களினால் உருவாக்கப்பட்ட கிராமத்திற்குரிய பெயர் சதாம் ஹுஸைன் கிராமம் என எங்குமே பதிவு செய்யப்படவில்லை.
இதனால் ஈராக் கிராமம் என பெயரிட முடியும்" என உள்நாட்டு வர்த்தக கூட்டுறவுத்துறை பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். இனி இக்கிராமம் ஈராக் கிராமம் என்றே அழைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஈராக் அரசாங்கத்தினால் ஏறாவூர் ஈராக் கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகளை வழஙகும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது, உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் பசீர்,
1978ஆம் ஆண்டு ஏறாவூர் மக்களின் நூறு வீத ஆதரவுடன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான டாக்டர் பரீட் மீராலெவ்வை ஈராக் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு அப்போதைய அரசாங்கத்திடம் ஏறாவூரில் வீட்டு திட்டமொன்றை அமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதன் பேரில் ஈராக் மக்களின் உதவியுடன் ஏறாவூரில் சதாம் ஹுஸைன் வீட்டு திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் ஈராக் மக்கள் இந்த கிராமத்திற்கு உதவி செய்து வந்த போதிலும் 1990ம் ஆண்டு ஈராக்கிலும் இலங்கையிலும் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையினால் இரண்டு நாடுகளிலும் குழப்ப நிலை காணப்பட்டது.
இதனால் ஏறாவூரில் ஈராக் மக்களினால் உருவாக்கப்பட்ட இந்த கிராமத்திற்கு எந்த உதவிகளும் கிடைக்க பெறவில்லை. கடந்த 22 ஆண்டுகளாக எந்த உதவிகளும் கிடைக்க பெறாமல் இருந்த இந்த கிராமத்திற்கு ஈராக் அரசுடன் தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுத்தருமாறு சதாம் ஹுஸைன் கிராம மக்கள் என்னிடம் வேண்டுகோள் விட்டனர்.
அதனடிப்படையில் இலங்கையிலுள்ள ஈராக் தூதுவர் கஹ்தான் தாஹாவுடன் நான் தொடர்புகொண்டு பேசினேன். அப்போது அவர் இங்கு வந்து பார்வையிட்டார். அதன் பின்னர் இந்த கிராமத்திற்கு ஈராக் அரசாங்கத்தோடு பேசி உதவிகளை வழங்க தூதுவர் முன்வந்தார்.
இந்த கிரமத்திற்கு எங்குமே சதாம் ஹுஸைன் கிராமம் என்றோ அல்லது வேறு பெயரோ பதிவு செய்யப்படாததால் இந்த கிராமத்தின் பெயரை ஈராக் கிராமம் என பதிவு செய்ய முடியும்.
ஈராக் மக்களினால் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கிராமம் எந்த உதவியுமில்லாமல் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி ஈராக் நாட்டின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் மூலம் ஈராக்கின் உதவிகள் இந்த கிராமத்திற்கு கிடைக்க செய்துள்ளோம்.
இந்த வகையில் ஈராக் தூதுவர் கஹ்தன் தாஹா இந்தக் கிராமத்திற்கு வந்து சென்றதன் பின்னர், முதற்கட்டமாக இங்குள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க முன்வந்துள்ளார். அதனடிப்படையில் முதற்கட்டமாக 20,000 அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது. அது இலங்கை நாணயத்தில் 23 இலட்சம் ரூபாவாகும்.
இந்த கிராமத்திலுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 75 துவிச்சக்கர வண்டிகள் மற்றும் சுயதொழிலுக்கான 45 தையல் இயந்திரங்கள், வழங்கப்பட்டுள்ளன.
இந்த கிராமத்திலுள்ள பள்ளிவாசலை புனரமைப்பதற்கு 5 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதுடன் இங்குள்ள மத்ரசாவுக்கு இரண்டு கணணிகளும் விஷேட தேவையுடையோர் பாடசாலைக்கு 50,000 ரூபா பணமும் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோன்று இங்குள்ள அநாதை சிறுவர் இல்லத்திற்கு மாதார்ந்தம் 35,000 ரூபாவினை வழங்கவும் ஈராக் முன்வந்துள்ளது.
இந்த உதவி இந்த கிராமத்திலுள்ள அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்த பிரதியமைச்சர் பசீர், கடந்த 30 வருடங்களாக இலங்கையில் நடைபெற்ற யுத்த அவலத்திலிருந்து இலங்கை மீண்டுள்ளது போல ஈராக்கிலும் சில சில சம்பங்களை தவிர அங்கும் யுத்தமின்றி அமெரிக்க படைகள் முற்று முழுதாக வெளியேறி தாங்களே தங்கள் நாட்டை ஆளும் சூழல் ஈராக்கில் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த உதவிகள் இந்தக்கிராமத்திற்கு கிடைத்துள்ளன.
இந்த உதவிகளை இலங்கையிலுள்ள ஈராக் தூதுவர் நேரடியாக வந்து வழங்கவிருந்தார். ஆனால் இங்கிருந்து நான்கு பேர் இதற்கெதிராக செயற்பட்டுள்ளனர்.
இன்னும் சில நாட்களின் பின்னர் தூதுவர் இங்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார். நான் யாருடைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கெதிராகவும் ஒரு போதும் செயற்படுவதில்லை. அதே போன்று காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுவதுமில்லை.
இந்தக் கிராமத்தின் அபிவிருத்தியை ஏறாவூர் பிரதேசத்தின் அபிவிருத்தியையும் இந்தப்பிரதேசத்திற்கு வரும் உதவிகளையும் தடுக்க முற்பட வேண்டாம் என இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
இதை எதிர்க்கும் அந்த மூன்று நான்கு பேருக்கும் இந்த உதவிகள் கிடைக்கும். இந்த கிரமாத்திலுள்ள ஏனையோருக்கும் இந்த உதவிகள் கிடைக்கும் என பிரதியமைச்சர் பசீர் ஷேகுதாவூத் தெரிவித்தார்.
இதனால் ஈராக் கிராமம் என பெயரிட முடியும்" என உள்நாட்டு வர்த்தக கூட்டுறவுத்துறை பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். இனி இக்கிராமம் ஈராக் கிராமம் என்றே அழைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஈராக் அரசாங்கத்தினால் ஏறாவூர் ஈராக் கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகளை வழஙகும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது, உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் பசீர்,
1978ஆம் ஆண்டு ஏறாவூர் மக்களின் நூறு வீத ஆதரவுடன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான டாக்டர் பரீட் மீராலெவ்வை ஈராக் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு அப்போதைய அரசாங்கத்திடம் ஏறாவூரில் வீட்டு திட்டமொன்றை அமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதன் பேரில் ஈராக் மக்களின் உதவியுடன் ஏறாவூரில் சதாம் ஹுஸைன் வீட்டு திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் ஈராக் மக்கள் இந்த கிராமத்திற்கு உதவி செய்து வந்த போதிலும் 1990ம் ஆண்டு ஈராக்கிலும் இலங்கையிலும் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையினால் இரண்டு நாடுகளிலும் குழப்ப நிலை காணப்பட்டது.
இதனால் ஏறாவூரில் ஈராக் மக்களினால் உருவாக்கப்பட்ட இந்த கிராமத்திற்கு எந்த உதவிகளும் கிடைக்க பெறவில்லை. கடந்த 22 ஆண்டுகளாக எந்த உதவிகளும் கிடைக்க பெறாமல் இருந்த இந்த கிராமத்திற்கு ஈராக் அரசுடன் தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுத்தருமாறு சதாம் ஹுஸைன் கிராம மக்கள் என்னிடம் வேண்டுகோள் விட்டனர்.
அதனடிப்படையில் இலங்கையிலுள்ள ஈராக் தூதுவர் கஹ்தான் தாஹாவுடன் நான் தொடர்புகொண்டு பேசினேன். அப்போது அவர் இங்கு வந்து பார்வையிட்டார். அதன் பின்னர் இந்த கிராமத்திற்கு ஈராக் அரசாங்கத்தோடு பேசி உதவிகளை வழங்க தூதுவர் முன்வந்தார்.
இந்த கிரமத்திற்கு எங்குமே சதாம் ஹுஸைன் கிராமம் என்றோ அல்லது வேறு பெயரோ பதிவு செய்யப்படாததால் இந்த கிராமத்தின் பெயரை ஈராக் கிராமம் என பதிவு செய்ய முடியும்.
ஈராக் மக்களினால் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கிராமம் எந்த உதவியுமில்லாமல் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி ஈராக் நாட்டின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் மூலம் ஈராக்கின் உதவிகள் இந்த கிராமத்திற்கு கிடைக்க செய்துள்ளோம்.
இந்த வகையில் ஈராக் தூதுவர் கஹ்தன் தாஹா இந்தக் கிராமத்திற்கு வந்து சென்றதன் பின்னர், முதற்கட்டமாக இங்குள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க முன்வந்துள்ளார். அதனடிப்படையில் முதற்கட்டமாக 20,000 அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது. அது இலங்கை நாணயத்தில் 23 இலட்சம் ரூபாவாகும்.
இந்த கிராமத்திலுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 75 துவிச்சக்கர வண்டிகள் மற்றும் சுயதொழிலுக்கான 45 தையல் இயந்திரங்கள், வழங்கப்பட்டுள்ளன.
இந்த கிராமத்திலுள்ள பள்ளிவாசலை புனரமைப்பதற்கு 5 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதுடன் இங்குள்ள மத்ரசாவுக்கு இரண்டு கணணிகளும் விஷேட தேவையுடையோர் பாடசாலைக்கு 50,000 ரூபா பணமும் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோன்று இங்குள்ள அநாதை சிறுவர் இல்லத்திற்கு மாதார்ந்தம் 35,000 ரூபாவினை வழங்கவும் ஈராக் முன்வந்துள்ளது.
இந்த உதவி இந்த கிராமத்திலுள்ள அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்த பிரதியமைச்சர் பசீர், கடந்த 30 வருடங்களாக இலங்கையில் நடைபெற்ற யுத்த அவலத்திலிருந்து இலங்கை மீண்டுள்ளது போல ஈராக்கிலும் சில சில சம்பங்களை தவிர அங்கும் யுத்தமின்றி அமெரிக்க படைகள் முற்று முழுதாக வெளியேறி தாங்களே தங்கள் நாட்டை ஆளும் சூழல் ஈராக்கில் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த உதவிகள் இந்தக்கிராமத்திற்கு கிடைத்துள்ளன.
இந்த உதவிகளை இலங்கையிலுள்ள ஈராக் தூதுவர் நேரடியாக வந்து வழங்கவிருந்தார். ஆனால் இங்கிருந்து நான்கு பேர் இதற்கெதிராக செயற்பட்டுள்ளனர்.
இன்னும் சில நாட்களின் பின்னர் தூதுவர் இங்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார். நான் யாருடைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கெதிராகவும் ஒரு போதும் செயற்படுவதில்லை. அதே போன்று காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுவதுமில்லை.
இந்தக் கிராமத்தின் அபிவிருத்தியை ஏறாவூர் பிரதேசத்தின் அபிவிருத்தியையும் இந்தப்பிரதேசத்திற்கு வரும் உதவிகளையும் தடுக்க முற்பட வேண்டாம் என இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
இதை எதிர்க்கும் அந்த மூன்று நான்கு பேருக்கும் இந்த உதவிகள் கிடைக்கும். இந்த கிரமாத்திலுள்ள ஏனையோருக்கும் இந்த உதவிகள் கிடைக்கும் என பிரதியமைச்சர் பசீர் ஷேகுதாவூத் தெரிவித்தார்.
Re: சதாம் ஹுஸைன் கிராமம் ஈராக் கிராமம் என்றே அழைக்கப்படும்: பசீர் சேகுதாவூத்
அந்தக்கிராமத்தில் உள்ள மக்களின் நம்பிக்கை சதாம் உசேன் இன்னும் உயிருடன்தான் உள்ளார் என்பது அவர்களின் நம்பிகை இன்னும் வீண் போக வில்லை அவர்கள் மனதில் அவர் நிலைத்து விட்டார் தகவலுக்கு நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சதாம் ஹுஸைன் கிராமம் ஈராக் கிராமம் என்றே அழைக்கப்படும்: பசீர் சேகுதாவூத்
@. @.நண்பன் wrote:அந்தக்கிராமத்தில் உள்ள மக்களின் நம்பிக்கை சதாம் உசேன் இன்னும் உயிருடன்தான் உள்ளார் என்பது அவர்களின் நம்பிகை இன்னும் வீண் போக வில்லை அவர்கள் மனதில் அவர் நிலைத்து விட்டார் தகவலுக்கு நன்றி.
Similar topics
» ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளி - பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத்
» தியாகம் என்றே சொல்லாகும்!
» அல் ஹுஸைன் பள்ளிவாசல் எகிப்து
» ஐ.தே.க., ஜே.வி.பி. அராபிய வசந்த கனவு காண்கிறது: சேகுதாவூத் _
» சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும்.
» தியாகம் என்றே சொல்லாகும்!
» அல் ஹுஸைன் பள்ளிவாசல் எகிப்து
» ஐ.தே.க., ஜே.வி.பி. அராபிய வசந்த கனவு காண்கிறது: சேகுதாவூத் _
» சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|