Latest topics
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவுby rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக....
5 posters
Page 1 of 1
எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக....
வாப்பான்னு நான் கூப்பிட்டா என்னம்மா ன்னு கேட்டு எனக்கு வேண்டியதை அது என்னவாகிலும் நான் அனுபவிக்க தந்து அதப்பாத்து சந்தோசப்பட என்னைப் பெற்ற என் வாப்பா என் கிட்ட இப்ப இல்லை…
க லு மு அஹமது முகைதீன் ஆலிம் சாகிபுவின் மகன் க லு அ ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் சாகிபு எனும் பெயர்கொண்ட என் அன்புத்தந்தை வபாத்தாயி சில வருஷங்கள் ஆகிட்டுது….
என் தந்தை எங்களோடு வாழ்ந்து என்னில் நிகழ்த்திய வாழ்க்கை பாடம் அதன் தாக்கம் கொஞ்சம் ஆழமானது அதே நேரம் அதிசயமும் வாய்ந்தது…அந்த அளவுக்கு நான் என் மகனிடம் ஊடுருவியிருப்பேனான்னு பாத்தா நிச்சயம் இல்லை.வாப்பாவின் நாடுகடந்த பயணங்களிடைப்பட்ட இரண்டிரண்டு ஆண்டுகளை ஊரிலும் மலேசியாவிலுமாக மாறி மாறி தனது ஆயுளை எங்களோடு கழித்தார்கள்.
என் தந்தையின் திடகாத்திரமான காலங்களில் அவர்கள் எங்களோடு கழித்த மணித்துளிகள் மிகக் குறைவு…அவர்களை நாங்கள் சந்திக்கும் நேரமும் அரிது. அந்த சொற்ப நேரங்களில் எங்களோடு அவர்கள் தனது பாசத்தை பகிர்ந்து கொள்வார்கள்.
உம்மா அடிக்கடி சொல்லும் உங்களுக்கு என்ன தெரியும் பள்ளியாசலும் மதரசாவும் தான் எப்பவும். இங்கே வீட்டில் நடக்குறத பத்தி எதுவுமே தெரியாதுன்னு….
உண்மை தான் வீட்டில் நடந்த கல்யாணம் வெத்தில பாக்கு போன்ற விசேசங்களில் சமந்தார உறவுகள் அனைவரையும் அறிமுகம் செய்து உறவுகளை அவர்களுக்குச் சொல்ல வேண்டும் அப்படியும் அவர்களுக்கு அந்த உறவுகளைப் பற்றிய அறிந்து கொள்ளும் ஈர்ப்பு இயல்பாக இருந்ததில்லை. எல்லாம் வீட்டில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தனது வழக்கமான அன்றாட அமலில் அக்கறை காட்டுவார்கள்..
காலை நான்கரை மணிக்கு எழுந்து ஊரின் மேற்குக் கோடியில் இருக்கும் மதரசா உள்ளடக்கிய ஒரு பள்ளியில் தொழுகை நடத்தி அங்குள்ள மதரசாவில் பயிலும் மாணவர்களுடன் கற்பித்தலில் கழித்து இரவு வேளை எட்டு மணி எட்டரைக்குத் தான் வீடு வருவார்கள்…
எங்களுக்கு வாப்பாவ பார்ப்பதென்பது வியாழன் மற்றும் வெள்ளி களிலும் பின்னர் நாங்கள் மதரசா சென்று ஓதத் துவங்கிய நாளில் அங்கு அந்தப் பாட சாலையிலும் தான் அவர்களை கண்ணுறுவோம்…
பெரியசர்த்து, ரஹ்மத்துல்லா அசர்த்து ன்னு தான் மேல் விலாசம் அவங்களுக்கு. எங்காவது வெளியூர் போனால் அங்குள்ள பள்ளியில் தொழுதால் தொழுகை முடிஞ்சு சந்திக்கும் அந்தப் பள்ளி பேஷ் இமாம் யாராவது ஒருத்தர் கிட்ட பேசிக்கிட்டிருக்கும் போது எந்த ஊருன்னு கேப்பாங்க நான் கடயநல்லூருன்னு சொன்னா அங்க நீங்க எந்த தெரும்பாங்க….உடனே உங்களுக்கு கடையநல்லூரை தெரியுமான்னு கேட்டா ஆமா நான் அங்க தான் ஹிப்சு முடிச்சேன்… அல்லது ஸும்ரா பாடம் ஒதினேம்பாங்க…அங்க ரஹ்மத்துல்லாஹ் அசர்த்து தெரியுமான்னு கேட்டா தெரியும்ன்னு சொல்லிட்டு நான் அவங்க கிட்ட தான் குர் ஆன மனனம் செஞ்சேன்னு சொல்வாங்க. நான் அவர்களின் மகன்னு சொன்னா ரொம்ப மகிழ்ச்சியோடு வாங்கன்னு சொல்லி தனது அன்பை காட்ட முயற்சிப்பாங்க..
என் தந்தைக்கு நாங்கள் எட்டு மக்கள் தவிர அவர்களிடம் கல்வி கற்ற அனைத்து மாணவர்களும் அவர்களை தனது தந்தையாக நேசித்தார்கள் அது போல வாப்பாவின் பெரும்பாலான ஆயுளும் கற்பித்தலிலும் கல்பள்ளியிலும் குர்ஆனோடு மனனம் செய்ய மண்டியிட்டமர்ந்து பாடம் பயிலும் மாணவர்களோடு கழியும்…
ஒரு ரண்டு வருசத்துக்கு முந்தி நான் திருநெல் வேலி டவுனுக்கு ஒரு விசயமாக போயிட்டு தொழுகைக்காக அசர் வக்தில் டவுன் பள்ளியில் தொழுதேன். தொழுது முடிஞ்சு நான் புறப்பட எத்தனிக்கையில் ஒரு நடுத்தர வயசு தாடியுடன் கூடிய நல்ல தேஜசான முகப் பொலிவோடு ஒருவர் சலாம் சொன்னார்…
வ அலைக்குமுஸ் சலாம் .
நீங்க….ன்னு இழுத்தார் எங்கேயோ பாத்த மாதிர்யும் இருக்கு ஆனா என்னால ஒரு முடிவுக்கு வர முடியலைன்னு சொன்னவருக்கு அருகில் அவரது கோஷா அணிந்த மனைவியும் மகனும்…
கொஞ்சம் அவசரத்திலும் கிளம்பும் மூடிலும் இருந்த நான் பறக்க முற்பட
நீங்கள எந்த ஊரு ஆரம்பித்து என் தந்தையைக் கேட்ட மாத்திரம் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் எனது கைகளை தனது கைகளில் எடுத்துக்கொண்டார்
வாப்பா.. வினாவுடன் என்னை உற்று நோக்கினார்.
நான் வாப்பா இரண்டாயிரத்தஞ்சில் தவறிட்டாங்க என்றேன்.
கைகளின் பிடி இறுகியது. அவர் உள்ளங்கையில் சூடு என் கல்பு தொட அவரின் நிலை குலைதலின் காட்சியும் எனக்கு என் தந்தையின் இல்லாமையும் சேர்ந்து அவரின் முகம் காண்கையில் என்கண்ணிலும் நீர் துளிர்த்திட..
என்னை ஆரத்தழுவிய அவர் கண்களில் கண்ணீர் பெருக்கிட எங்க அசர்த்து…
எனக்கு அப்ப தான் விளங்கியது.. எனது ஒரு சகோதரன் தனது தந்தையின் இழப்பின் பிரிவை என்னிடம் பகிரும் அந்த நிகழ்வின் வீரியம்.
குலுங்கி அழுத அவரை அவரது மனைவி வண்டிக்குப் போவோமே எனச்சொல்ல தனது துண்டால் முகத்தை துடைத்த அந்த சகோதரன் மூக்கை சிந்தியவாறு தனது காரை நோக்கி நடக்கையில் என் கைகளை இறுகப் பற்றியவராக அவரது சுமோக் காரை காட்டி…
இது என் கார். நான் ஹாபீஸ் ஆலிம் முடித்து கொஞ்ச நாள் இமாமத் செய்து விட்டு இப்ப ரியல் எஸ்டேட் பிசினஸ் பன்றேன் இங்கே டவுனில் தான் இப்ப வாசம்… என்றவர் என்னை அன்று தனது இல்லத்துக்கு அழைத்துச்சென்று எனது தாய் மனைவி மக்கள் மற்றும் என் சகோதரிகள் பெயரை குறிப்பிட்டு அனைவர் பற்றி விசாரித்தார்… எனது ஒவ்வொரு வக்து தொழுகையிலும் எங்களின் பாசமிக்க உஸ்தாதுகளுக்காக நான் பிரார்த்தனை செய்ய தவறவே இல்லை என்றவர் தொடர்ந்தார்.
என் மகனுக்கு அவன் முன்பு நான் இன்று வாழ்ந்து காட்டும் என் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவும் என் பால்ய கால உஸ்தாதுகளை உள்வாங்கியதன் பிரதிபலிப்பு தான் என்றார்.
நாங்கள் ஓதும போது அசர்த்து சாப்பிட்டு விட்டு எங்களுக்காக மீதி வச்சு எங்களையும் சாப்பிட சொல்வார்கள். அப்ப வீடுகளில் இருந்து வரும் உணவுகள் தான் எங்களுக்கு சாப்பாடு ஆனாலும் நாங்கள் எடுத்துவரும் அசர்த்து வீட்டு சாப்பாட்டில் தானே முழுதும் சாப்பிட்டு விடாமல் எங்களுக்கும் தருவார்கள். சில நேரம் மறைவாக காசு கொடுப்பார்கள். கிராமங்களில் பசியோடு வாழ்ந்த எங்களை அசர்த்துகளை நம்பி எங்களின் தாய் தந்தையர் விட்டு விட்டுச் சென்றாலும் எங்களின் அனைத்து தேவைகளும் பெரியசர்த்துக்கு கண்காணிப்பில் இருந்து நாங்கள் கல்வியும் ஒழுக்கமும் கற்க முடிந்தது….
எங்களின் தாய் தகப்பனிடம் நாங்கள் இருந்த காலத்தை விட அந்த உஸ்தாது மார்களின் அரவணைப்பே பெரும்பான்மையாக இருந்தது…
கிளம்புகையில் நான் அவரது குழந்தை கையில் கொஞ்சம் பணத்தை திணித்து விட்டு கிளம்பினேன்.. நிறைய அண்ணன்மார் எனக்கு இந்தப் பாரில் எல்லா இடங்களிலும் விரவி தங்களின் கைப்படம் மலர்த்தி என் அன்புத் தந்தைக்கு தனது ஒவ்வொரு பிரார்த்தனையிலும் துஆ செய்கிறார்கள் எனும் அந்த நினைவுகளுடன்….
உம்மா அடிக்கடி சொல்லும் உங்களுக்கு என்ன தெரியும் பள்ளியாசலும் மதரசாவும் தான் எப்பவும். இங்கே வீட்டுல நடக்குறத பத்தி எதுவுமே தெரியாது….
ஆமா உம்மாக்குத் தெரியுமா வாப்பாவின் குடும்பம் பெரியது அவர்களைத் தனது உயிர்போல மதித்து தந்தையாகக் கருதிக் கொண்டாடும் அவர்களின் மாணவர்கள் எனும் மகன்களின் எண்ணிக்கை வாப்பாவுக்கே சரியாகக் கணக்கிட முடியாது என்று…
http://wp.me/p1U0WZ-2b
Re: எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக....
உணர்வுகனின் ஊர்வலம் உங்கள் கட்டுரை...
ஒவ்வொரு மனிதனின் பின்னும் இருக்கும்
வாப்பாவின் நினைவுகளை அழகாய்
செதுக்கிய சிற்பியின் சிறப்பு....
உம்மா அடிக்கடி சொல்லும் உங்களுக்கு என்ன தெரியும்?
இதை நானும் பல இல்லங்களில் கேட்டது உண்டு ...
எண்ணத்தை அதன் ஓட்டத்தை அற்புதமாய் சொல்லும்
நிலை உங்களுக்கே உண்டான அழகு .பாரட்டுக்கள் தோழரே.
ஒவ்வொரு மனிதனின் பின்னும் இருக்கும்
வாப்பாவின் நினைவுகளை அழகாய்
செதுக்கிய சிற்பியின் சிறப்பு....
உம்மா அடிக்கடி சொல்லும் உங்களுக்கு என்ன தெரியும்?
இதை நானும் பல இல்லங்களில் கேட்டது உண்டு ...
எண்ணத்தை அதன் ஓட்டத்தை அற்புதமாய் சொல்லும்
நிலை உங்களுக்கே உண்டான அழகு .பாரட்டுக்கள் தோழரே.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக....
முதலில் அல்ஹம்துலில்லாஹ் மீண்டும் மாஷா அல்லாஹ் சுப்ஹானல்லாஹ்.....
அன்பு ஒஸ்தாத் அவர்களின் முகத்தோற்றம் காப்பி எடுத்தாற்போல் அப்துல்லாஹ் சாரின் முகம் மாஷா அல்லாஹ்! தந்தையின் பெருமைகளை மற்றவர்கள் அதுவும் மார்க்க அறிஞ்ஞர்கள் பெருமையாக சொல்லும் போது மகன்களின் மனதில் எழுந்த மகிழ்ச்சியை சொல்லித் தீராது.
அன்புத்தந்தையின் வாழ்க்கையில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல கல்வியைக் கற்றுத்தந்துள்ளார்கள் உலகம் முடியும் வரை அவர்களும் வாழ்வார்கள் இறைவன் அவர்களுக்கு சுவனத்தைப்பரிசாகக்கொடுப்பான் இன்ஷா அல்லாஹ். அந்த முகத்தில் எவ்வளவு ஒரு தெளிவு தெரிகிறது மாஷா அல்லாஹ் அப்துல்லாஹ் சார் நீங்களும் லைட்டா தாடி வைத்துப்பாருங்கள் அத்தோடு உங்கள் தந்தையிடம் மார்க்கக் கல்வி பயின்ற மாணவர்களிடம் சென்று பாருங்கள் இன்ப அதிர்ச்சி அடைவார்கள்.
எனது தந்தையும் சிறிய வயதிலே என்னை விட்டுப்பிரிந்து விட்டார்கள் :!#: :!#:
எனது தந்தையின் நினைவுளை இன்று அதிகமாக தந்தது உங்கள் கட்டுரை ஒரு மகனுக்கு இதை விடப்பெருமை என்ன வேண்டும் உங்கள் தந்தை உயரத்தில் உள்ளார் மக்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்துள்ளார் உம்மாவிடம் சொல்லுங்கள் உங்களுக்கு நடந்த சம்பவங்களை உம்மாவும் மகிழ்ச்சியடைவார் சிறந்த ஒரு பசுமையான நினைவுகளையும் நிஜத்தையும் எங்களோடு பகிர்ந்து கொண்ட உறவுக்கு நன்றி
என்றுமா மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
மாணவன்.
:!@!:
அன்பு ஒஸ்தாத் அவர்களின் முகத்தோற்றம் காப்பி எடுத்தாற்போல் அப்துல்லாஹ் சாரின் முகம் மாஷா அல்லாஹ்! தந்தையின் பெருமைகளை மற்றவர்கள் அதுவும் மார்க்க அறிஞ்ஞர்கள் பெருமையாக சொல்லும் போது மகன்களின் மனதில் எழுந்த மகிழ்ச்சியை சொல்லித் தீராது.
அன்புத்தந்தையின் வாழ்க்கையில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல கல்வியைக் கற்றுத்தந்துள்ளார்கள் உலகம் முடியும் வரை அவர்களும் வாழ்வார்கள் இறைவன் அவர்களுக்கு சுவனத்தைப்பரிசாகக்கொடுப்பான் இன்ஷா அல்லாஹ். அந்த முகத்தில் எவ்வளவு ஒரு தெளிவு தெரிகிறது மாஷா அல்லாஹ் அப்துல்லாஹ் சார் நீங்களும் லைட்டா தாடி வைத்துப்பாருங்கள் அத்தோடு உங்கள் தந்தையிடம் மார்க்கக் கல்வி பயின்ற மாணவர்களிடம் சென்று பாருங்கள் இன்ப அதிர்ச்சி அடைவார்கள்.
எனது தந்தையும் சிறிய வயதிலே என்னை விட்டுப்பிரிந்து விட்டார்கள் :!#: :!#:
எனது தந்தையின் நினைவுளை இன்று அதிகமாக தந்தது உங்கள் கட்டுரை ஒரு மகனுக்கு இதை விடப்பெருமை என்ன வேண்டும் உங்கள் தந்தை உயரத்தில் உள்ளார் மக்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்துள்ளார் உம்மாவிடம் சொல்லுங்கள் உங்களுக்கு நடந்த சம்பவங்களை உம்மாவும் மகிழ்ச்சியடைவார் சிறந்த ஒரு பசுமையான நினைவுகளையும் நிஜத்தையும் எங்களோடு பகிர்ந்து கொண்ட உறவுக்கு நன்றி
என்றுமா மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
மாணவன்.
:!@!:
Last edited by நண்பன் on Sun 8 Jan 2012 - 12:31; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக....
நண்பன் wrote:முதலில் அல்ஹம்துலில்லாஹ் மீண்டும் மாஷா அல்லாஹ் சுப்ஹானல்லாஹ்.....
அன்பு ஒஸ்தாத் அவர்களின் முகத்தோற்றம் காப்பி எடுத்தாற்போல் அப்துல்லாஹ் சாரின் முகம் மாஷா அல்லாஹ்! தந்தையின் பெருமைகளை மற்றவர்கள் அதுவும் மார்க்க அறிஞ்ஞர்கள் பெருமையாக சொல்லும் போது மகன்களின் மனதில் எழுந்த மகிழ்ச்சியை சொல்லித் தீராது.
அன்புத்தந்தையின் வாழ்க்கையில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல கல்வியைக் கற்றுத்தந்துள்ளார்கள் உலகம் முடியும் வரை அவர்களும் வாழ்வார்கள் இறைவன் அவர்களுக்கு சுவனத்தைப்பரிசாகக்கொடுப்பான் இன்ஷா அல்லாஹ்.
எனது தந்தையின் நினைவுளை இன்று அதிகமாக தந்தது உங்கள் கட்டுரை இன்னும் கருத்துக்களுடன் வருகிறேன் இடையில் ஏற்பட்ட தடங்களுக்கு வருந்துகிறேன் அதற்கு காரணம் நான்தான் அப்துல்லாஹ் சார் என்னை மன்னித்து விடுங்கள்.
ப்ளீஸ்.
மன்னிப்பெல்லாம் எதற்கு சும்மா தான் கேட்டேன் போட்ட பதிவு நீக்கப்பட்டதன் காரணம் ஏதாவது இருக்கலாம் என்று தான் கேட்டேன் நண்பன்.... ஒருவேளை நானே நீக்கிவிட்டேனோ என எனக்கு சந்தேகம்.இப்போது
Re: எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக....
அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தெளஸ் என்னும் உயர்தரமான சுவனம் கொடுத்தருள்வானாக....பெரியசர்த்து, ரஹ்மத்துல்லா அசர்த்து ன்னு தான் மேல் விலாசம் அவங்களுக்கு. எங்காவது வெளியூர் போனால் அங்குள்ள பள்ளியில் தொழுதால் தொழுகை முடிஞ்சு சந்திக்கும் அந்தப் பள்ளி பேஷ் இமாம் யாராவது ஒருத்தர் கிட்ட பேசிக்கிட்டிருக்கும் போது எந்த ஊருன்னு கேப்பாங்க நான் கடயநல்லூருன்னு சொன்னா அங்க நீங்க எந்த தெரும்பாங்க….உடனே உங்களுக்கு கடையநல்லூரை தெரியுமான்னு கேட்டா ஆமா நான் அங்க தான் ஹிப்சு முடிச்சேன்… அல்லது ஸும்ரா பாடம் ஒதினேம்பாங்க…அங்க ரஹ்மத்துல்லாஹ் அசர்த்து தெரியுமான்னு கேட்டா தெரியும்ன்னு சொல்லிட்டு நான் அவங்க கிட்ட தான் குர் ஆன மனனம் செஞ்சேன்னு சொல்வாங்க. நான் அவர்களின் மகன்னு சொன்னா ரொம்ப மகிழ்ச்சியோடு வாங்கன்னு சொல்லி தனது அன்பை காட்ட முயற்சிப்பாங்க..
என் தந்தைக்கு நாங்கள் எட்டு மக்கள் தவிர அவர்களிடம் கல்வி கற்ற அனைத்து மாணவர்களும் அவர்களை தனது தந்தையாக நேசித்தார்கள் அது போல வாப்பாவின் பெரும்பாலான ஆயுளும் கற்பித்தலிலும் கல்பள்ளியிலும் குர்ஆனோடு மனனம் செய்ய மண்டியிட்டமர்ந்து பாடம் பயிலும் மாணவர்களோடு கழியும்…
Re: எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக....
பதிவை நீக்கினால் மீண்டும் இணைக்க முடியாது அன்பு உறவே இது நீக்கப்பட வில்லை தனிமடலில் தருகிறேன் :];: :];:அப்துல்லாஹ் wrote:நண்பன் wrote:முதலில் அல்ஹம்துலில்லாஹ் மீண்டும் மாஷா அல்லாஹ் சுப்ஹானல்லாஹ்.....
அன்பு ஒஸ்தாத் அவர்களின் முகத்தோற்றம் காப்பி எடுத்தாற்போல் அப்துல்லாஹ் சாரின் முகம் மாஷா அல்லாஹ்! தந்தையின் பெருமைகளை மற்றவர்கள் அதுவும் மார்க்க அறிஞ்ஞர்கள் பெருமையாக சொல்லும் போது மகன்களின் மனதில் எழுந்த மகிழ்ச்சியை சொல்லித் தீராது.
அன்புத்தந்தையின் வாழ்க்கையில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல கல்வியைக் கற்றுத்தந்துள்ளார்கள் உலகம் முடியும் வரை அவர்களும் வாழ்வார்கள் இறைவன் அவர்களுக்கு சுவனத்தைப்பரிசாகக்கொடுப்பான் இன்ஷா அல்லாஹ்.
எனது தந்தையின் நினைவுளை இன்று அதிகமாக தந்தது உங்கள் கட்டுரை இன்னும் கருத்துக்களுடன் வருகிறேன் இடையில் ஏற்பட்ட தடங்களுக்கு வருந்துகிறேன் அதற்கு காரணம் நான்தான் அப்துல்லாஹ் சார் என்னை மன்னித்து விடுங்கள்.
ப்ளீஸ்.
மன்னிப்பெல்லாம் எதற்கு சும்மா தான் கேட்டேன் போட்ட பதிவு நீக்கப்பட்டதன் காரணம் ஏதாவது இருக்கலாம் என்று தான் கேட்டேன் நண்பன்.... ஒருவேளை நானே நீக்கிவிட்டேனோ என எனக்கு சந்தேகம்.இப்போது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்களின் வாப்பா - மாணவர்களுடன் மாணவனாக....
அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தெளஸ் என்னும் உயர்தரமான சுவனம் கொடுத்தருள்வானாக.
அருமையாக தந்தையின் வாழ்கையின் சிறு பகுதியை எங்களுடன் பகிர்ந்து கொண்ட எங்களின் அப்துல்லாஹ் சார் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நட்புடன் சம்ஸ்
அருமையாக தந்தையின் வாழ்கையின் சிறு பகுதியை எங்களுடன் பகிர்ந்து கொண்ட எங்களின் அப்துல்லாஹ் சார் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அன்புள்ள வாப்பா...!!!
» எழுதி படிக்கும் குழந்தை அறிவாற்றல் மிக்க மாணவனாக வளரும்!!
» 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுடன் அதிபர் MAC.கஸ்ஸாலி
» எங்களின் கனவு
» சோதனை (எங்களின் சகோதரிகளுக்கு)
» எழுதி படிக்கும் குழந்தை அறிவாற்றல் மிக்க மாணவனாக வளரும்!!
» 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுடன் அதிபர் MAC.கஸ்ஸாலி
» எங்களின் கனவு
» சோதனை (எங்களின் சகோதரிகளுக்கு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|