Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பு பணிகளைத் தொடர தீர்மானம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பு பணிகளைத் தொடர தீர்மானம்
கண்காணிப்பு பணிகளுக்கு சிரிய அரசு, எதிர்ப்பாளர்கள் இடையூறு
அரபு லீக் கண்காணிப்புப் பணிகளை சிரியாவில் தொடர்வதற்கு அந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சிரிய வன்முறைகள் தொடர்பான அரபு லிக் கண்காணிப்புப் பணிகள் குறித்து விமர்சனங்களும், அழுத்தங்களும் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி சிரியாவில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு அரபு லீக் கண்காணிப்பாளர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்படுவதோடு, ஒழுங்குகளுக்கு அமைய தமது கண்காணிப்புப் பணிகளைத் தொடர்வதற்குக் கோரப்பட்டுள்ளது.
அதேபோன்று சிரிய அரசும், ஆயுதக் குழுக்களும் உடனடியாக வன்முறைகளை நிறுத்த வேண்டும் எனவும் அரபு லீக் வலியுறுத்தியுள்ளது.
சிறிய விவகாரம் குறித்து அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் சிரியாவில் செயற்பட்டுவரும் அரபு லீக் கண்காணிப்பாளர்களின் ஆரம்பக்கட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜெனரல் மொஹம்மட் அஹமதி முஸ்தபாவும் பங்கேற்று சிரிய நிலவரம் குறித்து விளக்கினார்.
இதன்போது சிரியாவில் பெறப்பட்ட புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் மற்றும் வரைபடங்கள் கொண்டு அவர் சிரியாவின் தற்போதைய நிலவரம் குறித்து அரபு லீக் வெளியுறவு அமைச்சர்களுக்கு விளங்கினார்.
இதில் கண்காணிப்பாளர்களின் பணிக்கு சிரிய அரசும், எதிர்தரப்புகளும் இடையூறாக செயற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் கண்காணிப்புப் பணிகளைத் தொடர்வதற்கு மேலும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும். சிரிய அரசு மற்றும் எதிர்த்தரப்பினர் கண்காணிப்பாளர்களை சுதந்திரமாக செயற்பட உதவுமாறு அரபு லீக்கிற்கு கண்காணிப்புக் குழு சமர்ப்பித்துள்ளது ஆரம்பக் கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் முரண்பாடான கருத்துகளும் வெளியாகி யுள்ளன. அதில் சிரியா மீதான அரபு லீக்கின் செயற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும், ஐக்கிய நாடுகள் மற்றும் ஓரளவாக சர்வதேச தலையீடுகளும் சிரியாவில் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
கட்டார் போன்ற நாடுகள் இந்தத் திட்டத்தை ஆதரித்துள்ளதோடு, அரபு லீக் செயலாளர் நாயகம் உட்பட பெரும்பாலான நாடுகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரியவருகிறது என அல் ஜkரா செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பாளர்களை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சனிக்கிழமை மேலும் 10 ஜோர்தான் நாட்டு கண்காணிப்பாளர்கள் டமஸ்கஸ் சென்றடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது சிரியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோரின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.
இறுதியில் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஆறு முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. எவ்வாறாயினும் சிரியாவில் தொடர்ந்தும் மோதல் இடம் பெற்று வருவதாக எதிர்த்தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். பிரிட்டனில் இருந்து இயங்கும் சிரிய மனித உரிமை தொடர்பில் கண்காணிக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளர்ச்சியா ளர்களுக்கும், சிரிய இராணுத்தினருக்கும் டெராவில் இடம்பெற்ற கடும் மோதலில் 11 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், டைர் எஸ்சோர் நகரில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர், துப்பாக்கிச்சூடு மற்றும் கடுமையான ஷெல் தாக்குதல்களை நடத்தியதாக அரச எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிரியாவில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் இந்த தகவல்களை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அரபு லீக் கண்காணிப்புப் பணிகளை சிரியாவில் தொடர்வதற்கு அந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சிரிய வன்முறைகள் தொடர்பான அரபு லிக் கண்காணிப்புப் பணிகள் குறித்து விமர்சனங்களும், அழுத்தங்களும் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி சிரியாவில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு அரபு லீக் கண்காணிப்பாளர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்படுவதோடு, ஒழுங்குகளுக்கு அமைய தமது கண்காணிப்புப் பணிகளைத் தொடர்வதற்குக் கோரப்பட்டுள்ளது.
அதேபோன்று சிரிய அரசும், ஆயுதக் குழுக்களும் உடனடியாக வன்முறைகளை நிறுத்த வேண்டும் எனவும் அரபு லீக் வலியுறுத்தியுள்ளது.
சிறிய விவகாரம் குறித்து அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் சிரியாவில் செயற்பட்டுவரும் அரபு லீக் கண்காணிப்பாளர்களின் ஆரம்பக்கட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜெனரல் மொஹம்மட் அஹமதி முஸ்தபாவும் பங்கேற்று சிரிய நிலவரம் குறித்து விளக்கினார்.
இதன்போது சிரியாவில் பெறப்பட்ட புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் மற்றும் வரைபடங்கள் கொண்டு அவர் சிரியாவின் தற்போதைய நிலவரம் குறித்து அரபு லீக் வெளியுறவு அமைச்சர்களுக்கு விளங்கினார்.
இதில் கண்காணிப்பாளர்களின் பணிக்கு சிரிய அரசும், எதிர்தரப்புகளும் இடையூறாக செயற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் கண்காணிப்புப் பணிகளைத் தொடர்வதற்கு மேலும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும். சிரிய அரசு மற்றும் எதிர்த்தரப்பினர் கண்காணிப்பாளர்களை சுதந்திரமாக செயற்பட உதவுமாறு அரபு லீக்கிற்கு கண்காணிப்புக் குழு சமர்ப்பித்துள்ளது ஆரம்பக் கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் முரண்பாடான கருத்துகளும் வெளியாகி யுள்ளன. அதில் சிரியா மீதான அரபு லீக்கின் செயற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும், ஐக்கிய நாடுகள் மற்றும் ஓரளவாக சர்வதேச தலையீடுகளும் சிரியாவில் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
கட்டார் போன்ற நாடுகள் இந்தத் திட்டத்தை ஆதரித்துள்ளதோடு, அரபு லீக் செயலாளர் நாயகம் உட்பட பெரும்பாலான நாடுகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரியவருகிறது என அல் ஜkரா செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பாளர்களை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சனிக்கிழமை மேலும் 10 ஜோர்தான் நாட்டு கண்காணிப்பாளர்கள் டமஸ்கஸ் சென்றடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது சிரியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோரின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.
இறுதியில் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஆறு முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. எவ்வாறாயினும் சிரியாவில் தொடர்ந்தும் மோதல் இடம் பெற்று வருவதாக எதிர்த்தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். பிரிட்டனில் இருந்து இயங்கும் சிரிய மனித உரிமை தொடர்பில் கண்காணிக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளர்ச்சியா ளர்களுக்கும், சிரிய இராணுத்தினருக்கும் டெராவில் இடம்பெற்ற கடும் மோதலில் 11 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், டைர் எஸ்சோர் நகரில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர், துப்பாக்கிச்சூடு மற்றும் கடுமையான ஷெல் தாக்குதல்களை நடத்தியதாக அரச எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிரியாவில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் இந்த தகவல்களை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிரியாவில் ஐ.நா - அரபு லீக் இணைந்து கண்காணிப்பு பணியை தொடர திட்டம்
» அரபு லீக் கண்காணிப்பு பணியை நீடிக்க சிரிய அரசு இணக்கம்
» அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
» சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அரபு லீக் புதிய தீர்வுத்திட்டம்
» சிரியாவில் தொடர்ந்து மோதல்: அரபு லீக் அவசர கூட்டத்துக்கு அழைப்பு
» அரபு லீக் கண்காணிப்பு பணியை நீடிக்க சிரிய அரசு இணக்கம்
» அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
» சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அரபு லீக் புதிய தீர்வுத்திட்டம்
» சிரியாவில் தொடர்ந்து மோதல்: அரபு லீக் அவசர கூட்டத்துக்கு அழைப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|