சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நீங்கள் கார் வைத்திருக்க தகுதியானவரா? Khan11

நீங்கள் கார் வைத்திருக்க தகுதியானவரா?

2 posters

Go down

நீங்கள் கார் வைத்திருக்க தகுதியானவரா? Empty நீங்கள் கார் வைத்திருக்க தகுதியானவரா?

Post by பார்த்திபன் Fri 13 Jan 2012 - 8:01

ஆசைப்படாதவர்கள் இன்றைக்கு யார் இருக்கிறார்கள்! அதிலும் கார் வாங்க வேண்டும்; மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு ரிலாக்ஸாக வெளியே சென்று வர வேண்டும் என்று விரும்பாதவர்கள் யார்! குறிப்பாக இரண்டு சக்கர வாகனத்தில் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து திரிந்து கொண்டிருப்பவர்களுக்கு கார் வாங்குவது லட்சியக் கனவாகவே இருக்கிறது. கார் வாங்க ஆசைப்படுவது நியாயமான ஆசைதான் என்றாலும், பொருளாதார ரீதியாக அதற்கான நிதி வலுவுடன் இருக்கிறோமா என்பதை ஒருமுறைக்கு இருமுறை நம்மை நாமே செக் செய்து பார்த்துக் கொண்டு வாங்குவதுதான் நீடித்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். இல்லாவிட்டால், காரை வாங்கியும் கன்னத்தில் கைவைக்க வேண்டிய நிலைக்கு கொண்டுவந்து விட்டுவிடும்!

கார் வைத்துக் கொள்ள நமக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? கடன் வாங்கி கார் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? இவைகுறித்து நிதி ஆலோசகர் சுதா சூரியகுமாரிடம் கேட்டோம்...
''பெரிய செல்வந்தர்களாக இல்லாமல் மிடில் கிளாஸ் லெவலில் இருப்பவர்களுக்கு தான் இந்த ஆலோசனைகள் தேவை... அப்படிப்பட்டவர்கள் கார் வாங்க முடிவு செய்தால், முதலில் சுயமாக கார் ஓட்டக் கற்றுக் கொள்வது அவசியத்திலும் அவசியம். அப்படி இல்லாமல் டிரைவர் போட்டு ஓட்ட வேண்டும் என்றால் அதற்கே ஒரு குறிப்பிட்ட தொகை தேவைப்படும். இன்றைய நிலையில் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏழாயிரம் ரூபாய்க்கு குறைவாக ஒரு நல்ல டிரைவர் கிடைக்க வாய்ப்பில்லை.

அடுத்த முக்கிய செலவு, பெட்ரோல். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 200 ரூபாய் என்று வைத்துக் கொண்டால்கூட மாதத்திற்கு 6,000 ரூபாய் வரை செலவாகும். கார் பார்க்கிங் செய்ய இடம் இருந்தால் உங்கள் வீட்டிலேயே காரை நிறுத்திக் கொண்டுவிடலாம். ஆனால், பார்க்கிங் இடம் இல்லாதவர்கள் அதற்கான இடத்தை வாடகைக்குத்தான் பிடிக்க வேண்டும். இப்போதெல்லாம் அதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள். இது ஏரியாவுக்கு ஏரியா மாறவும் செய்கிறது. இதுபோக, பராமரிப்பு வகையில் சில ஆயிரங்கள் ஆக வாய்ப்புண்டு. இந்த செலவுகளுக்கு ஏற்ற வருமானம் இருக்கு; தவிர, காருக்கான தேவையும் இருக்கிறது என்பவர்கள் தைரியமாக கார் வாங்கலாம். ஆனால், அந்தளவுக்கு வருமானம் கிடைக்காது என்கிறவர்கள் தயவு செய்து கார் வாங்கும் முடிவை கொஞ்ச காலம் தள்ளிப்போடலாம்.

முக்கியமாக வீட்டுக் கடன் அல்லது வேறு ஏதாவது முக்கிய கடன் இருப்பவர்கள் கார் வாங்குவது குறித்து யோசித்துக் கொள்வதே நல்லது.
ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டியையும் முதலையும் கஷ்டப்பட்டு கட்டிக் கொண்டிருக்கும்போது, காருக்கான கடனை சரிவரக் கட்ட முடியாமல் போய் பிரச்னையில் சிக்கிவிட வாய்ப்பிருக்கிறது' என்றவர், லோன் வாங்கி கார் வாங்க நினைக்கிறவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை அடுக்கினார்.
''கார் வாங்குபவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், நாம் வாங்கும் காருக்கு ரீசேல் வேல்யூ இருக்கிறதா என்பதுதான். கடன் வாங்கி கார் வாங்க நினைப்பவர்களுக்கு ஏழு வருடம் வரை இ.எம்.ஐ. கட்டும் வசதியுடன் வங்கியில் கடன் கொடுக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி, கார் கடனுக்கான வட்டி விகிதம் 12-14%. பொதுவாக மூன்றாண்டு கால அவகாசத் திற்குள் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாத இ.எம்.ஐ. சுமார் 9,700 ரூபாய் (வட்டி விகிதம் 12%) கட்ட வேண்டியிருக்கும். ஐந்தாண்டு கால அவகாசத்திற்குள் மூன்று லட்சம் கடன் என்கிற பட்சத்தில் மாத இ.எம்.ஐ. 6,600 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். அதே போல் ஏழு ஆண்டுகால அவகாசத்தில் மூன்று லட்சம் என்கிறபோது 5,400 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். பொதுவாக கார் கடனை பொறுத்தவரை மூன்று வருடத்துக்குள் முடித்து விடுவதுதான் நல்லது. மாத இ.எம்.ஐ. குறைவாக இருக்குமே என்ற எண்ணத்தில் அதிக கால அவகாசத்தில் காரை வாங்கினால் கடன் முடியும் நேரத்தில் காரின் மதிப்பு பாதாளத்துக்குப் போயிருக்கும்! ரீசேல் வேல்யூ மிகவும் குறைவாகிவிடும்.

அடுத்த முக்கிய விஷயம், காருக்கான தேவை அதிகம் இருப்பவர்கள் டீசல் காரையும், காருக்கான தேவை குறைவாக இருப்பவர்கள் பெட்ரோல் காரையும் வாங்கிக் கொள்வது சிறந்தது. இதனால் செலவுகளும் குறைய வாய்ப்பிருக்கிறது'' என்றார்.
இனிமேற்கொண்டு கார் வாங்க நினைக்கிறவர்கள் மேற்சொன்ன விஷயங்களை ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்துப் பார்த்து முடிவு செய்வது நல்லது.
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நீங்கள் கார் வைத்திருக்க தகுதியானவரா? Empty Re: நீங்கள் கார் வைத்திருக்க தகுதியானவரா?

Post by நண்பன் Fri 13 Jan 2012 - 9:08

என்னைப்போன்றோருக்கு அவசியமான தகவல் நன்றி பார்தீபன் சிறந்த தகவலுக்கு :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum