சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

பெண் குழந்தைகள் மீது சமூகம் நிகழ்த்தும் வன்முறை Khan11

பெண் குழந்தைகள் மீது சமூகம் நிகழ்த்தும் வன்முறை

Go down

பெண் குழந்தைகள் மீது சமூகம் நிகழ்த்தும் வன்முறை Empty பெண் குழந்தைகள் மீது சமூகம் நிகழ்த்தும் வன்முறை

Post by *சம்ஸ் Fri 21 Jan 2011 - 17:42

கோயம்புத்தூரில் நவம்பர் மாதம் இரு குழந்தைகளைக் கடத்தி அதில் பெண் குழந்தையைப் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தி, அவ்விருவரைக் கொலை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கிய செய்தியாக அனைவரையும் உறைய வைத்தது. இந்தக் கொலை நடந்த பன்னிரண்டாவது நாளே இக் கொலையின் முக்கிய குற்றவாளி காவல் துறையின் போலி மோதல் நாடகத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் செய்தி முந்தையதைக் காட்டிலும் நம்மை அதிகம் பாதித்தது.
நீதிமன்றங்களையும், மனித உரிமையையும் கேலிக்குரியதாக்கி காவல்துறை கோரமாக இந்தப் படுகொலையை நடத்தியது. குற்றவாளியைச் சுட்டுக் கொன்றுவிட்டால் குற்றங்கள் குறைந்துவிடும் என்ற பொதுப் புத்தியிலிருந்து சற்றும் விலகாத மக்கள் காவல்துறைக்கு வீர வணக்கச்(?) சுவரொட்டிகளைக் கோவை முழுவதும் ஒட்டினர்.
ஆனால் இந்தப் படுகொலை நடந்த நான்காவது நாளே பொள்ளாச்சி அருகிலே கோட்டூர் என்ற ஊரில் 9 வயதுடைய நான்காம் வகுப்புச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். சேலம் பள்ளியொன்றில் ஜோதிமணி என்ற 10 ஆம் வகுப்பு மாணவி பள்ளியிலேயே தற்கொலை செய்து கொண்டாள். அவரது உடற்கூறு ஆய்வில் அவரது கருப்பையில் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் விந்தணு இருந்ததாகத் தெரியவர அதிர்ந்து போயினர் பெற்றோர். இதைத் தொடர்ந்து திருப்பள்ளியூர் என்னுமிடத்தில் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டு ஊரின் நடுவே உள்ள தண்­ர் தொட்டியின் அருகில் தூக்கி வீசப்பட்டுள்ளாள். இந்த நவம்பர் மாதம் மட்டும் தமிழகத்தில் நான்கு பெண் குழந்தைகள் வன்புணர்வு செய்யப்பட்டு அதில் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக முன் கூறப்பட்ட மூன்று செய்திகளும் கோவையில் மோகன்ராஜ் என்ற விசாரணைக் கைதி சுட்டுக் கொல்லப்பட்ட பின்பே நடைபெற்றுள்ளன. குற்றவாளிகள் குறையவில்லை, அதிகரித்துள்ளனர். அதிலும் இவை செய்தி ஊடகங்களின் பார்வையில் சிக்கியவை மட்டுமே ஆகும்.
இன்னும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகைய ஒவ்வொரு குற்றங்கள் நடைபெறும் பொழுதும் குற்றவாளிகளைக் காமக் கொடூரன், காமவெறி பிடித்த கயவன் என்று திட்டித் தீர்த்து ஊடகங்களும், பொதுமக்களும் நிறைவு கொள்கின்றனர். மேலும் ஒருபடி மேலே சென்று இத்தகையவர்களுக்கு அரேபிய நாடுகளில் வழங்கப்படும் தண்டனையை வழங்க வேண்டும் என வசன மழை பொழிகின்றனர். காமக் கொடூரன், காமவெறி பிடித்த கயவன் என்று திட்டித் தீர்ப்பதன் மூலமும் அவர்களைச் சிறையிலே அடைப்பதன் மூலமும் இத்தகைய குற்றங்கள் குறைந்து விடும் என்றே நம்பிக் கொண்டுள்ளனர். இத்தகைய பாலியல் வன்முறைகள் நடப்பதற்கான அடிப்படைக் காரணம் என்ன என்று சிந்திக்கிற மனநிலை கூட இங்கு எவருக்கும் இல்லை. பாலுறவு என்பது என்ன? அதை உள்ளடக்கிய பாலியல் என்பது என்ன? என்பதைப் பற்றிப் பேசுவதென்பதே மிகவும் கமுக்கமானதாகவும், பேசப்படக் கூடாத ஒன்றாகவும் இருக்கிறது. அதுதான் பண்பட்ட நிலை என்று இந்துப் பார்ப்பனப் பண்பாடு வரையறுத்துவிட்டது. இந்தப் பண்பாட்டின் மீதான ஒரு சிறு கீறலைக் கூட அது விரும்பவில்லை.
ஒரு மனிதன் தம்மின் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தலாம். ஆனால் பாலுணர்ச்சியை வெளிக் கூறுவதென்பது மிகவும் கேவலமானதாகக் கருதப்பட்டு வருகிறது. இங்கே பெண்களின் மீது திணிக்கப்பட்டுள்ள கற்புக் கோட்பாடும், ஆண்களுக்குள்ள சுதந்திரமுமே இத்தகைய குற்றங்கள் நடைபெற முகாமையான காரணமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. இப்படிப்பட்ட பண்பாடானது அந்த பண்பாட்டைக் கடைப்பிடிக்கிற மக்களுக்கெதிரானதாகவே மாறி அம்மக்களின் மீதே தன் கோரப் பற்களைப் பதித்திருக்கிறது.
பாலியல் என்பது என்ன? அது எவ்வயதிலிருந்து அவசியமாகிறது என்ற குறைந்தபட்ச அறிவு கூட இங்கே வழங்கப்படாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும். பாலுணர்வு என்பது அடிப்படையில் மனம் சார்ந்த செயலாக இருப்பதால் அதன் தேவை மற்றும் வெளிப்படுதல் என்பது அம்மனத்தை வடிவமைக்கிற புறச் சூழல்களை அடிப்படையாகக் கொண்டே எழுகிறது. எள்ளளவும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் அருவருக்கக் கூடியதாகவும் உள்ள இந்தக் குமுகாயச் சூழலில் பண்பட்ட ஒரு பாலியல் வெளிப்பாட்டை எவராலும் எதிர்பார்க்க முடியாது. இதுதான் பண்பட்ட பாலியல் என்று இந்துப் பார்ப்பனப் பண்பாடு உச்சமாய்த் தலையில் தூக்கிப் பிடிப்பது குடும்ப அமைப்பு முறையையே ஆகும். குடும்பம் என்ற ஒன்று அமைந்த பின்னரேதான் ஒவ்வொருவரின் பாலுணர்வும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயத்தை இந்தக் குமுகாயம் பின்பற்றி வருகிறது.
இத்தகைய கட்டாயமே பாலுணர்வு என்பதை வெறியாக வளர்த்தும் இந்தக் குடும்ப அமைப்பில் உள்ளவர்களாலேயே வன்மங்களை அரங்கேற்றியும் வருகிறது. மனம் விரும்பும் ஒருவருடன் உறவு என்பது மாறி உடல் உணர்ச்சிக்கு ஒருவர் உடனடித் தேவை என்ற நிலையில் பிறரை வன்புணர்வுக்கு அவர்களின் அனுமதியின்றிப் புணர்கிற பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த வன்மம் எவரென்றும் பார்க்காது, அது பிறந்த குழந்தை என்பதைக் கூட.
பண்பாடு என்று இங்கே கட்டமைக்கப்படுவதெல்லாம் யாரோ ஒரு சாராரின் வசதிக்கானது மட்டுமே. சாதியாலோ, வர்க்கத்தாலோ, இனத்தாலோ ஏதாவது ஒரு பிரிவினர்க்கு நலம் சேர்க்கும் வகையில்தான் இங்குள்ள பண்பாடுகள் அனைத்துமே கட்டமைக்கப்படுகின்றன. அனைவருக்கும் பண்பாடு என்றெல்லாம் எதுவுமே இல்லை.
சமூகத்தின் பரிணாமத்தில் என்று தனியுடைமை வலுவடைந்ததோ, சொத்துரிமை அதற்கான வாரிசுரிமை அமைப்புகள் வலுவடைந்தனவோ அன்றிலிருந்து பாலியல் சுரண்டல்களும் தொடங்கி விட்டன. தனியுரிமை வாரிசுரிமை அமைப்பானது மனிதனின் பாலியலை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகிறது. எல்லையை வரையறை செய்கிறது. இந்தக் கட்டுப்பாடானது முறைப்படுத்துதல் அல்லது வரையறைக்குட்படுத்துதல் என்றில்லாமல் வெறுமனே அடக்கி வைத்தல் என்ற அளவில்தான் உள்ளது.
பாலின்பம் என்பது உயிரினங்களின் அடிப்படைத் தேவை. இதை வெறுமனே அடக்கி வைத்தல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. இங்குத்தான் கற்புக் கோட்பாடுகளும், பண்பாட்டுப் புனிதங்களும் தேவைப்படுகின்றன. மனமொத்த இருவருக்கிடையில் நிகழ வேண்டிய பாலுறவானது இந்தச் சாதியைச் சேர்ந்தவரோடுதான் நிகழ வேண்டும், இந்த மதத்தைச் சார்ந்தவரோடுதான் நிகழ வேண்டும், இந்த அந்தஸ்துக்குரியவரோடுதான் நிகழ வேண்டும் என்றெல்லாம் நீள்கிறது. இவ்வாறு நிகழும் பொழுது பாலின்பம் என்பது வெறுமனே பாலியல் இச்சையாக எஞ்சி விடுகிறது. இந்த இச்சையைத் தூண்டக் கூடிய எல்லாவித ஆபாசங்களையும் நாம் நமது வீடுகளின் வரவேற்பறைகளிலேயே அனுமதித்துள்ளோம். புறச் சூழலால் தூண்டப்பட்ட இந்த இச்சைக்கும், வக்கிரத்துக்கும் மிக எளிதாகப் பலியாகி விடுபவர்கள், குழந்தைகளே.
குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமை என்பது தெற்காசிய நாடுகளின் மிக முக்கியப் பிரச்சினையாக திகழ்கிறது. எங்கெல்லாம் குழந்தைகள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இவ் வன்கொடுமை நிகழ்கிறது. குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமையானது பெரும்பாலானவை நெருங்கிய உறவினர்களால்தான் நிகழ்த்தப்படுகின்றன. குழந்தையின் மாமனால், சித்தப்பாவால், பக்கத்து வீட்டுக்காரரால், ஆசிரியரால், ஏன் குழந்தையின் சொந்தத் தந்தையால் கூட நிகழ்த்தப்படுகிறது.
வேலைக்குச் செல்லும் குழந்தைகளின் மீது பேருந்துப் பயணங்களின் போதும், பணிபுரியும் இடங்களிலும் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்படுகிறது. உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மீது நடத்தப்படும் வன்கொடுமையானது அகமதிப்பீடு எனும் அஸ்திரத்தைக் கொண்டே நிகழ்த்தப்படுகிறது. வீட்டு வேலைக்குச் செல்லும் குழந்தைகள், சுமங்கலித் திட்டம் போன்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் ஆகியோர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் சுரண்டல்கள், குறித்த தகவல்கள் வெளிவருவதே அரிதாயிருக்கிறது.
இந்த சாதி சமூகத்தில் கயர் லாஞ்ச் போன்ற சம்பவங்கள் ஊரே சேர்ந்து ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்வதும் அதை கொண்டாட்டாமாகக் கொண்டாடுவதும் அதை நீதிமன்றமும் காவல் துறையும் ஒரு வழக்காகவே பதிவு செய்து விட்டு விலகிக் கொள்கிற சமூக அமைப்பில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் இந்நேரத்தில் புரிந்து கொள்ள வேண்டும்!
இவ்வாறாகக் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் சுரண்டலானது, சமூகக் குற்றம் என்பதை விடவும் சமூகத்தின் நடைமுறையாகவே இருந்து வருகிறது. பாலியல் ரீதியாகத் தாம் எவ்வாறு கொடுமைக்குள்ளாக்கப்படுகிறோம், எவ்வாறு சுரண்டப்படுகிறோம் என்பதை உணர்ந்து கொள்ளக் கூட முடியாத பரிதாபகரமான நிலையிலேயே குழந்தைகள் வாழ்கின்றனர். குழந்தைத் தொழிலாளர்களாயினும், பள்ளி மாணவர்களாயினும் விதிக்கப்பட்ட வாழ்க்கையாகவே தங்களது இருத்தலைக் கொள்கின்றனர். பள்ளிகளிலும், குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வயது வந்தோருக்கான பாடல்களைப் போட்டு ஆட வைப்பதும் கூட குழந்தைகளின் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள்தான்.
இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி முறையானது பெரும்பாலும் பிரதிகளோடேயே நின்று விடுகிறது. பிரதிகளாய்க் கற்றதை நடைமுறை வாழ்க்கையோடு பொருத்திப் பார்ப்பதென்பது கற்றலோடு தொடர்பில்லாத ஒன்றாகவே கருதப்படும் நிலைதான் இன்றளவும் நீடிக்கிறது.
வெறும் மனனத் திறன் மட்டுமே முதல் தர (அ) முதல்நிலைக் கல்லூரிகளில் சேர்வதற்குப் போதுமானதாகி விடுகிறது. எடுத்துக்காட்டாகக் கூறுவதாயின் மக்களாட்சி பற்றிப் படிக்கும் பொழுது மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் ஆட்சி என்று வரையறுக்கிறோம். ஆனால் இந்த வரையறையையும் சட்டமன்ற, நாடாளுமன்ற நடைமுறைகளுடனோ, ஏன் மக்களாட்சியின் அடிப்படை அலகான உள்ளாட்சி அமைப்புகள் பற்றிக் கூட தீவிரமாக விவாதித்துக் கற்றுக் கொடுப்பதில்€ல் கற்றுக் கொள்வதுமில்லை.
மண் வகைகளைப் பற்றிய பாடப் பிரிவானது மண்ணோடும், மண்ணின் விளை பொருட்களோடும், உழைப்போடும் சற்றும் தொடர்பில்லாதவரால் கற்பிக்கப்படுகிறது. நடைமுறைக்குத் தொடர்பே இல்லாத வகையில் கற்றுக் கொள்ளப்படுகிறது. இத்தகு காரணங்களால்தான் நூறு கோடிக்கும் மேற்பட்ட மனித வளம் இருந்தும் நூற்றாண்டுகள் கடந்தும் இந்திய அறிவியல் (?) துறையில் குறிப்பிட்டுக் கூறும்படியான கண்டுபிடிப்புகளோ, கண்டு படைப்புகளோ இன்றும் நிகழவில்லை.
அறிவியலும், சமூகவியலும் நடைமுறை வாழ்க்கையோடு சிறிதளவும் தொடர்படுத்தப்படாமல் வெறும் பிரதிகளின் வாசிப்பனுபவத்துடனேயே நின்று விடுகிறது.
ஒரு நாட்டின் ஒட்டு மொத்தக் கல்வி முறையும் வெறும் பிரதிகளுடனேயே நின்று விடும் அதே நேரத்தில் பாலியல் கல்வி பற்றிப் பேசும் பொழுது மட்டும் பிரதிகளைத் தாண்டி உடனடியாக நடைமுறைகளைச் சிந்திக்கிற பொதுப்புத்தி ஏன்?
பாடத் திட்டத்தில் தலைவன், தலைவி காதல் வாழ்க்கை பற்றிய அகத்திணை இருக்கிறது, வீரம் என்னும் பெயரில் ஒரு நாட்டின் மீது படையெடுக்கும் எல்லைதாண்டிய பயங்கர வாதம் பற்றித் தும்பை, வாகை எனத் திணை பிரித்து இலக்கணம் வகுத்து போர்த் தொடுக்கும் புறநானூறு இருக்கிறது. (வப்பாட்டி வைப்பதற்கு இலக்கணம் வகுத்துப் பரத்தமை பேசப்படுகிறது) எத்தனை பேரை ஒருவன் மணந்தான், காதல் களியாட்டங்களை எப்படி நிகழ்த்தினான் எனப் பேசும் சிந்தாமணிகள், உயர்வானவனுக்கு என்ன விகுதி, இழிவானவனை அழைக்க என்ன விகுதி சேர்க்க வேண்டும் என்மனார் புலவர்களின் கூற்றுகளுக்கு இடமிருக்கிறது. மனிதர்களை நால் வர்ணமாய்ப் பாகுபடுத்தும் வேதங்களுக்கும் அதனடிப்படையிலான இலக்கியங்களுக்கும், இடமிருக்கிறது எனும்போது ஏன் பாலியல் கல்விக்கு மட்டும் இடமில்லை.
பாலியல் கல்வி என்று தனியாக ஒன்று தேவையில்லை. நமது பண்பாடும், நீதி நூல்களுமே அதைக் கற்றுக் கொடுக்கும் என்றால் இத்தனை பாலியல் வன்கொடுமைகள் எவ்வாறு நிகழ்கின்றன?
ஒரு குழந்தை தன்னளவில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவாவது பாலியல் கல்வி பற்றி நாம் பேசியே ஆக வேண்டியிருக்கிறது.
கடுமையான சட்டங்களால் மட்டுமே குழந்தைகளின் மீதான வன்கொடுமையைத் தவிர்த்துவிட இயலாது என்பதை குழந்தைகளின் உரிமை பேசுவோர் உணர வேண்டும்! குற்றங்களுக்கான சமூகக் காரணிகளைக் களைய முற்படுவோம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum