சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

அச்சம், பீதியை நீக்கி நாட்டை அபிவிருத்தியில் நோக்கி செல்லும் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~  Khan11

அச்சம், பீதியை நீக்கி நாட்டை அபிவிருத்தியில் நோக்கி செல்லும் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~

Go down

அச்சம், பீதியை நீக்கி நாட்டை அபிவிருத்தியில் நோக்கி செல்லும் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~  Empty அச்சம், பீதியை நீக்கி நாட்டை அபிவிருத்தியில் நோக்கி செல்லும் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~

Post by *சம்ஸ் Sat 28 Jan 2012 - 6:39

அச்சம், பீதியை நீக்கி நாட்டை அபிவிருத்தியில் நோக்கி செல்லும் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழுகின்ற சிங்களவர், தமிழர், கத்தோலிக்கர், இஸ்லாமியர் என்ற பேதமில்லாமல் ஒரு தாய் பிள்ளைகளாக, சகோதரர்களாக, சகோதர வாஞ்சையுடன் வாழ வேண்டும் என்ற தூர சிந்தனையில் மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் இந்த நாட்டின் மன்னாரிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையும் அதற்கு அப்பாலும் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்து வருவதாக கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் இக்கண்காட்சியானது மக்களுக்கு நன்மையாகும் என்று கூறினார்.

மன்னார் மாவட்ட திவிநெகும கண்காட்சி சென்சேவியர் ஆண்கள் பாடசாலையில் இடம்பெற்றபோது ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில் கூறியதாவது :-

கடந்த காலங்களை நாம் மறந்து விட முடியாது. அச்சமும், பீதியும், சுதந்திரமற்ற நிலையினையே சந்தித்துவந்தோம். இன்று அந்த நிலை அகன்று எமது பிள்ளைகளை நல்ல உயர் கல்வியின் பால் இட்டுச்செல்லும் சூழலை பெற்றுள்ளோம். அதே போல் எமது கிராமத்தின் மாவட்டத்தின் அபிவிருத்தியின் பால் எமது பங்களிப்பை வழங்குகின்ற மக்களாக இன்று நாம் மாறி செயற்படுகின்ற நல்ல தன்மையினை ஏற்படுத்தி வருகின்றமை பாராட்டுக்குரியது.

ஒரு காலம் இருந்தது அச்சத்தோடு நாம் இப்பாதையில் செல்கின்ற போது மீண்டும் திரும்பி வீடுகளுக்கு செல்வோமா என்ற நிலை காணப்பட்டது. பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய பெற்றோர்கள் பிள்ளைகள் திரும்பி வருவார்களா, பிள்ளைகள் இறந்து விடுவார்களா, குண்டுகள் வெடிக்குமாக என்ற சந்தேகத்துடனும் அச்சத்துடனும் வீடுகளில் இருந்த காலத்தை அனுபவித்தோம். கெப்பித்திக்கொள்ளாவையில் தொடங்கி எல்லா பிரதேசங்களிலும் மாணவர்கள், இளைஞர்கள் என எல்லோரையும் பலியெடுத்தது.

இந்த சமாதானத்தை சீர் குலைக்கின்ற மீண்டும் ஒரு இன மோதலை, சமூகங்களை மோதவிடுகின்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் பணிகளுக்கு எவரும் துணைப் போய்விடக் கூடாது. அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்கள் வடக்கின் வசந்தத்தின் மூலம் மக்களது பல்வேறு தேவைகளை பெற்றுக் கொடுக்கும் ஒருவராக இருக்கின்றார்.

வடக்கிலும், கிழக்கிலும் வாழும் சகல சமூகங்களினது மேம்பாடுகளுக்கு அவர் இராப் பகலாக நின்று செயற்படுகின்ற ஒரு நல்ல மனிதர். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துவிடால் மக்களை மறந்து செற்படும் ஒரு காலம் இருந்தது.

ஆனால் தற்போதைய அரசு அப்படியானதல்ல. இங்கு அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வருகின்ற போது பெருமகிழ்வு அடைந்ததாக கூறினார். கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் காடாக கிடந்த மன்னார் நிலங்கள் இன்று பச்சை பசேலென நெற் பயிர்கள் வளர்ந்து காணப்படுவதை கண்டும் எங்களுடைய வளர்ச்சியினை பார்த்தும் சந்தோஷம் அடைகின்ற ஒரு நல்ல அமைச்சராக அவர் இருப்பது எமது மக்களுக்கு நன்மையாகும்.

மன்னாரிலிருந்து புத்தளத்தின் ஊடாக கொழும்பு செல்லும் பாதை புனரமைப்பு செய்யப்படுமா என்று நினைத்துப் பார்க்காத நிலையில் அதனை புனரமைப்பு செய்து தாருங்கள் என்று நான் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்டு பல தடைகளும், பிரச்சினைகளும் வந்த போதும் அதனை மீறி இப்பாதை புனரமைப்புக்காக ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கிடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தையும் எங்களுடைய மன்னாரையும் இணைக்கின்ற சங்குப்பிட்டி பாலம் நிர்மாணிக்கப்படுமா என்று எவரும் கற்பனை செய்யாத போது ஜனாதிபதி அவர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளினையடுத்து இப்பாலம் புனரமைப்பு செய்யப்பட்டு இது இன்று மக்கள் போக்குவரத்துக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்துவதில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எடுத்துக் கொண்ட முயற்சியினை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

அதே போன்று ஏ 32 பாதை, கட்டுக்கரை குளம், வவுனியா பிரதான பாதை, தலைமன்னாருக்கும் – மதவாச்சிக்குமான புகையிரதப் பாதை என்பன இன்று பல கோடி ரூபாய்கள்செலவில் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

மடு தேவாலயம் இலங்கையில் பிரசித்திவாய்ந்த மத வழிபாட்டு தலங்களில் ஒன்று. அவற்றை புனரமைப்பு செய்து தாருங்கள் என்று கேட்டபோதும், திருக்கேதீஸ்வரம் இந்துக்களின் முக்கிய வழிபாட்டு தலம் அவை அம்மக்களின் தேவைக்கு புனரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று நாம் கேட்டபோதும், எந்தவொரு அரசாங்கமும் கடந்த காலத்தில் செய்யாத அளவுக்கு ஆகக் கூடிய பணத்தை ஒதுக்கி அதனை புனரமைத்து தந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான்.

நாம் மிகவும் பாராட்டுகின்ற தமிழ் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பார்க்கின்றோம். அன்றைய இந்திய - இலங்கை உடன்படிக்கையில் உறுதியாக இருக்கின்ற ஒரு தலைவர் வடக்கிலும், கிழக்கிலும் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் கெளரவமாக வாழவேண்டும், சமத்துவத்துடன் வாழ வேண்டும், என்று ஒரே நிலைப்பாட்டிலே உறுதியுடன் இருக்கும் தமிழ்த் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர் சொல்லி வரும் தீர்வு திட்டம் சரியென்று அன்று அதனை எதிர்த்த கூட்டம் இன்று அது சரியென்று தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

கொள்கையில்லாமல் எதையெல்லாம் கூறி வரும் அந்தக் கூட்டத்தின் பிழையான வழியில் நாம் சென்றுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை தான் இந்த நாட்டின் செயற்திட்டம் அதனைத் தான் அரச அதிகாரிகளும், ஏனையவர்களும் ஏற்று செயற்பட வேண்டும் என்பது யதார்த்தம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை இந்த நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களும் ஒருமித்து தமது ஆதரவை அளித்துள்ளதை மறந்து விடமுடியாது. மன்னார் மாவட்டத்தில் சமுர்த்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியினை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எமக்கு அளித்துள்ளார். வெகுவிரைவில் அதனை இங்கும் நாம் முன்னெடுக்கவுள்ளோம். ரு – து)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum