Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
ஐ.நாவை நோக்கி இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுடன் கைகோர்ப்போம்!- எஸ். ஜெயானந்தமூர்த்தி
2 posters
Page 1 of 1
ஐ.நாவை நோக்கி இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுடன் கைகோர்ப்போம்!- எஸ். ஜெயானந்தமூர்த்தி
ஐ.நா நோக்கிய மூன்று இளைஞர்களின் இலட்சியப் பயணம், எமது இனத்திற்கு சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட கொடுமையை சர்வதேசம் மீண்டுமொருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும். அவர்களின் உயரிய இலட்சியத்தில் புலம்பெயர் மக்கள் அனைவரும் கைகோர்த்துக் கொள்ள வேண்டுமென கூட்டமைப்பின் முன்னாள் பா. உ எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தாயகத்தில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை இந்தியாவினதும் சில உலக நாடுகளினதும் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் நசுக்கிக் கொண்டிருந்தபோதும் அப்பாவிப் பொதுமக்கள் மீது இன அழிப்பைச் செய்து கொண்டிருந்தபோதும் அதைத் தடுத்து நிறுத்துமாறு புலம்பெயர் மக்கள் அந்தந்த நாடுகளில் இரவு பகல் பாராது வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.
தமிழகத்தில் முத்துக்குமாரனில் தொடங்கி ஐ.நா திடலில் முருகதாசன் வரை தீக்குழிப்புகளும் நடந்தன. எனினும், எந்த உலக நாடுகளோ ஐக்கிய நாடுகள் சபையோ இப்போராட்டங்களைக் கவனத்தில் எடுக்கவில்லை.
எனினும், எமது மக்கள் தொடர்ந்து போராடினார்கள். 2009 மே 19 ஆம் திகதியுடன் போர் முடிவுக்கு வந்ததாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்ததுடன் இனிமேல் தலையிடி தீர்ந்ததென சிங்கள பேரினவாத அரசு போர் வெற்றியில் துள்ளிக் குடித்தது.
ஆனால் சிறிலங்கா அரசோ சர்வதேசமோ சற்றும் எதிர் பார்க்காதவகையில் எமது புலம் பெயர் மக்கள் அப்போராட்டத்தைத் தமது கையில் எடுத்துக் கொண்டனர். தமிழினப் படுகொலையை சர்வதேசம் ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கான சர்வதேச விசாரணைக்குழு அமைத்து அதில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கொண்ட தமிழீழமே தீர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சர்வதேச சமுகம், ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புகள் என்பனவற்றுக்கு தொடர்ந்து அழுத்தங்களை பல வகையிலும் கொடுக்கத் தொடங்கினர்.
புலம் பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையும் அதன் பலத்தையும் கண்டு சிறிலங்கா அரசு திணறிப்போனதுடன் சர்வதேசம் எமது இனத்தின் மீது தனது பார்வையைத் திருப்பத் தொடங்கியுள்ளது.
இதில் ஒரு ஆரம்பப் புள்ளியாக எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
இம்முக்கியமான தருணத்திலேய எமது மூன்று இளைஞர்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்திலிருந்து ஐ.நா நோக்கி நீதிக்கான நடைப்பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். எமது மக்களுக்கு நடந்த படுகொலைக்குத் தீர்வு வேண்டும் எமது இனம் சுதந்திரமாக தம்மைத் தாமே ஆழக்கூடிய சுயநிர்ணய உரிமை கொண்ட தனிநாடு அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தியும் சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இந்நடைப்பயணத்தை இவர்கள் மிகவும் துணிச்சலுடன் தொடர்ந்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவும் கடும் பனிக்குளிரான காலநிலையின் மத்தியிலும் உயரிய இலட்சியத்தைத் தமது தோள்களில் சுமந்து செல்கின்றனர். எமது தேசியத் தலைவரின் சிந்தனையும், மாவீரர்களின் தியாகமும் மக்களின் உயிர்கொடையும் இவர்களை மேலும் வீச்சுடன் முன்னேறிச் செல்ல வைத்திருக்கின்றது.
அத்துடன் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்களும் தினமும் இவர்களுடன் இணைந்து தமது ஆதரவையும் உற்சாகத்தையும் வழங்கி வருகின்றனர்.
அன்பான எனது புலம்பெயர் உறவுகளே!
இன்றைய காலகட்டம் எமக்கானது. இச்சந்தர்ப்பத்தை நாம் தவறவிடாமல் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை காலமும் நீங்கள் நடத்திய போராட்டங்களும் ஒத்துழைப்புகளும் பெறுமதியானவை. அதே வீச்சுடன் தொடர்ந்து போராடவேண்டியது எமது காலத்தின் தேவை. இதற்கு சர்வதேசம் என்றோ ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
எனவே இம்முறையும் மனித உரிமைக் கூட்டத்தொடர் நடைபெறும் வேளையில், எமது மக்களின் பலத்தையும் போராட்ட வீச்சையும் ஐ.நா திடலில் காட்ட வேண்டும். ஆகவே இவர்களின் நடைப்பயணம் ஐ.நா. மன்றத்தின் முன்னால் முருகதாசன் திடலில் எதிர்வரும் 05.03.2012 ஆம் திகதி முடிவடையும் தினத்தன்று எமது புலம் பெயர் மக்கள் பெரும் தொகையில் அங்கு ஒன்று கூடி நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டு எமது பலத்தைக் காட்ட வேண்டும்.
நிச்சயமாக எமது புலம் பெயர் உறவுகளாகிய நீங்கள் அன்றைய தினம் எமது பலத்தை அங்கு காட்டுவீகள் என்ற நம்பிக்கை உண்டு. நாம் இன்னும் வீழ வில்லை. எமது இலட்சியத்தை அடையும் வரை முழு மூச்சுடன் போராடுவோம் என்ற செய்தியை சர்வதேசம் மட்டுமல்ல எமது இனத்தை அழித்த இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கும் காட்ட வேண்டும். என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தாயகத்தில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை இந்தியாவினதும் சில உலக நாடுகளினதும் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் நசுக்கிக் கொண்டிருந்தபோதும் அப்பாவிப் பொதுமக்கள் மீது இன அழிப்பைச் செய்து கொண்டிருந்தபோதும் அதைத் தடுத்து நிறுத்துமாறு புலம்பெயர் மக்கள் அந்தந்த நாடுகளில் இரவு பகல் பாராது வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.
தமிழகத்தில் முத்துக்குமாரனில் தொடங்கி ஐ.நா திடலில் முருகதாசன் வரை தீக்குழிப்புகளும் நடந்தன. எனினும், எந்த உலக நாடுகளோ ஐக்கிய நாடுகள் சபையோ இப்போராட்டங்களைக் கவனத்தில் எடுக்கவில்லை.
எனினும், எமது மக்கள் தொடர்ந்து போராடினார்கள். 2009 மே 19 ஆம் திகதியுடன் போர் முடிவுக்கு வந்ததாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்ததுடன் இனிமேல் தலையிடி தீர்ந்ததென சிங்கள பேரினவாத அரசு போர் வெற்றியில் துள்ளிக் குடித்தது.
ஆனால் சிறிலங்கா அரசோ சர்வதேசமோ சற்றும் எதிர் பார்க்காதவகையில் எமது புலம் பெயர் மக்கள் அப்போராட்டத்தைத் தமது கையில் எடுத்துக் கொண்டனர். தமிழினப் படுகொலையை சர்வதேசம் ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கான சர்வதேச விசாரணைக்குழு அமைத்து அதில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கொண்ட தமிழீழமே தீர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சர்வதேச சமுகம், ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புகள் என்பனவற்றுக்கு தொடர்ந்து அழுத்தங்களை பல வகையிலும் கொடுக்கத் தொடங்கினர்.
புலம் பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையும் அதன் பலத்தையும் கண்டு சிறிலங்கா அரசு திணறிப்போனதுடன் சர்வதேசம் எமது இனத்தின் மீது தனது பார்வையைத் திருப்பத் தொடங்கியுள்ளது.
இதில் ஒரு ஆரம்பப் புள்ளியாக எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
இம்முக்கியமான தருணத்திலேய எமது மூன்று இளைஞர்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்திலிருந்து ஐ.நா நோக்கி நீதிக்கான நடைப்பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். எமது மக்களுக்கு நடந்த படுகொலைக்குத் தீர்வு வேண்டும் எமது இனம் சுதந்திரமாக தம்மைத் தாமே ஆழக்கூடிய சுயநிர்ணய உரிமை கொண்ட தனிநாடு அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தியும் சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இந்நடைப்பயணத்தை இவர்கள் மிகவும் துணிச்சலுடன் தொடர்ந்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவும் கடும் பனிக்குளிரான காலநிலையின் மத்தியிலும் உயரிய இலட்சியத்தைத் தமது தோள்களில் சுமந்து செல்கின்றனர். எமது தேசியத் தலைவரின் சிந்தனையும், மாவீரர்களின் தியாகமும் மக்களின் உயிர்கொடையும் இவர்களை மேலும் வீச்சுடன் முன்னேறிச் செல்ல வைத்திருக்கின்றது.
அத்துடன் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்களும் தினமும் இவர்களுடன் இணைந்து தமது ஆதரவையும் உற்சாகத்தையும் வழங்கி வருகின்றனர்.
அன்பான எனது புலம்பெயர் உறவுகளே!
இன்றைய காலகட்டம் எமக்கானது. இச்சந்தர்ப்பத்தை நாம் தவறவிடாமல் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை காலமும் நீங்கள் நடத்திய போராட்டங்களும் ஒத்துழைப்புகளும் பெறுமதியானவை. அதே வீச்சுடன் தொடர்ந்து போராடவேண்டியது எமது காலத்தின் தேவை. இதற்கு சர்வதேசம் என்றோ ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
எனவே இம்முறையும் மனித உரிமைக் கூட்டத்தொடர் நடைபெறும் வேளையில், எமது மக்களின் பலத்தையும் போராட்ட வீச்சையும் ஐ.நா திடலில் காட்ட வேண்டும். ஆகவே இவர்களின் நடைப்பயணம் ஐ.நா. மன்றத்தின் முன்னால் முருகதாசன் திடலில் எதிர்வரும் 05.03.2012 ஆம் திகதி முடிவடையும் தினத்தன்று எமது புலம் பெயர் மக்கள் பெரும் தொகையில் அங்கு ஒன்று கூடி நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டு எமது பலத்தைக் காட்ட வேண்டும்.
நிச்சயமாக எமது புலம் பெயர் உறவுகளாகிய நீங்கள் அன்றைய தினம் எமது பலத்தை அங்கு காட்டுவீகள் என்ற நம்பிக்கை உண்டு. நாம் இன்னும் வீழ வில்லை. எமது இலட்சியத்தை அடையும் வரை முழு மூச்சுடன் போராடுவோம் என்ற செய்தியை சர்வதேசம் மட்டுமல்ல எமது இனத்தை அழித்த இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கும் காட்ட வேண்டும். என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Re: ஐ.நாவை நோக்கி இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுடன் கைகோர்ப்போம்!- எஸ். ஜெயானந்தமூர்த்தி
உலகநாடுகளி்ன் கண்ணடைப்பும் கண்துடைப்பும் தான் இன்றய நாடுகளின் வீழ்ச்சியும் உயர்ச்சியும் தற்போதய இலங்கையின் வீழ்ச்சியா உயர்ச்சியா என்று ஏங்கும் நிலையும் உருவாகியிருப்பதும் உண்மை காலம் பதில் சொல்லும்
Re: ஐ.நாவை நோக்கி இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுடன் கைகோர்ப்போம்!- எஸ். ஜெயானந்தமூர்த்தி
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:உலகநாடுகளி்ன் கண்ணடைப்பும் கண்துடைப்பும் தான் இன்றய நாடுகளின் வீழ்ச்சியும் உயர்ச்சியும் தற்போதய இலங்கையின் வீழ்ச்சியா உயர்ச்சியா என்று ஏங்கும் நிலையும் உருவாகியிருப்பதும் உண்மை காலம் பதில் சொல்லும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|