சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கெட்ட தந்தையின் அடையாளம்! Khan11

கெட்ட தந்தையின் அடையாளம்!

3 posters

Go down

கெட்ட தந்தையின் அடையாளம்! Empty கெட்ட தந்தையின் அடையாளம்!

Post by gud boy Sat 17 Mar 2012 - 19:28

கெட்ட தந்தையின் அடையாளம்!

''கெட்ட தந்தை யாரெனில்

அவன் வீட்டில் நுழைந்தால்

மனைவி கவலை கொள்வாள்.

பிள்ளைகள் மிரண்டு ஓடும்.

அவன் வீட்டை விட்டு வெளியே சென்றால்

மனைவியும், பிள்ளைகளும் மகிழ்வார்கள்" -அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

இன்றைய பெரும்பாலான தந்தையர் கடல்கடந்து அயல்நாடுகளில் பொருளீட்டுவதில் குறியாக இருப்பதாலும், வேறு சிலர் மனைவி, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது வியாரத்தலங்களிலும், அலுவலகங்களிலும், இயக்கங்களிலும் தங்களை முழுக்க முழுக்க ஈடுபடுத்திக்கொண்டு பணம், பணம் என்று பேயாய் அலைந்துகொண்டு காலையில் வீட்டைவிட்டுப் புறப்பட்டு பின்னிரவில் வீடு திரும்புவதாலும் தந்தையின் முகம் காணாது பாசம் என்பது கிடைக்கப்பெறாமல் வளர்ந்து பிற்காலத்தில் பிள்ளைகளும் பிறர்மீது அன்பு செலுத்தத் தெரியாதவர்களாய், ஆணவக்காரர்களாய், முரடர்களாய், சமூக விரோதிகளாய் மாரிவிடுவதற்கு வாய்ப்புண்டு.

இன்னும் சில தந்தையர்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை விளங்காதவர்களாய் பொறுப்பற்றவர்களாய் மனைவி, மக்களின் வெறுப்புக்கு ஆளாகி விடுகின்றனர். தனது ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக கோபம் மிகுந்தவர்களாகவும், அளவுக்கதிகமான கண்டிப்புக் காட்டி, தன் சொல்லுக்கும், செயலுக்கும் மனைவியும், பிள்ளைகளும் அடிமைப்போல வாழவேண்டுமென விரும்புகின்றனர். அதில்தான் தனது ஆணைத்தன்மை இருப்பதாக கருதுகின்றனர்.

"எப்போதடா இந்த ஆள் வெளியே போவார்" என்று குழந்தைகள் மிரட்சியில் வாழ்வதுண்டு. இத்தகைய தந்தையர்கள் அப்பட்டமான சுயநலவாதிகள். வெளி உலகிற்கு அமைதியானவர்களாக காட்சியளிக்கும் இவர்கள் குடும்பத்தில் மனைவியிடமும், பிள்ளைகளிடமும் நடந்துகொள்ளும் விதம் யாவும் அரக்கத்தனமாகவே இருக்கும்.

இத்தகைய தந்தைமார்களை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கெட்ட தந்தையாக சித்தரிக்கிறார்கள். ஆம்! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "கெட்ட தந்தை யாரெனில் அவன் வீட்டில் நுழைந்தால் மனைவி கவலை கொள்வாள். பிள்ளைகள் மிரண்டு ஓடும். அவன் வீட்டை விட்டு வெளியே சென்றால் மனைவியும், பிள்ளைகளும் மகிழ்வார்கள்".

தந்தைமார்கள் குழந்தைகளுடன் அழகிய முறையில் நற்குணத்திற்கு முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும். குழந்தைகளிடமும் மனைவியிடமும் நேசக்கரம் நீட்டி அன்பையும், பாசத்தையும் பொழிய வேண்டும். குழந்தைகளின் ஆற்றலைப் பாராட்ட வேண்டும். தவறுகளை கனிவோடு சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர அடக்குமுறை கூடாது. குழந்தைகளின் தேவைகளை அறிந்து முடிந்தவரை நிறைவேற்ற வேண்டும்.

சிந்திக்க ஒரு சிறு சம்பவம்...

மகன் தந்தையிடம் கேட்கின்றான்: "அப்பா ஒரு நாளைக்கு நீ எவ்வளவு ரூபாய் சம்பாதிப்பாய்?"

"இது என்ன வெட்டிக் கேள்வி" எறிச்சலுற்றார் தந்தை.

"கொஞ்சம் சொல்லுங்கப்பா... ப்ளீஸ்..." இது மகன்.

"அரை மணி நேரம் கடையில் உட்கார்ந்தா 200 ரூபாய் சம்பாதிச்சிடுவேன்.... இது மாதிரி தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டு என் நேரத்தை வேஸ்ட் பாண்ணாதே" மறுபடியும் கோபித்தார் தந்தை.

"அப்பா, எனக்கு ஒரு 100 ரூபாய் கொடுங்களேன்.!"

தந்தைக்கு கோபம் தலைக்கு ஏறியது.

"பேசாம போய் விளையாடு. உனக்கு எதுக்குப் பணம்?" இரண்டாவது படிக்கும் மகனை விரட்டியடித்தார்.

இரவு வந்தது. மகனைக்காயப்படுத்தி விட்டோமே என்ற உணர்வுடன் வீடு திரும்பிய தந்தை "சரி, பையனுக்கு ஏதோ விளையாட்டுப்பொருள் வாங்க பணம் தேவைப்பட்டிருக்கிறது" என்று எண்ணி படுத்திருந்த மகனை எழுப்பி "இந்தா நீ கேட்ட நூறு ரூபாய்" என்று பணத்தை நீட்டினார்.

மகன் முகத்தில் அத்தனை சந்தோஷம்.

சட்டென்று தன் தலையணைக்கடியிலிருந்து இன்னொரு நூறு ரூபாய் தாளை எடுத்தான். இரண்டையும் சேர்த்து அப்பாவிடம் கொடுத்தான்.

"இந்தாப்பா இருநூறு ரூபாய், என் கூட அரை மணி நேரம் விளையாடறீங்களா?" என்று கேட்டான். தந்தையின் கண்களில் என்றுமில்லாத பரவசம். பிள்ளையை வாரி அனைத்துக்கொண்டார்.

இதுகூட செய்யாத எத்தனையோ தந்தைமார்கள் இன்றைய சமூகத்தில் நிறையபேர் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு ''முதியோர் இல்லம்'' காத்திருக்கிறது என்பதை அவர்கள் நினைவில் கொள்ளட்டும்!

www.nidur.info
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

கெட்ட தந்தையின் அடையாளம்! Empty Re: கெட்ட தந்தையின் அடையாளம்!

Post by முனாஸ் சுலைமான் Sun 18 Mar 2012 - 7:13

"இந்தாப்பா இருநூறு ரூபாய், என் கூட அரை மணி நேரம் விளையாடறீங்களா?" என்று கேட்டான். தந்தையின் கண்களில் என்றுமில்லாத பரவசம். பிள்ளையை வாரி அனைத்துக்கொண்டார்.

இதுகூட செய்யாத எத்தனையோ தந்தைமார்கள் இன்றைய சமூகத்தில் நிறையபேர் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு ''முதியோர் இல்லம்'' காத்திருக்கிறது என்பதை அவர்கள் நினைவில் கொள்ளட்டும்!
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கெட்ட தந்தையின் அடையாளம்! Empty Re: கெட்ட தந்தையின் அடையாளம்!

Post by jasmin Sun 18 Mar 2012 - 10:53

உண்மைதான் சகோதரே இதை அனைவரும் உணர வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கெட்ட தந்தையின் அடையாளம்! Empty Re: கெட்ட தந்தையின் அடையாளம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum