சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

மரங்கள் : சந்தனம்... Khan11

மரங்கள் : சந்தனம்...

Go down

மரங்கள் : சந்தனம்... Empty மரங்கள் : சந்தனம்...

Post by mufees Sun 25 Mar 2012 - 20:31

மரங்கள் : சந்தனம்... Sandalwood மரம், செடி, கொடி, புல், பூண்டு இவையனைத்தும் மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது. இவைதான் மனிதர்கள் உயிர் வாழ ஆதாரமாக இருப்பவை. இயற்கை இவற்றின் மூலமே அதிகளவு மனிதர்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்துள்ளது. இத்தகைய சிறப்புகள் கொண்ட இவற்றை மனிதன் தன் சுயலாபத்திற்காக அழித்ததன் விளைவுதான். புயல், மழை, பூகம்பம் என பல இயற்கை சீற்றங்கள்.

“மரம் வளர்ப்போம். மழை பெருவோம்” என்ற வாசகம் விளம்பரப் பலகையில் தான் உள்ளது. மனிதர்களின் மனதில் இல்லை. இப்படி மனிதர்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழும் மரங்களுக்கு மருத்துவக் குணங்களும் உண்டு. இதை அன்றே சித்தர்கள் கண்டறிந்து பல நூல்களில் எழுதி வைத்தனர்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களுள் சந்தன மரமும் ஒன்று. சந்தன மரத்தின் தூள் சமய வழி பாட்டில் முக்கிய இடம் பெறுகிறது. நறுமணம் கொண்டது. நம் முன்னோர்கள் சந்தனத்தூளை நீரில் கரைத்து மேனியெங்கும் பூசிக் கொள்வார்கள்.
தற்போது நறுமனப் பொருட்களில் சந்தனத்தூள், சந்தனத் தைலம் முக்கிய இடம் பெறுகிறது.

சந்தன மரம் மாற்றடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்டது. உலர்ந்த கட்டை நறுமணம் கொண்டது. இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், கர்நாடக மாநிலத்தின் மைசூர் பகுதிகலிலும் அதிகம் வளர்கிறது. மலைப்பாங்கான பகுதியில் நன்கு வளரும். 20 வருடங்களுக்கு மேல் பழமையான மரமே பயன்படுத்தப்படுகிறது. சந்தன மரம் உயிருடன் இருக்கும்போது மணப்பதில்லை, வெட்டிய கட்டைகளே அதிகம் மணம் பரப்பும்.

Tamil - Chandanam

English - Sandal wood

Sanskrit - Shri gandha, chandanam

Telugu - Gandeapu - chikka

Kanada - Gadnhad chehke

Malayalam - Chandana

Botanical Name - Santalum album

நற்சந் தனமரத்தா னல்லறிவு மின்பமெழிற்
பொற் செந்திருவருளும் பூமிதத்துண் - மெச்சுஞ்
சரும வழகுந் தனிமோ கமுமாம்
மிருமுநோ யேகும் பறழ்ந்து

- பதார்த்த குணபாடம் - பாடல் (209)

பொருள் : நல்ல சந்தன மரக்கட்டையை முறைப்படி பயன்படுத்துவோருக்கு அறிவும், மனமகிழ்ச்சியும், உடல் அழகும் கூடும், பெண்களுக்கு வெள்ளை, வெட்டை நோய்கள் நீங்கும்.

சந்தன மரத்தில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு என மூன்று வகைகள் உள்ளன. இவை மூன்றும் மருத்துவப் பயன் கொண்டவை.

மருத்துவப் பயன்கள்

சரும நோய் நீங்க:

அகச் சூழ்நிலையாலும், புறச் சூழ்நிலையாலும் மனித உடலில் முதலில் பாதிக்கப்படும் உறுப்பு சருமம் தான். சருமத்தில் சொறி, சிரங்கு, அக்கி, படர்தாமரை, தேமல், வெண்குட்டம், கருமேகம், வீக்கம், முகப்பரு, தழும்பு, முகக் கறுப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகி பலர் வேதனைப்படுவார்கள். இவர்கள் சந்தன மரக்கட்டையை எலுமிச்சப் பழச்சாறு விட்டு அரைத்து பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவி வந்தால் மேற்கண்ட நோய்கள் நீங்கி சருமம் பொலிவு பெறும்.

வெட்டைச் சூடு தணிய:

சந்தனத்தை பசும் பால் விட்டு அரைத்து 5 கிராம் அளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வெட்டைச்சூடு, மேக அனல், சிறுநீர் பாதையில் புண் போன்றவை தீரும்.

பெண்களுக்கு:

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைப் போக்கவும், உடல் சூட்டைத் தணிக்கவும், சந்தனத்தூள் உபயோகப்படுகிறது.

சந்தனத்தூளை இளநீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் வடிகட்டி அருந்தி வந்தால் உடல்சூடு தணியும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய:

நெல்லிக்காய் சாறு 15 மி.லி. எடுத்து அதனுடன் 5 கிராம் அரைத்த சந்தனத்தைக் கலந்து உருண்டையாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

மார்புத் துடிப்பு நீங்க

சந்தனத்தூள் 20 கிராம் எடுத்து 300 மி.லி. நீரிலிட்டுக் காய்ச்சி 150 மி.லி.யானவுடன் வடிக்கட்டி வேளைக்கு 50 மி.லி. என காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் குடித்து வந்தால் நீர்க்கோவை, காய்ச்சல், மார்புத்துடிப்பு மந்தம், இதயவலி போன்றவை நீங்கும்.

சந்தனத்தூளைப் புகைத்து நறுமணம் வீசச் செய்தால் காற்றில் உள்ள நச்சுக் கிருமிகளைப் போக்கி சுவாசத்தைச் சீராக்கும். மனதிற்கு சாந்தத்தையும், மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் கொடுக்கும்.

சந்தனத் தைலம்:

சந்தனத் தைலத்தை சருமத்தின் மீது தடவினால் சரும நோய்கள் ஏதும் அணுகாமல் சருமத்தைப் பாதுகாக்கும். உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.

சந்தனத்தின் மருத்துவப் பயன்களை நாமும் அறிந்து பயன்படுத்தி நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum