Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
Page 1 of 1
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
மாவட்டங்களின் கதைகள் - திருச்சிராப்பள்ளி மாவட்டம்(Trichy)
தென்னிந்திய வாழைச் சாகுபடியில் முன்னணிப் பகுதி
இணையதளம்:
www.trichy.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtry@tn.nic.in
தொலைபேசி: 0431-2416358
எல்லைகள்: கிழக்கில் தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களும்; வடக்கில் சேலம், பெரம்பலூர் மாவட்டங்களும், மேற்கில் நாமக்கல் மாவட்டமும்; திண்டுக்கல் மதுரை மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: இன்றைய திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியான உறையூர் கி.மு. 300-லிருந்து சோழர்களின் தலைநகரமாக விளங்கியதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன.
களப்பிரர் காலத்திலும் (கி.பி. 300-575) உறையூர் சோழர்களின் கீழ் இருந்திருக்கலாமென வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கி.பி. 590-இல் முடிசூடிய முதலாம் மகேந்திரவர்மர் காலத்தில் உறையூரும், இன்றைய திருச்சிராப்பள்ளியின் பழைய பகுதிகளும் பல்லவராட்சியின் கீழ் வந்தன. கி.பி. 880 வரை இப்பகுதி பல்லவர், பாண்டியர் ஆட்சியின் கீழ் மாறி மாறி இருந்தது.
கி.பி. 880-இல் ஆதித்த சோர் பெற்ற வெற்றி இப்பகுதியைச் சோழப் பேராட்சியில் கீழ் கொண்டு வந்தது. கி.பி. 1225-இல் ஹொய்சால மன்னர்களால் கையகப்படுத்தப்பட்டு, பின்பு இரண்டாம் பாண்டிய பேர்ரசின் கீழ் சில ஆண்டுகள் இருந்த திருச்சிராப்பள்ளி, முகமதியர்களின் ஆட்சிக்குட்பட்டது.
நாயக்கர்கள், விஜய நகர அரசர்களின் முகவர்களாக இப்பகுதியை ஏறத்தாழ 1736 வரை ஆண்டார்கள். அரசி மீனாட்சியுடன் நாயக்ககராட்சி முடிவுற்றது.
தொடர்ந்து முகமதியர் ஆட்சி, ஆற்காடு நவாபுகளின் மரபில் வந்த சந்தாசாகிபு, முகமதலி போன்றோரின் கையில் சில ஆண்டுகள் இருந்த இப்பகுதி, இறுதியில் ஆங்கில ஆட்சிக்குட்பட்டது.
நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி மூன்றாகப் பிரிக்கப்பட்டது. (திருச்சிராப்பளி, கரூர் மற்றும் பெரம்பலூர்)
முக்கிய ஆறுகள்: காவிரி, அரியார், கோரையார், அய்யாறு, நந்தலாறு, ஊப்பாறு.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள் - 3: திருச்சி, லால்குடி, முசிறி
தாலுகாக்கள் - 8: திருச்சி, மணப்பாறை, முசிறி, லால்குடிஇ, துறையூர், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், தொட்டியம்
மாநகராட்சி-1: திருச்சி,
நகராட்சிகள்-3: மணப்பாறை, துறையூர், தூத்துக்குடி.
ஊராட்சி ஒன்றியங்கள் -14: அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மண்ணச்ச நல்லூர், முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, லால்குடி, புள்ளம்பாடி, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, உப்பியாபுரம், துறையூர்.
குறிப்பிடத்தக்க இடங்கள்
மலைக்கோட்டை: உலகின் மிகப்பழமையான பாறை (3800 மில்லியன் ஆண்டுகள் பழமை) என்ற சிறப்புடைய இது 83. மீ. உயரம் கொண்டது.
உச்சிப்பிள்ளையார் கோவில்: மலைக்கோட்டையில் 344 படிகளைக் கடந்து ஏறிச்சென்றால் இக்கோயிலை தரிசிக்கலாம்.
ஆறுகள்
திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன. திருச்சி வட்டத்தில் முக்கொம்பூர் எனுமிடத்தில் காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான் ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும். வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, வடலாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன. உய்யக்கொண்டான் ஆறு திருச்சி நகர்புறத்தில் பல பாசனக் குளங்களுக்கு நீர் தருகிறது.
கல்லணை: கல்லணை சோழ மன்னன் கரிகாலனால் கட்டப் பெற்றது. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமுமாகும்.
மேலணை
மேலணை 1836 ஆம் ஆண்டு கொள்ளிடம் பிரியுமிடத்தில் கட்டப்பட்டது. மேலணைப் பகுதியில், காவிரி இரண்டாகப் பிரிவதற்கு முன் கிடைக்கும் தண்ணீர் சீராகக் கட்டு படுத்தபட்டு டெல்டா பிரதேசம் முழுவதற்கும் பாசன வசதி கிடைக்கிறது. அளவுக்கு மீறிய வெள்ள காலத்தில் இந்த அணையின் வழியாக விநாடிக்கு 98,000 கன அடி தண்ணீர் கொள்ளிடத்திற்குள் பாய்ந்து விடும். இதனால் கல்லணைக்கு வரும் ஆபத்து தடுக்கப்பட்டது.
ஏரக்குடி சிறுநாவலூர்: நவாப் காலத்தில் கட்டப்பட்ட அழகிய தானியக் களஞ்சியம்.
ஸ்ரீரங்கம் ராகவேந்தரர் மடம்:
இங்கே ராகவேந்திர்ரின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாகத் தீட்டபட்டுள்ளது.
இருப்பிடமும் சிறப்பியல்களும்:
http://www.thangampalani.com/2011/11/story-of-thiruchirapalli-tamil-nadu.html
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
தென்னிந்திய வாழைச் சாகுபடியில் முன்னணிப் பகுதி
அடிப்படைத் தகவல்கள் | |
தலைநகர் | திருச்சி |
பரப்பு | 4.403 ச.கி.மீ. |
மக்கள்தொகை | 24,18,366 |
ஆண்கள் | 12,08,534 |
பெண்கள் | 12,09,832 |
மக்கள் நெருக்கம் | 549 |
ஆண்-பெண் | 1,001 |
எழுத்தறிவு விகிதம் | 77.90 |
இந்துக்கள் | 20,40,989 |
கிருத்தவர்கள் | 2,18,033 |
இஸ்லாமியர் | 1,56,345 |
புவியியல் அமைவு | |
அட்சரேகை | 100-110.30 N |
தீர்க்கரேகை | 770-45-780.50E |
இணையதளம்:
www.trichy.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtry@tn.nic.in
தொலைபேசி: 0431-2416358
எல்லைகள்: கிழக்கில் தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களும்; வடக்கில் சேலம், பெரம்பலூர் மாவட்டங்களும், மேற்கில் நாமக்கல் மாவட்டமும்; திண்டுக்கல் மதுரை மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: இன்றைய திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியான உறையூர் கி.மு. 300-லிருந்து சோழர்களின் தலைநகரமாக விளங்கியதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன.
களப்பிரர் காலத்திலும் (கி.பி. 300-575) உறையூர் சோழர்களின் கீழ் இருந்திருக்கலாமென வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கி.பி. 590-இல் முடிசூடிய முதலாம் மகேந்திரவர்மர் காலத்தில் உறையூரும், இன்றைய திருச்சிராப்பள்ளியின் பழைய பகுதிகளும் பல்லவராட்சியின் கீழ் வந்தன. கி.பி. 880 வரை இப்பகுதி பல்லவர், பாண்டியர் ஆட்சியின் கீழ் மாறி மாறி இருந்தது.
கி.பி. 880-இல் ஆதித்த சோர் பெற்ற வெற்றி இப்பகுதியைச் சோழப் பேராட்சியில் கீழ் கொண்டு வந்தது. கி.பி. 1225-இல் ஹொய்சால மன்னர்களால் கையகப்படுத்தப்பட்டு, பின்பு இரண்டாம் பாண்டிய பேர்ரசின் கீழ் சில ஆண்டுகள் இருந்த திருச்சிராப்பள்ளி, முகமதியர்களின் ஆட்சிக்குட்பட்டது.
நாயக்கர்கள், விஜய நகர அரசர்களின் முகவர்களாக இப்பகுதியை ஏறத்தாழ 1736 வரை ஆண்டார்கள். அரசி மீனாட்சியுடன் நாயக்ககராட்சி முடிவுற்றது.
தொடர்ந்து முகமதியர் ஆட்சி, ஆற்காடு நவாபுகளின் மரபில் வந்த சந்தாசாகிபு, முகமதலி போன்றோரின் கையில் சில ஆண்டுகள் இருந்த இப்பகுதி, இறுதியில் ஆங்கில ஆட்சிக்குட்பட்டது.
நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி மூன்றாகப் பிரிக்கப்பட்டது. (திருச்சிராப்பளி, கரூர் மற்றும் பெரம்பலூர்)
முக்கிய ஆறுகள்: காவிரி, அரியார், கோரையார், அய்யாறு, நந்தலாறு, ஊப்பாறு.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள் - 3: திருச்சி, லால்குடி, முசிறி
தாலுகாக்கள் - 8: திருச்சி, மணப்பாறை, முசிறி, லால்குடிஇ, துறையூர், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், தொட்டியம்
மாநகராட்சி-1: திருச்சி,
நகராட்சிகள்-3: மணப்பாறை, துறையூர், தூத்துக்குடி.
ஊராட்சி ஒன்றியங்கள் -14: அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மண்ணச்ச நல்லூர், முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, லால்குடி, புள்ளம்பாடி, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, உப்பியாபுரம், துறையூர்.
குறிப்பிடத்தக்க இடங்கள்
மலைக்கோட்டை: உலகின் மிகப்பழமையான பாறை (3800 மில்லியன் ஆண்டுகள் பழமை) என்ற சிறப்புடைய இது 83. மீ. உயரம் கொண்டது.
உச்சிப்பிள்ளையார் கோவில்: மலைக்கோட்டையில் 344 படிகளைக் கடந்து ஏறிச்சென்றால் இக்கோயிலை தரிசிக்கலாம்.
ஆறுகள்
திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன. திருச்சி வட்டத்தில் முக்கொம்பூர் எனுமிடத்தில் காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான் ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும். வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, வடலாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன. உய்யக்கொண்டான் ஆறு திருச்சி நகர்புறத்தில் பல பாசனக் குளங்களுக்கு நீர் தருகிறது.
கல்லணை: கல்லணை சோழ மன்னன் கரிகாலனால் கட்டப் பெற்றது. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமுமாகும்.
மேலணை
மேலணை 1836 ஆம் ஆண்டு கொள்ளிடம் பிரியுமிடத்தில் கட்டப்பட்டது. மேலணைப் பகுதியில், காவிரி இரண்டாகப் பிரிவதற்கு முன் கிடைக்கும் தண்ணீர் சீராகக் கட்டு படுத்தபட்டு டெல்டா பிரதேசம் முழுவதற்கும் பாசன வசதி கிடைக்கிறது. அளவுக்கு மீறிய வெள்ள காலத்தில் இந்த அணையின் வழியாக விநாடிக்கு 98,000 கன அடி தண்ணீர் கொள்ளிடத்திற்குள் பாய்ந்து விடும். இதனால் கல்லணைக்கு வரும் ஆபத்து தடுக்கப்பட்டது.
ஏரக்குடி சிறுநாவலூர்: நவாப் காலத்தில் கட்டப்பட்ட அழகிய தானியக் களஞ்சியம்.
ஸ்ரீரங்கம் ராகவேந்தரர் மடம்:
இங்கே ராகவேந்திர்ரின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாகத் தீட்டபட்டுள்ளது.
இருப்பிடமும் சிறப்பியல்களும்:
இருப்பிடமும், சிறப்புகளும் |
சென்னையிலிருந்து 316 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. |
விமான நிலையம், வானொலி நிலையம் அமைந்துள்ளது. |
தாயுமானவர் வாழ்ந்த பூமி. |
துப்பாக்கித் தொழிறைசாலையும், பொன் மலை இரயில்வே பணிமனையும், தேசிய தொழில் நுட்ப கல்வி நிறுவனம் (என்.ஐ.டி)N.I.T இந்நகரின் தனிச் சிறப்பு. |
புத்த மதம் செழித்த பூமி. |
முக்கிய கனிமங்கள்: சுண்ணாம்புக்கல், குவார்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பார், ஜிப்சம், வெள்ளைக் களிமண், கார்னட். |
திருக்கோகர்ணேஸ்வரர் ஆலையம்: இது மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் கட்டபட்ட குடைவரைக் கோயில். |
பெல்(BHEL) - மின்சார உற்பத்திக்கான பாய்லர்களை தயாரிக்கும் நிறுவனம் 2008 இல் இதன் வருமானம் ரூ. 7500 கோடி. |
பேப்ரிகேஷன் துறையின் மையம் என்ற சிறப்பு பெற்றுவருகிறது. |
மத்திய அரசின் படைக்கலத் தொழிற்சாலை. |
http://www.thangampalani.com/2011/11/story-of-thiruchirapalli-tamil-nadu.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|