Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பச்சை பிசாசு
2 posters
Page 1 of 1
பச்சை பிசாசு
பச்சை பிசாசு
நம்ம ஊர் குளங்களில், ஏரிகளில், ஆறுகளில் தண்ணீர் இருக்குதோ இல்லையோ பச்சை பசேலென்று இந்த ஆகாயத்தாமரை மட்டும் எங்கும் நிறைஞ்சிருக்கு! அதை அழிக்கவும் முடியாமல் கட்டுப்படுத்தவும் முடியாமல் நம் அரசு எந்திரங்கள் படும் பாடு சொல்லி மாளாது.
தென்னமெரிக்காவின் அமேசான் காடுகள்தான் இந்த வாட்டர் ஹ்யான்சித் (WATER HYANCITH) என்னும் ஆகாயத்தாமரையின் பூர்வீகம். எப்படியோ அது கண்டங்கள் கடந்து இன்று உலகெங்கும் பலருக்கும் தீராத்தலைவலியை உண்டாக்கும் அளவுக்கு பல்கி பெருகி காடாக வளர்ந்து கசகசவென நிற்கிறது! இந்த ஆகாயத்தாமரை பார்க்க பச்சை பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிந்தாலும் அதனால் உண்டாகும் தீமைகள் அதிகம்.
ஆகாயத்தாமரையின் இலைகள் நல்ல தடிமனாக இருப்பதை பார்த்திருக்கலாம். அவை அதிக நீரை உறிஞ்சி வாழும் தன்மை கொண்டவை. இந்த தடிமனான இலைகளின் ஊடாக நடக்கிற நீராவிப்போக்கு ஏரி குளங்களின் தண்ணீர் அளவை வெகுவிரைவில் மானாவாரியாக குறைத்துவிடுகின்றன. இதன் தண்டிலிருந்து புதிய கிளைகள் உருவாவதால் ஒரே வாரத்தில் இரட்டிப்பாகும் தன்மை கொண்டது. மிக வேகமாக வளரக்கூடியது.
இத்தாவரங்கள் இறந்து மட்கிப்போவதால் நீர் அசுத்தமடைவதாக கூறப்படுகிறது. வெள்ளம் மாதிரியான நேரங்களில் நீரைத் தடுத்து ஊருக்குள் தண்ணீர் புகந்து நாசம் விளைவிக்கவும் வழியமைத்துக்கொடுக்கின்றன. ஆகாயத்தாமரை ஆக்கிரமித்த ஏரிகளில் மீன்பிடிக்கவோ படகுவிடவோ வாய்ப்பேயில்லை. இவை தவிர இன்னும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளன.
இவற்றை அடியோடு அழிக்க களைக்கொல்லிகளை பயன்படுத்த இயலும். ஆனால் நீர் உபயோகிக்க இயலாத விஷமாக மாறிவிடும் ஆபத்து உண்டு. பெரிய ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மொத்தமாக வேரோடு பிடுங்கி அழித்தாலும் ஒரே மாதத்தில் தன் ஆக்கிரமிப்பு வேலையை மீண்டும் தொடங்கிவிடும் இந்த பச்சை பிசாசுகள்! இதன் ஒற்றை விதை முப்பது ஆண்டுகள் சாகாவரம் பெற்றவை! ஒருவிதை போதும் பலநூறு ஏக்கர் நீர்நிலையை காலி பண்ண.. சரி இந்த அழிக்கமுடியாத நரகாசுரனை என்னதான் செய்வதாம்! ‘’அழிக்கமுடியாத அழிவு சக்திகளை ஆக்கசக்தியாக மாற்றமுடிந்தால் எப்படி இருக்கும்’’ என்று சிரித்துக்கொண்டே நம்மோடு பேசினார் தாராபுரம் முகமது கபீர்!
தாராபுரம் பகுதியில் விவசாய ஆலோசகராக இருப்பவர் அகமது கபீர். ஆகாயத்தாமரையை சில நல்ல காரியங்களுக்கும் உபயோகிக்க முடியும் , அதன்மூலம் அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். அவை விவசாயிகளுக்கு நன்மை செய்யக்கூடியவை. ஆகாயத்தாமரையை பயன்படுத்தி பணம்கூட சம்பதிக்க முடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார்.
‘’இந்த ஆகாயத்தாமரை நீரை அதிகமாக உறிஞ்சுவதாக சொல்லப்பட்டாலும் அவை நீரை மட்டுமே உறிஞ்சுவதில்லை அதோடு நீரில் கலந்திருக்கிற ஆர்சனிக் மாதிரியான நஞ்சுப்பொருட்களையும் ஈயம் மாதிரியான சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களையும் சேர்த்துதான் தன்னகத்தே எடுத்துக்கொள்கின்றன. இதன் காரணமாக யாருமே உபயோகிக்காத கால்வாய்களில் ஏரிகளில் இருக்கிற மிகமோசமாக தண்ணீர் மேலும் மாசடைவது தடுக்கப்படுகிறது. அதோடு வெயில்காலங்களில் குருவிகள்,கிளிகள்,கொக்குகள் முதலான பறவைகளுக்கு தண்ணீர் தரும் மிகமுக்கியமான வாட்டர் சோர்ஸாகவும் ஆகாயத்தாமரை இலைகள் திகழ்கின்றன, குருவிகள் தன் அலகால் இந்த இலைகளை ஒரு குத்து குத்தினால் போதும் தண்ணீர்கொட்டும்! அதோடு ஆகாயத்தாமரைக்கு கீழே நல்ல வெதுவெதுப்பான சீதோஷ்ண நிலையிருப்பதால் மீன்கள் வளரவும் ஏற்றதாக இருக்கும்.
கேரள மாநிலம் முழுக்க எங்கு பார்த்தாலும் எல்லா நீர்நிலைகளிலும் ஆகாயத்தாமரைகளை காண முடியும். ஆனால் அவற்றால் யாருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. அந்த மக்களுக்கும் அதுகுறித்த கவலைகள் கிடையாது. காரணம் அங்குள்ள நீர்நிலைகளில் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும்.
தமிழ்நாடு மாதிரியான இடங்களில் மழைகாலங்களில் மட்டுமே தண்ணீர் கிடைப்பதால் அது குறைந்துவிடும் என அஞ்சுகிறோம். நம்முடைய அச்சம் சரியானதுதான். தண்ணீர் குறையும் என்பது நிஜம்தான். அதே சமயம் இந்த ஆகாயத்தாமரைகள் அசுத்தமான நீர் நிலைகளில்தான் அதிகம் வளர்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சுத்தமான நீரில் இவை வளரவே வளராது. மக்கள் பயன்படுத்தும் ஏரிகளிலும் வளரும் ஆகாயத்தாமரைகளை கட்டாயம் அப்புறப்படுத்துவது அவசியம்.
ஆனால் யாருமே பயன்படுத்தாதா உதாரணத்துக்கு கூவம் மாதிரி இடங்களின் நீரை யாருமே பயன்படுத்தப்போவதில்லை அங்கே வளரும் ஆகாயத்தாமரைகளை அப்படியே விட்டுவிடலாம். சுற்றுசூழலுக்கும் பறவைகளுக்கும் நல்லதுதான். மழைக்காலங்களில் மட்டும் அவற்றை அகற்றிவிட்டால் வெள்ளம் உண்டாவதை தடுக்க இயலும்.
இந்த ஆகாயத்தாமரையை பயன்படுத்தி நம்மால் பயோ கேஸ் தயாரிக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரமாகவும் பயன்படுத்த முடியும். நாம் அதிகம் உபயோகிக்காத நீரில் இவை வளர்வதால் குறைந்தபட்சம் அந்த நீர் சுத்தமாகிறதே என நினைத்து மகிழ்ச்சியடையலாம்!,’’ என்கிறார் கபீர்.
கேரள மாநிலம் கொட்டாபுரத்தில் உள்ள கிட்ஸ் (KIDS) என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் அதை செய்தும் காட்டியுள்ளது. இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எந்திரந்தின் மூலமாக ஆகாயத்தாமரை கூழாக்கப்பட்டு, சரியான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வைக்கின்றனர். அதன்மூலமாக பயோ கேஸ் தயாரிக்கின்றனர் இந்த கிட்ஸ் அமைப்பினர். 700 லிட்டர் ஆகாயத்தாமரை கரைசலைக்கொண்டு 3600லிட்டர் பயோகேஸ் தயாரிக்கின்றனர். 15நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளை அகற்றி புதிய ஆகாயத்தாமரைகளை கொட்ட வேண்டும் அவ்வளவுதான்!
‘’எங்களுடைய கிட்ஸ் கல்லூரி கேன்டீனின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையையும் ஆகாயத்தாமரையைக் கொண்டே பூர்த்தி செய்கிறோம்’’ என்று பெருமையாக சொல்கிறார் அந்த அமைப்பின் ஜியார்ஜ்.
வெறும் பயோகேஸ் தயாரிப்போடு நின்றுவிடாமல் இந்த ஆகாயத்தாமரையை கொண்டு மண்புழு உரமும் தயார் செய்கின்றனர். நன்றாக அரைக்கப்பட்ட ஆகாயத்தாமரை செடிகளை சாணக்கரைசலோடு கலந்து தேங்காய்நாரின் மீது போட்டு வைத்து அதில் கொஞ்சம் மண்புழுக்களைவிட்டால் சில நாட்களில் மண்புழு உரம் தயார்! உரம் மட்டுமல்ல இந்த ஆகாயத்தாமரையை காயவைத்து அதன் நாரிலிருந்து நல்ல கைவினை பொருட்களை உள்ளூர் பெண்களை கொண்டே செய்து விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.
‘’வாழைநார் போலவே இதற்கு நல்ல உறுதியான நார்த்தன்மை உண்டு. அதனால் இதன்மூலம் செய்கிற கைவினை பொருட்களுக்கு நல்ல மதிப்பு உண்டு, நம்மூர் தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் இதனை செய்ய முன்வரலாம். அல்லது அரசே இதற்கென புதிய வாய்ப்புகளை உருவாக்கித்தர முன்வரவேண்டும், தற்போது கேவிஐசி ( காதி மற்றும் கிராமிய தொழில்கள் நிறுவனம்) எனப்படும் அரசு நிறுவனம் ஆகாயத் தாமரையிலிருந்து எரிவாயு தயாரிக்கப் பயன்படும் கலன்களை அறிமுகம் செய்துள்ளது. சாண எரிவாயு கலன்களிலிருந்து சிறிய மாறுதல்களுடன் இந்த எரிவாயு கலன்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆகாயத்தாமரை இயற்கை உரம் அதிக அளவில் நுண்ணூட்ட சத்துகள் கொண்டுள்ளது. சேப்ரோபிக் பாக்டீரியா ஆகாயத்தாமரையை 60 நாட்களில் மக்கவைத்து சிறந்த இயற்கை உரமாக மாற்ற வல்லது. ஆகாயத் தாமரையை ஒரு களையாக, விவசாயத்திற்கு எதிராக கருதி வரும் நாம் அதன் நன்மைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார் தாராபுரம் முகமது கபீர்.
நம்முடைய நீர்நிலைகளை காக்க என்னென்னவோ முயற்சிகளை நம் அரசும் தன்னார்வ தொண்டுநிறுவனங்களும் முயற்சிகள் மேற்கொண்டே வருகின்றன. இருப்பினும் இந்த ஆகாயத்தாமரை பிரச்சனைக்கு இதுவரை ஒரு நிரந்தரத் தீர்வு கிடைத்திடாத பட்சத்தில் கேரளாவின் கிட்ஸ் அமைப்பினை முன்மாதிரியாக கொண்டு இந்த ஆகாயத்தாமரையை நல்ல விதமாக உபயோகித்து இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் பயோகேஸ் உற்பத்தி மாதிரியான விஷயங்களை ஊக்கப்படுத்தலாம்.
(நன்றி - புதிய தலைமுறை)
நம்ம ஊர் குளங்களில், ஏரிகளில், ஆறுகளில் தண்ணீர் இருக்குதோ இல்லையோ பச்சை பசேலென்று இந்த ஆகாயத்தாமரை மட்டும் எங்கும் நிறைஞ்சிருக்கு! அதை அழிக்கவும் முடியாமல் கட்டுப்படுத்தவும் முடியாமல் நம் அரசு எந்திரங்கள் படும் பாடு சொல்லி மாளாது.
தென்னமெரிக்காவின் அமேசான் காடுகள்தான் இந்த வாட்டர் ஹ்யான்சித் (WATER HYANCITH) என்னும் ஆகாயத்தாமரையின் பூர்வீகம். எப்படியோ அது கண்டங்கள் கடந்து இன்று உலகெங்கும் பலருக்கும் தீராத்தலைவலியை உண்டாக்கும் அளவுக்கு பல்கி பெருகி காடாக வளர்ந்து கசகசவென நிற்கிறது! இந்த ஆகாயத்தாமரை பார்க்க பச்சை பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிந்தாலும் அதனால் உண்டாகும் தீமைகள் அதிகம்.
ஆகாயத்தாமரையின் இலைகள் நல்ல தடிமனாக இருப்பதை பார்த்திருக்கலாம். அவை அதிக நீரை உறிஞ்சி வாழும் தன்மை கொண்டவை. இந்த தடிமனான இலைகளின் ஊடாக நடக்கிற நீராவிப்போக்கு ஏரி குளங்களின் தண்ணீர் அளவை வெகுவிரைவில் மானாவாரியாக குறைத்துவிடுகின்றன. இதன் தண்டிலிருந்து புதிய கிளைகள் உருவாவதால் ஒரே வாரத்தில் இரட்டிப்பாகும் தன்மை கொண்டது. மிக வேகமாக வளரக்கூடியது.
இத்தாவரங்கள் இறந்து மட்கிப்போவதால் நீர் அசுத்தமடைவதாக கூறப்படுகிறது. வெள்ளம் மாதிரியான நேரங்களில் நீரைத் தடுத்து ஊருக்குள் தண்ணீர் புகந்து நாசம் விளைவிக்கவும் வழியமைத்துக்கொடுக்கின்றன. ஆகாயத்தாமரை ஆக்கிரமித்த ஏரிகளில் மீன்பிடிக்கவோ படகுவிடவோ வாய்ப்பேயில்லை. இவை தவிர இன்னும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளன.
இவற்றை அடியோடு அழிக்க களைக்கொல்லிகளை பயன்படுத்த இயலும். ஆனால் நீர் உபயோகிக்க இயலாத விஷமாக மாறிவிடும் ஆபத்து உண்டு. பெரிய ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மொத்தமாக வேரோடு பிடுங்கி அழித்தாலும் ஒரே மாதத்தில் தன் ஆக்கிரமிப்பு வேலையை மீண்டும் தொடங்கிவிடும் இந்த பச்சை பிசாசுகள்! இதன் ஒற்றை விதை முப்பது ஆண்டுகள் சாகாவரம் பெற்றவை! ஒருவிதை போதும் பலநூறு ஏக்கர் நீர்நிலையை காலி பண்ண.. சரி இந்த அழிக்கமுடியாத நரகாசுரனை என்னதான் செய்வதாம்! ‘’அழிக்கமுடியாத அழிவு சக்திகளை ஆக்கசக்தியாக மாற்றமுடிந்தால் எப்படி இருக்கும்’’ என்று சிரித்துக்கொண்டே நம்மோடு பேசினார் தாராபுரம் முகமது கபீர்!
தாராபுரம் பகுதியில் விவசாய ஆலோசகராக இருப்பவர் அகமது கபீர். ஆகாயத்தாமரையை சில நல்ல காரியங்களுக்கும் உபயோகிக்க முடியும் , அதன்மூலம் அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். அவை விவசாயிகளுக்கு நன்மை செய்யக்கூடியவை. ஆகாயத்தாமரையை பயன்படுத்தி பணம்கூட சம்பதிக்க முடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார்.
‘’இந்த ஆகாயத்தாமரை நீரை அதிகமாக உறிஞ்சுவதாக சொல்லப்பட்டாலும் அவை நீரை மட்டுமே உறிஞ்சுவதில்லை அதோடு நீரில் கலந்திருக்கிற ஆர்சனிக் மாதிரியான நஞ்சுப்பொருட்களையும் ஈயம் மாதிரியான சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களையும் சேர்த்துதான் தன்னகத்தே எடுத்துக்கொள்கின்றன. இதன் காரணமாக யாருமே உபயோகிக்காத கால்வாய்களில் ஏரிகளில் இருக்கிற மிகமோசமாக தண்ணீர் மேலும் மாசடைவது தடுக்கப்படுகிறது. அதோடு வெயில்காலங்களில் குருவிகள்,கிளிகள்,கொக்குகள் முதலான பறவைகளுக்கு தண்ணீர் தரும் மிகமுக்கியமான வாட்டர் சோர்ஸாகவும் ஆகாயத்தாமரை இலைகள் திகழ்கின்றன, குருவிகள் தன் அலகால் இந்த இலைகளை ஒரு குத்து குத்தினால் போதும் தண்ணீர்கொட்டும்! அதோடு ஆகாயத்தாமரைக்கு கீழே நல்ல வெதுவெதுப்பான சீதோஷ்ண நிலையிருப்பதால் மீன்கள் வளரவும் ஏற்றதாக இருக்கும்.
கேரள மாநிலம் முழுக்க எங்கு பார்த்தாலும் எல்லா நீர்நிலைகளிலும் ஆகாயத்தாமரைகளை காண முடியும். ஆனால் அவற்றால் யாருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. அந்த மக்களுக்கும் அதுகுறித்த கவலைகள் கிடையாது. காரணம் அங்குள்ள நீர்நிலைகளில் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும்.
தமிழ்நாடு மாதிரியான இடங்களில் மழைகாலங்களில் மட்டுமே தண்ணீர் கிடைப்பதால் அது குறைந்துவிடும் என அஞ்சுகிறோம். நம்முடைய அச்சம் சரியானதுதான். தண்ணீர் குறையும் என்பது நிஜம்தான். அதே சமயம் இந்த ஆகாயத்தாமரைகள் அசுத்தமான நீர் நிலைகளில்தான் அதிகம் வளர்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சுத்தமான நீரில் இவை வளரவே வளராது. மக்கள் பயன்படுத்தும் ஏரிகளிலும் வளரும் ஆகாயத்தாமரைகளை கட்டாயம் அப்புறப்படுத்துவது அவசியம்.
ஆனால் யாருமே பயன்படுத்தாதா உதாரணத்துக்கு கூவம் மாதிரி இடங்களின் நீரை யாருமே பயன்படுத்தப்போவதில்லை அங்கே வளரும் ஆகாயத்தாமரைகளை அப்படியே விட்டுவிடலாம். சுற்றுசூழலுக்கும் பறவைகளுக்கும் நல்லதுதான். மழைக்காலங்களில் மட்டும் அவற்றை அகற்றிவிட்டால் வெள்ளம் உண்டாவதை தடுக்க இயலும்.
இந்த ஆகாயத்தாமரையை பயன்படுத்தி நம்மால் பயோ கேஸ் தயாரிக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரமாகவும் பயன்படுத்த முடியும். நாம் அதிகம் உபயோகிக்காத நீரில் இவை வளர்வதால் குறைந்தபட்சம் அந்த நீர் சுத்தமாகிறதே என நினைத்து மகிழ்ச்சியடையலாம்!,’’ என்கிறார் கபீர்.
கேரள மாநிலம் கொட்டாபுரத்தில் உள்ள கிட்ஸ் (KIDS) என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் அதை செய்தும் காட்டியுள்ளது. இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எந்திரந்தின் மூலமாக ஆகாயத்தாமரை கூழாக்கப்பட்டு, சரியான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வைக்கின்றனர். அதன்மூலமாக பயோ கேஸ் தயாரிக்கின்றனர் இந்த கிட்ஸ் அமைப்பினர். 700 லிட்டர் ஆகாயத்தாமரை கரைசலைக்கொண்டு 3600லிட்டர் பயோகேஸ் தயாரிக்கின்றனர். 15நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளை அகற்றி புதிய ஆகாயத்தாமரைகளை கொட்ட வேண்டும் அவ்வளவுதான்!
‘’எங்களுடைய கிட்ஸ் கல்லூரி கேன்டீனின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையையும் ஆகாயத்தாமரையைக் கொண்டே பூர்த்தி செய்கிறோம்’’ என்று பெருமையாக சொல்கிறார் அந்த அமைப்பின் ஜியார்ஜ்.
வெறும் பயோகேஸ் தயாரிப்போடு நின்றுவிடாமல் இந்த ஆகாயத்தாமரையை கொண்டு மண்புழு உரமும் தயார் செய்கின்றனர். நன்றாக அரைக்கப்பட்ட ஆகாயத்தாமரை செடிகளை சாணக்கரைசலோடு கலந்து தேங்காய்நாரின் மீது போட்டு வைத்து அதில் கொஞ்சம் மண்புழுக்களைவிட்டால் சில நாட்களில் மண்புழு உரம் தயார்! உரம் மட்டுமல்ல இந்த ஆகாயத்தாமரையை காயவைத்து அதன் நாரிலிருந்து நல்ல கைவினை பொருட்களை உள்ளூர் பெண்களை கொண்டே செய்து விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.
‘’வாழைநார் போலவே இதற்கு நல்ல உறுதியான நார்த்தன்மை உண்டு. அதனால் இதன்மூலம் செய்கிற கைவினை பொருட்களுக்கு நல்ல மதிப்பு உண்டு, நம்மூர் தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் இதனை செய்ய முன்வரலாம். அல்லது அரசே இதற்கென புதிய வாய்ப்புகளை உருவாக்கித்தர முன்வரவேண்டும், தற்போது கேவிஐசி ( காதி மற்றும் கிராமிய தொழில்கள் நிறுவனம்) எனப்படும் அரசு நிறுவனம் ஆகாயத் தாமரையிலிருந்து எரிவாயு தயாரிக்கப் பயன்படும் கலன்களை அறிமுகம் செய்துள்ளது. சாண எரிவாயு கலன்களிலிருந்து சிறிய மாறுதல்களுடன் இந்த எரிவாயு கலன்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆகாயத்தாமரை இயற்கை உரம் அதிக அளவில் நுண்ணூட்ட சத்துகள் கொண்டுள்ளது. சேப்ரோபிக் பாக்டீரியா ஆகாயத்தாமரையை 60 நாட்களில் மக்கவைத்து சிறந்த இயற்கை உரமாக மாற்ற வல்லது. ஆகாயத் தாமரையை ஒரு களையாக, விவசாயத்திற்கு எதிராக கருதி வரும் நாம் அதன் நன்மைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார் தாராபுரம் முகமது கபீர்.
நம்முடைய நீர்நிலைகளை காக்க என்னென்னவோ முயற்சிகளை நம் அரசும் தன்னார்வ தொண்டுநிறுவனங்களும் முயற்சிகள் மேற்கொண்டே வருகின்றன. இருப்பினும் இந்த ஆகாயத்தாமரை பிரச்சனைக்கு இதுவரை ஒரு நிரந்தரத் தீர்வு கிடைத்திடாத பட்சத்தில் கேரளாவின் கிட்ஸ் அமைப்பினை முன்மாதிரியாக கொண்டு இந்த ஆகாயத்தாமரையை நல்ல விதமாக உபயோகித்து இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் பயோகேஸ் உற்பத்தி மாதிரியான விஷயங்களை ஊக்கப்படுத்தலாம்.
(நன்றி - புதிய தலைமுறை)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பச்சை பிசாசு
பாதிதான் படிக்க முடிந்தது அறிந்திடாத தகவல் நன்றி ##*
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» இந்த வீட்டிலே ஒரு பிசாசு நடமாடுறதாமே...!
» மறைந்திருக்கும் மாயைப் பிசாசு...(விடு கதைகள்)
» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
» பச்சை வாகனங்கள்
» பச்சை வாசனை
» மறைந்திருக்கும் மாயைப் பிசாசு...(விடு கதைகள்)
» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
» பச்சை வாகனங்கள்
» பச்சை வாசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|