Latest topics
» மருந்துby rammalar Today at 10:50 am
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm
» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am
» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon Apr 22, 2024 12:58 pm
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun Apr 21, 2024 11:43 pm
» கிராமத்து பெண்.
by rammalar Sun Apr 21, 2024 11:30 pm
» இன்றைய செய்திகள்
by rammalar Sun Apr 21, 2024 10:07 pm
சமையல் அறையில் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி ?
3 posters
Page 1 of 1
சமையல் அறையில் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி ?
சமையல் அறையில் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி ?
கியாஸ் சிலிண்டரை எப்படி உபயோகிப்பது என்பது பற்றி ஒவ்வொரு குடும்பத்தினரும் அறிந்திருக்க வேண்டும், விலை
மதிப்பற்ற மனித உயிர் இழப்பை தவிர்க்க பாதுகாப்பான முறையில் சமையல் அறையை
பெண்கள் கையாள வேண்டும். எண்ணை நிறுவனங்கள் சமையல் கியாஸ் பாதுகாப்பு
குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அவற்றை நாம் அலட்சியமாக கருதி
பின்பற்றுவது இல்லை. அதனால்தான் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன என்று
இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சமையல் கியாசை பாதுகாப்பாக பயன்படுத்த அதிகாரிகள் தரும் விளக்கம் வருமாறு:-
கியாஸ் அடுப்பை பயன்படுத்துபவர்கள் நம்பிக்கையான நிறுவனங்களின் பி.ஐ.எஸ்.
சான்று பெற்ற சாதனங்களை எப்போதும் பயன்படுத்த வேண்டும். அதிகாரப்பூர்வமான
கியாஸ் ஏஜென்சிகளிடம் இருந்தே பி.ஐ.எஸ். சான்று பெற்ற கியாஸ் ரெகுலேட்டர்
மற்றும் பாதுகாப்பு டியூப்களை வாங்க வேண்டும். சமையல் கியாசை பாதுகாப்பாக
பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால் சிலிண்டர் வினியோகிக்கும் நபரிடம்
செயல்முறை விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
காற்றோட்டமான
பகுதியில், தரையில் இருந்து நின்ற நிலையிலேயே எப்போதும் சிலிண்டரை
வைத்திருக்க வேண்டும். சிலிண்டர் மட்டத்தில் இருந்து உயரமான - சமமான
இடத்திலேயே கியாஸ் அடுப்பை வைக்கவும் தனிப் பெட்டியிலோ அல்லது தரை
மட்டத்தில் இருந்து பள்ளமான குழியிலோ சிலிண்டரை வைக்கக்கூடாது.
வெப்பமான பிற சாதனங்களில் இருந்து சிலிண்டரை தள்ளியே வைத்திருக்க வேண்டும்.
சிலிண்டரை பயன்படுத்தும் போது அதன் அருகில் மண்எண்ணை அல்லது வேறு வித
அடுப்புகளை ஒரு போதும் வைத்திருக்கக்கூடாது. ரப்பர் டியூப், சிலிண்டர்
வால்வின் உள்புறத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சிலிண்டரில் கசிவு
இருப்பதை சோப்பு நீர் கொண்டே பரிசோதியுங்கள். எரியும் தீக்குச்சி மூலம்
பரிசோதிக்கக் கூடாது.
நைலான் கயிற்றுடன் கூடிய பாதுகாப்பு மூடி
எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும். கியாஸ் கசிவு
தென்பட்டால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும். அடுப்பில்
பாத்திரங்களை வைத்து விட்டு நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டு விடாதீர்க்ள.
சமையல் பொருட்கள் கொதித்து வெளியேறி தீயை அணைத்து விடும். இது கியாஸ்
கசிவுக்கு வழி வகுக்கும்.
பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல்
அறைக்குள் வைத்திருக்கக் கூடாது. அதனால் ஏற்படும் மின் அழுத்த
ஏற்றத்தாழ்வு, கியாஸ் கசிவு இருக்கும் பட்சத்தில் விபத்தை உண்டாக்கக்
கூடும். படுக்கைக்கு செல்லும் முன் சிலிண்டர் ரெகுலேட்டர் “நாப்”பை
மூடிவிட்டு அடுத்ததாக அடுப்பின் “நாப்”களையும் மூட வேண்டும். பயன்பாடு
இல்லாத நேரத்தில் சிலிண்டரின் “நாப்” எப்போதும் மூடிய நிலையிலேயே இருக்க
வேண்டும்.
காலியான சிலிண்டர்களை பாதுகாப்பு மூடியால் மூடி,
காற்றோட்டமான குளுமையான இடத்திலேயே வைத்திருக்க வேண்டும். கியாஸ் டியூப்பை
எதனாலும் மூடாமல் வெளியே தெரியும்படி வைக்க வேண்டும். டியூப்பை விரிசல்
இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்திடுங்கள். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை
ரப்பர் டியூப்பை மாற்ற வேண்டும். சமையல் எரிவாயு சாதனங்களை அவ்வப்போது
பரிசோதித்து சரி செய்து கொள்ள வேண்டும்.
நீங்கள் சுயமாக ரிப்பேர்
செய்வது பாதுகாப்பாற்றது. வினியோகஸ்தர்களின் மெக்கானிக்குகளை
பயன்படுத்துங்கள். கியாஸ் கசிவு ஏற்பட்டால் பதட்டம் அடையாமல் ரெகுலெட்டர்
மற்றும் பர்னர் “நாப்”களை மூட வேண்டும். அந்த அறையில் உள்ள மின்
சுவிட்சுகள், மின் சாதனங்களை இயக்கக்கூடாது வெளிப்புறம் இருக்கும் பிரதான
மின் இணைப்பில் இருந்து மட்டுமே மின் சப்ளையை துண்டிக்க வேண்டும்.
காற்றோட்டத்துக்காக கதவுகள், ஜன்னல்களை திறந்து வைக்கவும் எரியும்
நெருப்பு, எண்ணை விளக்குகள், மெழுகுவர்த்தி போன்றவற்றை அணைத்திட வேண்டும்.
சிலிண்டரை பாதுகாப்பு மூடியால் மூடிவிடுங்கள். உதவிக்கு உங்களின்
வினியோகஸ்தர் அல்லது அவசர சேவை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
காற்றை விட கியாஸ் கனமானதாக இருப்பதால் கசிவு ஏற்படும் நேரத்தில் அது
தரைமட்டத்தை நோக்கி பாயும். கியாஸ் கசிவு ஏற்பட்டிருப்பது கவனத்துக்கு
வந்தால் அவற்றை வெளியேற்ற அத்தனை காற்றோட்ட வசதிகளையும் செய்யவும். கசிவு
ஏற்பட்டால் இந்தியன் ஆயில் நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு (அலுவலக
நேரத்தில்) 044-24339236, 24339246 என்ற டெலிபோனில் புகார் தெரிவிக்கலாம்.
அலுவலக நேரத்திற்கு பின்னர் 9941990909, 9941955111, 9941930303 ஆகிய
செல்போன்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்த ஒரு
மணி நேரத்திற்குள் ஐ.ஓ.சி. மெக்கானிக்குகள் அங்கு வருவார்கள் என்று எண்ணை
நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி : ஐ.ஓ.சி. நிறுவனம்
கியாஸ் சிலிண்டரை எப்படி உபயோகிப்பது என்பது பற்றி ஒவ்வொரு குடும்பத்தினரும் அறிந்திருக்க வேண்டும், விலை
மதிப்பற்ற மனித உயிர் இழப்பை தவிர்க்க பாதுகாப்பான முறையில் சமையல் அறையை
பெண்கள் கையாள வேண்டும். எண்ணை நிறுவனங்கள் சமையல் கியாஸ் பாதுகாப்பு
குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அவற்றை நாம் அலட்சியமாக கருதி
பின்பற்றுவது இல்லை. அதனால்தான் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன என்று
இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சமையல் கியாசை பாதுகாப்பாக பயன்படுத்த அதிகாரிகள் தரும் விளக்கம் வருமாறு:-
கியாஸ் அடுப்பை பயன்படுத்துபவர்கள் நம்பிக்கையான நிறுவனங்களின் பி.ஐ.எஸ்.
சான்று பெற்ற சாதனங்களை எப்போதும் பயன்படுத்த வேண்டும். அதிகாரப்பூர்வமான
கியாஸ் ஏஜென்சிகளிடம் இருந்தே பி.ஐ.எஸ். சான்று பெற்ற கியாஸ் ரெகுலேட்டர்
மற்றும் பாதுகாப்பு டியூப்களை வாங்க வேண்டும். சமையல் கியாசை பாதுகாப்பாக
பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால் சிலிண்டர் வினியோகிக்கும் நபரிடம்
செயல்முறை விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
காற்றோட்டமான
பகுதியில், தரையில் இருந்து நின்ற நிலையிலேயே எப்போதும் சிலிண்டரை
வைத்திருக்க வேண்டும். சிலிண்டர் மட்டத்தில் இருந்து உயரமான - சமமான
இடத்திலேயே கியாஸ் அடுப்பை வைக்கவும் தனிப் பெட்டியிலோ அல்லது தரை
மட்டத்தில் இருந்து பள்ளமான குழியிலோ சிலிண்டரை வைக்கக்கூடாது.
வெப்பமான பிற சாதனங்களில் இருந்து சிலிண்டரை தள்ளியே வைத்திருக்க வேண்டும்.
சிலிண்டரை பயன்படுத்தும் போது அதன் அருகில் மண்எண்ணை அல்லது வேறு வித
அடுப்புகளை ஒரு போதும் வைத்திருக்கக்கூடாது. ரப்பர் டியூப், சிலிண்டர்
வால்வின் உள்புறத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சிலிண்டரில் கசிவு
இருப்பதை சோப்பு நீர் கொண்டே பரிசோதியுங்கள். எரியும் தீக்குச்சி மூலம்
பரிசோதிக்கக் கூடாது.
நைலான் கயிற்றுடன் கூடிய பாதுகாப்பு மூடி
எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும். கியாஸ் கசிவு
தென்பட்டால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும். அடுப்பில்
பாத்திரங்களை வைத்து விட்டு நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டு விடாதீர்க்ள.
சமையல் பொருட்கள் கொதித்து வெளியேறி தீயை அணைத்து விடும். இது கியாஸ்
கசிவுக்கு வழி வகுக்கும்.
பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல்
அறைக்குள் வைத்திருக்கக் கூடாது. அதனால் ஏற்படும் மின் அழுத்த
ஏற்றத்தாழ்வு, கியாஸ் கசிவு இருக்கும் பட்சத்தில் விபத்தை உண்டாக்கக்
கூடும். படுக்கைக்கு செல்லும் முன் சிலிண்டர் ரெகுலேட்டர் “நாப்”பை
மூடிவிட்டு அடுத்ததாக அடுப்பின் “நாப்”களையும் மூட வேண்டும். பயன்பாடு
இல்லாத நேரத்தில் சிலிண்டரின் “நாப்” எப்போதும் மூடிய நிலையிலேயே இருக்க
வேண்டும்.
காலியான சிலிண்டர்களை பாதுகாப்பு மூடியால் மூடி,
காற்றோட்டமான குளுமையான இடத்திலேயே வைத்திருக்க வேண்டும். கியாஸ் டியூப்பை
எதனாலும் மூடாமல் வெளியே தெரியும்படி வைக்க வேண்டும். டியூப்பை விரிசல்
இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்திடுங்கள். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை
ரப்பர் டியூப்பை மாற்ற வேண்டும். சமையல் எரிவாயு சாதனங்களை அவ்வப்போது
பரிசோதித்து சரி செய்து கொள்ள வேண்டும்.
நீங்கள் சுயமாக ரிப்பேர்
செய்வது பாதுகாப்பாற்றது. வினியோகஸ்தர்களின் மெக்கானிக்குகளை
பயன்படுத்துங்கள். கியாஸ் கசிவு ஏற்பட்டால் பதட்டம் அடையாமல் ரெகுலெட்டர்
மற்றும் பர்னர் “நாப்”களை மூட வேண்டும். அந்த அறையில் உள்ள மின்
சுவிட்சுகள், மின் சாதனங்களை இயக்கக்கூடாது வெளிப்புறம் இருக்கும் பிரதான
மின் இணைப்பில் இருந்து மட்டுமே மின் சப்ளையை துண்டிக்க வேண்டும்.
காற்றோட்டத்துக்காக கதவுகள், ஜன்னல்களை திறந்து வைக்கவும் எரியும்
நெருப்பு, எண்ணை விளக்குகள், மெழுகுவர்த்தி போன்றவற்றை அணைத்திட வேண்டும்.
சிலிண்டரை பாதுகாப்பு மூடியால் மூடிவிடுங்கள். உதவிக்கு உங்களின்
வினியோகஸ்தர் அல்லது அவசர சேவை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
காற்றை விட கியாஸ் கனமானதாக இருப்பதால் கசிவு ஏற்படும் நேரத்தில் அது
தரைமட்டத்தை நோக்கி பாயும். கியாஸ் கசிவு ஏற்பட்டிருப்பது கவனத்துக்கு
வந்தால் அவற்றை வெளியேற்ற அத்தனை காற்றோட்ட வசதிகளையும் செய்யவும். கசிவு
ஏற்பட்டால் இந்தியன் ஆயில் நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு (அலுவலக
நேரத்தில்) 044-24339236, 24339246 என்ற டெலிபோனில் புகார் தெரிவிக்கலாம்.
அலுவலக நேரத்திற்கு பின்னர் 9941990909, 9941955111, 9941930303 ஆகிய
செல்போன்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்த ஒரு
மணி நேரத்திற்குள் ஐ.ஓ.சி. மெக்கானிக்குகள் அங்கு வருவார்கள் என்று எண்ணை
நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி : ஐ.ஓ.சி. நிறுவனம்
Re: சமையல் அறையில் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி ?
அவசியமான தகவல்கள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சமையல் அறையில் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி ?
யாருக்கு ?ஆண்களுக்கா ? :.”:ahmad78 wrote:அவசியமான தகவல்கள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ஏர் கண்டிஷன் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
» Credit card மற்றும் debit card ஐ பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
» சமையல் அறையில் பாதுகாப்பு நடவடிக்கை
» கைப்பேசி பயன்படுத்துவது எப்படி?
» முகத்திற்கு கிரீம்களை பயன்படுத்துவது எப்படி?
» Credit card மற்றும் debit card ஐ பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
» சமையல் அறையில் பாதுகாப்பு நடவடிக்கை
» கைப்பேசி பயன்படுத்துவது எப்படி?
» முகத்திற்கு கிரீம்களை பயன்படுத்துவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|