Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்!
2 posters
Page 1 of 1
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்!
ஒருநாள் அரசவைக்கு துறவி ஒருவர் வந்தார்.
அரசன் அவரிடம், “இந்த அளவுக்கு அபிமானமும் நாட்டுப்
பற்றும் உள்ள அதிகாரிகளைப் பெற்ற அரசன் என்னை போல்
வேறுயாரும் இருக்க இயலாது’ என்று பெருமையுடன் கூறினான்.
-
துறவி புன்சிரிப்புடன், “நீ சொல்வதை நான் நம்பவில்லை’
என்றார்.
-
அரசனுக்கு துறவியின்மேல் கோபம் வந்தது. இருந்தாலும் அடக்கிக்
கொண்டு, “நான் சொல்வதில் நம்பிக்கை இல்லாவிட்டால் நீங்களே
அதைச் சோதித்துக் கொள்ளலாம்’ என்றான்.
-
அதெல்லாம் இருக்கட்டும். முதலில் யாகம் நடத்தி விடுகிறேன்
என்ற துறவி, அங்கே இருந்த அதிகாரிகளை நோக்கி, “அரசனின்
ஆயுளும் ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிப்பதற்கு, நான் பெரிய
ஒரு வேள்வி செய்யப்போகிறேன். அதற்குப் பெரிய அண்டா
நிறைய பால் தேவைப்படும். அதனை நீங்கள் எல்லோரும்
சேர்ந்துதான் தர வேண்டும்.
-
எனவே அரண்மனை வாயிலில் பெரிய அண்டா ஒன்று
வைக்கப்படும். அதிகாரிகள் அனைவரும் அவரவர் பங்காக ஒரு
குடம் பாலை இன்று இரவு கொண்டு வந்து ஊற்ற வேண்டும்’
என்று கூறினார்.
-
அரசாங்க அதிகாரிகள் அனைவரும் தங்களின் மனப்பூர்வமான
சம்மதத்தைத் தெரிவித்தனர். அவசியம் பாலை எடுத்து வந்து
ஊற்றுவதாகச் சொல்லி சென்றனர்.
-
துறவி சொன்னபடி பெரிய அண்டா ஒன்று அரண்மனை வாயிலில்
வைக்கப்பட்டது. நேரம் நள்ளிரவை நெருங்கியது. மூடிய குடங்களுடன்
ஒவ்வொருவராக வந்த அதிகாரிகள், மெதுவாக அண்டாவை நெருங்கி,
சட்டென்று குடத்தின் மூடியைத் திறந்து தங்கள் குடங்களில் இருந்ததை
அதற்குள் ஊற்றிவிட்டுப் போனார்கள்.
-
மறுநாள் பொழுது விடிந்தது. அண்டா இருந்த இடத்திற்கு அரசனுடன்
வந்த துறவி, அண்டாவில் என்ன இருக்கிறது என்று மன்னரைப் பார்க்கச்
சொன்னார். எட்டிப் பார்த்த அரசன் அண்டா நிறையத் தண்ணீர்தான்
இருந்தது கண்டு திடுக்கிட்டான்.
-
அதிகாரிகள் ஊற்றிய பால் எப்படித் தண்ணீரானது? அரசன்
அதிகாரிகளை அழைத்து விசாரித்தான். முதலில் தயங்கி,
நடுங்கிய அதிகாரிகள் முடிவில் நடுக்கத்துடன் சொன்னார்கள்.
“மன்னிக்கவேண்டும் மன்னா, அண்டாவில் எல்லோரும்
பாலைத்தான் ஊற்றப் போகிறார்கள். அவ்வளவு பாலில் நான்
ஒருவன் மட்டும் தண்ணீரை ஊற்றினால், அது மற்றவர்களுக்கு
எப்படித் தெரியப்போகிறது? என்று ஒவ்வொருவரும் நினைத்து,
எல்லோரும் தண்ணீரையே ஊற்றியிருக்கிறோம்’.
-
துறவி வைத்த சோதனையே அதுதான் என்பதை உணர்ந்த அரசன்,
அதிகாரிகளே இப்படி இருந்தால் மக்கள் எப்படி இருப்பார்கள்
என்றும் நினைத்தான். புகழ்ச்சி மயக்கத்தில் இருந்து விடுபட்டு,
நாட்டை சீர்செய்தான்.
-
துரதிஷ்டவசமாக நம்மில் பலருக்கும் இதே எண்ணம்தான் இருக்கிறது.
இந்தக் கதையில் வரும் அதிகாரிகள் செய்தது போலவே,
அவரவரும் தமது பங்குக்கு உரிய வேலையைப் போலியாகவே
செய்து வருகிறார்கள். அவர்களது செயலால் பிறரது உரிமை
தடைபடுவதற்கு காரணமாகிறார்கள்.
-
“உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும் போது, நான்
ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச் சலுகை யாருக்குத் தெரியப்
போகிறது?’ என்றுதான் நினைக்கிறார்கள். பணக்காரர்கள் இப்படி
நினைத்துத்தான் பிறர் உரிமையையும் தாங்களே எடுத்துக் கொள்கிறார்கள்.
-
சமுதாய அக்கறையோடு நம் பங்கு வேலையை உண்மையாகச்
செய்தாலே போதும். எல்லோரும் எல்லாமும் பெறமுடியும். சமநிலைச்
சமுதாயமும் உருவாகும்.
–
சுவாமி கமலாத்மானந்தர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24110
மதிப்பீடுகள் : 1186
Re: எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்!
அடுத்தவர்களை பார்க்காமல் அவரவர் அவர்களுடைய வேலையை செய்யவேண்டும்.
நல்ல கருத்து
நல்ல கருத்து
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» இத்தாலிய மரண தண்டனை சட்டத்தின்படி இந்தியா உத்தரவாதம் பெறவேண்டும்: இத்தாலி
» தென்னை மரம் - சிறுவர் பாடல்
» அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
» என் பிரச்னைகள் எல்லாமும் தீர்ந்து விட்டது. – அஞ்சலி
» மீனுக்கா கிளம்பி்ட்டா எல்லாரும் ஓடுங்க.......
» தென்னை மரம் - சிறுவர் பாடல்
» அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
» என் பிரச்னைகள் எல்லாமும் தீர்ந்து விட்டது. – அஞ்சலி
» மீனுக்கா கிளம்பி்ட்டா எல்லாரும் ஓடுங்க.......
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|