Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர் கடலுக்குள் பலி: மூவர் இலங்கை மீனவர்களால் மீட்பு
2 posters
Page 1 of 1
நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர் கடலுக்குள் பலி: மூவர் இலங்கை மீனவர்களால் மீட்பு
நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர் கடலுக்குள் பலி: மூவர் இலங்கை மீனவர்களால்
மீட்பு
நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மூன்று தமிழக மீனவர்கள் இலங்கை
மீனவர்களால் காப்பாற்றப்பட்டு நீர்கொழும்பு கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பிலிருந்து 200 கடல் மைலுக்கு அப்பால் படகு கவிழ்ந்த தத்தளித்துக்
கொண்டிருந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்ட இவர்கள் உடல் நலம் பாதிக் கப்பட்டிருந்ததால்
நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து மேலும் தெரிய
வருவதாவது, குமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமமான இரயுமன்துறையில் இருந்து கடந்த
மாதம் 29ம் திகதி சேவியர் என்பவருக்கு சொந்தமான கட்டுமரத்தில் சேவியர், அமல்ராஜ்,
வறுவேல், ஜோய் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் 4 பேரும் மறுநாள் 30ம் திகதி கரை திரும்ப வேண்டும். ஆனால் அவர்கள் கரைக்கு
திரும்பாததால் கடலில் அவர்களை தேடும் பணி நடந்தது. அடுத்த 3 நாட்களும் கடற்படை
கப்பல், குட்டி விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் மீனவர்கள் தேடப்பட்டனர்.
இவர்களில் 3 பேர் இலங்கை கடற் பகுதியில் நீர் கொழும்பு அருகே இலங்கை மீனவர்களால்
மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. உடனே தமிழக மீனவ அமைப்புகள் மீட்கப்பட்ட மீனவர்கள்
யார்? என விசாரித்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு இலங்கை மீனவர்கள் கரை
திரும்பியதும் அவர்கள் மீட்டு வந்த குமரி மீனவர்களை இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு பலவீனமாக இருந்ததால் உடனடியாக அருகில்
உள்ள வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு உடல்
நலம் தேறியதும் மீனவர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள அவர்களின் உறவினர்களை தொடர்பு
கொண்டு பேசினர்.
அப்போது இரயுமன் துறையில் இருந்து கடலுக்குச் சென்றதில் வறுவேல்
என்ற மீனவரை தவிர சேவியர், ஜோய், அமல்ராஜ் ஆகிய 3 பேரும் உயிரோடு இருப்பது தெரிய
வந்தது.
வறுவேல் நடுக்கடலில் கட்டுமரம் கவிழ்ந்ததில் தலையில் பலத்த அடிபட்டு மயங்கிவிட்டார்.
இதில் கடல் நீரில் மூழ்கி இறந்து போனார். அவரது பிணத்தை 3 நாட்களாக பாதுகாத்து
வந்தோம் இலங்கை மீனவர்களால் நாங்கள் மீட்கப்பட்ட போது பிணத்தை ஏற்ற அவர்கள் மறுத்து
விட்டதால் அதை கடலிலேயே விட்டு வந்தோம் என்றனர்.
அவர்களின் தகவலை அடுத்து இரயுமன் துறையில் இருந்து கடலுக்கு சென்றவர்களில் மீனவர்
வறுவேல் இறந்தது உறுதி ஆனது. இதற்கிடையே இலங்கையில் இருக்கும் குமரி மீனவர்களை 3
பேரையும் உடனடியாக சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டுமென்று தமிழக மீனவ அமைப்புகள்
மத்திய மாநில அரசுகளுக்கு மனு அனுப்பி உள்ளனர்.
மேலும் மீனவர்கள் கடலில்
சூறைக்காற்றில் வழி தவறி சென்றவர்கள் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல்
அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டு மென்றும் கோரியுள்ளனர்.
இதற்காக இலங்கையில் இருக்கும் மீனவர்களின் அடையாள அட்டை, அவர்களின் மீன்பிடி உரிமம்
உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட நிர்வாகம் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி இலங்கை தூதரகம்
வழியாக மீனவர்களை மீட்க வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை
தமிழக மீனவ அமைப்புகளும் மாவட்ட நிர்வாகமும் மீன் வளத்துறை அதிகாரிகளும்
மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே வறுவேல் இறந்து விட்டது உறுதி ஆனதால் அவரது
குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். வறுவேலின் மனைவி ரெசினம்மாள், உடல்
நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
இவர்களுக்கு 3 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.
அவர்கள் அனைவரும் தகவல் அறிந்ததும் வீட்டில் கதறி அழுதபடி உள்ளனர். வறுவேலின் உடலை
மீட்டுத்தர வேண்டுமென்றும் அவரது சடலத்தை யாவது பார்கக் கடவுள் அருள்புரிய
வேண்டுமென்றும் கூறி அவர்கள் அழுது புலம்பியபடி உள்ளனர்.
நன்றி தினகரன்
மீட்பு
நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மூன்று தமிழக மீனவர்கள் இலங்கை
மீனவர்களால் காப்பாற்றப்பட்டு நீர்கொழும்பு கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பிலிருந்து 200 கடல் மைலுக்கு அப்பால் படகு கவிழ்ந்த தத்தளித்துக்
கொண்டிருந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்ட இவர்கள் உடல் நலம் பாதிக் கப்பட்டிருந்ததால்
நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து மேலும் தெரிய
வருவதாவது, குமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமமான இரயுமன்துறையில் இருந்து கடந்த
மாதம் 29ம் திகதி சேவியர் என்பவருக்கு சொந்தமான கட்டுமரத்தில் சேவியர், அமல்ராஜ்,
வறுவேல், ஜோய் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் 4 பேரும் மறுநாள் 30ம் திகதி கரை திரும்ப வேண்டும். ஆனால் அவர்கள் கரைக்கு
திரும்பாததால் கடலில் அவர்களை தேடும் பணி நடந்தது. அடுத்த 3 நாட்களும் கடற்படை
கப்பல், குட்டி விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் மீனவர்கள் தேடப்பட்டனர்.
இவர்களில் 3 பேர் இலங்கை கடற் பகுதியில் நீர் கொழும்பு அருகே இலங்கை மீனவர்களால்
மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. உடனே தமிழக மீனவ அமைப்புகள் மீட்கப்பட்ட மீனவர்கள்
யார்? என விசாரித்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு இலங்கை மீனவர்கள் கரை
திரும்பியதும் அவர்கள் மீட்டு வந்த குமரி மீனவர்களை இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு பலவீனமாக இருந்ததால் உடனடியாக அருகில்
உள்ள வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு உடல்
நலம் தேறியதும் மீனவர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள அவர்களின் உறவினர்களை தொடர்பு
கொண்டு பேசினர்.
அப்போது இரயுமன் துறையில் இருந்து கடலுக்குச் சென்றதில் வறுவேல்
என்ற மீனவரை தவிர சேவியர், ஜோய், அமல்ராஜ் ஆகிய 3 பேரும் உயிரோடு இருப்பது தெரிய
வந்தது.
வறுவேல் நடுக்கடலில் கட்டுமரம் கவிழ்ந்ததில் தலையில் பலத்த அடிபட்டு மயங்கிவிட்டார்.
இதில் கடல் நீரில் மூழ்கி இறந்து போனார். அவரது பிணத்தை 3 நாட்களாக பாதுகாத்து
வந்தோம் இலங்கை மீனவர்களால் நாங்கள் மீட்கப்பட்ட போது பிணத்தை ஏற்ற அவர்கள் மறுத்து
விட்டதால் அதை கடலிலேயே விட்டு வந்தோம் என்றனர்.
அவர்களின் தகவலை அடுத்து இரயுமன் துறையில் இருந்து கடலுக்கு சென்றவர்களில் மீனவர்
வறுவேல் இறந்தது உறுதி ஆனது. இதற்கிடையே இலங்கையில் இருக்கும் குமரி மீனவர்களை 3
பேரையும் உடனடியாக சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டுமென்று தமிழக மீனவ அமைப்புகள்
மத்திய மாநில அரசுகளுக்கு மனு அனுப்பி உள்ளனர்.
மேலும் மீனவர்கள் கடலில்
சூறைக்காற்றில் வழி தவறி சென்றவர்கள் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல்
அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டு மென்றும் கோரியுள்ளனர்.
இதற்காக இலங்கையில் இருக்கும் மீனவர்களின் அடையாள அட்டை, அவர்களின் மீன்பிடி உரிமம்
உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட நிர்வாகம் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி இலங்கை தூதரகம்
வழியாக மீனவர்களை மீட்க வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை
தமிழக மீனவ அமைப்புகளும் மாவட்ட நிர்வாகமும் மீன் வளத்துறை அதிகாரிகளும்
மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே வறுவேல் இறந்து விட்டது உறுதி ஆனதால் அவரது
குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். வறுவேலின் மனைவி ரெசினம்மாள், உடல்
நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
இவர்களுக்கு 3 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.
அவர்கள் அனைவரும் தகவல் அறிந்ததும் வீட்டில் கதறி அழுதபடி உள்ளனர். வறுவேலின் உடலை
மீட்டுத்தர வேண்டுமென்றும் அவரது சடலத்தை யாவது பார்கக் கடவுள் அருள்புரிய
வேண்டுமென்றும் கூறி அவர்கள் அழுது புலம்பியபடி உள்ளனர்.
நன்றி தினகரன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர் கடலுக்குள் பலி: மூவர் இலங்கை மீனவர்களால் மீட்பு
மீனவர்கள் நிலையை எண்ணினால்,
படகோட்டி சினிமா பாடல்தான் நினைவுக்கு வருகிறது...
-
உலகத்தின் தூக்கம் கலையாதோ ஓ..
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ஓ..
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ஓ ..
ஒரு நாள் பொழுதும் புலராதோ ஓ..
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவை கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான்
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தால் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிறை வளார்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான்--
படகோட்டி சினிமா பாடல்தான் நினைவுக்கு வருகிறது...
-
உலகத்தின் தூக்கம் கலையாதோ ஓ..
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ஓ..
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ஓ ..
ஒரு நாள் பொழுதும் புலராதோ ஓ..
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவை கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான்
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தால் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிறை வளார்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான்--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|