சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Khan11

எல்லோரும் வக்கீல் ஆகலாம்!

Go down

எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Empty எல்லோரும் வக்கீல் ஆகலாம்!

Post by Muthumohamed Tue 12 Feb 2013 - 20:10

பணம் இருந்தால் போதும் எல்லோருமே வக்கீல் ஆகலாம் என்ற நிலையாகிப்போச்சு. சிலதனியார் சட்டக் கல்லூரிகளில் இந்தப் பட்டத்தை சிலர் பணம் கொடுத்து வாங்குகிறார்கள். இதில் சிலரது செயல்பாடுகள் தவறாக உள்ளது..’ என்று, தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தின் மதுரை மாவட்ட இணைச்செயலாளர் வக்கீல் முத்துக்குமார் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) புகார் சொல்லி இருந்தார்.

அவரைச் சந்தித்தோம். ''சட்டக் கல்வியின் தரம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, ஏழு வருடங்களுக்கு முன்பு வரை பி.எல். படிப்பை பல்கலைக்கழகங்களில் மட்டுமே வைத்திருந்தது தமிழக அரசு. ப்ளஸ் டூ முடித்தவர்கள் ஐந்து ஆண்டுகளும், டிகிரி முடித் தவர்கள் மூன்று ஆண்டுகளும் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எல். படிக்க வேண்டும். 2003-ல் ஈவினிங் காலேஜையும் எடுத்து விட்டனர்.

அதனால் குறுக்கு வழியில் சட்டம் பயில நினைப்பவர்கள் பலரும் கர்நாடகாவுக்குத் தாவினார்கள். பெங்களூ​ருவில் உள்ள தனியார் சட்டக்கல்லூரிகளில் பெரும்பாலானவை எவ்விதக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாதவை. அகில இந்திய பார் கவுன்சில்தான் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி தரவேண்டும். அந்தப் பார் கவுன்சில் பொறுப்பாளர்களை எப்படியோ குளிப்பாட்டி, பெங்களூருவில் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வாங்கிவிடுகிறார்கள். இப்படி முறைகேடாக அனுமதி வழங்கியதாகச் சொல்லித்தான்அகில இந்திய பார் கவுன்சில்தலைவராக இருந்த தனபால்ராஜை சி.பி.ஐ. கைது செய்தது. ஆனாலும், தில்லுமுல்லு ஆட்டம் குறையவில்லை. இப்போது, பெங்களூருவில் உள்ள சில தனியார் சட்டக் கல்லூரிகளில் படித்தவர்களைகர்நாடக பார் கவுன்சில் வக்கீல்களாக அங்கீகரிப்பதுஇல்லை. ஆனால், தமிழ்நாடு பார் கவுன்சிலில் அந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. 10-ம் வகுப்பு ஃபெயி லானவர்கள் எல்லாம் பெங்களூருவில் சட்டம் படித்து விட்டு, 'நானும் வக்கீல்’னு போர்டு மாட்டிக்கிறாங்க.

பெங்களூருவில் சட்டம் படித்தவர்கள் எல்.எல்.பி. என்றுதான் போடணும். ஆனால், பி.எல்.னு போட்டுக்கிறாங்க. பெங்களூருவில் உள்ள சில தனியார் கல்லூரிகளில் வகுப்புகளுக்கே போக​வேண்டியது இல்லை; பரீட்சைக்குப் போனால் போதும். பேப்பர் சேஸிங் உள்ளிட்ட அனைத்தையும் அவர்களே பார்த்து முடித்து டிகிரியை வாங்கிக் கையில் கொடுத்து விடுகிறார்கள். அத்தனைக்கும் காசு. இப்படி வக்கீலாகி வரு கிறவர்கள் பகட்டாக ஆபீஸ் போட்டுக்கொண்டு கேஸ் பிடிக்கிறார்கள். பெரும்பாலான வழக்குகளை கட்டப்பஞ்சாயத்து பேசியே முடித்து விடுவார்கள். முடியாதபோது தங்களுக்குத் தெரிந்த (முறையாக சட்டம் படித்த) வக்கீல்களை வைத்து கேஸ் நடத்துவார்கள். இப்படி, கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 3,000 பேருக்கு மேல் 'பெங்களூரு’ வக்கீல்களாகி இருக்கிறார்கள். இந்த லிஸ்ட்டில் அரசியல் தாதாக்கள், அதிரடிக்கு அஞ்சாத மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் சட்டப் படிப்பு என்பது போலீஸையும் மற்றவர்களையும்மிரட்டுவதற்கான ஒரு கேடயம்.இந்த அவலத்தைத் தடுக்க வேண்டுமானால், வெளிமாநில தனியார் கல்லூரிகளில் சட்டம் படித்தவர்களின் டிகிரியை தமிழ்நாடு பார் கவுன்சில் அங்கீகரிக்கக் கூடாது. தமிழக அரசும் இந்த விஷயத்தில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்'' என்று ஆதங்கப்பட்டார் முத்துக்குமார்.

இதுகுறித்து, தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வத்திடம் பேசினோம்.''வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்கு எங்களிடம் வருபவர்கள் கொடுக்கும் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவோம். அது தகுதியான சான்றிதழ்தான் என்று அவர்கள் ஒப்புகை அளித்து விட்டால், நாங்கள் அதை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும்; மறுக்க முடியாது. நீங்கள் சொல்வதுபோல், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள சில தனியார் சட்டக் கல்லூரிகளில் குறுக்கு வழிகளில் டிகிரிகளை வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பதும் உண்மைதான். இன்றைக்கு நான் சுப்ரீம் கோர்ட் போயிருந்தேன். அங்கேஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த படிப்புத் தொகுதி சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில், 'சிலர் பெங்களூருல அட்மிஷன் போட்டு, சென்னையிலசுத்திக்கிட்டே வக்கீல் பட்டம் வாங்குறாங்களே, அது மாதிரியான படிப்பா இது?’னு ஜஸ்டிஸ் சதாசிவம் கேட்டார்.போலிகளின் தாக்கம் குறித்து நீதிபதிகளே விமர்சனம் செய்யும் அளவுக்குப் போய்விட்டது. அகில இந்திய பார் கவுன்சில்கூட்டத்தில் நான் பகிரங்கமாகவே கேள்வி எழுப்பியும் உறுதியான நடவடிக்கை இல்லை. '30 வயதுக்கு மேல் சட்டம் படிக்க முடியாது’ என்ற கட்டுப்பாட்டை அகில இந்திய பார் கவுன்சில் இப்போது அறிவித்திருக்கிறது. இது அமல் செய்யப்பட்டாலே, பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்து விடும்'' என்றார்.

சட்டக் கல்வியிலேயே இத்தனை ஊழல்களா?
- குள.சண்முகசுந்தரம்
ஜினியர் விகடன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum