Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள ஊடகங்கள் மூலம் பொய்ப் பிரசாரம்
2 posters
Page 1 of 1
அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள ஊடகங்கள் மூலம் பொய்ப் பிரசாரம்
அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள
ஊடகங்கள் மூலம் பொய்ப் பிரசாரம்
* எனது அரசியல் நற்பெயரை களங்கப்படுத்த சதி
* எனது மகன் சம்பந்தப்பட்ட பாசிக்குடா சம்பவம் தொடர்பில் பொலிஸார் சட்டப்படி
நடவடிக்கை
மர்லின் மரிக்கார்
பாசிக்குடாவில் எனது மகனு டன் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் சட்டம்,
ஒழுங்கின்படி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவர்களது செயற்பாடுகளில் நான் எதுவித
செல்வாக்கும் செலுத்தவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும்,
அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.
நான், ஆளும் ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியின் பொதுச் செய லாளராகவும், சுகாதார
அமைச்சராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் முன்னணி அமைச்சராக
இருந்த போதிலும் இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்பில் கல்குடா பொலிஸ்
நிலையத்தில் சுமார் எட்டு மணித்தியாலயங்கள் காத்திருந்தேன் எனவும் அவர்
குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தின் போது காயமடைந்ததாகக் கூறப்படும் இளைஞரின் தந்தையுடன் நான் தொடர்பு
கொண்டு உரையாடியதோடு அந்த இளைஞரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேரில்
சென்றும் பார்வையிட்டு குண நலன்களை கேட்டறிந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த இளைஞருக்குத் தேவையான சிகிச்சையை உடனுக்குடன் வழங்குவதற்குத் தேவையான
ஆலோசனைகளையும் மட்டு போதனா வைத்தியசாலை மருத்துவ நிபுணர்களுக்கு நான் வழங்கினேன்.
அத்தோடு அவருக்கு மேலதிக சிகிச்சை பெறுவதற்காக கொழும்புக்குச் செல்லத் தேவைப்படும்
பட்சத்தில் விஷேட அம்புலன்ஸ் வண்டியை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.
நான் எனது பிள்ளை என்றாலும், ஏனைய பிள்ளைகள் என்றாலும் எல்லோரையும் ஒரேவிதமாகப்
பார்ப்பவன். ஒரே விதமாகச் சேவையாற்றுபவன். ஏற்றத் தாழ்வு பார்க்கும் பழக்கம்
என்னிடமில்லை. பாசிக்குடா சம்பவத்தில் காயமடைந்ததாகக் கூறப்படும் இளைஞரிடம் மிக
அந்நியோன்யமாக நெருங்கிக் குணநலன் களை நான் விசாரித்தேன். அம்சமயம் அவ்விளைஞர்,
அங்கிள் எனக்கு எவருடனும் கோபமில்லை என்று கூறினார் எனவும் அவர் சொன்னார்.
இவ்வாறான நிலையில் இச்சம்பவத் தைப் பயன்படுத்தி சில ஊடகங்கள் மூலம் பொய்ப்
பிரசாரங்களை மேற்கொண்டு அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத் துவதற்கு சூழ்ச்சிகள்
செய்யப்படு வதாகவும் அவர் கூறினார்.
நான் உயிராபத்து அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளேன். என்றாலும் இன்று போல்
என்றும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத் துவத்தையும்
அரசாங்கத்தையும் பாதுகாப்பதற்கு தொடர்ந்தும் அர்ப்ப ணிப்புடன் செயற்படுவேன் எனவும்
அவர் குறப்பிட்டுக் கூறினார்.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ வாசஸ் தலத்தில் நேற்று
நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், சுகாதார அமைச்சர்
என்ற வகையில் மக்களுக்கு நன்மை பயக்கும் பல வேலைத் திட்டங்களை மேற்கொண்டுள்ளேன்.
குறிப்பாக மருந்துப் பொருள் கொள்கை, ஊழல், மோசடிகளை ஒழிக்கும் நடவடிக் கைகள்,
மருத்துப் பொருட்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்யவென டென்டர் முறை சீரமைப்பு,
சிகரட் பெட்டிகளில் அதனைப் பாவிப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை சித்தரிக்கும்
படங்களை பிரசுரித்தல் என்பன அவற்றில் சுட்டிக்காட்டத்தக்கவை.
‘அடுத்த பிரதமர் எனது தந்தை தான்’ என்று எனது மகன் இச்சம்பவத்தின் போது
குறிப்பிட்டிருப்பதாக சில ஊடகங்கள் பொய் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதனூடாக எனது
அரசியல் நற்பெயரைக் களங்கப்படுத்த முயற்சி செய்யப்பட்டி ருக்கின்றது. இந்த
நடவடிக்கையின் ஊடாக ஸ்ரீல. சு. கட்சியின் பொதுச் செயலாளரும், அரசாங்கத்தின் முன்னணி
அமைச்சரும், ஜனாதிபதியுடன் மிக நெருக்கமாக செயற்படுபவருமான என்னையும்,
அரசாங்கத்தையும் விரும்பத் தகாதவர்களாக சித்தரித்துக் காட்டி ஜனாதிபதி தலைமையிலான
அரசாங் கத்தைக் கவிழ்த்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வர சிலர்
எதிர்பார்க்கின்றனர். இது மிக மோசமான செயல். நாட்டின் மீது அன்பு, நேசம் கொண்ட
வர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கத் தையே பாதுகாக்க
வேண்டும் என்றார்.
ஊடகங்கள் மூலம் பொய்ப் பிரசாரம்
* எனது அரசியல் நற்பெயரை களங்கப்படுத்த சதி
* எனது மகன் சம்பந்தப்பட்ட பாசிக்குடா சம்பவம் தொடர்பில் பொலிஸார் சட்டப்படி
நடவடிக்கை
மர்லின் மரிக்கார்
பாசிக்குடாவில் எனது மகனு டன் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் சட்டம்,
ஒழுங்கின்படி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவர்களது செயற்பாடுகளில் நான் எதுவித
செல்வாக்கும் செலுத்தவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும்,
அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.
நான், ஆளும் ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியின் பொதுச் செய லாளராகவும், சுகாதார
அமைச்சராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் முன்னணி அமைச்சராக
இருந்த போதிலும் இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்பில் கல்குடா பொலிஸ்
நிலையத்தில் சுமார் எட்டு மணித்தியாலயங்கள் காத்திருந்தேன் எனவும் அவர்
குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தின் போது காயமடைந்ததாகக் கூறப்படும் இளைஞரின் தந்தையுடன் நான் தொடர்பு
கொண்டு உரையாடியதோடு அந்த இளைஞரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேரில்
சென்றும் பார்வையிட்டு குண நலன்களை கேட்டறிந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த இளைஞருக்குத் தேவையான சிகிச்சையை உடனுக்குடன் வழங்குவதற்குத் தேவையான
ஆலோசனைகளையும் மட்டு போதனா வைத்தியசாலை மருத்துவ நிபுணர்களுக்கு நான் வழங்கினேன்.
அத்தோடு அவருக்கு மேலதிக சிகிச்சை பெறுவதற்காக கொழும்புக்குச் செல்லத் தேவைப்படும்
பட்சத்தில் விஷேட அம்புலன்ஸ் வண்டியை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.
நான் எனது பிள்ளை என்றாலும், ஏனைய பிள்ளைகள் என்றாலும் எல்லோரையும் ஒரேவிதமாகப்
பார்ப்பவன். ஒரே விதமாகச் சேவையாற்றுபவன். ஏற்றத் தாழ்வு பார்க்கும் பழக்கம்
என்னிடமில்லை. பாசிக்குடா சம்பவத்தில் காயமடைந்ததாகக் கூறப்படும் இளைஞரிடம் மிக
அந்நியோன்யமாக நெருங்கிக் குணநலன் களை நான் விசாரித்தேன். அம்சமயம் அவ்விளைஞர்,
அங்கிள் எனக்கு எவருடனும் கோபமில்லை என்று கூறினார் எனவும் அவர் சொன்னார்.
இவ்வாறான நிலையில் இச்சம்பவத் தைப் பயன்படுத்தி சில ஊடகங்கள் மூலம் பொய்ப்
பிரசாரங்களை மேற்கொண்டு அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத் துவதற்கு சூழ்ச்சிகள்
செய்யப்படு வதாகவும் அவர் கூறினார்.
நான் உயிராபத்து அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளேன். என்றாலும் இன்று போல்
என்றும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத் துவத்தையும்
அரசாங்கத்தையும் பாதுகாப்பதற்கு தொடர்ந்தும் அர்ப்ப ணிப்புடன் செயற்படுவேன் எனவும்
அவர் குறப்பிட்டுக் கூறினார்.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ வாசஸ் தலத்தில் நேற்று
நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், சுகாதார அமைச்சர்
என்ற வகையில் மக்களுக்கு நன்மை பயக்கும் பல வேலைத் திட்டங்களை மேற்கொண்டுள்ளேன்.
குறிப்பாக மருந்துப் பொருள் கொள்கை, ஊழல், மோசடிகளை ஒழிக்கும் நடவடிக் கைகள்,
மருத்துப் பொருட்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்யவென டென்டர் முறை சீரமைப்பு,
சிகரட் பெட்டிகளில் அதனைப் பாவிப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை சித்தரிக்கும்
படங்களை பிரசுரித்தல் என்பன அவற்றில் சுட்டிக்காட்டத்தக்கவை.
‘அடுத்த பிரதமர் எனது தந்தை தான்’ என்று எனது மகன் இச்சம்பவத்தின் போது
குறிப்பிட்டிருப்பதாக சில ஊடகங்கள் பொய் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதனூடாக எனது
அரசியல் நற்பெயரைக் களங்கப்படுத்த முயற்சி செய்யப்பட்டி ருக்கின்றது. இந்த
நடவடிக்கையின் ஊடாக ஸ்ரீல. சு. கட்சியின் பொதுச் செயலாளரும், அரசாங்கத்தின் முன்னணி
அமைச்சரும், ஜனாதிபதியுடன் மிக நெருக்கமாக செயற்படுபவருமான என்னையும்,
அரசாங்கத்தையும் விரும்பத் தகாதவர்களாக சித்தரித்துக் காட்டி ஜனாதிபதி தலைமையிலான
அரசாங் கத்தைக் கவிழ்த்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வர சிலர்
எதிர்பார்க்கின்றனர். இது மிக மோசமான செயல். நாட்டின் மீது அன்பு, நேசம் கொண்ட
வர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கத் தையே பாதுகாக்க
வேண்டும் என்றார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தி.மு.க சார்பில் தேனியில் பிரமாண்ட மனித சங்கிலி: கேரளாவில் இடைத் தேர்தலுக்காக பொய்ப் பிரசாரம்
» அருந்ததி ராய்க்கு எதிராக விஷத்தை கக்கும் ஊடகங்கள்
» பலவீனமான சமூகத்தை பாதுகாக்க முடியாத அரசாங்கத்தை பலமானதெனக் கூறமுடியாது: ஹக்கீம்
» உங்க உடலில் இருக்கும் அளவில்லாத நச்சுக்களை வெளியே தள்ள - டிப்ஸ்
» ஊடகங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்த முடிகிறது - கருணாநிதி கவலை
» அருந்ததி ராய்க்கு எதிராக விஷத்தை கக்கும் ஊடகங்கள்
» பலவீனமான சமூகத்தை பாதுகாக்க முடியாத அரசாங்கத்தை பலமானதெனக் கூறமுடியாது: ஹக்கீம்
» உங்க உடலில் இருக்கும் அளவில்லாத நச்சுக்களை வெளியே தள்ள - டிப்ஸ்
» ஊடகங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்த முடிகிறது - கருணாநிதி கவலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|