சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

பிரசவம் Khan11

பிரசவம்

3 posters

Go down

பிரசவம் Empty பிரசவம்

Post by *சம்ஸ் Thu 14 Mar 2013 - 8:18

பிரசவம் Dbd6748d-4a9e-4529-b759-547ef7a72271_S_secvpf
`இந்த நாளில் பிரசவம் நடைபெறும்' என்று டாக்டர்கள் சொல்லியிருந்தாலும், `இதோ இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்துவிடும்' என்பதை எவ்வளவு அனுபவப்பட்ட டாக்டராலும் மிகத்துல்லியமாக சொல்ல முடியாது.

கடைசி மாதவிலக்கு தேதியை மனதில் கொண்டு, தோராயமாகவே பிரசவதேதி கணிக்கப்படுகிறது.ஆனாலும், பிரசவத்துக்கான அறிகுறியாக, இயற்கையே `பிரசவ வலி, ஷோ, பனிக்குடம் உடைவது' ஆகிய மூன்று சமிக்ஞைகளை எழுப்புகிறது.

பிரசவ வலி..... ஹார்மோன் சுரப்பு விகித மாறுபாடு காரணமாக வருவது. இது மாதவிலக்கு நேரத்தில் வருவதுபோல் இருக்கும். அதாவது இடுப்பின் மேலிருந்து கீழாக, வலி எடுக்க ஆரம்பிக்கும். இவை தொடர்ச்சியாக அல்லாமல், இடையிடையே விட்டுவிட்டு வலிக்கும்.

பிரசவவலி என்றால் பொதுவாக `பத்து நிமிடம், இருபதுநிமிடம்' என்று விட்டு விட்டு தான் வரும். அப்படி வருவதுதான் தாய்க்கும் நல்லது. குழந்தைக்கும் நல்லது. வலி வராத அந்த இடைப்பட்ட நேரத்தில்கூட, வயிற்றிலிருக்கும் குழந்தைக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வலி ஏற்பட்டவுடனே, இந்த ரத்த ஓட்டம் தடைபட்டு விடுகிறது.

கருப்பையில் குழந்தை முழு வளர்ச்சி அடைந்து தலை நன்றாக இறங்கியதும் ஹார்மோன் சுரப்பு அளவு மாறுபடும். அப்போது உடனே வலி ஏற்பட்டு, பிறகு கருப்பையின் கழுத்து மெல்ல-மெல்ல விரிவடையும். அடுத்தபடியாக கருப்பையின் தசைகள் சுருங்கி விரிந்து தலை, நெஞ்சு என்று கொஞ்சம்-கொஞ்சமாக குழந்தை வெளியே தள்ளப்படும். அவ்வளவுதான்.

கருப்பை அளவுக்கு சுருங்கி விரியும் தன்மை உடலில் வேறு எந்த பாகத்திற்கும் இல்லை.

ஷோ.... சளி கலந்த ரத்தம் பிறப்புறுப்பின் வழியாக வெளியேறுவது. கருப்பையின் கழுத்துப் பகுதி திறக்க ஆரம்பித்ததும், அங்கே இந்த திரவம் சுரக்கும்.

பனிக்குடம்...... கருவிலிருக்கும் குழந்தை, கருப்பை வழியாக இறங்க தொடங்கியதுமே, குழந்தையை சுற்றியிருக்கும் பனிக்குடத்தின் ஒரு பகுதியும் இறங்கும். ஒருவேளை அந்த பலூன் உடைந்துவிட்டால், உள்ளே இருக்கும் நீர், பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதை புரிந்துகொள்ளாமல், `எனக்கு அதிகப்படியாக சிறுநீர் வெளியேறுகிறது' என்று பெண்கள் தவறாக நினைக்கிறார்கள்.

வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பனிக்குடம் உடைந்ததுமே, உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் மொத்த பனிக்குடநீரும் வழிந்து, பிரசவத்தை சிக்கலாக்கி விடும். பனிக்குட நீர், இளநீர் மாதிரி இருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும்.

மாறாக மஞ்சள்-பழுப்பு வண்ணத்தில் இருந்தால், `உள்ளே குழந்தை மலம் கழித்திருக்கிறது' என்று அர்த்தம்! அப்படியிருந்தால் இன்னும் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கர்ப்ப காலம் முடிந்து, பேறுகாலம் வந்துவிட்டது என்றால், முதலில் வலி அரை மணி நேரத்துக்கு ஒரு முறைதான் வரும்.

பின்னர் அது அதிகரிக்கும். வலி என்றாலுமே, 45 நொடி மட்டுமே வலி இருக்கும். பிறகு சிறிது இடைவெளி விட்டுத்தான் அடுத்த வலி வரும். இரு வலிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில், மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளியே விட்டு ரிலாக்ஸ் செய்தால், கர்ப்பப்பை வாய் சுலபமாக திறந்து, பிரசவம் எளிதாக-சுகமாக நடைபெற உதவும்.

பிரசவ வலி ஆரம்பித்ததும் கருப்பையின் வாய் திறந்து குழந்தை வெளியே வர குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் ஆகும். அந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குள் கருப்பையின் வாய் திறக்கவில்லை என்றால், வலியை அதிகப்படுத்த ஆக்ஸிடோஸின் டிரிப் தரப்படும். அப்புறமும் வலி அதிகமாகவில்லை என்றால், டாக்டரே பனிக்குடத்தை உடைத்துவிட்டு பிரசவம் பார்ப்பார்.

கருப்பை வாய் திறந்து குழந்தையின் தலை தெரிந்தவுடன் குழந்தையை பத்திரமாக வெளியே கொண்டு வரும் வேலைகள் ஆரம்பமாகும். அந்த நேரத்தில், குழந்தை வெளியே வர இயலாத அளவுக்கு பெண்ணுறுப்பில் சிக்கல் இருப்பின், வஜினாவை லேசாகக் கத்தரித்து துளை விரிவாக்கப்படும்.

இதற்கு மகப்பேறு மருத்துவத்தில் `எபிசியோட்டமி' என்று பெயர். பெரும்பாலும் முதல் குழந்தை பெறும் பெண்களுக்குதான், இப்படி செய்வார்கள். குழந்தையின் தலை தெரிய ஆரம்பித்த அரைமணி நேரத்துக்குள் குழந்தை பிறந்துவிட வேண்டும்.

கர்ப்பிணி எந்த அளவுக்கு முக்கி முக்கிக் குழந்தையை வெளித்தள்ள முயற்சிக்கிறாரோ அந்த அளவுக்கு குழந்தை சீக்கிரமாகவும் சுலபமாகவும் வெளியே வரும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிரசவம் Empty Re: பிரசவம்

Post by விஜய் Thu 14 Mar 2013 - 12:28

பிரசவம் 517195 பிரசவம் 517195
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

பிரசவம் Empty Re: பிரசவம்

Post by *சம்ஸ் Thu 14 Mar 2013 - 16:25

விஜய் wrote:பிரசவம் 517195 பிரசவம் 517195
நன்றி உங்களின் மறுமொழிக்கு :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிரசவம் Empty Re: பிரசவம்

Post by ansar hayath Thu 14 Mar 2013 - 17:17

பிரசவம் தகவல் பகிர்வு நன்று ... :!+: :!+: :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பிரசவம் Empty Re: பிரசவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum