Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
செல்பேசி ஆபத்து.
4 posters
Page 1 of 1
செல்பேசி ஆபத்து.
இன்று பட்டிதொட்டி கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மனிதனுக்கு உடை எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு செல்போனும் அத்தியாவசியமாகிவிட்டது.
சிலர் செல்போன் இல்லையென்றால் தூங்க மாட்டார்கள். எதையோ இழந்தது போல் தவிப்பார்கள். முன்பு அவசர தேவைகளுக்கு மட்டும் பேசக் கண்டறிந்த செல்போன் இன்று ஸ்டைலாகவும், அடிமைப்படுத்தும் அளவிற்கும் மாறிவிட்டது.
உலக மக்கள் தொகையில் 80 சதவிகிதம் பேர் செல்போன் பயன்படுத்துகிறார்கள். இந்த ஆண்டு 5 மில்லியன் மக்கள் அகண்ட அலைவரிசை (Broad band) யின் மூலம் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் வளர்ச்சி ஒருபுறம் விரிந்து கொண்டே போவது நல்ல செய்திதான். உலகத்தை உள்ளங் கைகளுக்குள் கொண்டு வந்தது இந்த செல்போன்கள் தான்.
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் செயல் உண்டு என்ற நியூட்டனின் விதிக்கு ஏற்றார்போல், இங்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் செல்போன், பல தீய செயல்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப, அளவுக்கு அதிகமாக செல்போன் பேசுவதும், அதைப் பயன்படுத்தும் முறைகளாலும் மனித உடலுக்கு பலவகைகளில் பாதிப்பு உண்டாகும் என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
செல்போனில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிரியக்கம் (Electro Magnetic radiation (EMR)) உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அந்த மருத்துவ விஞ்ஞானிகளின் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.
2 நிமிடம்….
செல்போன் 2 நிமிடம் பேசினால் அதனால் உண்டான மின் காந்த அதிர்வு மூளைக்குச் சென்று அரைமணி நேரம் வரை தங்கியிருந்து அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்கின்றனர். மேலும் செல்போனால் உண்டாகும் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள பல ஆலோசனைகளையும் தெரிவிக்கின்றனர்.
செல்போன் பேசும்போது…
செல்போனை தலையிலிருந்து 2 முதல் 7 அங்குலம் வரை தள்ளி வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை பெரிய ஒலிப்பானை பயன்படுத்தி (loud speaker) பேசுவது நல்லது. இதனால் மின்காந்த கதிரியக்கத்தின் பாதிப்பு மூளைக்குச் செல்வதை தடுக்கலாம்.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: செல்பேசி ஆபத்து.
தூங்கும்போது…
நாம் தூங்கும்போது செல்போனை எங்கு வைக்கிறோம். தலையணைக்கு அடியிலா அல்லது தலைமாட்டிலா.. செல்போனில் இருந்து வெளிப்படும் மின்னதிர்வுகளின் தூரம் குறைவதால் நம் மூளையை தாக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதனால், தூங்கும்போது, தலைமாட்டில் செல்போனை வைத்து தூங்குவதை தவிருங்கள். அல்லது அணைத்துவிடுங்கள், அல்லது 6 மீட்டர் தூரம் தள்ளி வையுங்கள்.
சட்டைப்பையில்…
//
செல்போனை சட்டைப்பையில் வைக்கும் போது, அது இதயத்தின் மிக அருகில் இருக்கிறது. நம்முடைய இதய இயக்கம் மின்காந்த அதிர்வுகளால் மாற்றம் அடையக்கூடியது. எனவே, செல்போன் ஒலிக்கும்போது, அதிலிருந்து வரும் மின்காந்த அதிர்வுகள் நேரடியாக இதயத்தை பாதிக்கிறது.
கீ பேட் வெளிப்பக்கம் இருக்கும்படி வைக்க வேண்டும். அல்லது அணைத்துவிட்டு சட்டைப் பையில் வைக்க வேண்டும். இதயத்துடிப்பு குறைபாடு உள்ளவர்கள் சட்டைப்பையில் வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
கால்சட்டை பையில்…
அதுபோல் கால்சட்டைப் பையில் வைத்தால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவும், பெண்களுக்கு மலட்டுத்தன்மையும் ஏற்படும்.
கருவுற்ற பெண்கள்…
கருவுற்ற பெண்கள் செல்போன் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்கின்றனர். செல்போனிலிருந்து வெளிவரும் மின்காந்த கதிரியக்கம் கருவில் உள்ள குழந்தையை பெருமளவில் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் காதுகேளாமை, வாய் பேச முடியாமல் போவது, உடல் வளர்ச்சி மனவளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பயணங்களின் போது…
விமானம், இரயில், பேருந்து பயணங்கள் மற்றும், பெட்ரோல் பாங்கு இருக்கும் இடங்களில் செல்போன் உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும். ஏனெனில் மெட்டல் அதிகம் உள்ள பகுதிகளில் மின்காந்த கதிரியக்க சக்தி அதிகமாகும்.
செல்போனில் பேசுவதற்கு ஹெட்போனை உபயோகிக்கும்போது, மின்காந்த கதிரியக்கம், நேரடியாக காதுகளையும் மூளையையும் தாக்குகிறது.
குழந்தைகள் மற்றும்சிறுவர்கள்…
15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் செல்போன் அதிகம் பயன்படுத்தினால், மூளையில் கட்டி ஏற்படும் அபாயம் உள்ளது. இது மரணத்திலும் கொண்டு போய் விடலாம்.
இளங் குழந்தைகளுக்கு அருகில் செல்போன் பேசுவதோ, வைப்பதோ கூடாது. இதிலிருந்து வெளிப்படும் மின்காந்த கதிரியக்கம் குழந்தைகளின் மென்மையான தசைக்குள் எளிதில் ஊடுருவி உட்சென்று பாதிப்பை ஏற்படுத்தும். புற்று நோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க செல்போன் அதிகம் பயன்படுத்துவதை தவிருங்கள்.
பொழுதுபோக்கிற்காக பேசுவதைத் தவிர்த்து தேவைக்கு மட்டும் பேசுங்கள். பாதிப்பும் இல்லை. பணவிரயமும் இல்லை.
நாம் தூங்கும்போது செல்போனை எங்கு வைக்கிறோம். தலையணைக்கு அடியிலா அல்லது தலைமாட்டிலா.. செல்போனில் இருந்து வெளிப்படும் மின்னதிர்வுகளின் தூரம் குறைவதால் நம் மூளையை தாக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதனால், தூங்கும்போது, தலைமாட்டில் செல்போனை வைத்து தூங்குவதை தவிருங்கள். அல்லது அணைத்துவிடுங்கள், அல்லது 6 மீட்டர் தூரம் தள்ளி வையுங்கள்.
சட்டைப்பையில்…
//
செல்போனை சட்டைப்பையில் வைக்கும் போது, அது இதயத்தின் மிக அருகில் இருக்கிறது. நம்முடைய இதய இயக்கம் மின்காந்த அதிர்வுகளால் மாற்றம் அடையக்கூடியது. எனவே, செல்போன் ஒலிக்கும்போது, அதிலிருந்து வரும் மின்காந்த அதிர்வுகள் நேரடியாக இதயத்தை பாதிக்கிறது.
கீ பேட் வெளிப்பக்கம் இருக்கும்படி வைக்க வேண்டும். அல்லது அணைத்துவிட்டு சட்டைப் பையில் வைக்க வேண்டும். இதயத்துடிப்பு குறைபாடு உள்ளவர்கள் சட்டைப்பையில் வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
கால்சட்டை பையில்…
அதுபோல் கால்சட்டைப் பையில் வைத்தால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவும், பெண்களுக்கு மலட்டுத்தன்மையும் ஏற்படும்.
கருவுற்ற பெண்கள்…
கருவுற்ற பெண்கள் செல்போன் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்கின்றனர். செல்போனிலிருந்து வெளிவரும் மின்காந்த கதிரியக்கம் கருவில் உள்ள குழந்தையை பெருமளவில் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் காதுகேளாமை, வாய் பேச முடியாமல் போவது, உடல் வளர்ச்சி மனவளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பயணங்களின் போது…
விமானம், இரயில், பேருந்து பயணங்கள் மற்றும், பெட்ரோல் பாங்கு இருக்கும் இடங்களில் செல்போன் உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும். ஏனெனில் மெட்டல் அதிகம் உள்ள பகுதிகளில் மின்காந்த கதிரியக்க சக்தி அதிகமாகும்.
செல்போனில் பேசுவதற்கு ஹெட்போனை உபயோகிக்கும்போது, மின்காந்த கதிரியக்கம், நேரடியாக காதுகளையும் மூளையையும் தாக்குகிறது.
குழந்தைகள் மற்றும்சிறுவர்கள்…
15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் செல்போன் அதிகம் பயன்படுத்தினால், மூளையில் கட்டி ஏற்படும் அபாயம் உள்ளது. இது மரணத்திலும் கொண்டு போய் விடலாம்.
இளங் குழந்தைகளுக்கு அருகில் செல்போன் பேசுவதோ, வைப்பதோ கூடாது. இதிலிருந்து வெளிப்படும் மின்காந்த கதிரியக்கம் குழந்தைகளின் மென்மையான தசைக்குள் எளிதில் ஊடுருவி உட்சென்று பாதிப்பை ஏற்படுத்தும். புற்று நோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க செல்போன் அதிகம் பயன்படுத்துவதை தவிருங்கள்.
பொழுதுபோக்கிற்காக பேசுவதைத் தவிர்த்து தேவைக்கு மட்டும் பேசுங்கள். பாதிப்பும் இல்லை. பணவிரயமும் இல்லை.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: செல்பேசி ஆபத்து.
வேறு வழியே இல்லையா உமாக்கா :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|