சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சீனா: கழிவறை குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தாத்தா - பாட்டியிடம் ஒப்படைப்பு Khan11

சீனா: கழிவறை குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தாத்தா - பாட்டியிடம் ஒப்படைப்பு

4 posters

Go down

சீனா: கழிவறை குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தாத்தா - பாட்டியிடம் ஒப்படைப்பு Empty சீனா: கழிவறை குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தாத்தா - பாட்டியிடம் ஒப்படைப்பு

Post by *சம்ஸ் Sat 1 Jun 2013 - 7:01

சீனா: கழிவறை குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தாத்தா - பாட்டியிடம் ஒப்படைப்பு A42e7097-59e7-4e65-80a1-5e99662582e8_S_secvpf
பீஜிங், ஜுன் 1-

சீனாவில் தகாத உறவின் மூலம் பிறக்கும் குழந்தை மற்றும் பெண் குழந்தைகளை பெற்ற தாயே நிராகரித்து கைவிடும் மனப்பாங்கு பெருகி வருகிறது.

இவ்வகையில், வேண்டாத குழந்தைகளாக கருதப்படும் சிசுக்களை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிவதும், சாக்கடைகளில் வீசிக் கொல்வதும் வாடிக்கையாகி விட்டது.

சீன அரசின் 'குடும்பத்திற்கு 2 குழந்தைகள் போதும்' என்ற கட்டுப்பாடும் சிசுக் கொலைகளுக்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

அவ்வகையில், ஜின்ஹுவா மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியின் கழிவறை குழாயில் சிக்கியிருந்த ஆண் சிசுவை மீட்புப்படையினர் நேற்று காப்பாற்றியுள்ளனர்.

கழிவறை குழாயின் காற்று போக்கி வழியாக நேற்றிரவு குழந்தையின் அழுகுரல் சத்தத்தை கேட்ட சிலர் உடனடியாக போலீசாருக்கும் மீட்புப்படையினருக்கும் தகவல் அளித்தனர்.

கழிவுநீர் பிளாஸ்டிக் பைப்பை அப்படியே வெட்டி எடுத்த மீட்புப்படையினர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.

அங்கு பைப்பை 'ஸ்கேன்' செய்து பார்த்த டாக்டர்கள் குழந்தையின் இருப்பிடத்தை கண்டுபிடித்து சாதுர்யமான முறையில் குழாயை வெட்டி எடுத்து குழந்தையை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

பிறந்து சற்று நேரமே ஆன அந்த சிசு, கழிவறையிலேயே பிறந்திருக்கலாம். அல்லது, பிறந்த சிசுவை கழிவறை பீங்கானுக்குள் திணித்து பெற்ற தாயே கொல்ல முயற்சித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

தீவிர சிகிச்சைக்கு பிறகு லூயிஸ்வில்லி ஆஸ்பத்திரியில் வைத்து பராமரிக்கப்படும் அந்த ஆண் குழந்தைக்கு 'பேபி நம்பர் - 59' என பெயரிடப்பட்டுள்ளது.

குழந்தை வைக்கப்பட்டுள்ள இன்குபேட்டர் எண்: 59 என்பதால், இன்குபேட்டரின் அடையாளமே குழந்தையின் தற்காலிய பெயராக உள்ளது.

கழிவறை பைப்பில் உயிருக்கு போராடிய பச்சிளம் தளிர் மீட்கப்பட்ட செய்தி உலகெங்கும் உள்ள ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் உலாவரும் வேளையில், குழந்தையின் தாயை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டனர்.

முதல் கட்டமாக, இச்சம்பவம் பற்றி தகவல் தந்த பெண்ணிடம் இருந்து விசாரணையை தொடங்க விரும்பிய போலீசார், அவரை விசாரித்த போது முன்னுக்கு பின்னாக தகவல்களை அந்த பெண் கூறினார்.

அவர் மீது சந்தேகப்பட்டு வீட்டை சோதனையிட்ட போது சில பொம்மைகளும் ரத்தக்கறை படிந்த 'டாய்லட் பேப்பர்'களும் சிதறிக் கிடந்தன.

உறவினர்களின் துணை ஏதுமின்றி அந்த வீட்டில் தனியாக வசித்த அந்த 22 வயது பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உனக்கும் குழந்தைக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய நேரிடும் என்று மிரட்டி 'உரிய' முறையில் விசாரித்த போது, பொதுமக்கள் எதிர்பாராத - போலீசார் எதிர்பார்த்த உண்மை வெளிப்பட்டது.

காதலனுடனான நெருக்கத்தால் கருத்தரித்த அந்த பெண், கருக்கலைப்பை பற்றி ஆலோசிப்பதிலேயே மாதங்களை கடத்தி வந்துள்ளார்.

'சரி... கலைத்து விடலாம்' என்று முடிவெடுத்த போது காலம் கடந்து விட்டிருந்தது. கரு முழுமையாக உரு பெற்றிருந்தது.

இனி கருக்கலைப்பு சாத்தியமில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்த அவர், சாத்திய கதவு வீட்டுக்குள்ளேயே பத்து மாதங்களை கழித்துள்ளார்.

பிரசவ வலி ஏற்பட்டதும் கழிவறைக்குள் சென்று தனக்குத்தானே பிரசவம் பார்த்த அவருக்கு கடந்த சனிக்கிழமை பிற்பகலில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அதன் பின்னர், அந்த குழந்தை கழிவறை பீங்கானில் வழுக்கி விழுந்து சிக்கிக் கொண்டதாகவும், காப்பாற்ற முயன்றும் பலனின்றி கழிவறை குழாய் 'எல்' வளைவில் சிக்கிக் கொண்டதால் தீயணைப்பு படைக்கு வெளிநபர் போல் புகார் அளித்ததாகவும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அந்த பெண் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த சீன மூதாட்டி ஒருவர் 'கழிவறை கால்வாயின் அசுத்தத்தை விட இந்த சிசுவை கொல்லத் துணிந்த தாயின் மனம் மிகவும் அசுத்தம் நிறைந்ததாக இருந்திருக்கும்' என்று வேதனையுடன் கூறியிருந்தார்.

அவரது மன அழகை பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் யாருக்கும் இல்லை என்ற போதிலும் முக அமைப்பையாவது தெரிந்துக் கொள்ளலாம் என முயன்ற போதிலும் அந்த கன்னித்தாயின் புகைப்படத்தை வெளியிட சீன போலீசார் மறுத்து விட்டனர்.

தற்போது அந்த குழந்தையின் தாயார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தீவிர சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறிய குழந்தையை தாய்வழி தாத்தா - பாட்டி ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சீனா: கழிவறை குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தாத்தா - பாட்டியிடம் ஒப்படைப்பு Empty Re: சீனா: கழிவறை குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தாத்தா - பாட்டியிடம் ஒப்படைப்பு

Post by பானுஷபானா Sat 1 Jun 2013 - 11:43

`#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சீனா: கழிவறை குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தாத்தா - பாட்டியிடம் ஒப்படைப்பு Empty Re: சீனா: கழிவறை குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தாத்தா - பாட்டியிடம் ஒப்படைப்பு

Post by gud boy Sat 1 Jun 2013 - 12:14

சீன அரசின் 'குடும்பத்திற்கு 2 குழந்தைகள் போதும்' என்ற கட்டுப்பாடும் சிசுக் கொலைகளுக்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

குழந்தை பெறுவது நம்ம கையிலாங்க இருக்கு..

சிலருக்கு திட்டமிடல்,சிலருக்கு விபத்து. இதுக்கெல்லாம் rules போட்டா எப்டிங்க..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

சீனா: கழிவறை குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தாத்தா - பாட்டியிடம் ஒப்படைப்பு Empty Re: சீனா: கழிவறை குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தாத்தா - பாட்டியிடம் ஒப்படைப்பு

Post by பானுஷபானா Sat 1 Jun 2013 - 12:55

kiwi boy wrote:சீன அரசின் 'குடும்பத்திற்கு 2 குழந்தைகள் போதும்' என்ற கட்டுப்பாடும் சிசுக் கொலைகளுக்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

குழந்தை பெறுவது நம்ம கையிலாங்க இருக்கு..

சிலருக்கு திட்டமிடல்,சிலருக்கு விபத்து. இதுக்கெல்லாம் rules போட்டா எப்டிங்க..

அப்படி ரூல்ஸ் போட்டதால தான் இந்த அசம்பாவிதம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சீனா: கழிவறை குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தாத்தா - பாட்டியிடம் ஒப்படைப்பு Empty Re: சீனா: கழிவறை குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தாத்தா - பாட்டியிடம் ஒப்படைப்பு

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 19:04

kiwi boy wrote:சீன அரசின் 'குடும்பத்திற்கு 2 குழந்தைகள் போதும்' என்ற கட்டுப்பாடும் சிசுக் கொலைகளுக்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

குழந்தை பெறுவது நம்ம கையிலாங்க இருக்கு..

சிலருக்கு திட்டமிடல்,சிலருக்கு விபத்து. இதுக்கெல்லாம் rules போட்டா எப்டிங்க..


மக்கள் தொகையை பிறகு எப்படி கட்டுப்படுத்த முடியும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சீனா: கழிவறை குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தாத்தா - பாட்டியிடம் ஒப்படைப்பு Empty Re: சீனா: கழிவறை குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தாத்தா - பாட்டியிடம் ஒப்படைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
» கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
» தாத்தா ஆனார் நடிகர் விக்ரம்.... மகளுக்கு குழந்தை பிறந்தது
» ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம்
» மொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற பெண்ணுக்கு பறக்கும் விமானத்தில் குழந்தை பிறந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum