Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சர்வதேசப் பார்வை - செய்தித் துளிகள்...!
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சர்வதேசப் பார்வை - செய்தித் துளிகள்...!
இராக் போரில் இலட்சம் பேர் படுகொலை
இராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போர் தொடுத்திருந்த காலத்தில், சரியான காரணமின்றி ஒரு லட்சம் இராக்கியர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; குறிப்பாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலமான 2004 முதல் 2009 வரை இப்படுகொலைகள் அரங்கேறியுள்ளன என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜாலியன் அசான்ஜ் தெரிவிக்கிறார்.இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் விக்கிலீக்ஸிடம் உள்ளன. இவர்களில் 80 விழுக்காட்டினர் சிவிலியன்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பேசிய அசான்ஜ், இந்த ஆவணங்களைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மானேங்க் கடுமையான குற்றச்சாட்டுகளின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.‘அல்காயிதா’ அமைப்புக்கு உதவியதாகவும் எதிரிக்குத் துணைபோனதாகவும் அவ்வீரர்மீது குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அரசின் செயலை, சர்வதேச அமைப்புகள் வேடிக்கை பார்ப்பதாக அசான்ஜ் கண்டித்தார்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்வதேசப் பார்வை - செய்தித் துளிகள்...!
ஒரே ஆண்டில் 26 ஆயிரம் பாலியல் குற்றங்கள்
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவப் படை வீரர்கள் மத்தியில் 2012ஆம் ஆண்டில் மட்டும் 26 ஆயிரம் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளனவாம்! இது, முந்தைய ஆண்டில் நடந்த குற்றங்களைவிட 37 விழுக்காடு அதிகமாகும். இதன்படி நாளொன்றுக்கு சராசரியாக 70 பாலியல் குற்றங்கள் அமெரிக்க ராணுவப் படையினரால் நடந்தேறியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வெளியுலகுக்குத் தெரிவதில்லை.இவற்றை அமெரிக்க அதிபரும் பாதுகாப்பு அமைச்சரும் வன்மையாகக் கண்டித்தனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்வதேசப் பார்வை - செய்தித் துளிகள்...!
துருக்கி விமானங்களில் புதிய நடைமுறைகள்
துருக்கி ஏர்லைன்ஸ் விமானங்களில் இஸ்லாமிய நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி விமானப் பணிப்பெண்கள் உதட்டுச் சாயம் பூசுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. மதசசார்பற்ற சக்திகள் இதைக் கடுமையாக எதிர்த்துள்ளன. பிரதமர் ரஜப் தய்யிப் உர்துகான், இஸ்லாமிய நடைமுறைகளை ஓசையின்றி கொண்டுவருகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.உஸ்மானிய டர்கி தொப்பி (டர்பூஷ்), நீளமான சீருடை அணிவது, மது வகைகளுக்குத் தடை, இறுதியாகச் சிவப்பு உதட்டுச் சாயத்திற்குத் தடை ஆகியவற்றை துருக்கி ஏர்லைன்ஸ் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. இது பாரம்பரிய உஸ்மானிய நடைமுறைக்குத் திரும்புகின்ற நல்ல தொடக்கமாகும் என்று நிறுவனம் வர்ணித்துள்ளது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்வதேசப் பார்வை - செய்தித் துளிகள்...!
அப்துல் மலிக் பின் மர்வான்காலத்து பொற்காசு ஏலம்
லாஇலாஹ இல்லல்லாஹ்; வஹ்தஹு லா ஷரீக்கலஹு என்ற கலிமா அரபி மொழியில் பொறிக்கப்பட்ட முதலாவது தங்க நாணயம் ஒன்று அண்மையில் ஏலத்திற்கு வந்தது. உமய்யா கலீஃபாக்களில் ஐந்தாமவரான அப்துல் மலிக் பின் மர்வான் காலத்தில் கி.பி. 690இல் டமாஸ்கஸில் தயாரிக்கப்பட்ட அந்தப் பொற்காசு ‘தீனார் 77’ என்று அழைக்கப்படுகிறது.அபூர்வமான வேலைப்பாடுகளுடன் கூடிய இப்பெற்காசு லண்டனில் மே மாதம் பகிரங்க ஏலத்திற்கு வந்தது. 20 மி.மீட்டர் விட்டம் கொண்ட இந்தச் சிறிய பொற்காசு 4.25 கிராம் எடை கொண்ட 22 காரட் தங்க நாணயமாகும். அதில், கூஃபா அரபி எழுத்து வடிவத்தில் ஒரு பக்கத்தில் ‘குல் ஹுவல்லாஹு’ அத்தியாயம் பொறிக்கப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று எழுதப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தில் ‘கலிமா’ காணப்படுகிறது. ஹிஜ்ரீ 77ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதற்கு அடையாளமாகவே ‘தீனார் 77’ என்று அதில் குறிப்பிடப்படுகிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்வதேசப் பார்வை - செய்தித் துளிகள்...!
எகிப்தில் மது இல்லாத சுற்றுலா விடுதி
எகிப்து நாட்டில் செங்கடற்கரையில் மது இல்லா முதலாவது சுற்றுலா விடுதி திறக்கப்பட்டுள்ளது. அல்ஃகர்தகா நகரில் தொடங்கப்பட்டுள்ள இவ்விடுதியில், போதைக்கு இடமில்லை. மற்றெல்லா வசதிகளும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்கும்.இந்தச் சுற்றுலா விடுதியில் 134 அறைகளும் 35 பகுதிகளும் உள்ளன. நீச்சல் குளமும் உண்டு. கடைசி மாடி பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கான நீச்சல் குளம், அரங்கம், பெண் காவலர்கள் போன்ற ஏற்பாடுகள் உள்ளன.விடுதியின் திறப்பு விழா நிகழ்வுகள், மது கண்ணாடிக் கிண்ணங்கள் உடைப்பைக் கொண்டு துவங்கின.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்வதேசப் பார்வை - செய்தித் துளிகள்...!
ஸ்வீடன் நாட்டில் பாங்கொலி
ஸ்வீடன் நாட்டில் வெடியா பள்ளிவாசலில் முதல்முறையாக பாங்கொலி வெளியே கேட்டது. சுமார் மூன்று நிமிடங்கள் நகரில் ஒலித்த தொழுகை அழைப்பு முஸ்லிம்களை பரவசப்படுத்தியது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிற்குத் தெற்கே வெடியா நகரம் உள்ளது.இந்தப் பள்ளிவாசலில் சுமார் ஏழாயிரம்பேர் தொழுதுவருகிறார்கள். இதுவரை சப்தமிட்டு பாங்கு சொல்வதற்குத் தடை இருந்தது. ஸ்டாக்ஹோம் காவல்துறையினர் இப்போதுதான் அனுமதி வழங்கியுள்ளனர்.சுவீடன் நாட்டில் சுமார் 200 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றில் சில பள்ளிவாசல்களில் மட்டுமே பாங்கு மேடை உள்ளது. பெரும்பாலான பள்ளிவாசல்கள் தாற்காலிகக் கட்டடங்களிலேயே இயங்கிவருகின்றன.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்வதேசப் பார்வை - செய்தித் துளிகள்...!
பிரிட்டனில் சரிந்துவரும் கிறித்தவம்
டெய்லி டெலிகிராஃப் ஏடு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது:பிரிட்டனில் கிறித்தவ மதம் முன்எப்போதும் இல்லாத சரிவைச் சந்தித்துவருகிறது; அபாயகரமான அளவில் நசிந்துவருகிறது. பிரிட்டனைச் சேர்ந்த 25 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு பத்துப்பேரில் ஒருவர் முஸ்லிமாக உள்ளார்.2011ஆம் ஆண்டு புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பைச் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் ஏடு, கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட குடியேற்றம் கிறித்தவத்தின் சரிவுக்கு உதவியுள்ளது; அதேநேரத்தில்,இஸ்லாத்தை ஏற்கும் நிகழ்வுகள் குறிப்பாக இளைஞர்களிடையே பெரிய அளவில் அதிகரித்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.இந்தக் கணக்கெடுப்பின்படி, இங்கிலாந்து ஸ்காட்லாண்டு, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் மட்டும் கிறித்தவர்களின் எண்ணிக்கை 4.1 மில்லியன், அதாவது 10 விழுக்காடு குறைந்துள்ளது. ஆனால், இப்பகுதிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 75 விழுக்காடு அதிகரித்துள்ளது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)
» என்ன பார்வை உந்தன் பார்வை...!!
» காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பேச்சால் கோபத்தின் உச்சத்தில் சமாஜ்வாதி..
» செய்தித் தாள்களை உண்பதற்காகவோ,சுத்தம் செய்வதற்காகவோ பயன்படுத்தலாமா?
» செய்தித் தணிக்கை கெடுபிடி அதிகரிக்க ஒப்புதல் சீனாவின் பிரபல இணையதள நிறுவனங்கள் அதிரடி
» என்ன பார்வை உந்தன் பார்வை...!!
» காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பேச்சால் கோபத்தின் உச்சத்தில் சமாஜ்வாதி..
» செய்தித் தாள்களை உண்பதற்காகவோ,சுத்தம் செய்வதற்காகவோ பயன்படுத்தலாமா?
» செய்தித் தணிக்கை கெடுபிடி அதிகரிக்க ஒப்புதல் சீனாவின் பிரபல இணையதள நிறுவனங்கள் அதிரடி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|