சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

“குளோனிங்’ முறையில் பிரம்மாண்ட மிருகம் Khan11

“குளோனிங்’ முறையில் பிரம்மாண்ட மிருகம்

Go down

“குளோனிங்’ முறையில் பிரம்மாண்ட மிருகம் Empty “குளோனிங்’ முறையில் பிரம்மாண்ட மிருகம்

Post by rammalar Tue 20 Aug 2013 - 5:23

சைபீரியா மிகவும் குளிர்ந்த பிரதேசம். மைனஸ் 40 டிகிரி கூட இங்கு அதிசயமல்ல. இதன் தீவிரத்தை உணர்ந்து ஜெர்மானிய சர்வாதிகாரியான ஹிட்லர் செயல்படாததால்தான். அவரால் ரஷியாவை வெற்றி கொள்ள முடியவில்லை. இது ஒருபுறம் இருக்கட்டும்.
-
இந்தக் கடுங்குளிர் பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு “மம்மோத்’ என்று அழைக்கப்படும் மிகப்பெரிய யானைகள் இருந்தன. இவற்றின் தந்தங்கள் நீண்டு மேல்நோக்கி வளைந்து இருக்கும். உடலில், குளிரைத் தாங்கும் அளவுக்கு ரோமம் காணப்படும். அவ்வப்போது பனிப் பாறையில் இவை புதையுண்டது கண்டறியப்பட்டது.
-
இப்போது 10000 - 15000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அம்மாதிரியான பெண் யானையின் சடலம் ஆர்க்டிக் பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், இதன் சடலத்தில் உள்ள ரத்தம் உறையாத நிலையில் உள்ளது.
-
இந்த ரத்தம் மிகவும் கருமையான நிறத்தில் இந்த யானையின் வயிற்றில் காணப்பட்டது. இந்த ரத்தம் உள்ள இடத்தில் ஒரு குச்சியால் குத்தியபோது இந்த ரத்தமானது திரவ நிலையில் வெளிவரத் தொடங்கியது.
-
இதைப்பற்றி, இம்மாதிரி சரித்திரகாலத்திற்கு முற்பட்ட பெரிய யானைகளை வைத்துள்ள அருங்காட்சியகத்தின் தலைவரான செமியோன கிரோகிரிவ் சொல்வது என்னவென்றால், திரவநிலையிலான ரத்தத்தைக் கொண்டு இம்மாதிரியான ரோமங்களடர்ந்த மிகப் பெரிய யானை வர்க்கத்தை குளோனிங் முறையில் உருவாக்கலாம் என்பது.
இந்தச் சடலத்தை வெளிக்கொணரும் போது இருந்த உஷ்ணநிலை 7 முதல் 10 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. அதனால் இந்தப் பெரிய யானையின் ரத்தம் உறைநிலையை மாற்றும் ரசாயனத்தைக் கொண்டதாக இருக்கலாம். இதனை மேலும் ஆராய்ச்சி செய்தால் எவ்வாறு இத்தனை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் ரத்தம் உறையாமல் இருக்க முடியகிறது என்பதை கண்டறியலாம் என்கிறார் இவர்.
-
ஆர்க்டிகா, மற்றும் அன்டார்டிகாவில் வாழும் பூச்சியினங்கள் நிலத்திலும் நீரிலும் வாழும் பிராணிகள், மீன்கள் இம்மாதிரியான உயிர்களின் ரத்தத்தில், ரத்தம் உறையாமல் இருக்கும் வேதிப்பொருள் உள்ளது. அதனால்தான் கடுங்குளிரான சமயங்களிலும் இப்பிராணிகளால் உயிர் வாழமுடிகிறது.
-
இந்த மாபெரும் யானையின் உடல் திசுக்களும் நல்ல நிலையில் உள்ளன. இந்த யானையின் மேல்பாகம், தலை, இடது பின்னங்கால் இவை கடினமான எலும்புகளாகி இருக்கின்றன. ஆனால் இதன் உடலின் மற்ற பகுதிகளில் காணப்படும் திசுக்கள் இயற்கையான சிவப்பு நிறத்துடன் புதிய மாமிசம் போல் உள்ளது. காரணம் என்னவெனில், இம்மிருகத்தின் கீழ்ப்பகுதிகள் சுத்தமான உறைபனிக்கட்டிக்குள் புதையுண்டும், மேற்பகுதி வெளியே தெரிந்தவாறும் இருந்தது. இதன் துதிக்கை மிகவும் சிதைந்து நிலையில் தனியாக அறுந்து காணப்பட்டது.
இதன் பற்களைப் பரிசோதித்த விஞ்ஞானிகள் இந்த யானை 50-60 வயதானதாக இருந்திருக்கலாம் என்கிறார்கள். இதன் திரவ உருவமான ரத்தத்தை அப்படியே பாதுகாக்க வேண்டி அதற்கான பிரத்தியேகமான ரசாயனக் கலவை கொண்ட “டெஸ்ட் டியூபில்’ ஆராய்ச்சியாளர்கள் எடுத்து வைத்து மேலும் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

இந்த செய்தியை படித்தபோது எனக்கு ஒரு பழைய கார்ட்டூன் ஞாபம் வந்தது. இப்படித்தான் துருவப்பிரதேசத்திற்கு ஆராய்ச்சிக்காகச் சென்ற சில விஞ்ஞானிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த “வைக்கிங்’ போர்வீரர் ஒருவரின் சடலத்தை அப்படியே முழுமையான நிலையில் கையில் கோடரி போன்ற ஆயுதங்களுடன் பனிப்பாறையின் உள்ளே இருப்பதை கண்டனர்.
-
அந்தப் பனிப்பாறையை அப்படியே பெயர்த்துத் தமது நாட்டிற்கு விமானமூலமாக எடுத்து வந்து ஆராய்ச்சி சாலையில் அந்தப் பனிக்கட்டிப் பாறையை உருக வைத்து, சாதாரணமான உஷ்ண நிலைக்கு கொண்டு வந்தனர். மிகவும் ஆச்சரியப் படத்தக்க விதத்தில் அந்த வைக்கிங் போர் வீரன் கோடரியை வீசிக்கொண்டு எழுந்து உக்கிரகமாக அனைவரையும் தாக்க ஆரம்பித்தான். பிறகு அவனைக் கொன்று விடுகின்றனர்!
-
அதுபோல இப்போது இனமே முழுவதுமாக அழிந்து போன ஒரு புதிய மிருகத்தை உருவாக்கினால் அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையும் ஊகித்துக் கொண்டுதான் இம்முயற்சியில் ஈடுபட வேண்டும். என்னவோ இப்புதிய முயற்சியில் வெற்றி கண்டால் அதனால் ஏதேனும் தீய விளைவுகள் ஏற்படாமல் இருந்தால் சரிதான்...

- டி.எம்.எஸ்.
நன்றி: மஞ்சரி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24084
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum