Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
வளர்ப்புக் குழந்தைகள் விஷயத்தில் இஸ்லாமின் நிலைப்பாடு!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
வளர்ப்புக் குழந்தைகள் விஷயத்தில் இஸ்லாமின் நிலைப்பாடு!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான். இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.
(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும். ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர். (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை. ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:4, 5)
''வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்து அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்'' எனும் (33:5வது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை ஸைத் பின் முஹம்மத் - முஹம்மதின் புதல்வர் ஸைத் என்றே அழைத்து வந்தோம். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல்கள் - புகாரி 4782, முஸ்லிம் 4808, திர்மிதீ, அஹ்மத்)
நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை மீள் பிரச்சாரம் செய்யும் காலத்திற்கு முந்திய அறியாமை காலத்தில், வளர்ப்புப் பிள்ளைகளைச் சொந்தப் பிள்ளைகளாகவேக் கருதி வளர்ப்பு மகனை வளர்த்தவருடன் இணைத்து இன்னார் மகன் இன்னார் என்றே அழைத்து வந்தனர். வளர்த்தவர் மரணித்து விட்டால் அவரின் சொத்துக்கு வளர்ப்பு மகன் வாரிசாகி விடுவதும் நடைமுறையில் இருந்தன.
இதனடிப்படையில், நபி (ஸல்) அவர்கள் நபித்துவ வாழ்வுக்கு முன்னர், தம்மிடம் அடிமையாக இருந்த ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை தமது வளர்ப்பு மகனாக அறிவித்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்பட்டு, ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த பின்னரும் இதே நிலை நீடித்தது. வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையின் பெயருடனேயே சேர்த்து அழையுங்கள் என்கிற திருக்குர்ஆன் 33:5வது வசனம் அருளப்பட்ட பின்னர் வளர்ப்பு மகன் குறித்து அறியாமை காலத்தில் இருந்து வந்த நடைமுறைகள் கைவிடப்பட்டன.
வளர்ப்புப் பிள்ளைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து மேல்கண்ட இறைமறை வசனங்களிலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டலிலும் இந்த உம்மத்தினருக்கு நடைமுறை விளக்கம் கிடைக்கின்றன. வளர்ப்புப் பிள்ளைகளை வளர்க்க ஆர்வமுள்ள தம்பதியர் இவற்றைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்!
பெற்றோரும், வளர்த்தோரும்.
வளர்ப்புப் பிள்ளைகளைக் குறித்தான இஸ்லாமிய சட்டம் என்ன? என்றே தெரியாமல் பெற்றப் பிள்ளையை வளர்ப்புப் பிள்ளையாகப் பிறருக்குக் கொடுத்துவிட்டு பிந்நாளில் சங்கடமான நிலையைச் சந்திக்கும் தம்பதியர்களை இன்று நேரில் கண்டுவருகிறோம்.
அதாவது, வளர்ப்புப் பிள்ளையை வளர்ப்பதற்குப் பொறுப்பேற்றவர் குழந்தையை கல்விக்கூடத்தில் சேர்க்கும்போதும் அரசு சம்பந்தமான ஆவணங்களைப் பதிவுசெய்யும் போதும் பெற்றெடுத்தத் தந்தையின் பெயர் எழுதப்பட வேண்டிய இடத்தில் வளர்ப்பவரின் பெயரை தந்தையின் பெயராகப் பதிவுசெய்யப்படுகிறது. இவை இவ்வாறு தொடர்ந்து வாலிப வயதில் மணமுடிக்கும் காலத்திலும் திருமண அழைப்பிதழில் வளர்த்தவரின் பெயரே தந்தையின் பெயராக அச்சிடப்படுகின்றன!
இஸ்லாமியப் பார்வையில் இவை அநீதியாகும் என்று எடுத்துச் சொன்னால் பெற்றோரும், வளர்த்தோரும் குர்ஆன் வசனத்துக்கு முக்கியத்துவம் வழங்காமல், ''இத்தனை வருடங்கள் ஆகிவிட்டன இப்போது எப்படி மாற்றுவது?'' என்று சங்கடத்தில் நெளிந்து தமக்குத் தாமே சமாதானம் செய்துகொள்கின்றனர்.
ஆகவே, இஸ்லாம் மார்க்கத்தை வாழ்க்கை நெறியென ஏற்றிருக்கும் முஸ்லிம்கள், வளர்ப்புக் குழந்தை விஷயத்தில் இஸ்லாமின் நிலைப்பாடு என்ன? என்பதையறிந்து பின்பற்றவும்!
(அல்லாஹ் மிக அறிந்தவன்).
எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான். இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.
(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும். ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர். (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை. ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:4, 5)
''வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்து அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்'' எனும் (33:5வது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை ஸைத் பின் முஹம்மத் - முஹம்மதின் புதல்வர் ஸைத் என்றே அழைத்து வந்தோம். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல்கள் - புகாரி 4782, முஸ்லிம் 4808, திர்மிதீ, அஹ்மத்)
நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை மீள் பிரச்சாரம் செய்யும் காலத்திற்கு முந்திய அறியாமை காலத்தில், வளர்ப்புப் பிள்ளைகளைச் சொந்தப் பிள்ளைகளாகவேக் கருதி வளர்ப்பு மகனை வளர்த்தவருடன் இணைத்து இன்னார் மகன் இன்னார் என்றே அழைத்து வந்தனர். வளர்த்தவர் மரணித்து விட்டால் அவரின் சொத்துக்கு வளர்ப்பு மகன் வாரிசாகி விடுவதும் நடைமுறையில் இருந்தன.
இதனடிப்படையில், நபி (ஸல்) அவர்கள் நபித்துவ வாழ்வுக்கு முன்னர், தம்மிடம் அடிமையாக இருந்த ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை தமது வளர்ப்பு மகனாக அறிவித்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்பட்டு, ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த பின்னரும் இதே நிலை நீடித்தது. வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையின் பெயருடனேயே சேர்த்து அழையுங்கள் என்கிற திருக்குர்ஆன் 33:5வது வசனம் அருளப்பட்ட பின்னர் வளர்ப்பு மகன் குறித்து அறியாமை காலத்தில் இருந்து வந்த நடைமுறைகள் கைவிடப்பட்டன.
வளர்ப்புப் பிள்ளைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து மேல்கண்ட இறைமறை வசனங்களிலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டலிலும் இந்த உம்மத்தினருக்கு நடைமுறை விளக்கம் கிடைக்கின்றன. வளர்ப்புப் பிள்ளைகளை வளர்க்க ஆர்வமுள்ள தம்பதியர் இவற்றைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்!
பெற்றோரும், வளர்த்தோரும்.
வளர்ப்புப் பிள்ளைகளைக் குறித்தான இஸ்லாமிய சட்டம் என்ன? என்றே தெரியாமல் பெற்றப் பிள்ளையை வளர்ப்புப் பிள்ளையாகப் பிறருக்குக் கொடுத்துவிட்டு பிந்நாளில் சங்கடமான நிலையைச் சந்திக்கும் தம்பதியர்களை இன்று நேரில் கண்டுவருகிறோம்.
அதாவது, வளர்ப்புப் பிள்ளையை வளர்ப்பதற்குப் பொறுப்பேற்றவர் குழந்தையை கல்விக்கூடத்தில் சேர்க்கும்போதும் அரசு சம்பந்தமான ஆவணங்களைப் பதிவுசெய்யும் போதும் பெற்றெடுத்தத் தந்தையின் பெயர் எழுதப்பட வேண்டிய இடத்தில் வளர்ப்பவரின் பெயரை தந்தையின் பெயராகப் பதிவுசெய்யப்படுகிறது. இவை இவ்வாறு தொடர்ந்து வாலிப வயதில் மணமுடிக்கும் காலத்திலும் திருமண அழைப்பிதழில் வளர்த்தவரின் பெயரே தந்தையின் பெயராக அச்சிடப்படுகின்றன!
இஸ்லாமியப் பார்வையில் இவை அநீதியாகும் என்று எடுத்துச் சொன்னால் பெற்றோரும், வளர்த்தோரும் குர்ஆன் வசனத்துக்கு முக்கியத்துவம் வழங்காமல், ''இத்தனை வருடங்கள் ஆகிவிட்டன இப்போது எப்படி மாற்றுவது?'' என்று சங்கடத்தில் நெளிந்து தமக்குத் தாமே சமாதானம் செய்துகொள்கின்றனர்.
ஆகவே, இஸ்லாம் மார்க்கத்தை வாழ்க்கை நெறியென ஏற்றிருக்கும் முஸ்லிம்கள், வளர்ப்புக் குழந்தை விஷயத்தில் இஸ்லாமின் நிலைப்பாடு என்ன? என்பதையறிந்து பின்பற்றவும்!
(அல்லாஹ் மிக அறிந்தவன்).
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|