சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Khan11

பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

+7
rammalar
நண்பன்
பானுஷபானா
*சம்ஸ்
jafuras
Muthumohamed
ராகவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by ராகவா Tue 3 Sep 2013 - 19:35

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Healthy_banana_bread_recipe

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது.
இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ- யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.

மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும். முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது. நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.

நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும்.
எளிதில் ஜீரணமாகும். நோயாளிகளும் உண்ணலாம்.

பச்சை வாழை அல்சர் நோயைக் குணப்படுத்தும். அதிக அளவில் சக்தியைத் தருவதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.
சீதபேதி உள்ளவர்களுக்கு வாழைப் பழத்தைப் பிசைந்து, சிறிது உப்பு சேர்த்து உண்ணக் கொடுத்தால் சீதபேதி கட்டுப்படும்.    
மலச்சிக்கலைத் தவிர்க்கும். மூலநோய் உள்ளவர்கள் தினமும் இரவில் தவறாமல் வாழைப்பழம் உண்ண வேண்டும்.    
இரத்த சோகை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து வாழைப்பழம் உண்டு வந்தால் உடலில் இரத்தம் ஊறும்
.   
காசநோய் உள்ளவர்களுக்கு வாழைப்பழம் மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகும்.
  
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றி:லைப் ஸ்டைல்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by Muthumohamed Tue 3 Sep 2013 - 22:01

இனிமேல் நான் வேண்டாம்னு சொல்லமாட்டேனே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by jafuras Tue 3 Sep 2013 - 22:06

நன்றிங்க ஆனாலும் தெரிந்ததுதான்!_
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by ராகவா Wed 4 Sep 2013 - 0:01

Muthumohamed wrote:இனிமேல் நான் வேண்டாம்னு சொல்லமாட்டேனே
*_ *_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty பழங்களும் அதன் பயன்களும். சுகமான வாழ்க்கை தரும் சுவையான பலா

Post by *சம்ஸ் Fri 27 Sep 2013 - 12:28

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் 4bbf6cf3-2ce7-4d86-bf66-adaebdf6e3d3_S_secvpf
வேறு பெயர்கள்: நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் . நாவல் பழம் எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம். நாவல் மரத்தின் பழம், இலை, மரப் பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். 

கல்லீரல் கோளா றுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. வியாபார நோக்கில், இதை யாரும் பயிரிடாததால், இந்தப் பழங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதனால் இதன் விலையும் எக்கச்சக்கமாக இருக்கிறது. தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிபாட்டிலும் இடம் பெற்ற இந்தப் பழம், எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம். 

சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அவர்கள் நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சிறு நீர்ப்போக்குக் குறையும். 

நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப் படுத்திவிடலாம். மூலத் தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம் கைகொடுத்து உதவுகிறது. 

நாவல் பழம் பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது. பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். ரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்ப டும் வலியையும் நிவர்த்தி செய்யும். 

சிறுநீரகக் கற்கள் கரையவும், ரத்தம் சுத்தமாகி தொழு நோய் முற்றிலும் குணமாகவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யவும் நாவற்பழம் உதவுகிறது. பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் `ஈ' தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணிய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும். 

ஆனால் அளவோடு சாப்பிட வேண்டும். சித்தர்கள் தவ நிலையிலேயே நோய்களுக்கு ஏற்ற மருந்துகளைக் கண்டறிந்தனர். ஒரு பொருளின் வடிவம், தன்மை, நிறம் மூன்றையும் உடலின் பாகங்களோடு ஒப்பிட்டு, ஒத்துப்போகும் குணங்களையுடையவற்றை அப்பகுதியில் வரும் நோய்களுக்கு மருந்தாக்கினர். 

துவர்ப்பிலிருந்தே இனிப்பு உருவாகும் என்பது சித்தர்களின் முடிவாகும். மானுட தேகத்தில் கணையத்தின் தன்மை துவர்ப்பு சுவையின் தன்மையைக் கொண்டது. அங்கிருந்துதான் இன்சுலின் சுரக்கிறது. கணையத்தில் துவர்ப்பின் ஆதிக்கம் குறையும் பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது. இன்சுலின் குறைவதால் சர்க்கரை நோய் உண்டாகிறது. 

நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது. இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. இதனால் நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுபாட்டில் இருக்க்கும் என்பது லக்னோவில் உள்ள நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்தது, நாவல் பழத்தில் இரு வகைகள் உள்ளன. 

ஒன்று உருண்டை ரகம். இன்னொன்று நீள ரகம். இவற்றுள் நீள வடிவில் பெரியதாய் இருக்கும் பழவகையில்தான் இனிப்புச் சுவை அதிகம். உருண்டை ராகமே மருத்துவ குணம் உடையது. பெரும்பாலான பழங்களை அப்படியேதான் உட்கொள்ள வேண்டும். நாவற்பழங்களை மட்டும் சிறிதளவ உப்புச் சேர்த்து சாப்பிட்டால் ருசி அதிகரிக்கும். 

கல்லீரலும் செரிமான உறுப்புகளும் நன்றாய் இயங்க பண்டைய மருத்துவரான சரகர் என்பவர் நாவல் பழத்தை சாப்பிடச் சொல்லியிருக்கிறார். ஆயுர் வேத மருத்துவத்தில் நீரிழிவு நோயாளிகள் குணம் பெற பின்வருமாறு செய்ய வேண்டும். அதாவது, நாவற்பழ மரத்தின் பட்டைகளை எரித்துச் சாம்பல் ஆக்கி அதனை பொடியாக்கிக் கொள்ள வேண்டும். 

அப்பொடியில் அரை தேக்கரண்டி எடுத்து காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் அருந்த வேண்டும். பிறகு இரவு உணவிற்குப் பிறகு இந்தத் தூளை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்த வேண்டும். இப்படி அருந்தினால் நீரிழிவு குறையும். பிறகு தூளின் அளவை நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும். 

நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம். நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். 

காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம். தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசை கள் வலுவாகும். நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு. 

மூன்று நாவல் இலையை விழுதாய் அரைத்து கட்டித் தயிரில் கலக்கி அதிகாலையில் விடாமல் மூன்று மாதங்கள் சாப்பிட்டுவர, முத்தான சத்தான பிள்ளை உங்கள் வயிற்றில் தரிக்கும். இது அனுபவ வார்த்தையாகும். இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட நாவல் பழத்தை ருசிக்காவும், உடல் ஆரோக்கியத்திற்காவும் உட்கொள்வோம்.

நன்றி மாலைமலர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by பானுஷபானா Fri 27 Sep 2013 - 14:08

ஏற்கனவே நீங்க தான் போட்டிருக்கிங்க தம்பி(/ (/ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by ராகவா Sat 28 Sep 2013 - 9:24

:/ :”@:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by *சம்ஸ் Sat 28 Sep 2013 - 10:39

பானுஷபானா wrote:ஏற்கனவே நீங்க தான் போட்டிருக்கிங்க தம்பி(/ (/ 
பதிவு உள்ளது என்று உறுதி செய்யும் போது முன்னால் உள்ள பதிவின் லிங்கை இங்கு கொடுக்க வேண்டும் அக்கா. அப்படி கொடுத்தால்தான் பதிவை நீக்குவதற்கு இலகுவாக இருக்கும்.!_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty உடலுக்கு அதிக ஆற்றல் தரும் சப்போட்டா பழம்

Post by *சம்ஸ் Sat 19 Oct 2013 - 17:35

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Fe81d284-3bb5-45e3-a9ac-b29900ce3dd3_S_secvpf



இறைவன் இப்புவியில் உண்டாக்கிய பலவித பழங்களில் அதிக மருத்துவ குணம் மற்றும் சத்துக்கள் நிறைந்து, எளிமையாக எல்லோருக்கும் கிடைக்கும் படியான ஒரு பழம் என்றால் அது சப்போட்டா தான் சப்போட்டாவில் குளுக்கோஸ் அதிக அளவு நிறைந்திருப்பதால், அது உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கிறது. 

விளையாட்டு வீரர்களுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது, அதனால் சப்போட்டா பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது. செரிமானப் பாதையை சரிச்செய்வதன் மூலம், அது உணவுக்குழாய் அழற்சி, குடல் அழற்சி, எரிச்சல் கொண்ட குடல் நோய் மற்றும் இரைப்பை அழற்சி போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது. 

இதில் உள்ள எதிர் ஆக்ஸிகரணிகள், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. கூடுதல் அளவு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து முதலியவைகள் எலும்பின் தாங்கும் ஆற்றலை அதிகரிக்க தேவைப்படுகின்றன. 

இத்தகைய கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் போன்றவைகள் சப்போட்டா பழத்தில் நிறைந்துக் காணப்படுவதால், எலும்புகளின் சக்தியை அதிகரித்து மற்றும் அவற்றை வலுப்படுத்த உதவுகிறது.

சப்போட்டா பழத்தைத் சாப்பிடுவதால், மார்புகளில் சளித்தேக்கம் மற்றும் நாள்பட்ட இருமல் ஆகியவைகளை, நாசி வழியாக மற்றும் சுவாசக் குழாயிலிருந்து கபம் மற்றும் சளி நீக்குவதன் மூலம், சளி மற்றும் இருமலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. 

சப்போட்டா பழத்தின் நொறுக்கப்பட்ட விதைகளை தின்பதால், அது ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கிகளாகச் (அதிகமாக வெளியேற்ற) செயல்படுத்தப் பயன்படுகின்றன. இதனால் சிறுநீர்ப் பையி லிருந்து சிறுநீரை மற்றும் சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவுகிறது. 

சப்போட்டா பழத்தில் உள்ள அதிக அளவு பால் தன்மையால், பல் துவாரங்களை நிரப்பும் ஒரு கச்சா பொருளாகப் பயன்படுத் தலாம். சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும். அதிலும் இந்த பழத்தில் உள்ள வைட்டமின் `ஈ' சத்தி னால், ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் பெற உதவி செய்கிறது. 

எனவே, சப்போட்டா பழம் சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நல்லது. சப்போட்டா விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால், தலைமுடி ஈரப்பதமாகவும் மற்றும் மென்மையாகவும் இருக்க உதவுகிறது. 

மேலும் இது தலைமுடிக்கு பளப்பளப்பை தருகிறது மற்றும் சுருட்டை முடிக்கு சிறந்தாகக் கருதப்படுகிறது. இந்த எண் ணெயை கூந்தலுக்கு உபயோகப்படுத்துவதால், கூந்தலில் அதிகமாக வழவழப்புத் தன்மை இல்லாமல், 

எளிதில் உறிஞ்சப்பட்டு முடியை மென்மையாக இருக்க உதவுகிறது சப்போட்டா விதையின் எண்ணெய் உச்சந்தலைக்கு ஊட்டம் அளித்து, எரிச்சலூட்டும் ஸ்கால்ப்பிற்கு நிவாரணமளித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சியைக் கொடுக்கிறது. 

மேலும் இந்த எண்ணெய் சரும அழற்சி காரணமாக தலைமுடி உதிர்வதற்கு சிகிச்சையளிப்பதிலும் திறன் மிக்கதாக செயல்படுகிறது. சப்போட்டா விதைகளை பேஸ்ட் செய்து, 

அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, பின்பு இதனை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் படும்படி நன்றாக தேய்க்கவும். பிறகு மறுநாள் காலையில் தலைமுடியை நன்றாக அலசவும். இது தலைமுடியை மென்மையாக்கச் செய்து, பொடுகுப் பிரச்சனைக் கூட கட்டுப்படுத்த உதவுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by Muthumohamed Sat 19 Oct 2013 - 20:52

நல்ல பதிவு ஆனால் எனக்கு பிடிக்காதே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by பானுஷபானா Sun 20 Oct 2013 - 19:50

பகிர்வுக்கு நன்றி தம்பி

எனக்கு பிடித்த பழம்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by *சம்ஸ் Mon 21 Oct 2013 - 8:02

மறுமொழிக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by நண்பன் Mon 21 Oct 2013 - 15:31

இந்தப் பழம் எங்கு கிடைக்கும் பாஸ் நான் வசிக்கும் நாட்டில் கிடைத்தால் நல்லா இருக்கும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by பானுஷபானா Mon 21 Oct 2013 - 15:37

நண்பன் wrote:இந்தப் பழம் எங்கு கிடைக்கும் பாஸ் நான் வசிக்கும் நாட்டில் கிடைத்தால் நல்லா இருக்கும்
:(:(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by நண்பன் Mon 21 Oct 2013 - 15:47

பானுஷபானா wrote:
நண்பன் wrote:இந்தப் பழம் எங்கு கிடைக்கும் பாஸ் நான் வசிக்கும் நாட்டில் கிடைத்தால் நல்லா இருக்கும்
:(:(
எக்கா எக்கா ஏக்கா இந்த ஆனந்தக்கண்ணீர்????


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by பானுஷபானா Mon 21 Oct 2013 - 15:47

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:இந்தப் பழம் எங்கு கிடைக்கும் பாஸ் நான் வசிக்கும் நாட்டில் கிடைத்தால் நல்லா இருக்கும்
:(:(
எக்கா எக்கா ஏக்கா இந்த ஆனந்தக்கண்ணீர்????
இது ஆனந்தக் கண்ணீரா#* #* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by rammalar Mon 21 Oct 2013 - 17:31

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் 3
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Oct 2013 - 17:36

நண்பன் wrote:இந்தப் பழம் எங்கு கிடைக்கும் பாஸ் நான் வசிக்கும் நாட்டில் கிடைத்தால் நல்லா இருக்கும்
என்னுடன் வாருங்கள் அதிகமதிகம் என் வீட்டில் இருக்கிறது 

தலையின் வீட்டில் மரம் கூட இல்லை


பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by ராகவா Tue 22 Oct 2013 - 21:10

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:இந்தப் பழம் எங்கு கிடைக்கும் பாஸ் நான் வசிக்கும் நாட்டில் கிடைத்தால் நல்லா இருக்கும்
என்னுடன் வாருங்கள் அதிகமதிகம் என் வீட்டில் இருக்கிறது 

தலையின் வீட்டில் மரம் கூட இல்லை
யார் தலையில் கிடைக்கிறது..
நானும் அவசியம் வருவேன்;உங்கள் வீட்டில் ஒரு விருந்துதான்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by நண்பன் Wed 23 Oct 2013 - 15:38

அச்சலா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:இந்தப் பழம் எங்கு கிடைக்கும் பாஸ் நான் வசிக்கும் நாட்டில் கிடைத்தால் நல்லா இருக்கும்
என்னுடன் வாருங்கள் அதிகமதிகம் என் வீட்டில் இருக்கிறது 

தலையின் வீட்டில் மரம் கூட இல்லை
யார் தலையில் கிடைக்கிறது..
நானும் அவசியம் வருவேன்;உங்கள் வீட்டில் ஒரு விருந்துதான்...
அது நான் இல்லை அச்சலாi* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty பழங்களும் அதன் பயன்களும். இதயம் சீராக துடிக்க கிவி பழம்

Post by *சம்ஸ் Sun 1 Dec 2013 - 15:16

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Eda86d8f-9a92-47e8-bf87-1a44dc11e0c1_S_secvpf



பச்சைத் திராட்சை, பச்சை ஆப்பிள், பேரிக்காய், பச்சை வாழைப்பழம், பீன்ஸ், கோஸ் போன்றவை பச்சை நிறம் பழங்கள். குளோரோஃபில், நார்ச்சத்து, லுடீன், கால்சியம், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட உயிர்ச்சத்துக்கள் இதில் உள்ளன. 

மேலும், ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் ரசாயனம் இதில் உள்ளன. இவை புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைப்பது, ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுவது போன்ற பணிகளைச் செய்கின்றன. 

காய்கறி- பழங்கள் பச்சை நிறத்தை குளோரோஃபில்-இல் இருந்து பெறுகின்றன. இந்த குளோரோஃபில் பாக்டீரியா வளர்ச்சியைக் குறைத்து, நம் உடலில் புதிய திசுக்கள் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

நோய் குணமாகும் வேகத்தை இது 25 சதவிகிதம் வரை விரைவாக்குகிறதாம். எலும்பு, தசைகள் மற்றும் மூளை வலுப்பெற இந்தக் காய்கறியும் பழங்களும் உதவுகின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty பழங்களும் அதன் பயன்களும்.பேரிக்காயின் மகத்துவம்!

Post by *சம்ஸ் Sun 1 Dec 2013 - 15:18

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் 325270eb-1704-46a3-96e1-d00f5ca638ef_S_secvpf



* ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளை தாயகமாகக் கொண்டவை பேரிக்காய்கள். 'ரோசாசியே' தாவர குடும்பத்தை சேர்ந்த பேரிக்காயின் அறிவியல் பெயர் 'பைரஸ் கமியூனிஸ்'. பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களிலும், உருண்டை, மணி வடிவங்களிலும் பேரிக்காய்கள் விளைகின்றன. ஆசிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் பேரிக்காய் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. 

* உடலிற்கு வலிமையளிக்கக் கூடிய நார்சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. 100 கிராம் பழத்தில் 3.1 கிராம் நார்ப் பொருட்கள் காணப்படுகின்றன. 

* பேரிக்காயில் உள்ள நார்ப் பொருட்கள் குடல் புற்றுநோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகின்றன. இதில் காணப்படும் எளிதில் கரையாத 'பாலிசாக்ரைடு' மூலக்கூறுகள் குடலில் சேரும் புற்று நோய் நச்சுகளை அகற்றவல்லது. 

* குறைந்த ஆற்றல் அளிக்கக் கூடியவை பேரிக்காய்கள். 100 கிராம் பழத்துண்டில் 58 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை, கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும். 

* அதிக அளவிலான 'வைட்டமின்-சி' சத்துப்பொருட்கள் பேரிக்காயில் நிறைந்து உள்ளன. புதிதாக பறித்த 100 கிராம் பழத்தில் 7 சதவீதத்திற்கு 'வைட்டமின்-சி' காணப்படுகிறது. 

* பேரிக்காயில் பீட்டா கரோட்டீன், லுட்டின் மற்றும் ஸி-சான்தின் போன்ற சத்துப் பொருட்களும் காணப்படுகின்றன. இவை உடலுக்கு வலிமை அளிப்பதுடன், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகின்றன. 

* தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது உப்புகள் பேரிக்காயில் கணிசமாக உள்ளன. இவை தவிர பி- குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் போலேட் போன்றவையும் மிகுதியாக காணப்படுகின்றன. 

* பேரிக்காய் பழங்கள் உடலுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற உபாதைகளை ஏற்படுத்துவதில்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by பானுஷபானா Mon 2 Dec 2013 - 11:20

பகிர்வுக்கு நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by பானுஷபானா Mon 2 Dec 2013 - 11:55

பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty நார்த்தங்காயின் மருத்துவ குணங்கள்!

Post by *சம்ஸ் Mon 3 Feb 2014 - 19:00

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் F03af307-8c6e-4b1c-a745-9af5122be618_S_secvpf
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும்.   கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். 

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நார்த்தங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம். 

நார்த்தங்காயின் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம். கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும் 

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். 

எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம். நார்த்தங்காய் இலைகைளை நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம். 

இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ப‌சியி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம். 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பழங்களும் அதன் பயன்களும்.   வரம் தரும் வாழைப்பழம் Empty Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum