சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

இனிய தமிழ் தெரிந்து கொள்வோம் Khan11

இனிய தமிழ் தெரிந்து கொள்வோம்

4 posters

Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்வோம் Empty இனிய தமிழ் தெரிந்து கொள்வோம்

Post by பர்ஹாத் பாறூக் Wed 26 Mar 2014 - 15:55

காற்று

தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்
வடக்கிலிருந்து வீசினால் --வாடை
கிழக்கிலிருந்து வீசினால் ---கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால் ---மேலை


பெண்கள்


தமிழில் பெண்களுக்கு அவர்களின் ஒவ்வொரு பருவத்துக்கேற்ற பெயர்கள் உள்ளன. நாற்பது வயதுக்கு உட்பட்ட பெண்களின் பருவங்களை ஏழாகப் பிரித்திருக்கிறார்கள்.


ஐந்து வயது முதல் ஏழு வயது முடிய பேதைப் பருவம்

எட்டு முதல் பதினொன்று முடிய பெதும்பைப் பருவம்..
பன்னிரெண்டும்,பதிமூன்றும் மங்கைப் பருவம்.
பதினான்கு முதல் பத்தொன்பது முடிய மடந்தை.
இருபது முதல் இருபத்தைந்து முடிய அரிவை.
இருபத்தாறு முதல் முப்பத்தொன்பது முடிய தெரிவைப் பருவம்.
நாற்பது முதல் பேரிளம்பெண்.



பூ
மலர்வதால் --மலர்.
விரிவதால் ---வீ
பூப்பதால் --பூ
வாடுவதால் --அலர்

இலைகள்

தமிழில் வெவ்வேறு தாவரங்களின் இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.

வாழை மரம்,அரச மரம்,ஆல மரம் --இலை
பூமியில் வளரும் கொடிகளின் இலை ---பூண்டு
கோரை,அறுகு இவற்றின் இலை ---புல்
நெல்,கேழ்வரகு இவற்றின் இலை --தாள்
மலையைச் சார்ந்த மரங்களின் இலைகள் --தழை
சப்பாத்தி,தாழை இவற்றின் இலைகள் --மடல்
நாணல்,கரும்பு இவற்றின் இலைகள் --தோகை
தென்னை,பனை இவற்றின் இலைகள் --ஓலை
அகத்தி,பசலை இவற்றின் இலைகள் --கீரை


நன்றி: முகநூல்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்வோம் Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்வோம்

Post by Nisha Wed 26 Mar 2014 - 16:01

வாவ்!

இன்னொரு புதிய திரி!  தொடருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்வோம் Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்வோம்

Post by rammalar Wed 26 Mar 2014 - 16:09

இந்தியர்களின் சராசரி வயது 30
என இருந்த போது,
பெண்களுக்குரிய பருவ பெயர்கள்
இவ்வாறாக இருந்திருக்க கூடும்..!!
-
இப்போ பெண்கள் 30 வயதில்தான்
திருமணம் பற்றி யோசிக்கிறாங்க..!!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24067
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்வோம் Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்வோம்

Post by ராகவா Wed 26 Mar 2014 - 18:28

அருமையான பகுதி...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்வோம் Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்வோம்

Post by Nisha Sun 6 Apr 2014 - 18:22

மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்

  1. அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை
  2. நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
  3. முகை - நனை முத்தாகும் நிலை
  4. மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
  5. முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
  6. மொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு
  7. போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
  8. மலர் - மலரும் பூ
  9. பூ - பூத்த மலர்
  10. வீ - உதிரும் பூ
  11. பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
  12. பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
  13. செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்வோம் Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்வோம்

Post by rammalar Sun 6 Apr 2014 - 18:25

இனிய தமிழ் தெரிந்து கொள்வோம் 800px-Flower_Semmal

செந்நிறத்தில் காடுமேடுகளில் பூத்துக் கிடக்கும்

மலரே செம்மல் எனல் பொருத்தமானது.

குறிஞ்சிநிலக் கோதையர் இந்தச் செம்மல் மலரையே

குவித்து விளையாடினர்.

அவர்கள் குவித்து விளையாடிய 99 வகையான

மலர்களில் செம்மல் என்பது ஒன்று.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24067
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்வோம் Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்வோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum