சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Khan11

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

5 posters

Go down

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Empty லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 16:57

லிமரைக்கூ - இலக்கணம்


ஆங்கிலத்தில்  ‘லிமரிக்’  என்பது  ஒரு  கவிதை  வடிவம்.  5  அடிகளில்  அமையும்  இந்தக்  கவிதை  வடிவம்  முக்கியமாக  வேடிக்கை,  வினோதம்,  நகைச்சுவை  முதலிய  உணர்வோடு  இயங்கக்  கூடியது.  

தமிழில் முதன்முதலாக  ஈரோடு  தமிழன்பன்  ‘லிமரைக்கூ’வைப்  படைத்துள்ளார். தமிழில் முதன்முதலாக   ‘லிமரைக்கூ’வைப்  படைத்த  ஈரோடு  தமிழன்பன்  ஆங்கிலத்தின்  ‘லிமரிக்’  வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில்  பயின்று  வரும்  இயைபுத்  தொடையை  1 (முதல்)  மற்றும்  3 (இறுதி)  அடிகளில்  இணைத்து]  ஜப்பானிய  ‘ஹைக்கூ’வின்  வடிவத்தையும்  இணைத்து  3  அடிகள்  கொண்டு  ‘லிமரைக்கூ’  என்ற  புதிய  தமிழ்க்  கவிதை  வடிவத்தை  தமிழில்  ஆரம்பித்து  வைத்தார்.  இவ்வடிவமே  தமிழின்  லிமரைக்கூ  வடிவமாக  அமைந்து  விட்டது.  

ஹைக்கூ,  லிமரிக்  என்னும்  இரண்டு  வகைக்  கவிதைகளின்  வடிவங்களையும்  உள்ளடக்கங்களையும்  உள்  வாங்கிக்  கொண்டு  தமிழில்  கவிதைப்  படைக்கத்தக்க  திறமையும்  பயிற்சியும்  தேர்ச்சியும்  மொழியாளுமை - கவித்துவ  இயக்கம்  ஆகிய  இரண்டிலும்  தேவை என்கிறார் ஈரோடு தமிழன்பன்.

5-7-5  என்னும்  அசையமைப்பு  அடிகளைக்  கருத்தில்  கொண்டால்  ஹைக்கூவின்  தன்மை  அதுவென  உணர்ந்து  மூன்றடிகளின்  இடையடி  சற்றே -  ஒரு  சீர்  அளவே  மிக்கிருக்க  எழுதலாம்.  முதல்,  கடை  அடிகள்  தவிர்த்த  இடையடிகள்  சீர்  குறைந்து  வரும்  லிமரிக்கைக்  கருத்தில்  கொள்ளும்  போது  -  லிமரைக்கூவிலும்  நடுவடி  சீர்  குறைந்து  வரலாம் (இது சிறுபான்மை).  மூவசைச்  சீர்களைப்  பயன்படுத்தும் போது  அவை  ஈரசைகளாகப்  பிரிக்கத்தக்கதாக  இருந்து  விடாமல்  பார்த்துக்  கொள்ள  வேண்டும் என்பார் ஈரோடு தமிழன்பன்.

எடுத்துக்காட்டாக,  ‘வந்ததற்காய்’  என்னும்  மூவசைச்  சீர்,  ‘வந்த + தற்காய்’  என  இரண்டு  சீராகப்  பிரியும்  வாய்ப்புள்ளதாகவும்,  ‘வந்ததனால்’  என்பது,  ‘வந்த + தனால்’  எனப்  பிரிவும்  போது  அவ்வாய்ப்பைப்  பெறாததாகவும்  அமைவதைக்  கருத்தில்  கொள்ள  வேண்டும்.

3  அடிகளிலும்  சந்தம்  கண்டிப்பாக  இருக்க  வேண்டும்  என்ற  விதி  இல்லை.  ஈரோடு  தமிழன்பன்  தமிழுக்கு  முதன்முறையாக  லிமரைக்கூவை  அறிமுகம்  செய்து  வைத்தபோது  சந்தம் கடைபிடிக்கப்பட்டது.  (அவ்வாறு  சந்தம்  அமைத்துக்  கொண்டது  ஈரோடு  தமிழன்பனின்  தனி  உத்தி.)  மூன்று  வரி,  சந்தம்  மட்டுமே  லிமரைக்கூ  ஆகிவிடாது. ஹைக்கூ,  சென்ரியுவின்  இணைப்புதான்  லிமரைக்கூ.

தேன்  நிரம்பி  வழிந்தது
வண்ணத்துப்  பூச்சி  பறந்து  சென்றது
பூ  தலைக்  கவிழ்ந்தது
-இது  சந்தம்  கொண்டு  அமைந்த லிமரைக்கூ.

ஜணகனமன  பாடியது
மரியாதையுடன்  கூட்டத்தில்  பொது  மக்கள்
அரசியல்வாதி  கொட்டாவி  விட்டது - ம.ரமேஷ்
-இது  இயைபுத்  தொடை கொண்டு  அமைந்த லிமரைக்கூ.  

குருக்கள் தெய்வங்கள் ஆனார்கள்
கோயி லில்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடியி ருக்கப் போனார்கள்

பறவை கூடு திரும்பியது
சிறகு முளைத்துப் பறந்து திரிய
வானின் இதயம் விரும்பியது
- ஈரோடு தமிழன்பன் – சென்னிமலை கிளியோப்பாத்ராக்கள்

எதிரெதிர்  தலைவர்கள் கைக்குலுக்கல்
விளை நிலங்கள் பங்கீடு பேச்சுக்குப்பின்
அவரவர் பங்குகள் பதுக்கல்

வாழ்வில் எத்தனை இன்னல்
முதிர் கன்னியோடு ஏங்கி ஏங்கி
இளைத்துப் போனது பின்னல்
- கன்னிக்கோவில் இராஜா - சென்னைவாசி

மார்கழி மாதப் பனிக்காலம்
மனத்தில் எண்ணங்கள் தேக்கி வாசலில்
வரைந்தாள் அழகிய கோலம்

வீசும் மெல்லியக் காற்று
வயலில் ஆனந்த நடனம்
ஆடிக் களிக்கும் நாற்று
- ந.க. துறைவன் - உப்பு பொம்மைகள்

இயற்கைக்கு வந்தது ஊறு!
ஏரி குளங்களில் கட்டினார்கள் வீடு!
இனியாவது நீ மாறு!

கொட்டி தீர்த்த மழை!
வீடுகளில் உள்ளே புகுந்தது நீரு!
தூர்வாறா குளங்களால் பிழை!
- " தளிர் அண்ணா" சா. சுரேஷ்பாபு

கவிதைக்குக் குறுகிய வடிவம் சிறப்புடையது என்பதில் ஐயமில்லை. அந்தச் சிறப்பை ஹைக்கூ,சென்ரியு, லிமரைக்கூ பெற்றுள்ளன. சொற்கள் குறையும் பொழுது சொற்களுக்கிடையே மௌனங்கள் கூடுகின்றன. இந்த மௌனங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. சிந்திக்கும்பொழுது நமக்குள் கூர்மைப்படுகிறோம். இந்தத் திசையில்தான் அந்தக் கவிதைகள் நம்மோடு ஒட்டுகின்றன. உறவாடுகின்றன. அவை நம்மோடும் உரையாடுகின்றன. குறுகிய வடிவம் என்பதன் காரணமாகப் படிமம், குறியீடு, தொன்மம் முன்னுக்கு வருகின்றன. அவைதான் கவிதைக்கு உயிராய் அமைகின்றன என்று சொல்வதில் தவறு இல்லை என்பார் ஞானி.

இன்று  தமிழில்  இவ்வகை  வடிவங்களைத்  தவிர ஹைபுன்,  லிபுன்,  குறட்கூ,  சீர்க்கூ, கஸல்  எனப்  பல  வடிவங்கள்  உருவாகிக்  கொண்டு வருகின்றன.  
காண்க : 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Empty Re: லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

Post by ராகவா Wed 26 Mar 2014 - 17:57

மிகவும் சிறப்பான தொடக்கம் நண்பா...தொடருங்கள் நானும் வருகிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Empty Re: லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

Post by பர்ஹாத் பாறூக் Wed 26 Mar 2014 - 19:54

லிமரிக்ஸ் என்ற ஆங்கில கவிதை வடிவினை மஹாகவி து. உருத்திரமூர்த்தி அவர்கள் குறும்பா எனும் பெயரில் தமிழுக்கு கொண்டு வந்தார்

1966 ம் ஆண்டு வெளிவந்த மஹாகவி து.உருத்திரமூர்த்தி அவர்களின் மஹாகவியின்  குறும்பா எனும் நூலுக்கு எஸ் பொன்னுத்துரை வழங்கிய முன்னீடு... கீழே..


லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் 332cx9k
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் 9vbbsi
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Xer8dd
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Zmxdw5
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் 167ukch
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் 35lc9bs
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Aexxy1
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Wb5v6s
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் 154v8dg
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Fa5rp1
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் 22ahom
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Op7cjo
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Jjxrhu
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் 143bzd


மஹாகவியின் முழு குறும்பா நூலையும் மின்நூல் வடிவில் படிக்க..
அழுத்துக

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் 150px-427
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Empty Re: லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 27 Mar 2014 - 4:58

மிகவும் விரிவானதொரு தகவல்... தமிழ் கவிஞர்கள் மத்தியில் இந்த லிமரிக் வடிவம் செல்வாக்குப் பெற வில்லை. அதற்குப் பதிலாக - ஈரோடு தமிழன்பனால் அறிமுகப்படுத்தப்பட்ட லிமரைக்கூ வடிவம் செல்வாக்குப் பெற்று வளர்ந்து வருகிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Empty Re: லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

Post by Nisha Thu 27 Mar 2014 - 10:25

பழைய, புதிய லிமரைக்கூ  குறித்த விபரங்களை பகிர்ந்தமைக்கா்க ரமேஷ் சாருக்கும், பர்ஹாத்துக்கும்  நன்றி!


Last edited by Nisha on Thu 27 Mar 2014 - 18:21; edited 2 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Empty Re: லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

Post by ந.க.துறைவன் Thu 27 Mar 2014 - 12:53

நண்பர்.கவியருவி இரமேஷ் லிமரைக்கூ வை அறிமுகப்படுத்தியதும்
அதற்கு மகாகவியின் நூலுக்காக படைப்பாளி எஸ்.பொன்னுத்துரையின்
விரிவான அணிந்துரையை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது.
தொடரட்டும்... வாழ்த்துக்கள்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Empty Re: லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 27 Mar 2014 - 18:04

மகிழ்ச்சி தோழர்களே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Empty Re: லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum