Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
இஸ்லாமியக கண்ணோட்டத்தில் குற்றமும் தண்டனையும்
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இஸ்லாமியக கண்ணோட்டத்தில் குற்றமும் தண்டனையும்
குற்றம், தண்டனை பற்றிய பிற கண்ணோட்டங்கள் மனித சிந்தனையில் அடிப்படையில் எழ இஸ்லாமிய கண்ணோட்டம் அல்லாஹ், றஸ¥லின் வழிகாட்டலில் உருவாகியுள்ளது.
‘குற்றமென்பது குறித்த சட்ட வரையறைக்களுக்கு அல்லது உடன்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர் அவற்றை மீறி நடத்தலாகும்’
‘தனி மனிதனோ அல்லது ஒரு குழுவோ பிறருக்குப் பாதகம் ஏற்படுத்தக் கூடிய காரியங்களைச் செய்வது அல்லது செய்யுமாறு பிறரைத் தூண்டுவதாகும்.’
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ‘அல்லாஹ்வும் றஸ¥லும் குற்றச் செயல்களெனக் குறித்துரைத்தவற்றில் பருவ வயதை அடைந்த புத்தி சுயாதீன முள்ளவர் ஈடுபடுவது’ ஏற்றம் எனப்படும்.
குற்றம் நடைபெறுவதற்குரிய காரணங்கள்
1. பொருளியல் காரணிகள்
2. உளவியல் காரணிகள்
பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் மனித இயல்பூக்கங்களுமே குற்றச் செயல்கள் நடைபெறக் காரணிகளாகும். இவ்விரு காரணிகளையும் உணர்ந்து குற்றம் நடவாத சூழலை ஏற்படுத்துவதில் இஸ்லாம் கவனம் செலுத்துகிறது.
பொருளாதார ஏற்றத் தாழ்வைக் குறைப்பதற்காக ஸக்காத் விதியாக்கப்பட்டுள்ளது. இக்கடமை நிறுவன ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் போது சமூகத்தில் வறுமை ஒழிக்கப்பட வாய்ப்புண்டு ஸதகர் ஹிபத் (அன்பளிப்பு) போன்ற ஸ¤ன்னத்தான அமல்களும் சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வை சீர்செய்ய உதவுகின்றன.
இயல்பூக்கங்களை நிவர்த்தி செய்து கொள்ள இஸ்லாம் வழி அமைத்துள்ளது. உரிய வயதில் விவாகம் செய்வதற்கு ஊக்கமளிக்கின்றது.
திருமணம் முடிக்க வசதியற்றோருக்கு பொது நிதியிலிருந்து உதவியளிக்கத் தூண்டுகிறது. பலதார மணத்துக்கு அனுமதியளித்துள்ளது-
ஆசைகளை முறைப்படி நிவர்த்தி செய்துகொள்வதற்கான வழிமுறைகளை வழங்கியிருப்பதுடன் உள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சியும் இஸ்லாமிய நடைமுறையில் இடம்பெறுகிறது.
தக்வா, ஸ¤ஹ்த், கவ்ப், வரஃ போன்ற ஆன்மீகப் பண்புகள் இயல்பூக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
குற்றங்களின் வகைகள்
1. சமூகவிரோதச் செயல்கள் 2. சாதாரண குற்றங்கள்
சமூக விரோதச் செயல்கள்
சமூக ஒழுக்கத்தை மாசுபடுத்தி கட்டுக்கோப்பை சீர்குலைக்கின்றன. இதற்குரிய தண்டனைகள் சமூக சீர்திருத்தத்தை மையமாகக் கொண்டே அமைந்திருக்கும் இவை இருவகைகளாகப் பாகுபடுத்தப்படுகின்றன.
1. வரையறை செய்யப்பட்ட தண்டனைகளையுடைய குற்றங்கள்
1) ரித்தத் (மதம் மாறுதல்)
2) அந்நிய ஆண், பெண் தகாத உறவு
3) திருடுதல்
4) மதுவருந்துதல்
5) அபாண்டம் சுமத்துதல் (படுதூறு சொல்லல்)
6) இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்தல்
2. நட்ட ஈடு பெறல் அல்லது (இஸாஸ்) பழி வாங்குதல் என்னும் தண்டனைக்குரிய குற்றங்கள்
1) கொலை செய்தல்
(அ) திட்டமிட்ட கொலை (ஆ) கை மோசக் கொலை
2) காயம் ஏற்படுத்தல்
(அ) திட்டமிட்டுக் காயம் ஏற்படுத்தல்
(ஆ) தவறுதலாகக் காயம் ஏற்படுத்தல்
சாதாரண குற்றங்கள்
சமூகத்தை வெகுவாகப் பாதிக்காத குற்றங்கள்
1) அடிப்படையிலேயே சாதாரண குற்றங்கள்
2) வரையறுக்கப்பட்ட தண்டனை உடைய குற்றங்களில் பூரணத்துவ மடையாதவை
3) நட்டஈடு பெறும் குற்றங்களில் பாதிக்கப்பட்டவரால் மன்னிக்கப்படுபவை.
தண்டனை
அல்லாஹ்வும், றஸ¥லும் விதித்த சட்ட வயைறைகளை மீறிய ஒருவரை பழைய நிலைக்கு மீட்டுவதற்காக அல்லது அத்தகைய வரையறைகளை மீறுவதிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்படுகின்ற ஷரீஅத் குறிப்பிடுகின்ற பரிகார நடவடிக்கைகள் தண்டனையாகும். பின்வரும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.
1) தண்டனை சட்ட ரீதியானதாக இருத்தல் (சட்ட அங்கீகாரம் பெற்றிருத்தல்)
2) மிகப் பொருத்தமானதாக இருத்தல்
3) குற்றம் நிகழ முன்னர் தடுக்கக் கூடியதாக இருத்தல்.
4) மிக உயர்ந்த குறிக்கோள் உடையதாக இருத்தல்
5) தண்டனையின் போது தனி மனிதன் அல்லது குழு பாதிக்கப்படுவதைப் பொருட்படுத்தாதிருத்தல்.
தண்டனை வழங்குவதற்கு முன்னர் குற்றமிழைத்து சூழல், சந்தர்ப்பம் ஆகியவற்றை இஸ்லாம் கவனத்தில் கொள்கிறது. செய்த குற்றத்திற்கு குற்றாவளி எந்த அளவு பொறுப்பாக இருக்கிறான்.
1) தாங்கொணாப் பசியின் காரணத்தால் திருடுதல்
2) உரிய பாதுகாப்பில் வைக்கப்படாத பொருளைத் திருடுவதால்.
இவ்விரு சந்தர்ப்பங்களிலும் கரம் துண்டிக்கும் தண்டனை வழங்கப்படுவதில்ல
முன்னையதில் பசித்தவனுக்கு உணவளிக்க வேண்டிய பொறுப்பை சமூகம் நிறைவேற்றத் தவறியுள்ளது. பின்னையதில் சொத்தின் உரியைமாளர் அதனை உரிய பாதுகாப்பில் வைக்காமை தண்டனை வழங்குவதற்கு முன்னர் சாட்சியத்தின் மூலம் அல்லது சுய ஒப்புதல் மூலம் குற்றம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். இஸ்லாமிய வழியில் நல்லவர்களாக வாழ்வோம்.
நன்றி தினகரன்
தண்டனைகளின் விபரம் அடுத்த பதிவில் தருகிறேன்
‘குற்றமென்பது குறித்த சட்ட வரையறைக்களுக்கு அல்லது உடன்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர் அவற்றை மீறி நடத்தலாகும்’
‘தனி மனிதனோ அல்லது ஒரு குழுவோ பிறருக்குப் பாதகம் ஏற்படுத்தக் கூடிய காரியங்களைச் செய்வது அல்லது செய்யுமாறு பிறரைத் தூண்டுவதாகும்.’
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ‘அல்லாஹ்வும் றஸ¥லும் குற்றச் செயல்களெனக் குறித்துரைத்தவற்றில் பருவ வயதை அடைந்த புத்தி சுயாதீன முள்ளவர் ஈடுபடுவது’ ஏற்றம் எனப்படும்.
குற்றம் நடைபெறுவதற்குரிய காரணங்கள்
1. பொருளியல் காரணிகள்
2. உளவியல் காரணிகள்
பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் மனித இயல்பூக்கங்களுமே குற்றச் செயல்கள் நடைபெறக் காரணிகளாகும். இவ்விரு காரணிகளையும் உணர்ந்து குற்றம் நடவாத சூழலை ஏற்படுத்துவதில் இஸ்லாம் கவனம் செலுத்துகிறது.
பொருளாதார ஏற்றத் தாழ்வைக் குறைப்பதற்காக ஸக்காத் விதியாக்கப்பட்டுள்ளது. இக்கடமை நிறுவன ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் போது சமூகத்தில் வறுமை ஒழிக்கப்பட வாய்ப்புண்டு ஸதகர் ஹிபத் (அன்பளிப்பு) போன்ற ஸ¤ன்னத்தான அமல்களும் சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வை சீர்செய்ய உதவுகின்றன.
இயல்பூக்கங்களை நிவர்த்தி செய்து கொள்ள இஸ்லாம் வழி அமைத்துள்ளது. உரிய வயதில் விவாகம் செய்வதற்கு ஊக்கமளிக்கின்றது.
திருமணம் முடிக்க வசதியற்றோருக்கு பொது நிதியிலிருந்து உதவியளிக்கத் தூண்டுகிறது. பலதார மணத்துக்கு அனுமதியளித்துள்ளது-
ஆசைகளை முறைப்படி நிவர்த்தி செய்துகொள்வதற்கான வழிமுறைகளை வழங்கியிருப்பதுடன் உள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சியும் இஸ்லாமிய நடைமுறையில் இடம்பெறுகிறது.
தக்வா, ஸ¤ஹ்த், கவ்ப், வரஃ போன்ற ஆன்மீகப் பண்புகள் இயல்பூக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
குற்றங்களின் வகைகள்
1. சமூகவிரோதச் செயல்கள் 2. சாதாரண குற்றங்கள்
சமூக விரோதச் செயல்கள்
சமூக ஒழுக்கத்தை மாசுபடுத்தி கட்டுக்கோப்பை சீர்குலைக்கின்றன. இதற்குரிய தண்டனைகள் சமூக சீர்திருத்தத்தை மையமாகக் கொண்டே அமைந்திருக்கும் இவை இருவகைகளாகப் பாகுபடுத்தப்படுகின்றன.
1. வரையறை செய்யப்பட்ட தண்டனைகளையுடைய குற்றங்கள்
1) ரித்தத் (மதம் மாறுதல்)
2) அந்நிய ஆண், பெண் தகாத உறவு
3) திருடுதல்
4) மதுவருந்துதல்
5) அபாண்டம் சுமத்துதல் (படுதூறு சொல்லல்)
6) இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்தல்
2. நட்ட ஈடு பெறல் அல்லது (இஸாஸ்) பழி வாங்குதல் என்னும் தண்டனைக்குரிய குற்றங்கள்
1) கொலை செய்தல்
(அ) திட்டமிட்ட கொலை (ஆ) கை மோசக் கொலை
2) காயம் ஏற்படுத்தல்
(அ) திட்டமிட்டுக் காயம் ஏற்படுத்தல்
(ஆ) தவறுதலாகக் காயம் ஏற்படுத்தல்
சாதாரண குற்றங்கள்
சமூகத்தை வெகுவாகப் பாதிக்காத குற்றங்கள்
1) அடிப்படையிலேயே சாதாரண குற்றங்கள்
2) வரையறுக்கப்பட்ட தண்டனை உடைய குற்றங்களில் பூரணத்துவ மடையாதவை
3) நட்டஈடு பெறும் குற்றங்களில் பாதிக்கப்பட்டவரால் மன்னிக்கப்படுபவை.
தண்டனை
அல்லாஹ்வும், றஸ¥லும் விதித்த சட்ட வயைறைகளை மீறிய ஒருவரை பழைய நிலைக்கு மீட்டுவதற்காக அல்லது அத்தகைய வரையறைகளை மீறுவதிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்படுகின்ற ஷரீஅத் குறிப்பிடுகின்ற பரிகார நடவடிக்கைகள் தண்டனையாகும். பின்வரும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.
1) தண்டனை சட்ட ரீதியானதாக இருத்தல் (சட்ட அங்கீகாரம் பெற்றிருத்தல்)
2) மிகப் பொருத்தமானதாக இருத்தல்
3) குற்றம் நிகழ முன்னர் தடுக்கக் கூடியதாக இருத்தல்.
4) மிக உயர்ந்த குறிக்கோள் உடையதாக இருத்தல்
5) தண்டனையின் போது தனி மனிதன் அல்லது குழு பாதிக்கப்படுவதைப் பொருட்படுத்தாதிருத்தல்.
தண்டனை வழங்குவதற்கு முன்னர் குற்றமிழைத்து சூழல், சந்தர்ப்பம் ஆகியவற்றை இஸ்லாம் கவனத்தில் கொள்கிறது. செய்த குற்றத்திற்கு குற்றாவளி எந்த அளவு பொறுப்பாக இருக்கிறான்.
1) தாங்கொணாப் பசியின் காரணத்தால் திருடுதல்
2) உரிய பாதுகாப்பில் வைக்கப்படாத பொருளைத் திருடுவதால்.
இவ்விரு சந்தர்ப்பங்களிலும் கரம் துண்டிக்கும் தண்டனை வழங்கப்படுவதில்ல
முன்னையதில் பசித்தவனுக்கு உணவளிக்க வேண்டிய பொறுப்பை சமூகம் நிறைவேற்றத் தவறியுள்ளது. பின்னையதில் சொத்தின் உரியைமாளர் அதனை உரிய பாதுகாப்பில் வைக்காமை தண்டனை வழங்குவதற்கு முன்னர் சாட்சியத்தின் மூலம் அல்லது சுய ஒப்புதல் மூலம் குற்றம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். இஸ்லாமிய வழியில் நல்லவர்களாக வாழ்வோம்.
நன்றி தினகரன்
தண்டனைகளின் விபரம் அடுத்த பதிவில் தருகிறேன்
Re: இஸ்லாமியக கண்ணோட்டத்தில் குற்றமும் தண்டனையும்
நாம் வெளியில் நின்று கேட்பதற்கும் உள்ளே நுழைந்து பார்ப்பதற்கும் வேறுபாடிருக்கும் என்பதை உங்கள் முதல் பதிவு எனக்கு உணர்த்துகிறது.
இறையியலும் கூட மனவியல் சார்ந்தே எழுதப்ட்டிருக்கிறது. இறைவன் கருணையற்றவன் அல்ல.
அவன் சொல்லியதை கருணையற்றோரால் தவறாக பயன் படுத்தப்படும் போது இறையின் நாமமே தூஷிக்க்கப்டுகிறதே என்பதை உணராத வனாய் மனிதன் இருக்கிறான்!
தொடருங்கள்..
இறையியலும் கூட மனவியல் சார்ந்தே எழுதப்ட்டிருக்கிறது. இறைவன் கருணையற்றவன் அல்ல.
அவன் சொல்லியதை கருணையற்றோரால் தவறாக பயன் படுத்தப்படும் போது இறையின் நாமமே தூஷிக்க்கப்டுகிறதே என்பதை உணராத வனாய் மனிதன் இருக்கிறான்!
தொடருங்கள்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இஸ்லாமியக கண்ணோட்டத்தில் குற்றமும் தண்டனையும்
மிக்க நன்றி சகோ
நீண்ட நாட்களின் பின்னரான முதல் பதிவு இது
தொடர முயற்சிக்கிறேன்
வேலைப்பழுதான் என்னை இத்தளத்தைவிட்டு தூரமாக்கி வைத்திருந்தது
நீண்ட நாட்களின் பின்னரான முதல் பதிவு இது
தொடர முயற்சிக்கிறேன்
வேலைப்பழுதான் என்னை இத்தளத்தைவிட்டு தூரமாக்கி வைத்திருந்தது
Re: இஸ்லாமியக கண்ணோட்டத்தில் குற்றமும் தண்டனையும்
சகோ கட் நிஷா போதும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இஸ்லாமியக கண்ணோட்டத்தில் குற்றமும் தண்டனையும்
நல்லதொரு பதிவு.
தொடருங்கள் ஹாசிம்.
தொடருங்கள் ஹாசிம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|