Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி
3 posters
Page 1 of 1
சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-வது பிளாட்பாரத்தில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கவுஹாத்தி-பெங்களூரு விரைவு ரயில் 9-வது நடைமேடைக்கு வந்த போது இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயிலின் எஸ்3 மற்றும் எஸ்5 பெட்டியில் பயங்கர சத்தத்துடன் இரு குண்டுகள் வெடித்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த 10 பேரும் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பில் 2 ரயில் பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகவவும் தெரிகிறது.
ஒருவர் பலி:
சென்னை சென்ட்ரலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குண்டூரைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் சதியா?
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவாளி ஜாகீர் உசேன் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குண்டுவெடித்துள்ளது.
அறிக்கை அளிக்க உத்தரவு:
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக அறிக்கை தர தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இழப்பீடு அறிவிப்பு:
குண்டுவெடிப்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், படுகாயமடைந்ததோருக்கு ரூ.25,000, லேசான காயமடைந்தோருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ராதெரிவித்தார். குண்டுவெடிப்பு தொடர்பாக தொலைபேசியில் ரயில்வே அமைச்சர் விசாரித்ததாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார். பிற ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரயில் குண்டுவெடிப்பு தகவல்களை பெற 044 25357398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளதாக கூறினார்.
சென்னையிலிருந்து புறப்பட்ட கவுகாத்தி ரயில்:
சென்னை சென்ட்ரலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த கவுகாத்தி விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது. பலத்த பாதுகாப்புடன் குண்டுவெடிப்பு நிகர்ந்த விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது.
மக்கள் பீதியடைய வேண்டாம்:
சென்ட்ரல் குண்டுவெடிப்பில் உயிரிழந்த சுவாதி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 14 பேரும் விரைந்து குணமடைய தாம் பிரார்த்திப்பதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னையில் நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் தமிழக மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
ஒருவர் கைது:
குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் முகமது பாசில் என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பிரபல மருந்து கடை ஒன்றில் காசாளராக வேலை செய்து வருவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பாசில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ரயிலில் கழிவறை ஒன்றில் ஒளிந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மன்மோகன்சிங் கடும் கண்டனம்:
சென்னை குண்டுவெடிப்புக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த குண்டுவெடிப்பு கோழைத்தனமான செயல் என்றும் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டுள்ள விரக்தியின் வெளிப்பாடே இந்த குண்டுவெடிப்பு என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
5 பேருக்கு அறுவைச் சிகிச்சை
குண்டுவெடிப்பில் காயமடைந்த 5 பேருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. உமாராணி, விமல்குமார், உள்ளிட்ட 5 பேருக்கும் அறுவை சிக்ச்சை அளிக்கப்பட்டது.
நன்றி தினகரன்
Re: சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி
வழக்கம்போல முஸ்லிம்கள் மீது பழி வரும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி
இந்த தீவிரவாத செயலுக்கு எந்த
அமைப்பு பொறுப்பு ஏற்கிறது என்பதை
எதிர்நோக்கலாம்...
-
அமைப்பு பொறுப்பு ஏற்கிறது என்பதை
எதிர்நோக்கலாம்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கிருஷ்ணகிரியில் குண்டு வெடிப்பு ஒருவர் பலி :
» கள்ளத்தனமாக வெடிகுண்டு தயாரித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மகன் குண்டு வெடித்து பலி
» ரூ 2 கோடி சீன செல்போன்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!
» பாரிஸ் ரயில் நிலையத்தில் 20 கிலோ தங்கம்
» முதலையின் மேல் குண்டு பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்!
» கள்ளத்தனமாக வெடிகுண்டு தயாரித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மகன் குண்டு வெடித்து பலி
» ரூ 2 கோடி சீன செல்போன்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!
» பாரிஸ் ரயில் நிலையத்தில் 20 கிலோ தங்கம்
» முதலையின் மேல் குண்டு பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|