Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Today at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52
» பல்சுவை - 5
by rammalar Today at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!
+2
rammalar
Nisha
6 posters
Page 1 of 1
தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!
தூக்கமின்மை தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தகவல் வெளியிட்டு வருகின்றனர் விஞ்ஞானிகள்.
அந்த வகையில் தூக்கமின்மை தொடர்பாக மனிதர்களிடம் பெரும் அலட்சியப் போக்கு காணப்படுகிறது, அது அவர்களின் உயிருக்கே உலை வைக்கக்கூடிய ஆபத்தாக உருமாறியிருப்பதாக சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு, மான்செஸ்டர் மற்றும் சர்ரே பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இந்தக் கூட்டு எச்சரிக்கையை விடுத்திருப்பவர்கள்.
மனித உடலின் இயற்கையான செயல்பாடான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் மனித உடலியக்கச் செயல்பாட்டு கண்காணிப்புத்தன்மையை ‘உடல் கடிகாரம்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.
கண்ணுக்குத் தெரியாத, ஆனால் மனித உடலின் அடிப்படைத் தேவையான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் இந்த மனித உடல் கடிகாரம் என்பது சுமார் 400 கோடி ஆண்டு களாக படிப்படியாக உருவான ஒன்று என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஒருநாளின் 24 மணி நேரத்தில் சராசரியாக வெளிச்சமாக இருக்கும் பகல் 12 மணி நேரத்தில் மனித உடல் விழிப்புடனும் துடிப்புடனும் இருப்பதும், வெளிச்சமற்ற 12 மணி நேரமான இரவில் மனித உடல் உறக்கம் கொள்வதுமான நடைமுறை என்பது இன்று நேற்று உருவானதல்ல. அது இன்றைய மனித உடல் உருவாகக் காரணமாக அமைந்த சுமார் 400 கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக உருவாகி மனித உடலுக்குப் பழகிய ஒன்று என்கிறார், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரஸ்ஸல் பாஸ்டர்.
இப்படி பல கோடி ஆண்டுகளின் பரிணாமத்தை தன்னுள் கொண்டு அதற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு வளர்ந்திருக்கும் இன்றைய மனித உடலின் கடிகாரச் செயல்பாட்டில் தற்போது மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார் அவர்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் தூங்கிய சராசரி நேரத்தைவிட, இன்றைய மனிதர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் குறைவாக தூங்குவதாகக் கூறும் அவர், இந்த குறைவான தூக்கம் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கிறார்.
தூக்கமின்மை என்பது வெறும் இரவு நேரப்பணியில் ஈடுபடுபவர்களை மட்டும் பாதிக்கும் பிரச்சினை அல்ல என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். இன்றைய நிலையில் இது ஒட்டுமொத்தமாக மனிதர்கள் அனைவரையும் பாதிக்கிறது என்றும், தொழில்நுட்பம் இதில் முக்கியக் காரணியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார்கள் அவர்கள்.
குறிப்பாக, குறிப்பிட்ட ரக மின்சார விளக்குகளின், நீலநிறம் அதிகமுள்ள வெளிச்சமும், தொடுதிரைக் கணினி மற்றும் தொடுதிரை செல்பேசிகளின் திரைகளில் இருந்து வெளியாகும் நீலம் கலந்த வெண்மையான வெளிச்சமும் மனிதக் கண்களில் தொடர்ந்து மணிக்கணக்கில் படும்போது தூக்கம் பெருமளவு பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
அதன் விளைவாக மேற்கத்திய நாடுகளில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் கூட தங்களின் தாத்தா, பாட்டிகளின் தூக்க மாத்திரைகளை சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டிருப்பதாகவும் இந்த விஞ்ஞானிகள் கவலையுடன் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இப்படி முறையான, போதுமான தூக்கமில்லாமல் இருப்பதன் காரணமாக இதயநோய், நீரிழிவு நோய், உடல் பருமன், தொற்றுநோய்கள் மட்டுமல்ல, புற்றுநோய்கூட ஏற்படலாம் என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.
எனவே இரவு நேரத்தில் தொடுதிரைக் கணனி அல்லது தொடுதிரை செல்பேசி திரைகளில் மணிக்கணக்கில் பார்க்கும் பழக்கத்தையும், வீடுகளின் மின்விளக்குகளில் கூடுதல் நீலநிற வெண்மையை வெளியிடும் விளக்கு வெளிச்சத்தில் இருப்பதை தவிர்க்கும் படியும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் அலட்சியம் ஆபத்தையே தரும் என்பது அவர்களின் கருத்து
http://www.newsonews.com/view.php?204608q2203fnBdd4ea4mOld4cb0C6AAeddcAoMQedbcaRlOS3e43ZBnZ3e03cE80Q23
அந்த வகையில் தூக்கமின்மை தொடர்பாக மனிதர்களிடம் பெரும் அலட்சியப் போக்கு காணப்படுகிறது, அது அவர்களின் உயிருக்கே உலை வைக்கக்கூடிய ஆபத்தாக உருமாறியிருப்பதாக சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு, மான்செஸ்டர் மற்றும் சர்ரே பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இந்தக் கூட்டு எச்சரிக்கையை விடுத்திருப்பவர்கள்.
மனித உடலின் இயற்கையான செயல்பாடான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் மனித உடலியக்கச் செயல்பாட்டு கண்காணிப்புத்தன்மையை ‘உடல் கடிகாரம்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.
கண்ணுக்குத் தெரியாத, ஆனால் மனித உடலின் அடிப்படைத் தேவையான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் இந்த மனித உடல் கடிகாரம் என்பது சுமார் 400 கோடி ஆண்டு களாக படிப்படியாக உருவான ஒன்று என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஒருநாளின் 24 மணி நேரத்தில் சராசரியாக வெளிச்சமாக இருக்கும் பகல் 12 மணி நேரத்தில் மனித உடல் விழிப்புடனும் துடிப்புடனும் இருப்பதும், வெளிச்சமற்ற 12 மணி நேரமான இரவில் மனித உடல் உறக்கம் கொள்வதுமான நடைமுறை என்பது இன்று நேற்று உருவானதல்ல. அது இன்றைய மனித உடல் உருவாகக் காரணமாக அமைந்த சுமார் 400 கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக உருவாகி மனித உடலுக்குப் பழகிய ஒன்று என்கிறார், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரஸ்ஸல் பாஸ்டர்.
இப்படி பல கோடி ஆண்டுகளின் பரிணாமத்தை தன்னுள் கொண்டு அதற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு வளர்ந்திருக்கும் இன்றைய மனித உடலின் கடிகாரச் செயல்பாட்டில் தற்போது மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார் அவர்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் தூங்கிய சராசரி நேரத்தைவிட, இன்றைய மனிதர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் குறைவாக தூங்குவதாகக் கூறும் அவர், இந்த குறைவான தூக்கம் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கிறார்.
தூக்கமின்மை என்பது வெறும் இரவு நேரப்பணியில் ஈடுபடுபவர்களை மட்டும் பாதிக்கும் பிரச்சினை அல்ல என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். இன்றைய நிலையில் இது ஒட்டுமொத்தமாக மனிதர்கள் அனைவரையும் பாதிக்கிறது என்றும், தொழில்நுட்பம் இதில் முக்கியக் காரணியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார்கள் அவர்கள்.
குறிப்பாக, குறிப்பிட்ட ரக மின்சார விளக்குகளின், நீலநிறம் அதிகமுள்ள வெளிச்சமும், தொடுதிரைக் கணினி மற்றும் தொடுதிரை செல்பேசிகளின் திரைகளில் இருந்து வெளியாகும் நீலம் கலந்த வெண்மையான வெளிச்சமும் மனிதக் கண்களில் தொடர்ந்து மணிக்கணக்கில் படும்போது தூக்கம் பெருமளவு பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
அதன் விளைவாக மேற்கத்திய நாடுகளில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் கூட தங்களின் தாத்தா, பாட்டிகளின் தூக்க மாத்திரைகளை சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டிருப்பதாகவும் இந்த விஞ்ஞானிகள் கவலையுடன் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இப்படி முறையான, போதுமான தூக்கமில்லாமல் இருப்பதன் காரணமாக இதயநோய், நீரிழிவு நோய், உடல் பருமன், தொற்றுநோய்கள் மட்டுமல்ல, புற்றுநோய்கூட ஏற்படலாம் என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.
எனவே இரவு நேரத்தில் தொடுதிரைக் கணனி அல்லது தொடுதிரை செல்பேசி திரைகளில் மணிக்கணக்கில் பார்க்கும் பழக்கத்தையும், வீடுகளின் மின்விளக்குகளில் கூடுதல் நீலநிற வெண்மையை வெளியிடும் விளக்கு வெளிச்சத்தில் இருப்பதை தவிர்க்கும் படியும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் அலட்சியம் ஆபத்தையே தரும் என்பது அவர்களின் கருத்து
http://www.newsonews.com/view.php?204608q2203fnBdd4ea4mOld4cb0C6AAeddcAoMQedbcaRlOS3e43ZBnZ3e03cE80Q23
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!
பயனுள்ள கட்டுரை பகிர்வு
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24406
மதிப்பீடுகள் : 1186
Re: தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!
இன்றிலிருந்தாவது இந்த நண்பன் திருந்தி நேரத்திற்கு தூங்குவாரா _* )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!
ஒருகாலும் நடக்காது...நண்பன் wrote:இன்றிலிருந்தாவது இந்த நண்பன் திருந்தி நேரத்திற்கு தூங்குவாரா _* )*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!
நண்பன் wrote:இன்றிலிருந்தாவது இந்த நண்பன் திருந்தி நேரத்திற்கு தூங்குவாரா _* )*
நானும் முடிவு எடுக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!
அப்ப இன்றைய இரவு முழுதும் திங் பன்னுங்க...Nisha wrote:நண்பன் wrote:இன்றிலிருந்தாவது இந்த நண்பன் திருந்தி நேரத்திற்கு தூங்குவாரா _* )*
நானும் முடிவு எடுக்கணும்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!
ஆமப்பா தூக்கமின்மை ஆபத்தானது என்று தெரிந்தும் அதிகமாக தூங்கக் கிடைப்பதில்லை
இனிமேலாவது தூங்கணும்பா
பயனுள்ள கட்டுரைப்பகிர்வு நன்றி
இனிமேலாவது தூங்கணும்பா
பயனுள்ள கட்டுரைப்பகிர்வு நன்றி
Re: தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!
பாவம் பயபுள்ள..நல்ல தூங்க இனி தினமும் சேனையில் உலா வாருங்கள்..சீர்க்கிரம் போய் தூங்க நான் கேரண்டி..நேசமுடன் ஹாசிம் wrote:ஆமப்பா தூக்கமின்மை ஆபத்தானது என்று தெரிந்தும் அதிகமாக தூங்கக் கிடைப்பதில்லை
இனிமேலாவது தூங்கணும்பா
பயனுள்ள கட்டுரைப்பகிர்வு நன்றி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» நமது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை..!
» நீண்ட நேரம் உட்காருவது உயிருக்கு ஆபத்து
» தினமும் 11 மணிநேரம் அமர்வது உயிருக்கு ஆபத்து
» பகல் தூக்கம் உடலுக்கு ஆபத்து
» நமது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை..!
» நீண்ட நேரம் உட்காருவது உயிருக்கு ஆபத்து
» தினமும் 11 மணிநேரம் அமர்வது உயிருக்கு ஆபத்து
» பகல் தூக்கம் உடலுக்கு ஆபத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|