Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
அந்த கடைசி நிமிடங்கள்...
Page 1 of 1
அந்த கடைசி நிமிடங்கள்...
மணிமாறன்
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர், இங்கே ஓவிய கல்லூரி படிப்பை முடித்து விட்டு இது தொடர்பான உயர்படிப்பிற்காக ஐதாராபாத்தில் இருப்பவர்.
ஓவியம் வரைவதிலும், புகைப்படம் எடுப்பதிலும் இவருக்கு விருப்பம் அதிகம்.
மணிமாறன் சென்னை வந்திருந்த போது இவரது 94 வயது தாத்தா நமசிவாயம் உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். மனைவி லட்சுமியம்மாள்(86)அருகில் இருந்து கவனித்துக்கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட ஏழு தலைமுறையை பார்த்துவிட்ட நமசிவாயம் நடமாட முடியாமல் படுக்கும் வரை மிகவும் சுறுசுறுப்பாக இருந்தவர், இயங்கியவர். சிறு சிறு வியாபாரம் செய்தவர், கடைசியில் உறவினர் ஒருவரின் பிரின்டிங் பிரஸ்சை பார்த்துக் கொண்டார்.
இவரது உயிரே அந்த பிரின்டிங் பிரஸ் என்று சொல்லலாம். பிரஸ்சை திறப்பதும் மூடுவதும் இவரது பிரதான வேலை. பிரஸ்சின் சாவியை கையில் எடுத்து விட்டாலே இவருக்கு தனி பலம் வந்துவிடும்.
வேதனை கலந்த முயற்சி:
இப்படிப்பட்டவர் முதுமை நோய் காரணமாக படுத்த படுக்கையில் விழுந்து விட்டார், எப்படியும் இரவிற்குள் இறந்துவிடுவார் என்ற நிலையில் அந்த வீடும் தாத்தாவின் அறையும் ஒருவிதமாக சோக சூழலுக்குள் அமிழ்ந்து கிடந்தது. நல்லபடியாக அவரது ஜீவன் அடங்க வேண்டுமே என வீட்டில் உள்ளவர்கள் பிரார்த்திக் கொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு மேல் தன்னோடு வாழ்ந்த கணவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் தன்னைவிட்டு பிரிய போகிறார் என்ற நிஜத்தை தாங்கமுடியாமல் அருகில் இருந்தபடி அழுது கொண்டிருந்தார் லட்சுமியம்மாள்.
அங்கு இருந்த மணிமாறனுக்கு அங்கு நிலவிய ஒரு அழுத்தமான சோகத்தை பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது. அது சரியா? தவறா? என்றெல்லாம் மனதிற்குள் ஒரு பக்கம் ஒடினாலும், அந்த எண்ணத்தை எல்லாம் தள்ளி விட்டு தாத்தாவின் கடைசி தருணத்தை கேமிராவில் பதிவு செய்வது என்று முடிவு செய்தார்.
இதை கறுப்பு வெள்ளையில் பதிவு செய்வது, யாருக்கும் தெரியாமல் படம் எடுப்பது, கேமிராவை கண் அருகே கொண்டு செல்லாமல் செட்டிங் செய்து கொண்டு படம் எடுப்பது, என்று முடிவு செய்து அங்கு இருப்பவர்களுக்கு தெரியாதபடி படம் எடுக்க ஆரம்பித்தார்.
நெகிழ வைத்த காட்சிகள்:
சிலர் வந்து தாத்தாவின் நாடியை பிடித்துவிட்டு, கண்ணைப் பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கவிட்டு சென்றனர். பாட்டி மட்டும் பக்கத்தில் உட்கார்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வாயில் கஞ்சியை ஊற்றினார், கஞ்சி வாய்க்குள் செல்லாமல் வழிந்தது.
சரி பால் கொடுக்கலாம் என்று பாட்டி எழுந்திரிக்க முயற்சித்த போது தாத்தா தனது மெலிதான கையை அசைத்து பாட்டியின் புடவை தொட்டு லேசாக இழுத்தார், இந்த நேரத்தில் என்னை விட்டு எங்கேயும் போய்விடாதே என்று தாத்தா தனது விரல்மொழியால் சொல்வது போல பட்டது.
பாட்டியும் அந்த சைகையை உணர்ந்தவர் போல இன்னும் அருகில் நெருங்கி அமர்ந்தார், பாட்டியின் கண்களில் அளவிடமுடியாத சோகம், பெருகிய கண்ணீரை துடைக்ககூட தோணாமல் தாத்தாவை வைத்த கண்வாங்காமல் பார்த்தவாறு இருந்தார்.
தாத்தாவிடம் எந்த அசைவும் இல்லை, ஆனால் தொண்டைக்குழி சன்னமாக ஆனால் சீரில்லாமல் ஏறி இறங்குவதை வைத்து ஜீவன் போராடுகிறது என்பதை உணரமுடிந்தது.
அவர் உயிராக மதித்த பிரின்டிங் பிரஸ் சாவியை பாட்டி கையில் கொடுத்ததும் உடம்பில் சின்ன அசைவு ,சாவியை கொஞ்ச நேரம் இறுக்கிப் பிடித்தவரின் பொக்கை வாயில் மெலிதாக ஒரு புன்னகை, கொஞ்ச நேரம்தான், புன்னகை மறைந்தது பிடிதளர்ந்து சாவி கீழே விழுந்தது.
அதற்கு மேல் மணிமாறனால் அந்த அறைக்குள் இருக்கமுடியவில்லை.
நெஞ்சைப் பிசைந்த நிஜம்:
தாத்தாவின் அந்திம காரியங்கள் எல்லாம் முடிந்த பிறகு சில நாள் கழித்து தாத்தாவின் கடைசி தருணத்தில் எடுத்த படங்களை கம்ப்யூட்டரில் இறக்கி பார்த்தார். நேரில் பார்த்தபோது இருந்தைவிட இந்த நிழற்படத்தை பார்த்தபோது சோகத்தின் கனம் கூடியிருந்தது.
இவரது இந்த புகைப்பட முயற்சி பற்றி உடனடியாக கருத்து சொல்லமுடியாவிட்டாலும் படங்கள் நெஞ்சை பிசைந்தது மட்டும் நிஜம்.
- எல்.முருகராஜ்
தினமலர்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|