Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
மாதவிடாய் காலத்தில்
Page 1 of 1
மாதவிடாய் காலத்தில்
வயதுக்கு வந்த அதிக பெண்கள் மிகவும் அவதி படுவது அந்த 5 நாட்களில் 3 நாட்கள் அதிகமான வயிற்று வலி. இந்த வலி வருவது இயல்பு தான், இதுக்குனு நாம் மருத்துவரை அனுகி மாத்திரைகள் எடுத்தால் அதன் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும். ஆகையல் முடிந்த வரை வீட்டிலே இதுக்குனு கைமருந்து எடுத்துக்கொண்டால் பின்விளைவுகள் எதுவும் வராது.
சிறிது வெந்தயம் அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து மறுநாள் வெந்தய தண்ணீரை 3 வேளை தொடர்ந்து குடித்தால் "அந்த நாள் வயிற்று வலி" நன்றாக குறைந்து விடும். உடல் உஷ்ணம் உள்ளவற்களும் குடித்தால் உடல் உஷ்ணம் குறையும். .
அந்த 5 நாட்களில் காலை வெறும் வயிற்றில் கடுக்காய்த்தூள் 1 ஸ்பூன், மாந்துவர்ப் பொடி 1 ஸ்பூன், சீரகப் பொடி 1 ஸ்பூன் வெந்தயப் பொடி 1ஸ்பூன் அனைத்தையும் தேனில் கலந்து சாப்பிடவும். இரவும் சாப்பிடவும் இதனால் மாதவிடாய் கோளாறுகள், உடலின் சூடு, வயிற்றுபுண், கர்ப்பப்பை புண் போன்றவை நீங்கும். இன்னும் மாசம் தோறும் வயிறு வலியில் அவதிபடுபவர்கள் வயிற்றுவலி நீங்கும். உடல் அசதி நீங்கும், உடல் பலம் பெரும்,இடுப்பு வலி குறையும். .
இந்த பொடியினை சாப்பிட்ட பிறகு 1 மணி நேரம் கழித்து ஒரு ஆப்பிள், ஒரு மாதுளை சாப்பிடவும் இரவும் சாப்பிடவும். இவ்வாளு செய்தால் அந்த நாட்களில் இழந்த சத்தைத் திரும்பப் பெருவீர்கள். மாதவிலக்கு நேரங்களில் நாப்கினால் ஈரம் உள்ள உணர்வுகள் அதிகமாக இருக்கும், சில பெண்களுக்கு வெள்ளை போக்கும் இருக்கும் இந்த நேரங்களில் கிருமிகள் வர வாய்ப்புகள் அதிகம். இந்த நேரங்களில் பெண்கள் தங்கள் உடலை மிகவும் சுத்தமாக வைக்கவும். அதுக்கு அந்த நாட்களில் உள்ளாடைகளை சூடு நீரில் டெட்டால் போட்டு அலசி வெயிலில் காய போடவும்..
இரவு படுக்கும் முன்பு அந்த இடங்களை நன்றாக மிதமான சூடு நீரில் உப்பு கலந்து அலசிவிடவும். அந்த நாட்களில் குளிக்கும் பொழுது மறைவான இடங்களில் மஞ்சள்பூசி குளிக்கவும். சிலர் நாப்கினுக்கு பதிலாக துணிகளை பயன்படுத்துவார்கள் அவர்கள் கட்டாயம் துணிகளை வெந்நீரில் ஊற வைத்து கிருமி நாசி சோப்பு போட்டு நன்றாக அலசி வெயிலில் காயவைத்து பின்பு போடவும். ஓவ்வொரு முறையும் இப்படி தான் செய்யனும். 3 மாதங்களுக்கு ஒரு முறை துணியினை மாற்றவும். மாதவிலக்கு முடிந்த பின்பு 2 அல்லது 3 நாட்களுக்கு உடலுக்கு மஞ்சள்,வேப்பிலை(கொழுந்து)க், குப்பமேனி இலை இவைகளை அரைத்து உடலில் பூசி 10 நிமிடம் கழித்து குளித்துவிடவும். அந்த நாட்களில் செய்யவேண்டியவைகள் ஓய்வு மிகவும் அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ, மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது. அதிக கோபம் மனதில் தோன்றும் வெறுப்பு வரும் அதனை குறைத்துக்கொள்ளவும். மாதவிடாய் வரும் நாட்களை கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் வெளியூர் பயணம், மற்ற கடின வேலைகளை தவிர்க்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். பழங்கள் மலச்சிக்கலைப் போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும். 2 வேளை குளிக்கவும். காட்டன் உடைகளை அணியவும்.
சிறிது வெந்தயம் அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து மறுநாள் வெந்தய தண்ணீரை 3 வேளை தொடர்ந்து குடித்தால் "அந்த நாள் வயிற்று வலி" நன்றாக குறைந்து விடும். உடல் உஷ்ணம் உள்ளவற்களும் குடித்தால் உடல் உஷ்ணம் குறையும். .
அந்த 5 நாட்களில் காலை வெறும் வயிற்றில் கடுக்காய்த்தூள் 1 ஸ்பூன், மாந்துவர்ப் பொடி 1 ஸ்பூன், சீரகப் பொடி 1 ஸ்பூன் வெந்தயப் பொடி 1ஸ்பூன் அனைத்தையும் தேனில் கலந்து சாப்பிடவும். இரவும் சாப்பிடவும் இதனால் மாதவிடாய் கோளாறுகள், உடலின் சூடு, வயிற்றுபுண், கர்ப்பப்பை புண் போன்றவை நீங்கும். இன்னும் மாசம் தோறும் வயிறு வலியில் அவதிபடுபவர்கள் வயிற்றுவலி நீங்கும். உடல் அசதி நீங்கும், உடல் பலம் பெரும்,இடுப்பு வலி குறையும். .
இந்த பொடியினை சாப்பிட்ட பிறகு 1 மணி நேரம் கழித்து ஒரு ஆப்பிள், ஒரு மாதுளை சாப்பிடவும் இரவும் சாப்பிடவும். இவ்வாளு செய்தால் அந்த நாட்களில் இழந்த சத்தைத் திரும்பப் பெருவீர்கள். மாதவிலக்கு நேரங்களில் நாப்கினால் ஈரம் உள்ள உணர்வுகள் அதிகமாக இருக்கும், சில பெண்களுக்கு வெள்ளை போக்கும் இருக்கும் இந்த நேரங்களில் கிருமிகள் வர வாய்ப்புகள் அதிகம். இந்த நேரங்களில் பெண்கள் தங்கள் உடலை மிகவும் சுத்தமாக வைக்கவும். அதுக்கு அந்த நாட்களில் உள்ளாடைகளை சூடு நீரில் டெட்டால் போட்டு அலசி வெயிலில் காய போடவும்..
இரவு படுக்கும் முன்பு அந்த இடங்களை நன்றாக மிதமான சூடு நீரில் உப்பு கலந்து அலசிவிடவும். அந்த நாட்களில் குளிக்கும் பொழுது மறைவான இடங்களில் மஞ்சள்பூசி குளிக்கவும். சிலர் நாப்கினுக்கு பதிலாக துணிகளை பயன்படுத்துவார்கள் அவர்கள் கட்டாயம் துணிகளை வெந்நீரில் ஊற வைத்து கிருமி நாசி சோப்பு போட்டு நன்றாக அலசி வெயிலில் காயவைத்து பின்பு போடவும். ஓவ்வொரு முறையும் இப்படி தான் செய்யனும். 3 மாதங்களுக்கு ஒரு முறை துணியினை மாற்றவும். மாதவிலக்கு முடிந்த பின்பு 2 அல்லது 3 நாட்களுக்கு உடலுக்கு மஞ்சள்,வேப்பிலை(கொழுந்து)க், குப்பமேனி இலை இவைகளை அரைத்து உடலில் பூசி 10 நிமிடம் கழித்து குளித்துவிடவும். அந்த நாட்களில் செய்யவேண்டியவைகள் ஓய்வு மிகவும் அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ, மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது. அதிக கோபம் மனதில் தோன்றும் வெறுப்பு வரும் அதனை குறைத்துக்கொள்ளவும். மாதவிடாய் வரும் நாட்களை கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் வெளியூர் பயணம், மற்ற கடின வேலைகளை தவிர்க்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். பழங்கள் மலச்சிக்கலைப் போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும். 2 வேளை குளிக்கவும். காட்டன் உடைகளை அணியவும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|