சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.  Khan11

பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.

3 posters

Go down

பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.  Empty பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.

Post by நண்பன் Fri 27 Jun 2014 - 15:07

பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.
*******************************************************************************
இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இனவாதிகளினால் சிறுபான்மை மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது சர்வதேச மட்டத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தற்போது தெரிந்த விஷயமாகிவிட்டது.

சிறுபான்மை மக்கள் மீதான இனவாதிகளின் தாக்குதல்களை மூடி மறைத்து மூடு மந்திர விளையாட்டை அரசு இனிமேலும் தொடர முடியாத அளவுக்கு வெள்ளம் தலைக்கு மேல் சென்று விட்டதை அரசு தரப்பினர் தற்போது தெளிவாக உணர்ந்துள்ளார்கள்.

மாத்திரமன்றி, இனவாத கடும் போக்கு அமைப்புகளான பொது பல சேனா, ராவனா பலய போன்ற இயக்கங்களை தடை செய்து உடனடியாக இனவாதத்திற்கு அரசு முற்றுப் புள்ளி வைக்காவிட்டால் பாரிய நஷ்டங்களை இலங்கை சந்திப்பதுடன், சர்வதேச மட்டத்தில் பல கட்ட விசாரனைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் அழிப்பின் பின்னர் இறுதிக் கட்ட யுத்தத்தில் நடைபெற்றதாக குறிப்பிடப்படும் மனிதப் படுகொலைகள் தொடர்பில் ஐ.நா வின் விசாரனைக்கு இலங்கை உள்ளாகவுள்ள இந்நிலையில் அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாத தாக்குதல்கள் சர்வதேச மட்டத்தில் இலங்கை மீது பாரிய அளுத்தங்களை உண்டாக்கியுள்ளது.

அளுத்கம, பேருவல, தர்கா நகர் உள்ளிட்ட முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கடந்த 14.06.2014 அன்று முஸ்லிம்கள் மீது பொது பல சேனாவினால் கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்கள் காரணமாக சுமார் 90 க்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் 02 பேர் கொல்லப்பட்டு, 04 முஸ்லிம்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சுமார் 1500 கோடிக்கும் மேட்பட்ட சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளதை அரசு அறியாமலில்லை.

பொது பல சேனா என்ற இனவாத அமைப்பின் செயல்பாடுகள் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அவப்பெயரை பெற்றுத் தந்துள்ளதுடன், முஸ்லிம் நாடுகளின் ஒத்துழைப்பையும் இலங்கை இலக்கும் நிலைக்கு மாறியுள்ளன.

இலங்கையின் வெளி விவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அவர்களை சந்தித்த இலங்கையில் உள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் இலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதலை வன்மையாக கண்டித்ததுடன், எச்சரிக்கையும் விடுத்துள்ளார்கள்.

கடந்த ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்த பல முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலை தொடருமானால் சர்வதேச மட்டத்தில் இலங்கை தனித்து விடப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

ஈடுகட்ட முடியாத பொருளாதார இழப்பு.
************************************************************
பொது பல சேனா போன்ற இனவாத இயக்கங்களின் பிரச்சாரத்தினால் ஏற்பட்ட விளைவு, இதுவரை இலங்கையின் பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

சுமார் 30 க்கும் மேற்பட்ட பள்ளிகள் தாக்கப்பட்டு, 04 பள்ளிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராக 500 க்கும் மேற்பட்ட அசம்பாவிதங்கள் இந்த இனவாத இயக்கங்களினால் தூண்டிவிடப்பட்டுள்ளன.

முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வன்முறைகள் உலகம் முழுவதும் அறிந்து கொள்ளும் வகையில் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுவிட்ட இந்நிலையில், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு வருமானம் ஆகியவை வேகமாக நஷ்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளதுடன், இலங்கைக்கு சுற்றுலா வருவதற்கு வெளிநாட்டவர்கள் பயப்படும் ஓர் அச்ச சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

ஹழாலுக்கு எதிரான பொது பல சேனாவின் பிரச்சாரத்தினால் ஹழால் தொடர்பாக அரசு எடுத்த தவறான முடிவின் காரணத்தினால் முஸ்லிம் நாடுகளின் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பெரு வீழ்ச்சியை இலங்கை தற்போது அடைந்துள்ளது.

அண்மையில் அளுத்கம பகுதி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத தாக்குதல் காரணமாக, இலங்கையின் விமான சேவைகளான “ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்” மற்றும் “மிஹின் லங்கா” ஆகியவற்றை புறக்கணிக்கும் போராட்டமும் வெளிநாடுகளில் உருவாகியுள்ளது.

அளுத்கமை கலவரம் நடைபெற்று இரண்டாவது நாளில் தமிழ்நாட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக இலங்கை தூதுவராலயம் முற்றுகையிடப்பட்டது. இம்முற்றுகை போராட்டத்தில் பெருந்திரலான பெண்களும் கலந்து கொண்டமை இலங்கை அரசை ஆட்டம் காண வைத்திருக்கின்றது.

மாத்திரமல்லாமல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குவைத் மற்றும் மஸ்கட் ஆகிய மண்டலங்கள் இலங்கையின் விமான சேவைகளை புறக்கணிப்பு செய்வதாக பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளார்கள்.

மஸ்கட் மண்டலம் ஒரு படி மேலே சென்று இலங்கையின் அனைத்துத் தயாரிப்புகளையும் புறக்கணிப்பு செய்வதாகவும் அறிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு சாவு மணி அடிக்கும் விதமாக செயல்படும் இனவாத இயங்கங்களை தடை செய்து நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட வேண்டிய அரசும், பாதுகாப்புத் துறையும் இனவாதிகளுடன் இணைந்து செல்வதற்கு ஒத்துழைப்பது நாட்டை இன்னும் பாரிய வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொண்டு இனவாதம் பேசுவோரை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதின் மூலம் இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி முகநூல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.  Empty Re: பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.

Post by rammalar Fri 27 Jun 2014 - 16:03

சர்வதேச மட்டத்தில் இலங்கை தனித்து
விடப்படும் என்பது கேள்விக்குறியே...!
-
ஐரோப்பாவையும் மத்திய கிழக்கையும்
சீனாவுடனும் ஐப்பானுடனும் பிற ஆசிய
நாடுகளுடனும் இணைக்கும் முக்கிய கடற்
பாதைகள்; செல்லும் மைய இடத்தில்
இலங்கைத் தீவு அமைந்துள்ளது.

அமைவிடம் அதற்கு தரைப் பருமனிலும்
கூடிய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது.
-
எனவே இந்தப் பிராந்தியத்தில் தனது ஆளுமையை
எற்படுத்திக்கொள்ள வல்லரசுகள் வலை விரிக்கும்...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.  Empty Re: பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.

Post by Nisha Fri 27 Jun 2014 - 16:07

பூனைக்கு மணியை யாராவது கட்டத்தான் வேண்டும்.  உலக நாடுகளுக்காக தடை செய்வது போல் நாடக மாடி விட்டு மீண்டும் ஒன்றை புதிதாய் ஆரம்பிக்காமல் இருந்தால் சரி!

பகிர்வுக்கு நன்றிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.  Empty Re: பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.

Post by நண்பன் Fri 27 Jun 2014 - 16:10

Nisha wrote:பூனைக்கு மணியை யாராவது கட்டத்தான் வேண்டும்.  உலக நாடுகளுக்காக தடை செய்வது போல் நாடக மாடி விட்டு மீண்டும் ஒன்றை புதிதாய் ஆரம்பிக்காமல் இருந்தால் சரி!

பகிர்வுக்கு நன்றிப்பா!
பொது பல சேனாவின் மேல் உள்ள வெறுப்பில் இப்படி ஒரு செய்தி படித்த போது கொஞசம் சந்தோசமாக இருந்தது அதான் பதிந்தேன் மற்றும் படி இது நடக்குற காலியம் இல்லை  !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.  Empty Re: பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.

Post by நண்பன் Fri 27 Jun 2014 - 16:11

rammalar wrote:சர்வதேச மட்டத்தில் இலங்கை தனித்து
விடப்படும் என்பது கேள்விக்குறியே...!
-
ஐரோப்பாவையும் மத்திய கிழக்கையும்
சீனாவுடனும் ஐப்பானுடனும் பிற ஆசிய
நாடுகளுடனும் இணைக்கும் முக்கிய கடற்
பாதைகள்; செல்லும் மைய இடத்தில்
இலங்கைத் தீவு அமைந்துள்ளது.

அமைவிடம் அதற்கு தரைப் பருமனிலும்
கூடிய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது.
-
எனவே இந்தப் பிராந்தியத்தில் தனது ஆளுமையை
எற்படுத்திக்கொள்ள வல்லரசுகள் வலை விரிக்கும்...
-

விரிக்கும் அல்ல விரித்து விட்டது  !* !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.  Empty Re: பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.

Post by Nisha Fri 27 Jun 2014 - 16:12

rammalar wrote:சர்வதேச மட்டத்தில் இலங்கை தனித்து
விடப்படும் என்பது கேள்விக்குறியே...!
-
ஐரோப்பாவையும் மத்திய கிழக்கையும்
சீனாவுடனும் ஐப்பானுடனும் பிற ஆசிய
நாடுகளுடனும் இணைக்கும் முக்கிய கடற்
பாதைகள்; செல்லும் மைய இடத்தில்
இலங்கைத் தீவு அமைந்துள்ளது.

அமைவிடம் அதற்கு தரைப் பருமனிலும்
கூடிய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது.
-
எனவே இந்தப் பிராந்தியத்தில் தனது ஆளுமையை
எற்படுத்திக்கொள்ள வல்லரசுகள் வலை விரிக்கும்...
-

வல்லரசு அமெரிக்காவும், சீனாவும், ஜப்பானும் ஏற்கனவே இலங்கையில் அழுத்தமாக தம் காலை ஊன்றியாகி விட்டது. இனிமேல் இந்தியா நினைத்தாலும் அவர்களை வெளியனுப்ப இயலாது. .





நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.  Empty Re: பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.

Post by Nisha Fri 27 Jun 2014 - 16:14

நண்பன் wrote:
Nisha wrote:பூனைக்கு மணியை யாராவது கட்டத்தான் வேண்டும்.  உலக நாடுகளுக்காக தடை செய்வது போல் நாடக மாடி விட்டு மீண்டும் ஒன்றை புதிதாய் ஆரம்பிக்காமல் இருந்தால் சரி!

பகிர்வுக்கு நன்றிப்பா!
பொது பல சேனாவின் மேல் உள்ள வெறுப்பில் இப்படி ஒரு செய்தி படித்த போது கொஞசம் சந்தோசமாக இருந்தது அதான் பதிந்தேன் மற்றும் படி இது நடக்குற காலியம் இல்லை  !* 

சொல்ல முடியாதுப்பா! முன்னாடி ஜேவிபி க்கும் நட்ந்தது தானே? அடுத்த தேர்தலை முன் வைத்து எது வேண்டும்னாலும் நடக்கலாம்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.  Empty Re: பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.

Post by நண்பன் Fri 27 Jun 2014 - 16:17

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:பூனைக்கு மணியை யாராவது கட்டத்தான் வேண்டும்.  உலக நாடுகளுக்காக தடை செய்வது போல் நாடக மாடி விட்டு மீண்டும் ஒன்றை புதிதாய் ஆரம்பிக்காமல் இருந்தால் சரி!

பகிர்வுக்கு நன்றிப்பா!
பொது பல சேனாவின் மேல் உள்ள வெறுப்பில் இப்படி ஒரு செய்தி படித்த போது கொஞசம் சந்தோசமாக இருந்தது அதான் பதிந்தேன் மற்றும் படி இது நடக்குற காலியம் இல்லை  !* 

சொல்ல முடியாதுப்பா! முன்னாடி ஜேவிபி க்கும் நட்ந்தது தானே?  அடுத்த தேர்தலை  முன் வைத்து எது வேண்டும்னாலும் நடக்கலாம்.

ஜனாதிபதி குடும்பத்திலயே சண்டை நடக்கிறது பாருங்கள் நாடே நாறப்போகிறது அரசியல் கள்ளக் குடும்பம்  #* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.  Empty Re: பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  விமானத்தில் வரும் இலங்கை பணிப்பெண்ணின் சடலம்
» வெளிநாட்டு பயணங்களை இடைநிறுத்தி ரணில், கரு இலங்கை திரும்புகின்றனர்
» இலங்கை வானில் வெளிநாட்டு விமானங்கள் ஏதும் பறக்கவில்லை
» தொடரும் கற்பழிப்புகளால் இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்கள் எண்ணிக்கை 35% குறைந்தது
» இலங்கை பற்றிய பொது அறிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum